Language Selection

பி.இரயாகரன் - சமர்

மனநோயாளியான அம்சிதான், ஆசிரியரை பாலியல்ரீதியாக வன்முறை செய்தாள். இதுதான் மனநோயென்று கூறுகின்றவர்களின் குற்றச்சாட்டு.

அரசாங்கமே பாராளுமன்றத்தில் அம்சிக்கு மனநோயாளி என்று கூறியதைக் கேட்டு, மீண்டும் தற்கொலை செய்ய அம்சி இன்று உயிருடன் இல்லை. நாட்டில் சட்டமும், நீதியும்.. இப்படித் தான் இயங்குகின்றது. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், இந்த நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு குரல் கொடுத்து நீதி வழங்கும் இலட்சணம் இது. பாராளுமன்ற பன்றிகள் (ஒரு சிலர் தவிர), சலசலப்பின்றி அமர்ந்திருக்கும் காட்சிகள். இனவாத, மதவாத உடையணிந்து பாராளுமன்றம் வந்த எதிரக்கட்சிகள், பதவி விலகக் கோரி வெளிநடப்புச் செய்யவில்லை.         

மறுபக்கம் மக்கள் நீதி கேட்ட போராடக் கூடாதாம்! போராடுவது என்பது சட்டம் ஓழுங்கை கையிலெடுப்பதாம்! சமூக வலைத்தளத்தில் குரல் கொடுப்பது வன்முறையாம்! பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் வரவேண்டுமாம்! அரசாங்கத்திடம் வராவிட்டால் நீதியைக் கேட்கும் உரிமையில்லையாம்!

இவைதான் ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாக, ஆட்சிமுறையாக இருக்கின்றது. முந்தைய அரசாங்கங்களுக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு? அதே அதிகாரிகள், அதே கெடுபிடிகள்,.. முகம் பார்த்து சலூட் அடிக்கும் சட்டமும் ஒழுங்குகளும். பெருச்சாளிகள் மாலையும் கையுமாக திரிய, புதிய அரசாங்கம் மாலைக்காக, புகழுக்காக தலைகுனிந்து மண்டியிட்டுத் திரிகின்றது. அரசு நாள்தோறும் மாலையும் கையுமாக திரிகின்றனர். 

அடிப்படையான ஆதாரங்களற்ற, எந்தத் தரவுகளுமற்ற, சமூகக் கண்ணோட்டமற்ற, கற்பனையிலான அவதூறுகள், அடிப்படை உண்மைகளைப் புதைக்கின்ற பொதுச் செயற்பாடாக இருக்கின்றது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள்.. மூலம் ஜனநாயகம் என்ற பெயரில், எந்தச் சமூக அறமுமற்ற அவதூறுகள் விதைக்கப்படுகின்றது. செய்திகளின் பெயரில், கண்டுபிடிப்பின் பெயரில், ஊகத்தின் பெயரில் அவதூறுகளுக்குப் பஞ்சமில்லை.     
 
இத்தகைய அவதூறுகள்

1.    ஒருபுறம் உண்மைகளைப் புதைக்கின்றது.

2.    மறுபக்கம் பொய்களை விதைக்கின்றது.

இவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். எது உண்மை, எது பொய் என்ற வித்தியாசத்தை இல்லாதாக்குகின்றது.

இதன் மூலம் உண்மையான சமூகச் செயற்பாட்டை இல்லாதாக்குகின்றது. அவதூறு செய்பவர்களின் நோக்கம், சமூக நோக்கமாக இருப்பதில்லை. அதை அவர்களின் சொந்த நடைமுறையில் காணமுடியாது. ஆரசியற் கோட்பாட்டின் பெயரில் அவதூறுகளைச் செய்யும் போது, அந்த அரசியல் பொதுப்புத்தியிலான ஊகமான சொந்த காழ்ப்பிலான வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது.

பன்முகம் கொண்ட அவதூறுகளுக்கு மத்தியில் ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை, துர்க்காபுரம் குறித்ததான அவதூறுக்கும் பஞ்சமில்லை. இந்த அவதூறானது அங்குள்ள உண்மைகளையும், கேள்விகளையும் மூடிமறைக்கின்றது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குளிக்குமிடம் கமராவின் கண்காணிப்பின் கீழ் இருந்ததான குற்றச்சாட்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சட்டரீதியான அரச அனுமதியின்றி தங்க வைத்த குற்றச்சாட்டு, சிறுமிகள் தப்பியோடிய சம்பவங்கள்.. குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணையறிக்கையை துர்க்காபுரம் இன்று வரை முன்வைத்தது கிடையாது

கடந்த வரலாற்றுப் போக்கில் பிள்ளையான் ஒழுங்கமைப்பட்ட குற்றங்களுடன் தொடர்புபட்டவன். மற்றொருவரைக் கைகாட்ட முடியாத அதிகாரத்துடன், வன்முறை வடிவங்களுடன் பயணித்த பிள்ளையான், யுத்தம் முடிவுக்கு வந்தபின் அதை நிறுத்தவில்லை.

பிரபாகரனின் மனிதவிரோத தொடர் குற்றங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் முலாம் பூசிய பாலசிங்கம் போல், பிள்ளையானின் குற்றங்களுக்கு கிழக்கு மய்யவாத அரசியல் முலாம் பூசியவர் ஸ்ராலின் என்று அழைக்கப்படும் ஞானம்.

புலிக்குப் பிந்தைய பிள்ளையானின் கிழக்குப் படுகொலைகள், பணத்துக்கான கடத்தல்களும் கப்பங்களும், பாலியலுக்கான கடத்தல்களும் படுகொலைகளும், சொத்துக்களுக்கான படுகொலைகள், அதிகாரத்துக்கான படுகொலைகள் .. என்று எண்ணிலடங்காத குற்றங்கள் நடந்தேறின. இந்த வகையில் வவுனியாவில் சித்தார்த்தன், வடக்கில் டக்கிளஸ், இடைக்காலத்தில் பிரேமச்சந்திரன்.. தலைமையேற்ற மனிதவிரோத செயற்பாடுகள், புலிகளின் மனிதவிரோதத்தையும் மிஞ்சியிருந்தது. புலிகளுக்குத் தனிமனித நோக்கம் இருக்கவில்லை. அதாவது தனிநபர் பாலியல் நோக்கமும், தனிநபர் சொத்துக் குவிப்புக்கான நோக்கமும் குற்றங்களின் பின்னனியில் இருக்கவில்லை.       

குற்றங்கள் இனந்தெரியாத நபர்கள் என்ற பெயரிலும், புலிகளின் பெயரிலும் நடந்தேறியது. இதுவொரு உண்மை. இந்த உண்மையின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், பிடிபட்ட போது கையை விரித்ததும், சாட்சியங்களை அழிக்க சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கொன்றதும் என்று, எண்ணற்ற விடையங்களைக் கடந்த வரலாற்றுடன் இனம் காணமுடியும். 

"ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ - என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."

மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் "புரட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய்
"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை...?"

உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஸ்கியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய் 
"உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால்..."

இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ "நான் அதை எப்படிப் பார்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
"சரி அந்த நிலையில் எப்படி..."

உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்லுவாய்
"நிக்கி இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா ?"  

சோபசக்தி  11.12.1998 எச்சில் 4 பக்கம் 11இல்  "பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை குறித்த நினைவுக் கல்வெட்டு" இப்படித்தான் தொடங்குகின்றது. அ.மார்க்ஸ்சை இந்தியாவில் சந்தித்ததன் பின்பாக, ஈழப் போராட்டத்தில் புலிக்கும்  -  அரசுக்கும் எதிரான வர்க்க அரசியல் நிலைப்பாட்டை – செயற்பாட்டை தகர்க்க, பி.றயாகரன் முதலில் இலக்கு வைக்கப்பட்டார். சோபாசக்தியும் வேறு சிலரும் இணைந்து கொண்டு, வர்க்கத்தை – வர்க்க அரசியலை கருவறுக்கும்  எதிர்ப்புரட்சிக் கும்பல், கல்வெட்டுடன்  களமிறங்கியது. இந்தக் கல்வெட்டு பல பக்கங்களைக் கொண்டது. இன்று அவர் தன்னை மூடிமறைத்துப் புலம்பும் சோபாசக்தி, அன்று தன் நோக்கத்தை மூடிமறைக்க உளறியது முதற்கொண்டு, அவரின் கற்பிதக் கோட்பாடுகளையும் இந்தக் கல்வெட்டில் காணமுடியும். இந்தக் கல்வெட்டு வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு, இதனால் இரண்டாக உடைந்ததுடன், ஒரே பெயரில் - ஒரே இலக்கத்தில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தது. இதிலொன்று பின்னால் தன்னை உயிர்நிழல் என்று மாற்றிக்கொண்டது.

புஸ்பராணியின் போராட்டமும் - தியாகமும் உணர்வுபூர்வமானவை. போலித்தனமற்ற உன்னதமானது.  தான் நம்பிய சமூகக் கனவுகளுடன் பயணித்தவை. இந்தப் பயணத்தில் சிறைகள், சித்திரவதைகளை மட்டுமல்ல, சமூகரீதியான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டவர். 

வரலாற்றில் போராட வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னோடியாவார். யாழ்ப்பாண ஆணாதிக்கக் கலாச்சார மரபுகளை மீறியவர். அடங்கியொடுங்கவே பெண் என்ற தமிழ் கலாச்சார அடையாளத்தைத் தகர்த்தவர். யாழ் மையவாத வெள்ளாளியச் சமூகத்தின் ஆணாதிக்க  ஒழுக்க கலாச்சார வேலிகளுக்கும் - அவர்களின் பெண்கள் மேலான கண்ணோட்டதுக்கும் சவால் விடுத்தவர். ஒடுக்கும் சாதிகளின் அதிகாரத்தையும், அதன் திமிரையும் எதிர்த்து நின்றவர்.

ஒடுக்கும் சாதியால் வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் அவர் பிறந்ததால், யாழ்ப்பாணத்தின் ஒடுக்கும் சாதிய சமூகத்தை எதிர்கொண்டு வாழ வேண்டுமென்பது சவால் மிக்கது, 1960 - 1970 வரை ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி கற்க அனுமதியில்லை. பொது இடங்களை பயன்படுத்த உரிமையில்லை. இதுதான் அன்றைய தமிழினவாதம் முன்வைத்த தமிழ்தேசியம்.

காதலென்பது என்ன? காதல் தோன்றிய வரலாற்றுச் சூழல் என்ன? 

மனித உழைப்பானது ஆணின் தனியுடைமையாகிய போது, பெண் வரைமுறையின்றிப் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கபட்டாள்.  ஆணாதிக்க வரைமுறையற்ற பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தேர்ந்தெடுத்த உறவுமுறை தான் காதல். இதன் மூலம் தனியுடைமை ஆணின் பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தான் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனதாக்கினாள். இது மனித வரலாறு.

இன்று அந்தக் காதலின் பெயரில், வரைமுறையற்ற பாலியல் சுரண்டலை ஆண்கள் நடத்த முடிகின்றது. காதலின் பெயரில் பெண்ணைப் பாலியல் ரீதியாக சுரண்டுவது, கைவிடுவது ஆணாதிக்க சமூகத்தில் நடப்பதும் - அதற்கு எதிரான பெண்ணின் போராட்டமும் சமூகத்தில் காணமுடியும்.
 
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆணாதிக்கமானது, பரஸ்பரம் செக்ஸ் தாண்டி எமக்கு இடையில் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது என்ற நிபந்தனையுடன், பாலியல் வேட்டையில் அறிவுத்துறை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் தமக்கான சொந்தக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். கொடுக்கல் வாங்கலற்ற இந்த பாலியல் வேட்டையை மூடிமறைக்க, அதை காதல் என்கின்றனர். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்கின்றனர். இதைக் கேள்விக்குள்ளாக்க முடியாத "தனிப்பட்ட தேர்வு" என்கின்றனர்.

அமெரிக்காவின் வரிக் கொள்கை என்பது, தனியுடமைவாத முதலாளித்துவம். சுதந்திரமான சந்தை என்ற முதலாளித்துவத்தின் முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சந்தை என்பது கட்டுப்பாடற்றதாக, சுதந்திரமானதாக, ஜனநாயகபூர்வமானதாக இருக்கவேண்டும் என்பதே, முதலாளித்துவமாகும். இதைத்தான் டிரம்ப் நேரடியாக – மறைமுகமாக முன்வைத்திருக்கின்றார். இதைப் புரட்சிகரமானது என்கின்றார். இப்படிப்பட்ட முரணற்ற முதலாளித்துவத்தை பிற ஏகாதிபத்தியங்களும், முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவவாதிகளும், தனியுடமைவாதிகளும்.. எதற்காக, ஏன் எதிர்த்துப் புலம்ப வேண்டும்?

தனித்தனி நாடுகளுக்குள் சுதந்திரமான சந்தைக் கோட்பாட்டை முன்வைத்துள்ள முதலாளித்துவவாதிகள், நாடுகளுக்கிடையில் இதை மறுப்பது ஏன்? தங்கள் சொந்த தேசிய – ஏகாதிபத்திய பொருளாதாரம் சிதைந்துவிடும் - மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிடும் என்ற ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் முதலாளித்துவவாதிகள்,  தங்கள் சொந்த நாடுகளில் சிறுவுடமைகளையும் - அது சார்ந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தை தங்கள் நாட்டு பெருவுடைமை சார்ந்து ஒழித்துக் கட்டியவர்களே. இன்று வேசம் போட்டுக்கொண்டு, உலக பெருமூலதனம் சார்ந்த தங்கள் திவாலை மூடிமறைக்க, ஒப்பாரி வைக்கின்றனர்.

ஒரு ஆணுக்குள்ள உரிமையே பெண்ணுக்குமான உரிமையாகும். இந்த உரிமையைப் பெண்ணுக்கு மறுத்து, ஆணுக்கு மட்டும் உரியதென்றால், அதுதான் தமிழ் தாலிபானிசம். இந்த தாலிபானிசமானது, மனிதனின் அடிப்படை ஜனநாயகத்தையே மறுக்கின்றது. ஆண் - பெண் என்ற இயற்கையான வேறுபாட்டைக் கொண்டு, தங்கள் ஆணாதிக்க அதிகாரத்துக்காக பெண் அடிமைகளை உருவாக்குகின்றது. 

இந்த அடிமைத்தனம் என்பது வரலாற்று ரீதியானது. தீட்டு, துடக்கு என்று தொடங்கிய அடக்குமுறையானது, இன்று வரை பூனூல் போட்டு குடும்பத்துப் பெண் பூசாரியாகவே முடியாது. இந்த அடிமைத்தனத்துக்கும், கொடுமைகளுக்கும்.. பல வரலாற்றுப் படிக்கற்கள் உண்டு.      

கலாச்சாரம் தொடங்கி விமர்சனம் வரை, ஆண் - பெண்  என்று இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து பெண்ணுக்கு மட்டுமென்றால், ஆணாதிக்க தமிழ் தாலிபானிசமே. கலாச்சாரம் என்பது பொதுவானது, அதை விடுத்து பெண்ணுக்கு மட்டும் தான் கலாச்சாரம் என்றால், இழிவாகத் தரம் தாழ்ந்த சமூகத்தின் சுய நடத்தையாகும். 

இந்தத் தமிழ் தாலிபான் கலாச்சாரமானது பாலியலில் வரைமுறையற்ற கட்டாக்காலி ஆணாதிக்க பாலியல் அத்துமீறலை ஆதரிக்கின்றது. இதற்காக பெண்ணை குற்றம் சாட்டுகின்றது. இந்த ஆணாதிக்க கழிசடைத்தனத்தை புலியிசத்தின் மூலம் கோருகின்றனர்.

தலைவரின் பெயரில் புலிப் பாசிசத்திற்குக் காவடியெடுத்தாடும் கூத்தாடியான கோமாளியான அர்ச்சுனா கூறுகின்றார். இதற்காகவா தமிழ் மக்கள் அர்ச்சுனாவுக்கு வாக்களித்தனர்!?

தமிழர்களின் பெயரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமிழினவாதத்தைப் பாசிட்டால் மட்டுமே  இப்படி கக்க முடியும். 

மனித உயிர்களைக் காக்கும் டொக்டர் என்று கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்துப் பன்னாடை, தனது பாசிசக் கொலை வெறித்தனத்தைத் தனது தந்தையின் அரசியல் - நடைமுறை வழியில் முன்வைத்திருக்கின்றது. 1990 இல் அர்ச்சுனா புலித் தலைவர் இடத்திலிருந்திருந்தால், 1990 இல் ஒரு இலட்சம் முஸ்லீம் மக்களைக் கொன்று புதைத்திருப்பான். இந்த உண்மையைத் தான், இன்று தந்தை வழி கொலைகார அரசியலை தற்பெருமையுடன் கூறுகின்றான்.

1940 களில் ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று - எரித்துச் சாம்பலாக்கியது போன்று, அதே பாசிச வழியில் முஸ்லிம்களைக் கொன்று அழிக்கத் தவறியது, தனது தலைவரின் தவறு என்று கூறுகின்றான். அன்று ஹிட்லருக்குக் கோயம்பல்ஸ் என்ற பிரச்சார மந்திரி இருந்தது போல், இந்தக் கொலைவெறி கக்கும் அர்ச்சுனாவுக்காகப் பிரச்சாரம் செய்யும் தமிழ் அடியான் தொடங்கி வன்னி ஊழல் ஒழிப்பு அணி வரை அணிகட்டி நிற்கின்றது. அன்று தவைருக்குப் பாலசிங்கம் இருந்தது போல், இன்றும் புலிப் பாசிச அடிவருடிகள். இதன் பின்னால் புலத்தில் நிதி திரட்டும் மாபியாக்கள். இந்த மாபியாக்களின் பிழைப்புக்காக, பாசிச கோமாளி கூத்தாட நிதி வழங்குகின்றனர். இந்தக் கூத்தாடிக்கு பணம் பார்க்கும், யூ-ரியூப் வியாபாரிகள்.

பண மோசடிகளில் ஈடுபடும் புலம்பெயர் தரகர்களினால் இயக்கப்படுகின்றவர்கள் தான், சீமான் முதல் அருச்சுனா வரை. புலம்பெயர் மோசடிக்காரத் தரகுப் பணம் இல்லையென்றால், கட்டுப்பணத்தைக்  கூட செலுத்தத் தயாரற்றவர்கள் இவர்கள்.    

தமிழினவாத பாசிச தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டுப் பலியிடப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களால் கொல்லப்பட்ட குடும்பங்கள், தவறான போராட்டத்திலிருந்து தப்பி பிழைத்தவர்களின்.. வாழ்க்கைக்கு ஒளியூட்ட முடியாதவர்களே, வாக்கு அரசியலில் தம்மை முன்னிறுத்துகின்றனர். தொடர்ந்து தமிழ் தேசியம் என்று கூறுகின்ற இந்தப் பிழைப்புவாத அரசியலை, சொந்தப் பிழைப்புக்காக  முன்வைக்கின்றனர். கடந்தகாலத்தில் அரச சலுகைகளைப் பெறுவதற்குத் தயங்காதவர்கள். அதற்காக குறுக்கு வழிகளில் நக்கிப் பிழைத்தவர்கள்.

அன்றும் இன்றும் தமிழ் தேசிய வாக்கு அரசியலை கடைவிரித்து வியாபாரம் செய்யும் கூட்டத்துக்கு, புலம்பெயர் நிதியே ஆதாரம், அடித்தளம். தற்குறித்தனத்தால் பலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் புலம் பெயர் தரகர்களின் நிதிச் சலுகைகளை இழக்க, மறுபுறம் புலம்பெயர் தரகர்களின் வசூல் வேட்டைக்கு பாரிய இழப்பு. அரசியல் வியாபாரம் மண்ணைக் கவ்விய கூட்டுத் துயரம்.      

யாரெல்லாம் தனது உழைப்பிலான பணத்தைக் கொண்டும், தனது நேரத்தையும் கொண்டு மக்களுக்கான சமூக பணியில் ஈடுபடவில்லையோ, அவர்கள் உதவி செய்வதாகக் கூறுவதும் மோசடியானது. பணம் கொடுப்பவனையும் - பணம் வாங்குபவனையும் ஏமாற்றுவதற்கான பொது உள்ளடக்கமாகும். இந்த உதவி இடைத்தரகர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் முன்னுதாரணத்தைக் காணவும் - காட்டவும் முடியாதவர்கள், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம்.

தங்கள் சமூகப் பொது நடத்தைகள் மூலம் மக்களுடன் வாழாதவர்களின் உதவிக் கோரிக்கை என்பது, வலிந்து உதவியைக் கோருவதற்கான புறச்சூழலை உருவாக்கி, அதைக் காட்சியாக்குவதே.

ஒடுக்கப்பட்ட மக்களை மய்யப்படுத்தி மக்களுக்கான சமூகப் பணியை முன்னெடுக்காத ஒருவன், மக்கள் பற்றியும் - உதவி பற்றியும் பேசுகின்றான் என்றால், அவன் மோசடிக்காரனே. இப்படி உதவி கோருகின்றவர்கள், தங்கள் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ தயாரற்ற தற்குறிகள்.

தங்கள் சுய திறமையை, சமூக அறிவை, ஒடுக்கப்பட்ட சமூக அறத்தை சமூக அக்கறையுடன் முன்வைத்து மக்களுடன் உரையாடாத யூ-ரியூப் சமூக வலைத்தளத்தின் பொது நோக்கம், எந்த வகையிலான குறுக்கு வழியிலும் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது தான். பண அதிகாரம் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்வது, தன்னை கதாநாயகனாகக் காட்டி சமூகத்தை சுரண்டுவது, இது தான் இதன் சாரமும், உண்மையுமாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE