மந்துவில் மணற்குள ஆக்கிரமிப்பு - கூட்டுக் களவாணிகளின் கள்ள மவுனங்கள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மந்துவில் மணற்குளம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றது. இந்த ஆக்கிரமிப்பானது தொடர்வதுடன், மெதுமெதுவாகக் குளத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது.
குள ஆக்கிரமிப்பாளர்கள் இக்குளத்துக்கான நீர்வளத்தின் ஒரு பகுதியை தடுத்து நிறுத்தும் வண்ணம் சட்டவிரோத அணையைக் கட்டி, நீரைக் கடலுக்கு திருப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் குளத்தின் நீpரின் கொள்ளளவைக் குறைத்துள்ளதுடன், குளத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கின்றனர்.
இந்த நீர் நேரடியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் குளநீரை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்தடி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்;. அத்துடன் மக்களின் குடிநீருக்கான பொது ஆதாரமாகவும், கால்நடை வளர்ப்புக்கான ஆதாரமாகவும் குளம் உள்ளது. பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கு, சுற்றுச்சூழலுக்குமான பொது அடிப்படையாகவுள்ளது.
தொடரும் குள ஆக்கிரமிப்பானது, இதை நம்பி வாழும் சமூகப் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், குடியிருப்புக்கான சட்டரீதியான நிலவுரிமையைச் சிதைக்கும் வண்ணமுமுள்ளது. இந்தக் குளமானது, அக்குளத்தை நம்பி வாழும் மக்களுக்குச் சட்டரீதியான உரித்துடையதாகும். மக்களுக்கான இந்த அரசுச் சொத்தைப் பாதுகாக்கும் வண்ணம், குள ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையடுத்து, சில உண்மைகள் வெளிவந்துள்ளது. அவற்றில் இருந்து
