Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நந்திக்கடலில் யாருக்காய் அழிக்கப்பட்டோம்?

  • PDF

இது ஒருசுனாமியல்ல

சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு

நீதியும் மனிதநேயக் குரல்களும்

படைகளை சூழவிட்டு

பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு

பொறிக்குள் வீழென

காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு

கோலாலம்பூர் சேதிகள்

மக்களிற்கு சொல்லப் படவேண்டும்

பின்னப்பட்ட சதிவலைப்

பின்னணிகளை சொல்லிவிடுங்கள்

வாடிவிடாது பயிர்

வேரிருக்கும் விதையிருக்கும் துளிரும் தழைக்கும்

ஆலவிருட்சமாய் பரவும்

எங்கள் வீதியும் தெருக்களும்

வித்தாகிய கொடைகளால்

நாளை முளையெழும்பக் காத்துக்கிடக்கிறது

பின்னப்பட்ட சதிவலைப்

பின்னணிகளை சொல்லிவிடுங்கள்

 

மீள நிமிர்வதற்கு

மிஞ்சி வந்தோர் வாழ வழிவிடுங்கள்

கடந்துவந்த கொடுகாலம்

மீளச் சூழாதிருக்க

மூடியபேச்சுக்களின் முடிச்சுக்களை அவிழுங்கள்

 

சிந்தியகுருதி போதும்

குண்டுபட்டுச்சிதறியோடி அலறி எல்லாம் வீழ்ந்ததேன்

நாடுகடந்து தமிழீழ குமாரர்களே

அன்னியக்கூட்டோடு போட்ட ஒப்புதல் யாதெனத்கூறுக?

நாளைய தலைமுறைக்கு

எம்பலமே எம்வாழ்வை விடுவிக்கும் நம்பிக்கை பிறக்கட்டும்

-11/10/2012

Last Updated on Tuesday, 08 January 2013 17:49