Language Selection

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

 

1.இந்த அமைப்பு முன்னிலை சோசலிச கட்சியின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்ட போதும், சமவுரிமை அமைப்பு இந்தக் கட்சியின் கீழ் இயங்காது. அந்த வகையில் இந்த அமைப்பு, அந்த முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன அமைப்புமல்ல. மாறாக சுயாதீனமான அமைப்பு. இதில் யாரும் இணைந்து வேலை செய்ய முடியும். இதன் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட எவரும், இதில் இணைந்து கொள்ள முடியும். இந்த வகையில் இது உடன்படக் கூடிய குறைந்தபட்சத் திட்டமாகும். இது முன்முயற்சி கொண்ட சுதந்திரமான ஒரு மக்கள் அமைப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

2.இந்த அமைப்பின் வெற்றி என்பது சிங்கள மக்கள் மத்தியில் இனவொடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் தீவிரமான மையமான அரசியல் போராட்டததின் மூலமே சாதிக்க முடியும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த வகையில் சமவுரிமை அமைப்பில் இணைந்து கொண்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த தோழர் குமார், அதற்கான பணியில் தம் அமைப்பு தீவிரமாக உழைக்கவும் இயங்கவும் உள்ளதாக பிரகடனம் செய்தார்.

3.இந்தப் போராட்டம் இலங்கையில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

 

1.சிந்தனைக்கான கருத்துக்களை உற்பத்தி செய்யும் கருத்தியல் மேலாதிக்கத்தை அறிவுஜீவிகள் மத்தியில் நிறுவுதல்

2.பாடசாலைக்குள் இனவாதத்துக்கு எதிரான கருத்தைக் கொண்டு செல்லுதல்

3.ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலனை உயர்த்திப்பிடித்தல் 4.கீழ் இருந்து இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதல் …. இன்னும் பல.

4.இனப்பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளைக் கொண்டவர்கள், இனவொடுக்குமுறைக்கும் இனவாதத்துக்கும் எதிராக இணைந்து நின்று போராடக் கூடிய ஒரு இடமாக சமவுரிமைக்கான இந்த அமைப்பு இருக்க முடியும் என்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்டது.

இந்தக் கூட்டம் பரஸ்பரம் உரையாடக் கூடிய மொழியியல் பற்றாக்குறையும், மொழிபெயர்ப்புக் குறைபாடுகளும் பொதுவாகக் காணப்பட்டது. எதிர்காலத்தில் இதை நிவர்த்திக்கும் வண்ணம் அதற்கான தீர்வை இந்தப் போராட்டத்தின் ஊடாக வந்தடைய முடியும் என்ற நம்பிக்கை கூட்டத்தினர் இடையில் பொதுவாக காணப்பட்டது.

மக்கள் தாமே தமக்காகப் போராட வேண்டும் என்ற விடையத்தையும், மக்கள் இனவொடுக்குமுறையையும் இனவாதத்தையும் எதிர்த்து தமக்குள் ஒற்றுமையாக வாழ்வதை மறுதளிக்கும் வண்ணமாக, இந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாத தளத்தில் நின்று கேள்விகள் தர்க்கங்கள் முன்வைப்பட்டது.

1.புலிகளை இது சேர்க்குமா இல்லைiயா என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு ஒருவர் கோரினார். இந்த மாதிரியான கேள்வி புலியெதிர்ப்பு அடிப்படையில், அனைத்தையும் புலியாக முத்திரை குத்தும் அரசின் பொது அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து அங்கு முன்வைக்கப்பட்டது. இறுதியில் அப்படியே அவர்கள் தங்கள் இணையத் தளத்தில் சமவுரிமை அமைப்புக்கு புலி முத்திரை குத்தி எழுதினர்.

சமவுரிமை அமைப்புக் கொள்கையையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளும் எவரும் இந்த அமைப்பில் இருக்க முடியும். இது தான் ஜனநாயகம். இதற்கு அப்பால் புலி இருக்க முடியுமா இல்லையா என்று கேட்பதும், அதற்குள் இதை வரையறுத்து பார்ப்பதும், ஜனநாயகத்தின் அடிப்படையை மறுக்கும் தங்கள் கொள்கை கோட்பாடற்ற செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. புலி எதிர்ப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இதில் இருந்து தான் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. இனவொடுக்குமுறை, இனவாதத்தைக் கொண்ட எவரும் இந்த அமைப்பில் இருக்க முடியாது. இது தான் திட்டம். திட்டம் எந்த இனவாதியையும் தனக்குள் அனுமதிக்காது. இப்படி இருக்க அரசு அனைத்தையும் புலி முத்திரை குத்துவது போல், சமவுரிமை அமைப்பை புலி முத்திரை குத்தி காட்ட முனைந்தனர், முனைகின்றனர். இதற்கு அப்பால் இதற்கு விளக்கம் கிடையது. தோழர் குமார் சுட்டிக் காட்டியது போல், சபை இவரின் கேள்வியின் நோக்கத்தை நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றது என்ற இதன் பின்னுள்ள எதார்த்தத்தை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டினார்.

2.சமவுரிமை அமைப்புக்கு புலி முத்திரையை குத்தும் கேள்வியை எழுப்பியவர், மற்றொரு கேள்வியை முன்வைத்தார். கடந்தகாலத்தில் ஜே.வி.பியில் இருந்தபோதான சுயவிமர்சனத்தைக் கோரினார். குமார் இதற்கான தனது பதிலின் போது, மக்கள் மத்தியில் செய்யப்பட்டதாக கூறினார். நாம் அறிந்தவரையில் சிங்களத்தில் இது பல நூறு பக்கம் கொண்ட நூலாக வந்திருப்பதும், இதன் ஆங்கில தமிழ் வடிவங்களுக்கான முயற்சிகள் நடப்பதாகவும் அறிகின்றோம். நிற்க, அனைத்தையும் புலி முத்திரை குத்துபவர்கள் முதல் கொண்டு புலி வரை சுயவிமர்சனம் கோருகின்றவர்கள் முதல், அதை "புதிய மொந்தையில் பழைய கள்ளா?" என்று கூறுகின்றவர்களின் அரசியலையும் அதன் நோக்கத்தையும் தனியாக ஆராய்வோம்.

3.வடகிழக்கில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு எதிராக தோழர் குமார் கருத்து தெரிவித்த போது, அப்படியல்ல என்ற ஆட்சேபனை முன்வைப்பட்டது. ஆதாரத்தை வைக்குமாறு கோரப்பட்டது. அவர் தாம் பௌத்தத்தை தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதாகவும், அதை இது கொச்சைப்படுத்துவதாகவும் கூறினார். எந்த மனிதனும் எந்த மதத்தையும், எந்த மொழியையும் தேர்வு செய்வதற்கும், பின்பற்றுவதுக்கும் உரித்துடையவர்கள். இது தான் எங்கள் நிலை. ஆனால் அதை பலாத்காரமாக செய்வதற்கும், அரசு இதை முன்னெடுப்பதற்கும் எதிராக போராட வேண்டியது அனைவரதும் கடமை. அதுவும் இன்று வடகிழக்கில் சிவில் சட்ட அமைப்பே இல்லாத சூழலில், இராணுவ ஆட்சியில் தனிமனித தெரிவுகள் என்பது கூட நிர்ப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்க முடியும்;. உண்மையான சுயாதீனமான தெரிவுக்குரிய ஜனநாயகச் சூழலுக்கு, தடையே அங்கு காணப்படுகின்றது.

இன்று இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிரான மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கான சமவுரிமை அமைப்பை எதிர்த்து, பேரினவாத அரசும், குறுந்தேசியவாதமும் ஒரு புள்ளியில் ஒரே கேள்விகளுடன் சந்திக்கின்றனர். சமவுரிமை அமைப்புக்கான பொது எதிர்வினையில், இதை நாம் தெளிவாக காணமுடிகின்றது. நாம் சரியான திசையில் பயணிப்பதற்கான அரசியல் எடுத்துக்காட்டாக இது இருக்கின்றது.

 

பி.இரயாகரன்

28.01.2013


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது