Language Selection

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

இதை முடிமறைப்பதன் மூலமே குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை நடத்த முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ் கட்சிகளுக்கு ஸ்டாலின் காலத்தை தூற்றி ரசிய கட்சி அனுப்பிய கடித்தில் “மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது” என்று அறிவித்தனர். இதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தையே பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து தடம் புரளும் படி கோரியது. இப்படி குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து தூற்றிய போது எது மறுக்கப்பட்டது? எது போற்றப்பட்டது? ஸ்டாலினை தூற்றிய குருச்சேவ் அமெரிக்கா ஜனதிபதியை பற்றி கூறும் போது “அவர் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றவர்” என்றார். “மக்களின் ஆதாரவைப் பெற்றவர் என்பதால், அமெரிக்கா பாட்டாளி வர்க்கமும் சரி, உலக பாட்டாளி வர்க்கம் சரி அவரை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது” என்றார். “அவர் ஜனநாயக வழிகளில் மக்களின் ஆதாரவைப் பெற்றவர்” என்றார். அத்துடன் “சமாதானத்தில் உண்மையான ஆர்வம் உடையவர்” என்றும் “சமாதனத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளார்ந்த கவனம் காட்டினர்” என்றார். மேலும் குருச்சேவ் கென்னடியைப் பற்றி கூறும் போது “பூமியில் அமைதியான வாழ்விற்கும் ஆக்கபூர்வமான உழைப்புக்கும் ஏற்ற நிலைமைகளை அவர் உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்றார். “உலகில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் அவசியமில்லை” என்றார். உலகில் அமைதியை பாட்டாளி வர்க்கம் மட்டுமே நிலைநாட்ட முடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை மறுத்த குருச்சேவ், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஜனபதிபதி “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை உருவாக்குவர்” என்றார். எனவே வர்க்க கட்சிகளை கலைத்து, அவற்றை முதலாளித்துவ கட்சியாக்க கோரினர்.

ஸ்டாலின் என்ற கொடுங்கோலன் தான் வர்க்க கட்சியை முன்னிறுத்தி இதற்கு தடையாக இருந்தாகவும், “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை” உருவாக்குவதற்கு தடையாக இருந்தாக தூற்றினான். பாட்டாளி வர்க்கத்தை இழிவுபடுத்தியபடியும், ஸ்டாலினை மறுத்தபடியும் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து “ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும்” என்றான் குருச்சேவ். இது வேறு ஒன்றுமல்ல, டிராட்ஸ்கி அன்று லெனின் முன்வைத்த சமாதனத்தை மறுத்து, ஜெர்மானிய எல்லையில் படை கலைப்பை கோரிய அதே வடிவில் முன்வைக்கப்பட்டது. குருச்சேவ் ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை ஏகாதிபத்தியத்துடன் சோந்து படைக்க முடியும் என்றான். இப்படி வர்க்க கட்சியின் அரசியல் அடிப்படையை இல்லாததாக்கினான். சுரண்டலற்ற உழைப்புக்கு எற்ற கூலியையும், யுத்தமற்ற அமைதியையும் நிறுவ, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு மறுக்கப்பட வேண்டியது அவசியமென்றான். இதன் மூலம் “ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்கா நாடுகளின் பொரளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கும்” என்று பிரகடனம் செய்து, முதலாளித்துவ மீட்சியை ரஷ்யாவில் குருச்சேவ் நடத்தினான்.

ஆம், உலகை சூறையாடவதில் ஒன்றுபட வேண்டியதையே குருச்சேவ் பிரகடனம் செய்தான். இதற்கு ஸ்டாலின் மறுக்கப்பட்டு தூற்றுப்படுவது அடிப்படை அரசியல் நிபந்தனையாக இருந்தது. குருச்சேவ் ஸ்டாலினை ‘சூதாடி’, ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, ‘பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்’, ‘ஒரு குற்றவாளி’, ‘கொள்ளைக்காரன்’ என்று பலவாக தாக்கினான். ‘ரசியா வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரி’ என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்திய போது ‘குரோத மனோபாவம் கொண்டவர்’ என்றான். ‘இரக்கமின்றி ஆணவமாகச் செயல்பட்டவர்’ என்றான். ‘அடக்குமுறை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்’ என்றான். ‘தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்’ என்றான். ‘ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்ட மிட்டார்’ என்றான் ‘ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டது’ என்றான். இப்படி டிராட்ஸ்கிகளின் நெம்புகோலை இறுக பிடித்தபடி நடத்திய அவதூறுகள் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. அரசியலற்ற அவதூறுகளை பொழிகின்ற போது, அரசியல் ரீதியான சிதைவு அடிப்படையான ஆதாரமாக உள்ளது. வரலாற்றில் இது முதல் முறையமல்ல இறுதியுமல்ல.

பக்கூன் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு மார்க்ஸ்சை வசைபாடிய போதும் இது நிகழ்ந்தது. முதலில் மார்க்ஸ்சின் நம்பிக்கையைப் பெற “நான் உங்கள் சீடன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றான். முதலாம் அகில தலைமையை கைப்பற்ற பக்கூன் எடுத்த முயற்சியில் தோற்ற போது “ஒரு ஜெர்மானியனும், யூதனுமான அவன், அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி மட்டுமல்ல ஒரு சர்வாதிகாரி” என்றான். பாட்டாளி வர்க்க அடிப்படையைக் கைவிட்ட காவுத்ஸ்கி லெனினை வசைபாடிய போது “ஓர் அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு மத்திய கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை லெனின் குறுக்கிவிட்ட”தாக தூற்றினான். மேலும் அவன் லெனினை தூற்றிய போது “ஏகக் கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று தூற்றினான். டிராட்ஸ்கி ஸ்ரானினை தூற்றும் போது “கொடுங்கோலன்” என்றான்; “ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது” என்றான். டிராட்ஸ்கி லெனினையும் போல்ஷ்விக் கட்சியையும் தூற்றும் போது ‘பதவி வெறியர்கள்’, ‘பிளவுவாதிகள்’ என்று குற்றம் சாட்டினான். ‘குழுவாதத்தை எதிர்ப்போம்’ என்று டிராட்ஸ்கி ஆர்ப்பாட்டம் செய்த போது லெனின், “குழு வாதத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கி, குழுவாதத்தின் மோசமான மிச்ச சொச்சங்களின் பிரதிநிதி” “மோசமான பிளவுவாதிகளின் பிரதிநிதி” என்று அம்பலப்படுத்துகின்றார். டிட்டோ பாட்டாளி வர்க்கத் தலைவர் ஸ்டாலினை தூற்றும் போது முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் ஒரு சர்வாதிகாரியாக இருப்பதாக அவதூறு பொழிந்தான். இப்படி மார்க்சியத்தை கைவிட்டு ஒடியவர்கள் எப்போதும் ஒரேவிதமாக ஊளையிடுவதில் பின்நிற்பதில்லை. மார்க்சியத்தை கைவிட்டு ஒடும் போது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் மேல் அவதுறை பொழிவது அல்லது உச்சி மோந்து புகழ்ந்து வழிபாடுகளை உருவாக்கியபடி தான் பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தப்படுகின்றது.

இது பற்றி லெனின் குறிப்பிடும் போது “ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மத்தியில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவர்கள் மறைந்த பின்னர், அவர்களுடைய எதிரிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுவதற்காக அந்த தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த முயல்வது வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்தது” நிகழ்ந்து வருகின்றது. இதற்கு வெளியில் தலைவர்கள் உயிருடன் உள்ள போதே மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் மூலம் இது பரிணாமிக்கின்றது. குருச்சேவ் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றிய போதும், அவன் மூடிமறைக்கபட்ட ஒரு சந்தர்ப்பவாதியாக இழி பிறவியாக இருந்தான். 1937 இல் குருச்சேவ் “தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயாத்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக கரம் உயாத்துபவர்கள், உழைக்கும் வர்க்கத்துக்கும் மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கும் எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் ஆகியோராது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்!” என்றான். பின்னால் ஸ்டாலினை தூற்றிய இவனே, ஸ்டாலினை 1939 இல் ஸ்ராலினை போற்றும் போது “மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர், போராட்ட தோழன்”, என்றான். 1939 இல் “மாபெரும் மேதை, ஆசான் மனிதகுலத்தின் தலைவர்” என்றான். 1945 இல்  “எப்போதும் வெற்றியீட்டும் மாபெரும் இராணுவத் தளபதி” என்றான். 1939 இல் “மக்களின் உண்மையான நன்பன்” என்றான். 1949 இல் “சொந்த தந்தை” எனறு பலவாறாக ஸ்ராலினைப் புகழ்ந்தான். ஆனால் ஸ்ராலின் மரணமடைந்த பின் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை தொடங்கிய போது, மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை கைவிட்டு எதிர்மறையில் நின்று தூற்றினான். 1957 யூன் மாதம் மத்திய குழு கூட்டத்தில் குருச்சேவ் மொலடோவ், சுகனோவிச் ஆகியோரைச் சுட்டிக் காட்டி “எங்கள் கட்சித் தலைவர்களினதும், எண்ணற்ற அப்பாவி போல்ஷவிக்குகளினதும் இரத்தக் கறை உங்கள் கைகளில் படிந்து உள்ளது” என கூச்சல் இட்டான். அப்போது “உமது கையிலும் தான்” என  எதிர்க் கூச்சல் ஈட்டனர். அதற்கு குருச்சேவ் “ஆம் எனது கையிலும் தான்” என்று கூறி, நான் அப்போது பொலிட்பீரோவில் இருக்கவில்லை என்று திட்டினான். இப்படி பரஸ்பரம் தூற்றி கழுத்தின் மேல் கத்திய வைத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை எதிர்பின்றி விரைவாக்கினான். முதலாளித்துவ மீட்சிக்கான சதியில் ஈடுபட்டவர்களைப் பற்றிக் கூறும்போது குருச்சேவ், “ஸ்டாலினால் பலியெடுக்கப்பட்ட சிறந்த அப்பாவி கம்யூனிஸ்டுகளை” என்ற படி அமெரிக்காவுடன் கூடிக்கூலாவினான். ஸ்டாலின் பாதுகாத்த அனைத்து பாட்டாளி வர்க்க அடிப்படைகளையும் தூக்கியெறிந்தான்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6

5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5

4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4

3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3

2.ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி –

1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ