September 2017
Friday, 29 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Friday, 29 September 2017 19:18
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல், தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் - சர்வதேசியம் குறித்து ஆராயப்படல் வேண்டும்.
Read more...
|
|
Sunday, 24 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 24 September 2017 06:13
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.
பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.
Read more...
|
|
Thursday, 21 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 21 September 2017 06:05
அரசியல்_சமூகம்
/ விருந்தினர்
|
இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இம்மயானத்தில் எரியூட்ட எம் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்நிலை மாறுபட்டால் மேலும் போராட்ட களமாக மாறும் நிலையே உருவாகும். இதில் எமது மக்களும் சனசமூக நிலையமும் உறுதியாக உள்ளார்கள்” என கலைமதி கிராமத் தலைவரும் புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிஸக் கட்சியின் வட பிரதேச அமைப்பாளருமான செல்வம் என அறியப்பட்ட கார்திகேசு கதிர்காமநாதன் தேசம்நெற் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் செப்ரம்பர் 19 2017 இல் தெரிவித்தார். தேசம்நெற் இன் கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள் கீழே பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் குடியேறியவர்கள் கார்திதிகேசு கதிர்காமநாதனால் (செல்வம்) திட்டமிட்டு மோசடி செய்து விற்கப்பட்ட காணிகளில் குடியேறியதாக உறுதியான ஆதாரங்கள் இன்றி குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும் இப்போராட்டமானது ஒரே சமூகத்திற்குள்ளேயான போராட்டம் என்றும் இதுவொரு சாதிய முரண்பாடு அல்ல என்றும் சிறுப்பிட்டி சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஓகஸ்ட் 20, 2017இல் ஓரறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதற்கு முன் யோ கர்ணன் தமிழ் பேஜ் என்ற முகநூலில் இக்குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த மயான எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும் சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேன இதற்கு நிதியளிக்கின்றது என்றும் யோ கர்ணனும் அவரது முகநூல் ‘உண்மைகாண்’ குழுவினரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் மயான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடிக்கவும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் எக்காலத்திலும் அதற்கெதிராகப் போராட முடியாத நிலையை ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்கு பாடம் புகட்டும் ஆதிக்க குணாம்சத்தோடு பல்நிலைப்பட்ட சாதிமான்களும் களத்தில் குதித்தனர்.
Read more...
|
|
Wednesday, 20 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 20 September 2017 17:05
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.
இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக் கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.
Read more...
|
|
Saturday, 16 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Saturday, 16 September 2017 07:15
அரசியல்_சமூகம்
/ அசுரன் மாவோ,
|
*திருமண மந்திரங்களின் ஆபாசம்*
வேத பண்டிதர்களே – ஒப்புதல்
இதற்கு பிறகும் பார்ப்பனர்களை அழைத்து திருமணம் நடத்தலாமா?
புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறியிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார்.
Read more...
|
Last Updated ( Saturday, 16 September 2017 07:18 )
|
|
Friday, 15 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Friday, 15 September 2017 12:03
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.
1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.
Read more...
|
|
Thursday, 14 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 14 September 2017 06:27
அரசியல்_சமூகம்
/ விருந்தினர்
|
செப்ரம்பர் 09 2017இல் 60வது நாளாக கலைமதிக் கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றக்கோரும் போராட்டம் தொடர்கின்றது. இப்போராட்டத்தை புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி முன்னெடுத்து வருகின்றது. இக்கிராமத்தில் வாழ்பவர்கள் பள்ளர் சமூகத்தவர்கள். சிறுப்பிட்டி கிந்துசிட்டியில் உள்ள 200 வருட பழைமையான இம்மயானம் பெரும்பாலும் அங்குள்ளவர்களால் கைவிடப்பட்ட ஒரு மயானம். மக்கள் குடியிருப்புக்கள் உருவான பின்னர் இந்த மயானம் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கவில்லை. 2017 மார்ச் 8 இல் ஒரு உடலைத் தகனம் செய்ய முற்பட்ட போது ஆரம்பித்த பிரச்சினை தற்போது மிகப் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது. இது கிந்துசிட்டி மயானத்தையும் தாண்டி> ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவும் உருவாக்கி உள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானங்களின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும் இப்போராட்டங்கள் எழுப்பி உள்ளது.
Read more...
|
|
Wednesday, 13 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Wednesday, 13 September 2017 05:22
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.
வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.
தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.
Read more...
|
|
Tuesday, 12 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 12 September 2017 06:27
அரசியல்_சமூகம்
/ சீவுளிச்சித்தன்
|
1926ல் “இலங்கைக்கு கண்டி சிங்களவர்-கரைநாட்டுச் சிங்களவர்-தமிழர் என்ற அடிப்படையில் அமைந்த மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசியலமைப்பே அவசியம்” என்பதை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க வலியுறுத்திய போது அன்றைய மேல்தட்டு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை கணக்கில் எடுக்கவில்லை.
Read more...
|
|
Sunday, 10 September 2017
|
Written by தமிழரங்கம்
|
Sunday, 10 September 2017 07:54
பி.இரயாகரன் - சமர்
/ 2017
|
வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.
மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Sunday, 10 September 2017 18:56 )
|
|
Page 1 of 2
|