Language Selection

இந்த உண்மையை அனைவரும் மூடிமறைக்கவே விரும்புகின்றனர். வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்கின்றனர், விற்பது அதிகரித்து வருகின்றது. அவள் ஏன் உடலை விற்கின்றாள்? இதை இந்த சமூகம் ஆராய மறுக்கின்றது. தனது குற்றமாக இதை உணர மறுக்கின்றது. "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!"  என்ற பேட்டியை ஒரு கற்பனை கதை என்று சொல்பவர்களும், இது ஒரு வியாபாரக் கதை என்ற சொல்பவர்களும் (ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்)  வடக்கு கிழக்கில் பெண் ஏன் உடலை விற்கின்றாள் என்பதற்கு பதில் சொல்லவேண்டும். ஒரு உண்மையை வியாபாரமாக்குபவர்கள், அரசியல்ரீதியாக இழிவுபடுத்துபவர்களைக் கொண்டு, இந்த எதார்த்தத்தை யாரும் புதைத்து விடமுடியாது. இதுவொரு கற்பனை என்றால் கூட, உண்மையான எதார்த்தத்தில் இருந்து தான் புனையப்பட்டது. கற்பனையாளனின் நோக்கத்தை மறுப்பதன் பெயரால், உண்மைகளை புதைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. முரண்பாடான எதிர்முனை அரசியல் தளத்தில் இருப்பவர்கள், தங்கள் குறுகிய அரசியலில் இருந்து இதை மறுக்கின்றனர். உண்மையை வியாபாரமாக விளக்கி, இதை புதைக்க முனைகின்றனர். இதுவொரு சமூகத்தின் பொது அவலம். ஒடுங்கிச் சிதைந்து போகும் பல நூறு பெண்களின், உண்மையான சொந்தக் கதை.

உடலை விற்று வாழவேண்டும் என்று எந்தப் பெண்ணும் பிறப்பதில்லை. இந்த நிலையில் தமிழ்தேசியமாக குறுக்கிக் கொண்ட போராட்டம், உடலை விற்று வாழும் பெண்களையும் உருவாக்கி இருக்கின்றது. தவறான போராட்டத்தில் கிடைத்த அறுவடைகளில் இதுவும் ஒன்று. இதை நிவர்த்தி செய்ய தமிழ்தேசியத்திடம், மாற்று எதுவும் கிடையாது. மறுதளத்தில் இதை வைத்து மாமா வேலை செய்பவனும், வியாபாரம் செய்பவனும், அரசியல் செய்பவனும், பிரமுகர்தனம் செய்பவனும் …. என எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதே போன்றது தான், இந்த உண்மையை மறுத்து நிற்பதும். இந்த உண்மையை மறுப்பதன் மூலம் இலாபம் அடைபவர்களுக்கே உதவுகின்றனர்.

சமூகரீதியாக இதை புரிந்து கொள்ளாத இந்த ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில், வாழவழியற்ற பெண்கள் தங்கள் உடலை விற்று வாழ்வது தான் இலகுவானதாகி விடுகின்றது. மறுபக்கத்தில் அவர்களைப் பொறுத்த வரையில் இது கவுரமானது கூட. அவள் தன் சொந்தக் காலில் நிற்க முனைகின்றாள். தினம் தினம் மற்றவனின் காமப் பார்வைக்குள், சிதைந்தும் சார்ந்தும் வாழ்வதை விட, தன் உடலை விற்று வாழ முனைகின்றாள்.

இப்படி உண்மையிருக்க "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற பேட்டியை கற்பனைக் கதை என்றும், போராட்டத்தை சிதைக்க முனைவதாக தமிழ்தேசியவாதிகள் (முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!)  கூறுகின்றனர். மறுதளத்தில் தமிழ்தேசியத்தை உசுப்பேற்ற புனைந்த கற்பனைக் கதையாக புலியெதிர்ப்பு வாதிகள் (முன்னாள் போராளி இன்னாள் பாலியல் தொழிலாளி ஆனந்த விகடன் கிண்டிய அல்வா!)  என கூறுகின்றனர். இதற்கு வெளியில் தமிழ் ஒழுக்கம் கற்பு பற்றி சதா கண்காணித்து கருத்து வைக்கும் கலாச்சாரவாதிகளான யாழ் மேலாதிக்கவாதிகள் (முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்)  இந்த உண்மை தன்மை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். இப்படி பல உதாரணங்களைக் காணமுடியும்.

உண்மைகளை புதைத்துவிட ஆளுக்காள் முனைகின்றனர். உண்மை நிலை என்ன?

1.இன்று வடக்கு – கிழக்கில் பெண் உடலை விற்ற வாழும் நிலையில்லையா?

2.பெண் உடலை விற்பது அங்கு அதிகரித்துச் செல்லவில்லையா?

3.விதவைகளுக்கு இந்த சமூகம் வாழத்தான் வழிகாட்டுகின்றதா?

4.பெண்ணின் பாலியல் தேவைகளையும், உணர்வுகளையும் இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கின்றதா?

5.பெண்ணை அவளின் உடலூடாக அணுகுவது, வடக்கு – கிழக்கில் அதிகரிக்கவில்லையா?

6.சமூகத்தில் பாலியல் குற்றங்களும், சிறு வயது பாலியல் பிறழ்ச்சிகளும், பொது பாலியல் நுகர்வு நாட்டங்களும் அதிகரிக்கவில்லையா?

7.வடக்கு – கிழக்கில் அதிகரித்துவிட்ட பெண்கள் எண்ணிக்கையும், பாலியல் பிரச்சனைகளும், வரைமுறையற்ற பாலியல் நடத்தையை உருவாக்கவில்லையா?

8.சமூக கலாச்சார கட்டுக்கோப்பு கொண்ட சமூக அமைப்பாகவா சமூகம் உள்ளது அல்லது உதிரியான நுகர்வு சமூகமாக மாறியுள்ளதா?

9.அதிகமான போதைக்குள்ளும், வரைமுறையற்ற நுகர்வு கலச்சாரமும் கொண்ட சமூகத்தின், பாலியல் நடத்தையும் பாலியல் நுகர்வும் எந்த வடிவத்தில் வெளிப்படுகின்றது?

10.முன்னாள் புலிகளின் மறுவாழ்வுக்கு அரசும் சரி, தமிழ்தேசியவாதிகளும் சரி என்ன செய்தார்கள, செய்கின்றனர்?

11.முன்னாள் புலிகள் சமூகத்தில் இயல்பாக மற்றவர்கள் போல் வாழமுடிகின்றதா?

12.தனிமையாக வாழும் பெண்களை பாலியல் ரீதியாக அணுகுவதும், அந்த நோக்கில் நிர்ப்பந்திப்பதும், உதவுவதன் மூலமும் பெண்ணை உளவியல் ரீதியாக பாலியல் பண்டமாக்கப்படவில்லையா?

13.உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)

இப்படி பற்பல கேள்விகள் உண்டு. தமிழ்தேசியவாதிகளும், புலியெதிர்ப்புவாதிகளும், கலாச்சாரவாதிகளும், திரிபுவாதிகளும்.. இதை கற்பனை என்றும் வியாபாரம் என்றும் கூறுவதன் மூலம், இந்த உண்மையான எதார்த்தத்தை மூடிமறைக்க முடியாது. அங்கு கணிசமான பெண்கள் உடலை விற்று வாழ்கின்ற மனித அவலத்தை மறுப்பதன் மூலம், அதே ஆணாதிக்க வக்கிரத்துடன் மீளவும் இவ்வாறு செய்கின்றனர். வாழவழியற்ற நிலையில் தனித்து வாழும் ஒரு பெண், இந்த நிலையில் என்ன தான் செய்ய முடியும்?

உதவும் தனி மனிதர்கள் முதல் தன்னார்வ நிறுவனங்களை கண்டறிந்து அணுகுவது என்பது இலகுவானதா? தங்கள் வாழ்வுக்கான அடிப்படைகளை பெற்றுத்தான் விடமுடியுமா? அவர்களால் இதைப் போன்ற இலட்சம் பெண்களின் பிரச்சனையை தீர்த்துவிடத்தான் முடியுமா? இப்படி உதிரியான உதவிகளைக் கூட மோசடி செய்வதும், ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளும் பொதுப்; பின்புலத்தில், பெண்கள் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் தன் உடலை விற்று வாழ்வது இலகுவானதாக, கவுரமானதாக தேர்ந்தெடுக்குமாறு நிற்பந்திக்கப்படுகின்றாள். குற்றவாளி அவள் அல்ல, இந்த சமூகம் தான். அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, இந்தச் சமூகம் தான்.

சமூக விழிப்புணர்வற்ற எந்த வழிமுறையும், இதற்குரிய தீர்வாகாது. இதை மூடிமறைப்பதன் மூலம், உதிரியாக உதவுவதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது. சமூகரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் மூலம், மக்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியும்.

பி.இரயாகரன்

09.11.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ