Language Selection

சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.

வர்க்கப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கும் போது, தனித்து குறித்த வர்க்கத்தை மட்டும் அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்துவது கிடையாது. பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுடன் ஒன்றிணைந்து தான் போராடுகின்றோம். வர்க்க சர்வாதிகாரத்தை சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக கையாளும் போது, இடைப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக அதை நேர்கோட்டில் கையாள்வது கிடையாது. பல இடைநிலைகள் கொண்ட, அதேநேரம் இணங்கி தங்கள் வர்க்கக் கூறுகளை அழித்துக்கொள்ளும் பல்வேறு வடிவங்கள் மூலம் தான், வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க மார்க்சியம் கோருகின்றது.

சமூகத்தில் நிலவும் வர்க்கக் கூறுகளுக்கு, ஏற்ப இங்கு பல இடைநிலை வடிவங்கள் உண்டு. போராட்ட வடிவங்கள், போராட்ட சக்திகள்,.. என்று பல வேறுபட்ட கூறுகள். ஒற்றைப் பரிணாமத்தில் இருப்பதில்லை, இயங்குவதுமில்லை. எங்கள் கோட்பாட்டுத் தளத்தில் மட்டும் சமூக இயக்கம் நேர் கோட்டில் இருப்பதில்லை. இதைப் புரிந்துகொள்ளாமல், இதை எம்மில் நாம் மாற்றிக்கொள்ளாமல் சமூக இயக்கத்தில் தலையிட முடியாது.

இன்று தேசிய இனவொடுக்குமுறைக்கு எதிராக, சுயநிர்ணயக் கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சிய தத்துவம் முரணற்ற வகையில் வழிகாட்டுகின்றது. இவற்றை நடைமுறையில் முரணற்ற வகையில் முன்னெடுத்து செயற்படுவதன் மூலம் செயலாற்றக் கோருகின்றது. இவ்வடிப்படையில் ஒரு வர்க்கக்கட்சி தன் கட்சித்திட்டத்தில் சுயநிர்ணயத்தைக் கொண்டிருப்பது அவசியமானது.

இதனால் இதை கொண்டிராதவர்களை, ஒடுக்குமுறைக்கு நிகராக நாம் எதிரியாகச் சித்தரிப்பது கோட்பாட்டு வரட்டுவாதமாகும். மார்க்சிய தத்துவத்தை சொல்லி இதை மறுப்பது, இயங்கியல் மறுப்புவாதமாகும்.

இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுபவர்களை நாம் எதிரியாக்க முடியாது. அதுவும் முரணற்ற வகையில் முன்வைத்து போராடுபவர்களுடன், நாம் இணைந்து போராட முடியும். சுயநிர்ணயத்தை கோட்பாடாக ஏற்றுக்கொண்டு அரசியலை மேல் இருந்து முன்வைப்பது போல், சுயநிர்ணயத்தின் உட்கூறுகளை கீழிருந்து மேலாக முன்வைக்க முடியும். இதை நிராகரிப்பது அரசியல்ரீதியாக கோட்பாட்டு வரட்டுவாதம். மேல் இருந்து அல்லது கீழ் இருந்து, இரண்டும் சரியான நடைமுறையாக, இவ்விரண்டும் நடைமுறைச் செயற்பாட்டுக்கு வர வேண்டும். இரண்டும் இணைந்து பயணிக்க முடியும். இது முரணான கூறல்ல.

இன்றைய சூழலில் சுயநிர்ணயத்தைக் கோட்பாட்டளவில் மேல் இருந்து ஏற்றுக்கொண்டவர்கள், நடைமுறையில் மக்களை அணிதிரட்டும் பணிக்கான வர்க்க நடைமுறையிலான தங்கள் செயற்பாட்டில் இல்லை அல்லது பின்தங்கியே உள்ளனர் அல்லது புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். மறுதளத்தில் கீழிருந்து இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தில், முன்னின்று முன்னெடுக்கும் செயற்பாடுகள் முன்நோக்கி நகருகின்றது.

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இதை நிராகரிப்பது மார்க்சியமல்ல. இனவொடுக்குமுறைக்கு எதிராக இணைந்து செல்வதன் மூலம், இனவொடுக்குமுறைக்கு எதிரான இச் செயற்பாடுகள் தான், சுயநிர்ணயக் கோட்பாடு என்பதை புரிய வைத்து ஏற்க வைக்கவேண்டியது அவசியம். இதற்கு இனவொடுக்குமுறைக்கு எதிராக, ஒற்றிணைந்த இந்த நடைமுறை வேலைகளில் இறங்கியாக வேண்டும். இதைவிடுத்து வேறு நடைமுறை எதுவும் தனித்துவமாக கிடையாது. இதைவிடுத்து சுயநிர்ணயத்துக்கு என்று, வேறு தனித்துவமான நடைமுறை ஒன்றைக் காட்ட முடியாது.

"நாங்கள் சுயநிர்ணயத்தை ஏற்றவர்கள்" என்று கூறி நடைமுறையை நிராகரிப்பது, சுயநிர்ணயத்தை தவறாக விளக்கம் கொண்டு நிற்பவர்கள் தான். அதுபோல் வர்க்க நடைமுறைக்கும் வர விரும்பாதவர்கள் தான், இவ் நடைமுறையை நிராகரிக்கின்றனர். சுயநிர்ணயத்தை ஏற்று ஆனால், சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களின் நடைமுறையை நிராகரிப்பவர்களின் பின், இப்படிப்பட்ட இரண்டு அரசியல் கூறுகள் உள்ளது.

தமிழீழத்தை ஏற்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என்று கூறி ஒடுக்கிய தமிழ்தேசியம் போல், தங்களுடன் இல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறி செயற்பட்ட புலிகள் போல், சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களை தமிழ்மக்களின் எதிரியாகக் காட்டுவதன் மூலம் அரசியலை குறுக்கி செயற்பட முனைகின்றனர்.

சுயநிர்ணயத்தை ஏற்காதவர்கள் அல்லது முன்வைக்காதவர்களை தமிழ்மக்களை ஒடுக்குகின்றவர்களாகக் காட்டுவது அபத்தமானது. மாறாக தமிழ்மக்களை ஒடுக்கின்றவர்களுக்கு எதிராக போராடுகின்றவர்களை, சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டதாக கூறிக்கொள்பவர்கள் மறுப்பார்களாயின், உண்மையில் இவர்களின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் தத்துவங்கள் மக்களுக்கு உதவப்போவதில்லை.

இதைத்தான் மாவோ மிக அழகாக "தத்துவம், கோட்பாடு இரண்டுமே ஒரு அரசியல் பாதையின் வழிகாட்டி. இவற்றை சரியாகக் கையாண்டு அரசியல் நடைமுறையை நிர்ணயிப்பதும், குறிக்கோளை நோக்கி முன்னேறுவதும் புரட்சியாளர்களின் கடமை. அதை விடுத்து, நடைமுறையில் மக்களுடன் நின்று போராடுவோரை தூற்றுவதும், அவர்களை தமது தத்துவ - கோட்பாட்டுப் பிதற்றலுக்கு ஏற்றால் போல நடக்கக் கோருவதும், சரியான மக்கள் சார்ந்த அரசியற் செயற்பாடாக இருக்க முடியாது. தத்துவக் - கோட்பாட்டு பிரயோகத்தை மந்திரமாக உபயோகிப்போரை, நடைமுறையில் போராட அழைப்பதன் மூலமே அம்பலப்படுத்த முடியும்." என்றார்.

தங்கள் சுய அரசியல் மற்றும் நடைமுறை அம்பலப்பட்டு போகும் என்பதால், இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறையை மறுப்பவராக சுயநிர்ணயத்தை ஏற்பதாக கூறிக்கொண்டு செயல்படுகின்றனர். அதை தமிழ்மக்களுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். இப்படி தங்கள் குறுகிய கோட்பாட்டு அடித்தளத்தை கொண்ட அரசியல் மூலம், செயலுக்கும் மாற்றத்துக்கும் எதிராக அதை முன்னிறுத்துகின்றனர். இது தான் இன்றைய அரசியல், வெவ்வேறான போக்குகள்.

பி.இரயாகரன்

30.10.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ