Language Selection

மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

பிராஞ்சு ஏகாதிபத்தியம் "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிராகவும், "பணயக்கைதிகளை மீட்டவும்", "சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கவும்" என்று கூறிக் கொண்டு இந்த யுத்தங்களை நடத்துகின்றது. படை நடவடிக்கை மூலம் படைகளை பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக நிறுத்துவது என்பது, மாலியில் மட்டுமல்ல உலகெங்கும் நடந்து வருகின்றது. பல நாடுகளில் அமெரிக்கப் படைகள் இருப்பது போல், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் முன்னைய காலனியிலும், இன்றைய நவகாலனிகளிலும் படைகளை நிறுத்தத் தொடங்கி இருக்கின்றது.

இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் பொருளாதார கெடுபிடி யுத்தங்கள் தான், இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு யுத்தங்களாக இன்று பரிணாமம் பெற்று வருகின்றது. வெளிப்படையாகக் கூறும் காரணங்களுக்கு அப்பால் இருக்கும் உண்மை இதுதான். இந்த நாடுகள் உலகில் தனது பொருளாதார நலன் சார்ந்த சர்வாதிகார, இராணுவ மற்றும் இஸ்லாமிய ஆட்சிகளை பாதுகாக்கும் அதே நேரம், இதைக் காரணம் காட்டி தனது பொருளாதார நலனுக்கு முரண்பாடான நாடுகளை ஆக்கிரமிக்கின்றன.

இப்படி யுத்தங்கள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலானதாக, தங்கள் செல்வாக்கு மண்டலங்களை தக்க வைப்பதற்காக, புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான யுத்தங்கள் தான் இவை. "ஜனநாயகத்தை பாதுகாத்தல்" "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிரான யுத்தங்கள் என்பது மக்களை ஏமாற்றி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாக இருக்க, இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தங்களாகும்.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் நடக்கும் ஆக்கிரமிப்பு யுத்தம், சாராம்சத்தில் உள் முரண்பாட்டால் ஆனது. "ஜனநாயகத்தை பாதுகாத்தல்" "இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானது", "பணயக் கைதிகளை மீட்டல்" .. என்ற ஏகாதிபத்திய ஆயுத்தத்தையே, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பயன்படுத்தும் போது அதுவே ஒத்துழைப்பாகவும், மறுபுறத்தில் நவகாலனிகளை தங்கள் சொந்த காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான யுத்தமுமாகும்.

தங்கள் செல்வாக்கு மண்டலங்களுக்காகவும், காலனியாக்கும் ஏகாதிபத்திய யுத்தம் தான், "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை" ஆயுதபாணியாக்குகின்றது. இது அரசுக்கு எதிராக அடிப்படைவாதத்தை வளர்த்தெடுக்கின்றது. முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசுக்கு எதிரான, அதை ஆதரிக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான யுத்தமாக மாறுகின்றது. ஏகாதிபத்தியங்கள் நாடுகளை ஆக்கிரமிக்க நடத்தும் யுத்தத்தில், அடிப்படைவாதத்தை தனது யுத்தப் பங்காளியாக மாற்றுகின்ற ஏகாதிபத்தியம், அவர்களை ஆயுத பாணியாக்குகின்றது. அதே நேரம் அவர்கள் உள்நாட்டு ஆயுதம் மற்றும் ஏகாதிபத்திய ஆயுதங்கள் கொண்டு, "இஸ்லாமிய அடிப்படைவாத" யுத்தத்தை உலகெங்கும் விரிவாக்கி நடத்துகின்றனர்.

இப்படி தாங்கள் ஆயுதபாணியாக்கிய "இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக்" காட்டி, உலகெங்கும் புதிய ஆக்கிரமிப்பை நடத்துகின்றனர். இப்படித் தான் தங்கள் படைகளை நிறுத்தும் புதிய காலனிகளை உருவாக்கும் வண்ணம், ஏகாதிபத்தியம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விரிவாக்கும் ஏகாதிபத்தியக் கொள்கையாக உள்ளது. இன்றைய உலக பொருளாதார நெருக்கடி என்பது, ஏகாதிபத்திய யுத்தங்களாக நாடுகளை ஆக்கிரமிக்கும் யுத்தமாக மாறி இருக்கின்றது. நாடுகள் சர்வாதிகார நாடுகளாக மாறி, ஏகாதிபத்தியங்கள் பின் அணி பிரிந்து வருகின்றது. இந்த அடித்தளத்தில் மக்களுக்கு எதிரான "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை" வளர்த்தெடுத்து, அதைக்காட்டி ஆக்கிரமிப்புகளை ஏகாதிபத்தியங்கள் நடத்துகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள புதிய சந்தை மட்டுமல்ல, சந்தையைப் பாதுகாப்பதும், யுத்தத்தின் மூலம் சமூக வளத்தை அழித்து புதிய தேவையை உருவாக்கி பொருளாதாரத்தை மீட்பதே பொருளாதார மீட்சிக்கான பொருளாதார கொள்கையாக இருக்கின்றது. மாலி மீதான பிரஞ்சு ஆக்கிரப்பு உள்நாட்டு மூலதனத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் நடக்கும் அழிப்பு யுத்தம் மட்டுமல்ல ஆக்கிரமிப்பு யுத்தமும் கூட

"இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு" எதிராகவும், "பணயக்கைதிகளை மீட்கவும்", "சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கவும்" "ஜனநாயகத்தை பாதுகாக்க" வும் என்பதற்கான யுத்தமல்ல இது, ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்கள் தான் யுத்தமாகி இருக்கின்றது.

 

பி.இரயாகரன்

20.01.2013


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது