Language Selection

ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?

மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானமும், இந்திய ஆதரவும்

இந்தத் தீர்மானம் போர்க்குற்றங்கள் மீது விசாரணையைக் கோரவில்லை. இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. ஐ.நா கூட தலையிட முடியாத, எந்த அதிகாரமுமற்ற பிரதிநிதிகள் தங்கள் சர்வதேச மேலாதிக்க நோக்குடன், இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கும் தீர்மானம் தான் இது. இந்த எல்லைக்குள் இலங்கையில் நடந்த சில உண்மைகளைச் சார்ந்து நின்று, நடந்தவைகளை மூடிமறைத்து புதைக்கின்றது.

உலகை ஏமாற்ற இலங்கை அரசு செய்த மோசடியை, இலங்கைக்கு எதிராக மீளப் பயன்படுத்தியிருக்கின்றது. இலங்கை மீதான மேற்கின் அழுத்தத்தையும் அதன் தலையீட்டைத் தவிர்க்கவும், உலகை ஏமாற்றவும் உருவாக்கியது தான் அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்பதை விசாரிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு. இது அரசின் வழிகாட்டலுக்கு ஏற்ப புலிகளை மட்டும் போர்க்குற்றவாளியாக்கி, அரசு மீதான போர்க்குற்றத்தை மறுதலித்தது. அரசு மீதான குற்றத்தை தங்கள் கைக்கூலிக் கும்பலான கருணா - டக்கிளஸ் மீது சுமத்தியது. இராணுவத்தையும் அரசையும் பாதுகாக்கும் வகையில், ஐ.நாவின் அறிக்கையை மறுத்தும் வெளியாகியது. மறுதளத்தில் அரசின் அச்சுறுத்தலையும் மீறி தமக்கு எதிராக சாட்சியமளிக்கக் கூடியவர்களை இனம் காணவும், அவர்களை முடக்கவும் இதனைப் பயன்படுத்தியுள்ளது. உண்மைகளை புதைக்க, சாட்சியங்களை அழிக்க கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற விசாரணை அரசுக்கு உதவியுள்ளது. இந்த வகையில் இது நடந்த உண்மைகளைப் புதைத்து, அரசுக்கு சார்பாக அரசால் முன்வைக்கப்பட்டது. சுயாதீனமான, நடுநிலையான விசாரணையைக் கொண்டதல்ல இது. இலங்கை அரசு எந்தவிதமான போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று இந்த அறிக்கை கூறுகின்றது. பொது மக்களைப் பலியெடுக்கவில்லை என்கின்றது. அவர்களைப் பாதுகாத்ததாக கூறுகின்றது. அரசு மற்றும் இராணுவம் எதைச் சொல்லி வந்ததோ, அதையே மீள வாந்தி எடுத்திருக்கின்றது.

இப்படி உண்மைகள் இருக்க, இலங்கை அரசின் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோருகின்றது ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம். இதை தம் காவடியாக்கி, தங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றது அறிவிழந்த கூட்டம். அரசின் தீர்மானம் தமக்கான தீர்வாக காண்கின்ற, காட்டுகின்ற மோசடியைத் தான் இங்கு நாம் காணமுடியும். இது எந்த நிலையிலும் போர்க்குற்ற விசாரணையையோ, மனித உரிமை மீறலையோ, இனவழிப்பை குறித்த விசாரணைகளையோ கோரவில்லை. இலங்கை அரசின் இந்த மோசடியை, அமுல் செய்யுமாறு ஐ.நா கோருகின்றது. குற்றவாளிகள் தங்களை தாங்கள் சுயவிசாரணை செய்து விசாரிக்குமாறும், பூசி மெழுகுமாறும் கோருகின்றது. குறிப்பாக அரசுக்கு வெளியில் சுயாதீனமான விசாரணையை, ஐ.நா தன் தீர்மானம் மூலம் மறுதலிக்கின்றது.

இதில் உள்ள அடுத்த மோசடி, இந்தியா முன்வைத்த திருத்தமும், ஜ.நா. தீர்மானத்துக்கான ஆதரவுமாகும். இது இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கிலானது. இந்தியா இதை ஆதரிக்க முன் தீர்மான வரையறையை ஐ.நா. மனித உரிமைத் தூதர் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டு;ம் என்று இருந்தது. இதை எதிர்த்த இந்தியா ஐ.நா. மனித உரிமைத் தூதர் இலங்கை அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று திருத்தியதன் மூலம், இலங்கை அரசுக்கு ஆதரவாக இதைத் திருத்தி அதனையே ஆதரித்திருக்கின்றது. இதுதான், இதன் பின்னுள்ள இந்தியாவின் மோசடியான ஆதரவாகும்;. இதன் மூலம் முக்கிய போர்க்குற்றவாளியான இந்தியா, இலங்கையை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து பாதுகாத்துக் கொண்டது. இதுமட்டுமின்றி புலத்துப் புலி உட்பட தமிழகத்து தமிழினவாதிகளையும் தன் பின்னால் காவடி எடுக்க வைத்திருக்கின்றது. இலங்கை அரசின் அறிக்கையின் பின், அனைவரையும் அணிதிரட்டி இருக்கின்றது.

மறுதளத்தில் இதன் மீதான மேற்கின் அக்கறையும், இந்தியாவின் நடத்தையும், மக்கள் சார்ந்ததல்ல. மாறாக தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கிலானது. இலங்கை அரசு தனது இராணுவ பாசிச குடும்ப சர்வாதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கில், சர்வதேச முரண்பாட்டுக்குள் தன்னை உள் நுழைத்த பின்னணியில் தான், இந்த ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம் உள் நோக்குடன் முன் மொழியப்பட்டது. இதை எதிர்த்த நாடுகளில் சீனா உள்ளிட கியூபா வரை அடங்கும். அதுவும் கூட இன்றைய உலக ஒழுங்கிலானது. அமெரிக்காவுடன் முரண்பட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. இந்த நிலையில் அமெரிக்காவுடன் முரண்பட்ட நிலையை, ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டுகின்ற வங்குரோத்து அரசியல் தளத்தில் இருந்து புலி எதிர்ப்பு அரசியல் இதை ஆதரிக்கின்றது. மறுதளத்தில் சீனா முதல் கியூபா வரை கம்யூனிச நாடாக கூறுகின்ற பின்புத்தியில் இருந்தும், தமிழினவாத வலதுசாரிகள் இதை வைத்து குறுகிய அரசியல் நடந்த முனைகின்றனர்.

உலகில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை என்பது, எப்போதும் மக்கள் சார்பான அரசியல் நிலையல்ல. இன்று இலங்கை அரசும் கூட அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருக்கின்றது. அதனால் அது மக்கள் அரசோ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசோ அல்ல. இது போல் கியூபா, சீனா கம்யூனிசத்தின் பெயரால் ஆட்சியில் இருப்பதால், அவை கம்யூனிச ஆட்சியுமல்ல. மக்கள் விரோத அரசுகள் தான். உண்மையான ஒரு கம்யூனிச அரசு, மக்கள் சார்ந்த அரசு அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக, உண்மையான சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வண்ணம் மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதை வாக்கெடுப்புக்கு முன்வைத்திருக்கும். மாறாக இந்த மக்கள் விரோத அரசுகள், அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்து அதை எதிர்த்ததன் மூலம் தம் பங்குக்கு போர்க்குற்றத்துக்கு உதவியிருக்கின்றது. இப்படி உண்மைகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. நீதி மறுதலிக்கப்பட்டு இருக்கின்றது.

சனல் 4 உண்மையின் ஒரு பக்கத்தைக் காட்டி, முழுமையான போர்க்குற்றத்தை மூடிமறைக்கின்றது.

இந்த யுத்தத்தின் பின்னான குற்றவாளிகள் யார்? இதை மூடிமறைப்பதில் இருந்துதான், சனல் 4 காட்சி மௌனமாகி வெளியாகி இருக்கின்றது. முக்கிய குற்றவாளியான இந்தியா உள்ளிட்ட மேற்கின் குற்றங்களை மறுதலிக்கும் வண்ணம், அதை மூடிமறைத்து நடந்தது என்ன என்பதை பற்றிய பொய்யான பிரச்சாரத்தை சனல் 4 காட்சிப்படுத்தி இருக்கின்றது. நடந்த பின்னணியில் ஆயுதங்கள் முதல் கொண்டு தார்மீக உதவி வழங்கிய இந்தியா மற்றும் மேற்கின் பங்களிப்பு இன்றி, வெளியான காட்சிக்குரிய சம்பவங்களும் நடந்து இருக்க முடியாது. இப்படி உண்மைகள் இருக்க, அதை மூடிமறைத்து மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப காட்சிகளையும், செய்திகளையும் சனல் 4 தணிக்கை செய்து மட்டுப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமல்ல மேற்குடன், இந்தியாவுடனும் கூடி அரசியல் செய்யும் புலிகளின் வலதுசாரிய அரசியலுக்கு இது உட்பட்டது.

போர்க்குற்றங்களில்; இலங்கை அரசு மட்டும் ஈடுபடவில்லை. புலிகள் மட்டும் ஈடுபடவில்லை. இந்தியா முதல் மேற்கு மட்டுமின்றி, சீனா முதல் ருசியா வரை இதற்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தது. இதுதான் இங்கு உண்மை. இதை சனல் 4 மறுத்து, உலகமயமாக்குகின்றது. இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்கு துணையாக இருந்த இலங்கை அல்லாத நாடுகளின் போர்க்குற்றத்தை மூடிமறைத்து, மேற்கின் தேவைக்கு ஏற்ப காட்சிப்படுத்துவதுதான் சனல் 4 காட்சிகளின் உள்ளடக்கம். இங்கு வெளியான காட்சிகள் கூட மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப வெட்டப்பட்டு, தணிக்கைக்கு உள்ளாகின்றது. முதலில் வெளியிட்ட சுட்டுக்கொல்லப்படும் சனல் 4 காட்சியின் தொடர்ச்சியில், இசைப்பிரியா உள்ளிட்ட காட்சி வெட்டப்பட்டது. இதன் பின் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வெளியான இரண்டாவது காட்சியில், முதலில் வெட்டப்பட்ட இசைப்பிரியாவின் காட்சி வெளியாகின்றது. அதேநேரம் பிரபாகரனின் கடைசி மகன் பற்றி குறிப்பும் வெளிவருகின்றது. ஆனால் காட்சி வெளியிடப்படவில்லை. இதன் பின் மீண்டும் மேற்கின் நிகழ்ச்சிக்கு ஏற்ப வெளியான மூன்றாவது காட்சியில், பிரபாகரனின் கடைசி மகனின் காட்சி இடம்பெறுகின்றது. இங்கு காட்சிகள் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் வெளிவரவில்லை. ஆக காட்சிகள் வெட்டப்பட்டு, மேற்கின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தொடர்ந்து வெளிவருகின்றது. உண்மைகள் சுயாதீனமாக காட்சிப்படுத்தப்படவில்லை. ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காட்சிகள் வெளிவருகின்றது. இதே சனல் 4 யுத்தம் நடந்தபோது கே.பியின் பேட்டியையும், யுத்தத்தின் பின்னான பேட்டி உட்பட வீடியோ பேட்டி வரை வெளியிட்டது. இந்த வகையில் புலியுடன் கொண்டிருந்த தொடர்பும், மேற்கின் அரசியலுடன் பின்னிப் பிணைந்த வண்ணம் பேட்டிகளும்;, காட்சிகளும்; வெளியாகின. இந்த தொலைக்காட்சி இந்தியா உள்ளிட்ட அமெரிக்கா வரை, இந்த போர் குற்றத்தில் எந்த வகையில் எப்படி சம்பந்தப்பட்டது என்பதை கொண்டுவரவில்லை. அதை மூடிமறைக்கும் வண்ணம், அவர்களை நண்பர்களாக காட்டும் வண்ணம், உண்மைக் காட்சிகளை கொண்டு அரசை மட்டும் குற்றவாளியாக்கி காட்ட முனைகின்றது. ஊடக தர்மத்தை புதைத்து, உண்மையையும் நீதியையும் மோசடி செய்திருக்கின்றது.

உண்மைகளும் பொய்களும்

நடந்த சில உண்மைகளைக் கொண்டு தங்கள் சர்வதேச அரசியலை இவர்கள் நடத்த முனைகின்றனர். மக்களின் துன்பங்கள், துயரங்கள் தங்கள் மேலாதிக்க நலனுக்கு பயன்படுத்தும் மோசடிகள் மூலம், மக்களை கழுவேற்றுகின்றனர். தென்னாசிய பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவமுனையும் அமெரிக்கா மற்றும் இந்தியா நலன்கள், மக்கள் சார்ந்த விடையங்களை பயன்படுத்தி கொள்ளும் சுயநல வக்கிரத்தை இதன் பின்னால் நாம் காணமுடியும்;. இதை தீர்வாகவும், வழியாகயும் காட்டி அரசியல் நடத்தும் அரசியல் போக்கிலித்தனத்தை இனம் கண்டு நாம் சுயமாக அணிதிரளாத வரை முள்ளிவாய்க்காலில் நடந்தது போன்ற புதைகுழிதான் மீண்டும் பரிசாக கிடைக்கும். இதைத்தான் எமது கடந்தகால வரலாறு, எமக்கு கற்றுத் தந்திருக்கின்றது.


- பி.இரயாகரன்.

முன்னணி இதழ்கள் இதழ் -5


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது