Language Selection

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

இனவொடுக்குமுறைக்குள்ளான இனம், தொடர்ந்து இனவொடுக்குமுறைக்கு உள்ளாகும் சூழலில், அதன் காயங்கள் மீது எண்ணை ஊற்றி கொழுத்திவிடும் ஒரு இனவாத அரசியல் நிகழ்ச்சியே இந்தத் தகனம். ஒடுக்கும் தங்கள் இனவாத அதிகாரங்கள் மூலம், சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிரானதாக மாற்றும், பிரித்தாளும் அரசியல் செயற்பாட்டையே இந்த அரசு இதன் மூலம் மீண்டும் அரங்கேற்றியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் இனவாதத் தீயை வைக்கப் போவதை, தேர்தல் மூலம் தமிழ் தலைவர்களாவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததுடன், அவர்களின் ஒப்புதலுடனேயே மக்களைப் பிளக்கும் இனவாத நாடகத்தை அரசு நடத்தியது.

அதேநேரம் தேர்தல் மூலம் பதவி கிடைக்காத கூட்டமைப்பின் அரசியல் எதிரிகள், மரணமடைந்த நாகவிகாரை விகாராதிபதியின் உடல் எங்கே தகனம் செய்வது என்ற சர்ச்சைகள் முன்கூட்டியே தெரிந்து இருந்தும், இறுதி வரை மௌனமாக இருந்து, அதை தமது சுயநலத்திற்கு ஏற்ப இறுதியில் தமது அரசியலாக்கினர்.

யாழ் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரி வழக்கு தாக்குதல் செய்து நடத்திய அரசியல் பித்தலாட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் வேறு யாருமல்ல, வர இருக்கும் யாழ் மாநகர சபையில் தேர்தலில் மேயர் பதவிக்கு களமிறங்கியுள்ளவர்களே. தமது தேர்தல் அரசியலில் வாக்கு வேட்டையை நடத்துவதற்;காக, "புனிதம், பண்பாடு.." குறித்து பேசி நடத்திய நாடகம் தேர்தலில் வாக்கு பெறுவதை தங்கள் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இப்படி வழக்குபோட்ட சாதிவெறி பிடித்த இந்த வெள்ளாளிய அரசியல்வாதிகள்தான், வேள்வித் தடைக்கு எதிராகவும் வழக்கு போட்டு, அதை தடைக்குள்ளாக்கியவர்கள். இதன் மூலம் தம்மை ஒடுக்கும் இந்துத்துவ சாதியவாதிகளாக, வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் முன் தம்மை முன்னிறுத்தியவர்கள். இன்று வாக்கு வேட்டைக்கு கிளம்பி இருக்கின்றனர்.

யாழ் வெள்ளாளிய இந்துப் பன்னாடைகளின் சமூக சிந்தனை குறித்து!?

வெள்ளாளியப் பன்னாடைகளே பண்பாடு - கலாச்சாரம் குறித்தும், கோயில்கள் - புனிதங்கள் குறித்தும் பேசுகின்றனர். தமிழ் மக்களை சாதிப் பண்பாடுகள் மூலம் ஒடுக்கும் வெள்ளாளியச் சிந்தனைமுறையைக் கொண்ட தங்கள் சாதிப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு, சாதி இந்துத்துவ புனிதங்களை நிலைநிறுத்த முனைகின்ற பின்னணியிலேயே, யாழ் முற்றவெளியில் பிணத்தை எரிப்பதை எதிர்த்து அரசியலாக்கினர்.

இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சார்ந்து, இனவொடுக்குமுறையை எதிர்த்து அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று இதை எதிர்ப்பவராக இருந்தால், வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சாதியச் சுடலைகளை அகற்றும் போராட்டத்தை முன்னின்று, பொதுமைப்படுத்திப் போராடுபவராக தம்மை அரசியல்ரீதியாக முன்னிறுத்தியவராக இருப்பார்கள். அண்மையில் புத்தூரில் மக்கள் மத்தியில் இருந்த சுடலையை அகற்ற நடத்திய போராட்டத்தை எதிர்த்த வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளே, இன்று முற்றவெளியில் பிணத்தை எரிப்பதை எதிர்ப்பது என்பது, வெள்ளாளிய சாதிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே தோலுரிக்கின்றது.

இந்த வெள்ளாளிய பன்னாடைகள் கடந்தகாலத்தில் பொது இடங்களில் முன்னின்று செய்த பிண எரிப்புகளை மூடிமறைத்துவிட்டே நாடகமாடுகின்றனர். யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் அமிர்தலிங்கத்தின் பிணத்தை எரித்த போது வராத புனிதமும், பண்பாடும் இப்போது வருகின்றது. புலிகள் ரெலோ இயக்கத்தை சேர்ந்தவர்களைச் சுட்டு, அரை உயிர்களுடன் வீதிகளில் போட்டு கொழுத்திய போது கொக்கோகோலா கொடுத்தவர்களும், கொடுத்தவர்களின் அரசியல் வாரிசுகளும், முற்றவெளி தகனம் குறித்து பேசுவதற்கு என்ன அரசியல் தகுதி இருக்கின்றது.

வெள்ளாளியச் சாதிப் பிணத்தை ஓடுக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளில் கொழுத்துவதே எங்கள் சாதிப் பண்பாடு என்று பெருமையாகப் பீற்றிக் கொள்ளும் சாதி வெறிபிடித்த நாய்கள், அதை ஆதரித்து அதற்காக காலைத் தூக்கி மூத்திரம் பெய்யும் சாதிப் பண்பாட்டு வெறியர்கள், நாகவிகாரை விகாராதிபதியின் உடல் எரிப்பது பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது? இப்படி பேசுவது சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான, தங்கள் வெள்ளாளிய அதிகாரத்தை தக்கவைக்கும் வாக்குகளை தரும்படியே கோருகின்றனர்.

ஒடுக்கும் இனவாதத்தை தங்கள் வெள்ளாளியச் சாதிய ஒடுக்குமுறை அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பயன்படுத்துகின்றவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் விரோதிகளாகவே தொடர்ந்து இருக்கின்றனர்.

மக்கள் வாழ்கின்ற பொது இடங்களில் பிணங்களை எரிப்பதை எதிர்த்து போராட மறுக்கின்ற நயவஞ்சகமான போலியான வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் மூலம், மக்களை ஏமாற்றி வாக்குப்பெறுவதையே தங்கள் அரசியலாக்குவதற்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வதையே வரலாறு எம்மிடம் கோரி நிற்கின்றது.


Most Read

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

MOST READ