Language Selection

கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.

இங்கு சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றியோ, அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கின்றனர் என்பது பற்றியோ, நாம் தனியாகவே பார்க்க வேண்டியுள்ளது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய, அரசியல் புரிதல் இன்று அவசியமாகின்றது. நாங்கள் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற போதும், மற்றவர்களில் "சுயநிர்ணயத்தில்" இருந்தும் வேறுபடுகின்றோம். அதேநேரம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும் முடிகின்றது. இதுதான் சமூக இயக்கத்தை முன் தள்ளும், இயங்கியலாக இருக்க முடியும்.

இந்த அடிப்படையிலான அரசியல் புரிதலுடன் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றி ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதை விளக்கவும், நடைமுறைப்படுத்தவும் முற்பட வேண்டும். இதுதான் சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய அடிப்படையாக இருக்க முடியும். இதில் ஒரு கூறை அல்லது ஒரு பகுதியை மட்டும் முன்னிறுத்திப் பேசுபவர்கள், அவ்வாறு முன்னெடுப்பவர்கள் சுயநிர்ணயத்தின் முழுமையை மறுப்பவராகின்றனர். சாராம்சத்தில் அது பிரிவினையாகவும் அல்லது பலாத்காரமான ஐக்கியத்தையும் முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதமாகவும் வெளிப்படுகின்றது.

முழுமையற்ற "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்துவது பிரிவினையாக அல்லது பலாத்காரமான ஐக்கியமாகவே தன்னை முடிமறைத்துக் கொள்ளுகின்றது. கடந்தகாலத்தில் ஜே.வி.பி சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாகவே காட்டியது. இதேபோல் இன்று பிரிந்து செல்லும் உரிமையை, பிரிவினையாக காட்ட முனைகின்றனர்.

பிரிவினை என்பது பிரிந்து செல்லும் உரிமைக்கு நேர் எதிரானது. பலாத்காரமான ஐக்கியம் என்பது இணங்கி வாழும் ஐக்கியத்துக்கு நேர் எதிரானது. கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ இணக்கம் காணமுடியாதது. இவ்வாறு இதைப் பிரித்து வேறுபடுத்தி அணுகாத சுயநிர்ணயம், மக்களின் ஐக்கியத்தை மறுதளித்துவிடுகின்றது.

இவ்வழியில் ஒரு தத்துவத்தின் முழுமையை வைத்து கிளர்ச்சியை, பிரச்சாரத்தை செய்யாதவர்கள், "சுயநிர்ணயத்தின்" பெயரில் அரசியலை மோசடிக்குள்ளாக்குகின்றனர். இன்று இனமுரண்பாடு கூர்மையாகி ஒடுக்குமுறையாகவும், மறுபுறத்தில் போராட்டம் என்பது பிரிவினையாகவும் தொடர்ந்து வெளிப்படுகின்ற அரசியல் அரங்கில், சுயநிர்ணயத்தை பகுதியாக முன்னிறுத்துபவர்கள் ஒன்றுக்கு துணைபோகும் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர்.

தேசியக் கோரிக்கை என்பது, திட்டவட்டமாக பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரானது. லெனின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகளில் 'பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.' என்றார். இந்த அரசியல் அடிப்படையில் தேசியத்தை அணுகாத, விளக்காத அரசியல், பித்தலாட்டமானவை, மோசடித்தனமானவை.

இந்த இடத்தில் சுயநிர்ணயம் பற்றி முழுமையான மார்க்சிய விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

1.'ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்.' என்கின்றார் லெனின். (லெனின்- தே.வி.பா.ச -ப.245)

2.'சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம்' என்பதை வலியுறுத்த வேண்டும். ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின். (லெனின்-தே.வி.பா.ச-ப 246)

இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டிராத "சுயநிர்ணயம்" மோசடியானது. இவ்வாறு முழுமையில் முன்வைக்காதவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளாக இயங்குகின்றனர். எப்போதும் சுயநிர்ணயத்தைக் கோரும் போது முழுமையைக் கோருவதும், அதை கிளர்ச்சியாக பிரச்சாரமாக முன்வைக்கும் போது அதை முழுமையாக முன்வைக்கவேண்டும்.

இங்கு தத்தம் இனத்தில் அதை முன்வைக்கும் போது, தம் இனம் சார்ந்த இனவாதிகளின் கோசத்தை எதிர்ப்பதில் இருந்து தொடங்க வேண்டும். இதை விடுத்து தம் இனம் சார்ந்த இனவாதிகளை திருப்;தி செய்யும் வண்ணம் சுயநிர்ணயத்தைப் பகுதியாக முன்வைப்பவர்களும், அதை பகுதியாக விளக்கி காட்டுபவர்கள் அரசியல் பித்தலாட்டம் செய்பவராக இருக்கின்றனர். "சுயநிர்ணயம்" என்ற சொல்லை ஏற்றுக் கொள்வது சரியான அரசியல் அரசியல் அளவுகோல் அல்ல. மாறாக "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொண்டு அதை மறுப்பவர்களை எதிர்த்து போராடுவதன் மூலம் சுயநிர்ணயத்தை சரியாக விளக்கிக் போராட வேண்டும். அதாவது சுயநிர்ணயத்தை திரிப்பவர்களை எதிர்த்து, சுயநிர்ணயத்தை முழுமையில் முன்னிறுத்த வேண்டும். சுயநிர்ணயத்தை பிரிவினையாக முன்னிறுத்துவதை எதிர்த்து, சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாக முன்னிறுத்தும் தேசியவாதங்களை எதிர்த்தும் போராடவேண்டும்.

பி.இரயாகரன்

2910.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ