Language Selection

"முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" முதலாளித்துவ வெள்ளாளியத்தால் இப்படித்தான் புலம்ப முடியும். முன்போல் எதுதான் இருக்கின்றது!? எல்லாம் இயங்கிக் கொண்டு மாறிக்கொண்டு இருக்கின்றது. இதுதான் இயங்கியல் விதி, இது சாதிக்கு விதிவிலக்கல்ல. இதை மறுக்கிறவர்கள், நாங்கள் முன்போல் உங்களை ஒடுக்குவதில்லை என்று கூறுகின்றதன் பொருள், நவீன வெள்ளாளிய ஒடுக்குமுறை பூசிமெழுகுவதைத் தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை .. என எதுவும் முன்போல் இருப்பதில்லை. இதனால் இதை இல்லை என்று கூற ஒருவன் முற்படுவானேயானால், அவன் ஒடுக்குமுறையாளனாக இருக்கின்றான் என்பதுதான் பொருள்.

இது இன்று சாதி எப்படி, எங்கே இயங்குகின்றது என்பதைக் காட்டு என்று கேட்பதற்கு நிகரானது. பாரம்பரிய சாதிய சுடலையில் தான் எரிப்போம் என்பதும், யார் தேர் தடத்தை பிடிக்கலாம் என்பதை வரையறுப்பதாகட்டும், யார் பூசாரி என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயில் எங்கே - எது வரை யார் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயிலில் பெண்களின் எல்லை என்ன என்பதை வரையறுக்கும் ஒழுக்க விதியாகட்டும், சேட்டைக் கழற்று - செருப்பை கழற்று என்ற அதிகாரமாகட்டும் இவற்றின் பின்னால் சாதிய அதிகாரமும் - ஒடுக்குமுறையுமே இயங்குகின்றது. இது இன்று வெளிப்படையாகவும் - மறைமுகமாகவும் இயங்குகின்றது.

இவற்றைக் கடந்து தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரை எங்கே அனுமதிப்பது என்பது, எனது தனியுடமையிலான தனி உரிமை சார்ந்தது என்று கூறும் எல்லையில் கூட சாதி இயங்குகின்றது. எல்லா பண்பாட்டு - கலாச்சார தளத்திலும் சாதி இயங்குகின்றது. சாதி இயங்குகின்றது என்றால், வெளிப்படையாகவும், நாசூக்கான முறையில் வடிவம் மாறி ஒழித்தும் இயங்குகின்றது. எந்த வடிவில் இருந்தாலும் அது ஒடுக்குமுறைதான். மனிதனை மனிதன் சமமாக அங்கீகரிக்காத எல்லாத் தளத்திலும், சாதிய ஒடுக்குமுறையே இயங்குகின்றது. சாதிய சமூக அமைப்பின் இயங்குவிதியே இது தான்.

நூலகத்தை மீளத் திறக்க சாதி தடையாக இருக்கவில்லை என்ற வெள்ளாளியத்தின் இன்றைய ஊளையிடல்களும் - கூச்சல்களும், சாதிய ஒடுக்குமுறையே. ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரை ஒடுக்கும் சாதிய சிந்தனை மூலம் முன்னிறுத்திக் காட்டிக் கொள்வதன் மூலம், அதை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காட்டுவதும் - கூறுவதும் கூட, ஒடுக்கும் வெள்ளாளியமே.

1970 களில் கூட்டணியின்; வாலாக, அதேநேரம் தலைக்கும் வாலுக்கும் முரண்பாடாக உருவான நான்கு இயக்கங்களான "ஈழத் தமிழ் இயக்கம் (1969)" "தமிழ் மாணவர் பேரவை (1970)" "தமிழ் இளைஞர் பேரவை(1973)", "தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(1975)" இணைந்தவர்களில் பலர், ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்தவர்கள். "தமிழ் இளைஞர் பேரவை(1973)" தலைவராகவும், "தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(1975)" செயலாளராகவும் இருந்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இதனால் அவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர் என்று யாராவது கூற முற்பட்டால், அது வெள்ளாளியம்.

1977 தேர்தலின் போது கூட்டணி சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வேட்பாளராக அவரை தேர்தல் அரசியலில் முன்னிறுத்துமளவுக்கு (அவர் அதை மறுத்து விட்டார்) முன்வந்த கூட்டணி, ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மோசடி செய்ய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த - ஒடுக்கும் சாதிக்கு அரசியல் ரீதியாக சேவை செய்யும் பிரதிநிதிகள் தேவைப்பட்டனர்.

1960 களில் சாதிப் போராட்டத்தை தடுக்க 1970 களில் கூட்டணி "சமபந்தி" நடத்திய போது, சிவகுமாரன் அதை முன்னின்று செய்யுமளவுக்கு வெள்ளாளியத்தின் பிரதிநிதியாக உழைத்தவன். இப்படி உருவான இளைஞர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் அல்ல, மாறாக ஒடுக்குகின்றவன் செய்த வெள்ளாளிய அரசியலுக்கு "தமிழ் தேசியத்தின்" பெயரில் உருவானவர்கள். மேலே பெயர் குறிப்பிட்ட நான்கு அமைப்புகளில் இருந்தவர்களில் பலர் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தலைமைகளில் இருக்குமளவுக்கு, தனிப்பட்ட ரீதியில் சாதி பார்க்காத அளவுக்கு இளைஞர்களின்; உலகமது. ஆனால் அவர்களின் அரசியல் வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பை பிரதிநிதித்துவம் செய்தது. 1960 களில் சாதி போராட்டத்தை எதிர்த்து உருவான அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு முன்னிலைப் பாத்திரத்தை வழங்கியதுடன் - அதை வெள்ளாளியம் அங்கீகரித்தது. இதன் மூலம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டத்திற்கு முன்னிலை வகித்ததுடன் – அதற்கு தலைமையும் தாங்கினர். இந்த நான்கு வெள்ளாளிய அமைப்புகளில் இருந்தவர்கள் தான் - பின்னாளில் இயக்கங்களின் (பிரபாகரன் உட்பட) தலைவர்கள்.

கூட்டணியின் வெள்ளாளிய அரசியலே பித்தலாட்டமானது. "வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)" புரட்சிகர வேசம் போட்டது. சுரண்டலற்ற – மதச் சார்பற்ற சமூகம் பற்றி பேசுகின்றது. அத்துடன் இதன் தீர்மானம் ஒன்று "தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும், எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்கின்றது. 1977 தேர்தல் இதற்காக வாக்களிக்கப்பட்டது என்றால் இது எப்படி மோசடியோ, அது போல் சாதி பற்றிய கூற்றும் பித்தலாட்டம் நிறைந்தது. புலிகள் இதில் இருந்து –அதே மோசடிகளுடன் தோன்றியவர்களே.

கூட்டணி இது மட்டும் செய்யவில்லை. 04.02.1976 இல் பாராளுமன்றத்தில் செல்வநாயகம் "விடுதலை பெற்ற இறைமையுள்ள மதசார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழப்;" பிரகடனத்தை செய்த போது, இறைமை பற்றியும், மதசார்பற்ற தன்மை பற்றியும், சமதர்மம் பற்றியும் பேசுகின்ற பித்தலாட்டம் இன்றி, அரசியல் நகர்த்தப்படவில்லை. இதைத்தான் புலிகளும் செய்தனர்.

இந்த அரசியல் தான் «நான் சாதி பார்ப்பதில்லை.» «இப்போது எங்கே யார் சாதி பார்க்கின்றனர்» என்று உளற வைக்கின்றது. வெள்ளாளியச் சிந்தனைமுறையின் இந்த உளவியலே, மோசடியை சார்ந்தது. இது தான் "முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" என்று கூறுவதை, வெள்ளாளிய அறிவியலாக பினாத்துகின்றது.

தலித் வெள்ளாளியமோ "படித்து பட்டம் பெற்று - பொருளாதார ரீதியில் முன்னேறினால்" சாதி ஒழிந்து விடும் என்பது - இங்கு சாதியைக் காண்பதும் கற்பனை என்கின்றது.

சாதியை அடையாளமாக்கி பிழைத்துக் கொள்ளும் தலித்திய வெள்ளாளியம் இருப்பது போல், சாதி ஒடுக்குமுறையைக் காட்டி பிழைக்கும் அடையாளப் பிழைப்புவாத வெள்ளாளிய தலித்தியம் இயங்குகின்றது. பிறப்பை முன்னிறுத்தி தனிநபரை அணுகுவது வரை - சாதிய ஒடுக்குமுறையை வரையறுக்கும் வெள்ளாளிய தலித்தியம் இயங்குகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அந்த மக்களை ஒடுக்குமுறையில் இருந்து விடுபட வழிகாட்டாத சிந்தனை முறைகள் எல்லாம், வெள்ளாளிய சிந்தனை முறையின் பிரதி தான்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றது போன்றே, இன்று இன ரீதியான ஒடுக்குமுறையும் காணப்படுகின்றது. இதில் ஒன்றை மட்டும் காண்கின்ற முறை வெள்ளாளியச் சிந்தனை முறை. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தை எதிர்ப்பது, புலியெதிர்ப்பு .. என்று அனைத்து வகையான தலித்தியமும், வெள்ளாளியமும், வெள்ளாளியத்தின் கூறாகும். வெள்ளாளியம் என்பது ஒடுக்கும் சிந்தனை முறை. அது எல்லா ஒடுக்குமுறையிலும் தன்னை ஏதோ ஒருவிதத்தில், ஒடுக்கும் ஏதோ ஒரு தரப்புடன் ஜக்கியப்படுத்திக் கொள்ளும். அது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி தன்னை அடையாளப்படுத்த மறுக்கின்ற போது, அது சாதிய சமூக அமைப்பில் வெள்ளாளியமாகவே இயங்குகின்றது. சாதி பலமுனைகளில் பல வேசத்தில் இயங்குகின்றது. இதில் தலித் வேசமும் ஒன்று.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ