Language Selection

ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்திலிருந்தபடி, சாதி சமூக அமைப்பை எதிர்த்து போராடாது, எதை எப்படி புரட்டிப்போட்டு சிந்தித்தாலும் அது சாதியக் கண்ணோட்டம் கொண்டதே. யாழ் நூலகம் மீள திறப்பதை புலிகள் தடுத்த விடையத்தை ஓட்டிய கண்ணோட்டம், சாதி கடந்து புனிதமாகிவிடுவதில்லை.

ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான ஓட்டுமொத்த சமூகப் பின்புலத்தை எதிர்த்துப் போராடாத எவருடைய சிந்தனையும் - கருத்தும் சாதிய சிந்தனைமுறைதான்;. இந்த சாதிய சிந்தனைமுறைக்கு ஓடுக்கும் சாதியில் பிறக்க வேண்டும் என்பதல்ல, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவனின் சிந்தனைமுறையும் சாதிய சிந்தனைமுறை தான். இது இருக்கும் வரை தான் - சாதிய சமூக அமைப்பு நீடிக்கும்.

யாழ் நூலகம் குறித்த அண்மைய சர்ச்சையின் போது சிவா சின்னப்பொடி "விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உயர்மட்ட தளபதிகள் நிலையில் 12 பேரும், இடைநிலைத் தளபதிகளாக 56 பேரும், அதற்கு அடுத்த மட்டத்தில் 164 பேரும் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சார்ந்தவர்களாக" இருந்த புலிகள் இயக்கத்;தை, எப்படி சாதி இயக்கம் என்று கூற முடியும் என்ற தர்க்கமே – புலிக்கு பின் சாதியை பாதுகாக்கும் நவீன சிந்தனைமுறை. இந்தியா காவி காப்பரேட் பார்ப்பனியப் பாசிசம், நாட்டின் ஜனாதிபதியாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை முன்னிறுத்தியே, இன்றைய சாதிய ஒடுக்குமுறை சமூகத்தை பாதுகாக்கின்றது. முன்பு ஒடுக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி, முஸ்லிம்களை ஒடுக்குகின்ற இந்துத்துவ அமைப்பை பாதுகாத்தது. இங்கு அடிப்படையில் பாசிச சிந்தனைமுறை இருக்கின்றது. புலிகளின் பாசிச சிந்தனைமுறை இதைக் கடந்ததல்ல.

புனைபெயரில் இனம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்களைக் கொண்ட புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களின் சொந்தப் பெயரைக் கண்டுபிடித்து, அவர்களின் சாதி என்னவென்று கண்டுபிடிக்க முடிகின்றது என்றால் - புலிகள் ஓடுக்கும் சாதி இயக்கமாக இருந்தால் தான் அது சாத்தியமானது. புலியெதிர்ப்பில் உள்ள வலதுசாரிய பிரிவானது ஒடுக்கப்பட்டவர்களாலேயே இயக்கம் தோற்றது என்றும், இயக்கம் செய்த மக்கள் விரோதமானவற்றுக்கு இயக்கத்தில் இருந்த ஒடுக்கப்பட்டவர்களே காரணமென்றும், புலித்தலைமைக்கு தெரியாதவையே புலிகளின் விமர்சனத்துக்குரிய விடையங்கள் - என்று பல வடிவங்களில் புலம்புவதை காணமுடியும். இப்படி சாதியை அடிப்படையாக கொண்டு 2000 ஆண்டுகளில் வெளியான 'மறைவில் ஜந்து முகங்கள்" மீதான எனது விமர்சனமான "அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்" இதற்கு பொருந்தும்.


பிரான்சில் புலித்தலைமை சிவா சின்னப்பொடியை ஓடுக்கும் சாதி அடிப்படையில் தனிமைப்படுத்தி ஒடுக்கியதற்கு எதிராக குமுறுகின்ற உங்கள் நியாயங்கள், வன்னிக்கும்  அங்கும் பொருந்தும். வெளிநாட்டு புலித்தலைமை வேறு, களத்தில் இருந்த தலைமை வேறு என்று கூறுவது, இன்றைய உங்கள் தனிப்பட்ட இருப்புடன் தொடர்புடையது.  வெளிநாட்டு புலித்தலைமையிலும் ஓடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர் இருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.

 

 

புலிகளை சாதியற்ற இயக்கமாக நிறுவ முனைகின்ற முறையே, வெள்ளாளியச் சாதிய சிந்தனைமுறைதான். ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்தபடி சொல்லுகின்றதைத் தாண்டி, சாதிக்கு எதிரான ஒடுக்கபட்டவனின் சிந்தனைமுறையல்ல.

சாதிய சிந்தனையிலான இந்த வெள்ளாளிய சிந்தனையிலான "டயலக்" புலிகளின் பெண்விடுதலை குறித்து புலம்பும் ஆணாதிக்கத்துக்கு நிகரானது. புலிகள் இயக்கம்  ஆணாதிக்கத்தைக் கொண்டதல்ல என்று கூறுகின்ற பித்தலாட்டத்துக்கு, இயக்கத்தில் இருந்த பெண்களையும் பெண் தலைமைத்துவத்தையும் காட்டுவது கடைந்தெடுத்த ஆணாதிக்க பொறுக்கித்தனம்;. ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்தபடி செய்கின்ற கேடுகெட்ட ஆணாதிக்கத்தனம், சாதி சமூகத்தில் வாழ்ந்தபடி செய்கின்ற சாதிய மோசடியாகும்.

ஒடுக்கும் யாழ்; மையவாத சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் சமூகப் பின்னணியைக் கொண்ட புலிகள், 2003 இல் நூலகத்தை மீள திறந்ததை ஒடுக்கும் சாதி அடிப்படையில் தடுக்கவில்லை என்கின்ற புலி வில்லுப்பாட்டு, சாதியைப் பாதுகாத்த புலியை கறைபடியாத புனித பிம்பமாக்கி சாதியை தொடர்ந்து பாதுகாக்க முனைகின்றனர்.

ஒடுக்கும் சாதி அடிப்படையில் யாழ் நூலகம் திறப்பதை புலிகள் 2003 இல் தடுக்கவில்லை என்று கூறும் நீங்கள், வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக அமைப்பில் இருந்தபடி உளறுகின்ற தர்க்கங்கள் வாதங்களும், தொடர்ந்தும் ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டம் தான்.

 

அன்று புலிகள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய உண்மை, அதை நியாயப்பபடுத்த  எந்தக் காரணத்தை எப்படிச் சொன்னாலும் - அது வெள்ளாளிய புலியிசம் தான். சாராம்சத்தில்  புலிப் பாசிசமே. புலிப் பாசிசம் என்பது ஜனநாயக மறுப்பு கொண்டதும், சாதிய சமூக அமைப்பினை பாதுகாக்கும் - அதாவது தமிழனைத் தமிழன் ஒடுக்கும் சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் அரசியல் அடிப்படையைக் கொண்டது.  ஒடுக்கப்பட்ட சாதியைப் பிறப்பாக கொண்டவர்களும் - நிலவும் சாதிய சமூக அமைப்புக்கு தலைமை தாங்கி ஒடுக்குகின்ற அமைப்பு முறைதான் - வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பு முறை. புலிகளின் தலைமையில் ஒடுக்கப்பட்டவர்கள் இருப்பதால், புலிகள் சாதி சமூக அமைப்பை பிரதிபலிக்கவில்லை என்று கூறுகின்ற சிந்தனைமுறை - சாதிய சிந்தனைமுறைதான்.

அன்றைய மீள் திறப்பில் அரசியல் இருப்பது போல் - அதை திறக்கவிடாமல் தடுத்த பின்னணியிலும் அரசியல் இருக்கின்றது. இரண்டுமே மக்களை ஒடுக்குகின்ற அரசியல். ஒடுக்கும் இனவாத அரசியலுக்கு நிகராக தமிழனைத் தமிழன் ஒடுக்கியாளும் வெள்ளாளிய சிந்தனையிலான தேசியவாத அரசியலாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையா மீதான புலிகளின் மிரட்டல்கள், திறப்பதை தடுத்து நிறுத்த வெளியிட்ட அறிக்கைகள், சாதியை ஓழிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் பின்னணியில் இருந்து வெளிவரவில்லை. சாதி சமூக அமைப்பைப் பாதுகாக்கும் - புலிப் பாசிசத்தை தூக்கி கொண்டாடிய சாதிய சமூக அமைப்பின் கூச்சல்களே. அந்த கூச்சல்கள் இன்னமும் ஓயவில்லை.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ