Language Selection

அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் முடக்கி - உலகெங்கும் பரவுவதை தடுத்திருக்க முடியும் என. இது அமெரிக்கா கூற்று மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனைமுறையில் சிந்திக்கின்ற, மனிதர்களின் பொதுக் கருத்தியலுமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ்சை தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி இருக்கும் ஆற்றலையும், அது உலகெங்கும் பரவுவதை தடுக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது. சமூகத்தை முன்னிறுத்தி அறிவியல்ரீதியாக அணுகினால் சாத்தியமானாக இருந்த போதும், பொருளாதாரரீதியான சிந்தனையும் நடைமுறையும் அதை சாத்தியமற்றதாக்கியது.

சீனாவைக் கடந்து வைரஸ்சின் பரவலை சீனா கட்டுப்படுத்தத் தவறியது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை ஆராய முன்பு – அனைத்து நாடுகளும் பதில் சொல்ல வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றது

1.சீனாவை விட்டு வைரஸ் நாடு கடந்த பின் - சீனா போல் அல்லது உங்கள் வழியில் ஏன் உங்கள் நாட்டில் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை? எது தடுத்தது? அனைத்து நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2.வைரஸ் பரவலைத் தடுக்க அரையும் குறையுமாக முடக்கி – மீளவும் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க இயல்பு வாழக்;கைக்கு திரும்பும் உங்கள் நடவடிக்கை - வைரஸ் தொற்றை மீள பரவலாக்கும் நடவடிக்கையாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் நடத்தைகள் ஒருபுரும் இருக்க மறுபக்கம் உங்களையே கட்டுப்படுத்த முடியாதபோது, சீனாவை குறிவைத்து அரசியல் நடத்துவது ஏன்? சீனா கட்டுப்படுத்தத் தவறிய விடையத்தைப் பார்ப்போம். சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற குற்றச்சாட்டை, அறிவியல் அடிப்படையின்றி அமெரிக்கா அவதூறாகவே முன்வைத்து வருகின்றது. மேற்கு ஆதரவு முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தக் குற்றச்சாட்டையே மீள முன்வைக்கின்றனர். இப்படி அரசியலாகும் இந்தப் பின்னணியில் - என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

சீனா உலகெங்கும் பரப்பியது என்பது பொய். உலகெங்கும் திட்டமிட்டோ அல்லது சீன சுற்றுலாப் பயணிகள் மூலமே, கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் நிகழவில்லை. முhறாக சீனா அல்லாத அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே, சீனாவில் இருந்து கொரோனாவைக் காவி வந்தனர். இவர்கள் சீனா சென்ற சுற்றுலாப் பயணிகளுமல்ல.

அப்படியானால் கொரோனா வைரஸ்சை காவி வந்தவர்கள் யார்? இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்;கு (சீனாவுக்கு) இருந்ததா? இதை ஏன் இன்று வரை (சீனா உட்பட) யாரும் பேச மறுக்கின்றனர்?

உலகமயமாதலையும், அதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையும்  கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்கு கிடையாது. உதாரணமாக மாஸ்க் உற்பத்தியை எடுங்கள். உற்பத்தி, விற்பனை, விற்றதை இடையில் மறித்து அதிக விலைக்கு விற்கும் - வாங்கும் அதிகாரம் .. எதிலும் அரசுகள் தலையிட முடியாது. அண்மையில் பிரான்ஸ் வந்த மாஸ்க்கை இடையில் வைத்து அமெரிக்கா வாங்கிச் சென்ற கதை போல், பல உதாரணங்கள் உண்டு. உலகமயமாதல் இந்தச் சந்தைவிதி போல் - கொரோனாவும் சுதந்திரமாக உலகமயமாதல் பொருளாதார விதியின் கீழ் தான் - சீனாவை விட்டுப் பறந்தது.

சீனாவில் வூகானில் உள்ள உலகக் காப்பரேட் நிறுவனங்களின் அதிகார வர்க்கம் தான், பிற நாடுகளுக்கு கொரோனா வைரஸ்சை கொண்டு சென்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சீனாவுக்கு கிடையாது.

வூகான் என்பது உலகமயமாதலின் ஒரு மையம். உலகச் சந்தைப் பொருளாதார உற்பத்தியின் மையமுமாகும். உலகச் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்கும் மூலதனச் செயற்பாட்டை வழிநடத்தும் தலைமையகமே வூகான் தான். மிக மலிவான கூலியில் உலகில் அதிக தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்ட சீனா – வர்க்கரீதியாக அமைதியான (சுரண்டுவதற்கு ஏற்ற) நாடும் கூட. கம்யூனிசத்தின் பெயரில் சீன முதலாளிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை, வூகானில் இருந்து காப்பரேட் மூலதனம்  கொள்ளையிடுகின்றது.

இப்படி உலகின் பெரும் பணக்காரர்களை உருவாக்கும் சுரண்டலை முன் நின்று வழிநடத்தும் காப்பரேட் நபர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், எந்த நாட்டுக்கும் கிடையாது. மூலதனத்தின் அதிகாரம் என்பது எல்லைகளற்ற – அதிக வல்லமை கொண்டவை.

இப்படிப்பட்ட சூழலில் வூகானாலில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு - அது ஒரு தொற்றாக அறிவிக்கப்பட்டது. சீனா வூகானை முடக்கிய போது, காப்பரேட்டையும்  உள்ளடக்கியது தான். கம்யூனிசத்தின் பெயரில் உள்ள சீன முதலாளித்துவ அரசின் முடிவு என்பது, சீன முதலாளிகளின்  முடிவு. ஆனால் காப்பரேட் கம்பனிகளில் உயர்பதவி வகித்த சீனர்கள் அல்லாதவர்கள், இந்த வைரஸ் குறித்த நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்ததுடன்,  சீனாவை விட்டு சுதந்திரமாக வெளியேறியும் விட்டனர். இதன் பொருள் வைரஸ்சை உலகெங்கும் மிகச் சுதந்திரமாக காவிச் சென்றனர்.

வைரஸ் தொற்று இறைச்சிச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு சீனாவில் இனம் காணப்பட்ட பின்னணியில், எப்படி சீனா அல்லாத காப்பரேட் உயர் அதிகாரிகளுக்கு பரவியது என்ற கேள்வி எழும். செல்வ அடுக்குகளில் மேலே இருப்பவர்களின் வீட்டு வேலைகளைச் செய்பவர்கள், செல்வ அடுக்கில் கீழே இருப்பவர்கள் தான். செல்வம் சிலரிடம் குவிய வீட்டு வேலை என்பது, உலகமயமாதலில் பெரிய மனித உழைப்பாக மாறி இருக்கின்றது. உதாரணமாக பிரான்சில் வீட்டு வேலையில் ஈடுபடுவோர் 10 இலட்சம் பேர், இது இந்தியாவில் 600 இலட்சம் (6 கோடி) பேர். செல்வ அடுக்கில் கீழேயுள்ள சீன ஏழைகள், காப்பரேட் கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்பவராக, கார் ஓட்டுபவர்களாக … பலதரப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர். இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காப்பரேட் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு, சீன அரசுக்கு கட்டுப்படாத காப்பரேட் ஊழியர்கள் மூலம் - வைரஸ் உலகெங்கும் பரவியது.

இப்படி உலகெங்கும் சென்றவர்கள் மூலம் உலகெங்குமான வர்க்க மேலடுக்களிலேயே வைரஸ் முதலில் பரவியது. இந்த வகையில்

1.உலகெங்கும் காப்பரேட் மூலதனத்தை விரிவாக்கும் சர்வதேச கூட்டங்களை நடத்தியவர்களிடையே கொரோனா பரவியது.

2.சீனா முடக்கத்தை முன்கூட்டியே அறிந்து சீனாவில் இருந்து வெளியேறிய காப்பரேட் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - உயர் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் மூலம் பரவியது

3.காப்பரேட் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பணக்கார காப்பரேட் மதக் குழுக்களின் தொடர்பு வழியில் வைரஸ் பரவியது

4.சீனாவில் இருந்து வெளியேறிய காப்பரேட் பணக்கார வர்க்கம் - தங்கள் சொந்த நாடுகளில் தங்கள் வீட்டுவேலைக்கு வைத்திருந்த நபர்கள் மூலம், சாதாரண மக்களுக்கு வைரஸ்சைப் பரப்பியது

இப்படி உலகமயமாதல் காப்பரேட் பொருளாதார வடிவத்தில் வைரஸ் பரவிய ஒழுங்கை,  சீனா எந்த வகையிலும் தடுக்க முடியாது. வைரஸ் தொற்று உலகத் தொற்றாக மாறிய போது, உலகளாவிய கூட்டு செயற்பாடு மூலம் கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் எதையும் - எந்த நாடும் பின்பற்றவில்;லை. நாட்டு எல்லையை முன்னிறுத்தும் தேசியவாத - ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து காப்பரேட் மயமாவதன் மூலம், உலகம் முரண்பாடுகளாக பிளவுண்டு வருகின்றது. வைரஸ் அதை ஆழமாக்கியுள்ளது.

சீனாவுக்குள் முடக்கி இருக்க முடியும். எப்படி என்றால் முரண்பட்ட உலகமயமாதலுக்கு பதில் ஒருங்கிணைந்த சர்வதேசியமாக உலகம் தன்னை முன்னிறுத்தியிருந்தால் - கொரோனா பரவுவதை தடுத்திருக்க முடியும். நாடுகளால் கூட கட்டுப்படுத்த முடியாத மூலதனத்தின் அதிகாரம், ஏகாதிபத்தியங்களிடையேயான குழிபறிப்புகள், இன-மத-நிற அரசியல் வெறித்தனங்களே வைரஸ்சை உலகமயமாக்கியது.

இப்படி உண்மைகள் இருக்க முதலாளித்துவம் தங்கள் உள்நாட்டு நெருக்கடியை திசைதிருப்ப - தாம் அல்லாத நாடுகள் மீது போலியாக குற்றம் சாட்டுகின்றனர்.


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ