Language Selection

இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.

அந்தப் பெண்களை பலாத்காரமாக தாங்கள் ஊடகங்களில் அந்தப் பெண்கள் அறியாமலே "இராணுவம் புணர்ந்ததென" கதை பரப்பி விட்டதை மூடிமறைக்க, இன்று மனநல மருத்துவரின் கடந்தகால மருத்துவ செயற்பாடுகள் பற்றியும், தனிப்பட்ட அவரின் நடத்தை பற்றிய விவாதமாகவும் மாற்றுகின்றனர். இப்படி கேவலமாக ஊடகம் நடத்தும் இவர்களுக்கு தான், இது பொருந்தும் என்பது தான் இதில் உள்ள உண்மை. குறித்த அந்தப் பெண்களை இராணுவம் "பாலியல்ரீதியாக" பயன்படுத்தியதாக எழுதியவர்கள் இவர்கள். மறுதலையான உண்மையை மூடிமறைக்க, மனநல மருத்துவர் இன்று இவர்களால் பலியிடப்படுகின்றார்.

பெண்களுக்கு மனநோய் தானே ஓழிய, இது பாலியல் வல்லுறவு நோயல்ல என்று சொன்ன மருத்துவர், இன்று இராணுவத்தின் ஆளாகக் காட்டப்படுகின்றார். இதை மனநோய் என்று சொன்னது, மருத்துவரின் குற்றம் என்பது இவர்களின் தீர்ப்பு. இதனால் தான் இன்று மருத்துவரை தூக்கில் போட முனைகின்றனர்.

அந்தப் பெண்கள் "பாலியல் வல்லுறவுக்கு" உள்ளானதாக கூறுவதை நாம் கேள்விக்குள்ளாக்கிய போது, அதனை இராணுவத்துக்கு ஆதரவான செயற்பாடாக வேறு காட்ட முற்படுகின்றனர். இதையே மருத்துவருக்கும் சூட்டுகின்றனர்.

இராணுவ பாசிசப் பயங்கரவாத கட்டமைப்புக்குள் சிக்கிய பெண்கள் எப்படி அரச பயங்கரவாத வன்முறைக்குள் பாதிக்கப்பட்டனரோ, அதேபோல் தான் அவர்கள் ஊடகம் மூலம் பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளானர்கள். இப்படி அந்தப் பெண்கள் இரண்டு வன்முறைக்குள்ளாகினார்கள். ஒரு வன்முறைக்குள்ளல்ல.

இந்தநிலையில் மனநோயை பாலியல் வல்லுறவாக சித்தரிக்கின்ற தொடர்ச்சியான ஊடக வன்முறை மூலம், சமூகத்தை தலைமைதாங்கி அழைத்துச் செல்லப்போவதாக கூறுவது தான் வேடிக்கை.

தங்களின் இந்த வன்முறையை மூடிமறைக்க, நாட்டில் இருந்து இனவாதிகளுக்கு எதிராக எழும் எந்தக் குரல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று தீர்ப்பை எழுதிவிடுகின்றனர். இதுதான் தமிழினவாதத்தின் தீர்ப்பு. இலங்கையில் மனிதன் சுயாதீனமாக இருக்கவும், கருத்து சொல்லவும், செயற்படவும் முடியாது என்று கூறுவதன் மூலம், அங்கிருந்து வரக்கூடிய உண்மைகளை சேறடிக்கின்றனர். நேர்மையானவர்களின் சமூகச் செயற்பாட்டை, அரசு சார்பானதாக முத்திரை குத்தி முடக்கி விடுகின்றனர். இதுதான் இனவாதத்தின் பொது அரசியல் அளவுகோல். புலத்து தமிழினவாதிகளின் இந்த அரசியல் அளவுகோல் கொண்டு, நாட்டில் சுயாதீனமான எந்தச் செயற்பாட்டையும் முடக்குகின்றனர். இனவாதமல்லாத எல்லாவற்றையும் அரசு சார்பானதாக கட்டமைத்துக் காட்டுகின்றனர்.

அரசு என்ன செய்ய விரும்புகின்றதோ அதையே புலம்பெயர் இனவாதம் செய்கின்றது. முன்பு புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டியது போல், இன்று இடதுசாரிய வேஷம் போட்ட இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர். அந்தப் பெண்களை போதாதற்கு தாங்களும் ஊடகம் மூலம் “வன்புணர்ந்ததை” மூடிமறைக்க தத்துவவாதங்கள், தர்க்கங்கள்.

எந்த உண்மையையும், எந்தச் சரியான கருத்தையும், இனவாதத்துக்குள் தேடமுடியாது. மறுதளத்தில் எந்த உண்மையும் மண்ணில் இருந்து சுதந்திரமாக வரமுடியாது என்பதன் மூலம், புலம்பெயர் இனவாதத்தை மண்ணில் திணிக்க முனைகின்றனர்.

இராணுவத்திற்கு ஏமாற்றி இணைத்த பெண்களை "பாலியல் வல்லுறவுக்கு" உள்ளானதாக தங்கள் சொந்தக் கற்பனையில் கதை எழுதியவர்கள் தொடர்ந்து அதை நாடகமாக போட விரும்புகின்றனர். இதை மறுத்தவர்களை இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இட்டுக்கட்டும் அவதூறில் இறங்கியிருக்கின்றனர். “அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள் தான், இதை மறுப்பவர்கள் அனைவரும் இராணுவத்துக்கு பின்னால் செயற்படுவதாக” அவர்கள் கூறுகின்ற இனவாதக் கேலிக்கூத்தைக் காண்கின்றோம்.

இலங்கையில் உள்ளவர்கள் முன்வைக்கும் உண்மை என்பது கையறுதனமானதாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் காட்டி அதை மறுக்கின்றதும், அதை முன்னிறுத்திப் போராடுவது அரசு சார்பான பிரச்சாரமானதாகவும் சித்தரிக்கின்ற இனவாத பித்தலாட்ட அரசியலைத் தாண்டி, எந்த உண்மையையும் இங்கு நாம் எதிர்பார்க்க முடியாது.

அந்தப் பெண்கள் தீ மிதித்தாலும், இந்த அரசியல் கனவான்கள் எழுதிய தீர்ப்பை மாற்ற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களது பிரச்சாரம் இதைத்தான் தொடர்ந்து அறைந்து எழுதுகின்றது.

அந்தப் பெண்கள் மட்டுமல்ல, அந்தப் பெண்களை "பாலியல் பலாத்காரத்துக்கு" உள்ளானதாக கூறி செய்த பிரச்சாரத்தை மறுத்த மருத்துவரையே, அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியது போல், மருத்துவரை ஊடகம் மூலம் வன்புணர்வுக்கு உள்ளாக்கி விடுகின்றனர். மருத்துவருக்கும் இராணுவத்துக்கும் கள்ள உறவு இருப்பதாக கூறி, அவரின் மருத்துவ சேவையையும் கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்" என்று செய்தி வெளியிட்டவர்கள், தங்கள் ஆதாரத்தை முன்வைத்து இதை இன்றுவரை வாதிடவில்லை. அதைத் தவறு என்று சொல்லவில்லை. அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கோரவில்லை. மாறாக மருத்துவரை இராணுவத்தின் ஆளாக காட்டுவதன் மூலம், தாங்கள் கம்யூட்டர் மூலம் புனைந்த கற்பனைகளை உண்மையாக்க முனைகின்றனர். வவுனியாவில் 5000 இராணுவ மனநோயாளிகள் தான் இதை செய்ததாக எழுதியவர்கள், அப்படி ஒரு மருத்துவமனையே கிடையாது என்ற உண்மையை புதைக்க, மருத்துவம் செய்த மருத்துவரை குற்றவாளியாக்க மாற்றிவிடுகின்றனர்.

இங்கு அந்தப் பெண்களுக்கு மருத்துவம் செய்த மருத்துவரை நோக்கி கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும்; …. முன்வைத்து தொடருகின்றனர். ஆனால் எவரும் “பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்” என்ற செய்தியின் மூலம் என்ன, அதற்கான அடிப்படை என்ன?, என்றதில் இருந்து கேள்விகளையோ, குற்றச்சாட்டுகளையோ எழுப்பவில்லை. கேள்வி எழுப்பும் அறிவும், குற்றஞ்சாட்டும் அறமும், இதற்குள் ஊடக விபச்சாரம் செய்யும் சுதந்திரமும், தாங்கள் அந்த பெண்கள் மேல் “பாலியல் வல்லுறவு” செய்த உண்மையை மூடிமறைக்க நடத்தும் போலியான நாடகங்கள் தான்.

இனவாதம் இதற்கான வரம்பை போட்டு இருப்பதுடன், இந்த அரசியல் பின்புலத்தில் செயல்படுவர்கள் பலர் முன்னாள் இடதுசாரிகள் என்பது தான் இதில் உள்ள வேடிக்கையான செய்தி. பலவழியில் சீரழிந்தவர்கள் என்பது தான், இவர்களின் கடந்தகால வரலாறும் கூட.

 

பி.இரயாகரன்

03.01.2012


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது