Language Selection

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.

இலங்கையில் மக்களைப் பிளந்து அவர்களை மோத வைப்பதன் மூலம் தான், மக்களை அடக்கியாள முடியும் என்ற கடந்தகால உண்மையைத்தான், அரசு தன் பாசிச அரசியல் கட்டமைப்புக்கு ஏற்ப இன்று முன்தள்ளி வருகின்றது. இந்த நிலையில் அரசின் இந்த தொடர்ச்சியான பிளவு முயற்சிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவது என்பது, சவால்மிக்க ஒன்றாகவே தொடருகின்றது. அரசை மட்டுமல்ல, இந்த பிளவுவாதத்தை உருவாக்கும் குறுந்தேசியம் சார்ந்த பிளவுவாதத்தையும் கூட, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டம் இந்திய நலன்களுடன், இந்திய மேலாதிக்கத்தனத்துடன் திணிக்கப்பட்ட ஒரு சட்டமூலம் தான், இந்திய மேலாதிக்கம் சார்ந்த தன்னிச்சையான செயல் மூலம், இச்சட்டமூலம் திணிக்கப்பட்டதல்ல. இலங்கை அரசு தொடர்ந்து கையாண்டு வந்த இனவொடுக்குமுறையின் விளைவாலானது. கடந்தகாலத்தில் இந்தியாவின் இராணுவப் பயிற்சிகள் முதல் இன்றைய தலையீடுகள் வரை, இலங்கை அரசின் இனவாத கொள்கையை பயன்படுத்திக் கொண்டுதான் இந்தியா தொடர்ந்து களமிறங்கியது, களமிறங்குகின்றது. இப்படி புண்ணை உருவாக்கியவர்கள் அரசாக இருக்க, மருத்துவரின் பெயரில் இந்தியா தலையிட்டு, தன் நலனை முன்னிறுத்திச் செயல்படுகின்றது.

இதே போல் தான் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா தன் பயிற்சி மூலமாக அவற்றைச் சீரழிவுக்குள்ளாக்கி அவர்களை அழிக்க, இதே இயக்கங்கள் கொண்டிருந்த அரசியலை பயன்படுத்தியே தான் அதையும் செய்து முடித்தது.

இப்படி இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரையான, பலமுனையில் தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்கியவர்கள் தான், உருவாக்கி வைத்திருப்பவர்கள் தான், இன்று 13வது திருத்தச்சட்டம் நீக்கம் பற்றி பேசுகின்றனர். இந்தியாவின் மேலாதிக்க தலையீட்டை உண்மையில் இலங்கையில் நீக்க அரசு விரும்பினால், இனப் பிரச்சனைக்கு உயர்ந்தபட்ச தீர்வு ஓன்றை வழங்குவதன் மூலம் அதை செயலிழக்க பண்ணுவதன் மூலம் நீக்க முடியும். தமிழ்-சிங்கள இனவொற்றுமை மூலம் இதை செய்யமுடியும். அரசின் நோக்கம் இதுவல்ல, என்பது வெளிப்படையானது.

மறுபக்கத்தில் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கபபட்டதல்ல. இலங்கை மக்களின் நலன் சார்ந்து திணித்தல்ல. இந்திய நலன்சார்ந்து முன்வைக்கப்பட்டது. தமிழர் நலன் கொண்டதாக பறைசாற்றியபடி, மக்களின் உரிமையை மறுத்தபடி, தமிழ் மக்கள் மேல் திணித்தது. இந்த 13வது திருத்தச் சட்டத்தை இனவாதிகள் தங்கள் இனவாத அடிப்படையில், இலங்கை தளுவிய அதிகாரப்பரவலாக்கமாகக் காட்டி இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்தனர்.

இப்படி 13வது திருத்தச்சட்டமே மோசடியானது. ஆனால் இனவொடுக்குமுறை பாசிச அரசியல் அடித்தளத்தில் மேலெழுந்து வரும் சூழலில், இன அழிப்பை அரசியலாக்கிக் கொண்டு இந்த சட்ட மூலத்தை அணுகுகின்றது. 13வது திருத்தச்சட்டம் கொண்டிருக்கக் கூடிய சட்ட மூலங்களை, தன் பாசிச அரசியல் நடைமுறைக்கு தடையாகக் காண்கின்றது.

இதை இல்லாதாக்க முனைவதன் மூலம், இனவழிப்பை தீவிரமாக்க முனைகின்றது. இன்று இலங்கை அரச பாசிசம் இனவொடுக்குமுறையை தன் அச்சாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த வகையில் எதிர்க்கும் நாம் 13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்னைக்குரிய தீர்வாக கருதி எதிர்க்கவில்லை. மக்களை ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பிலான எந்த தீர்வும், மக்களுக்கு எதிரானது தான். இந்த வகையில் இந்த அமைப்பை எதிர்த்து போராடுவதன் மூலம் தான் தீர்வு காணமுடியும். இதற்கு வெளியில் அல்ல. இந்த வகையில் தான் 13வது திருத்தச்சட்டத்தை ஓட்டி, எமது அணுகுமுறை அமைய வேண்டும். நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், மௌனம் சாதிக்கவோ, அரசு இதை நீக்குவதற்கு துணைபோக முடியாது. செயல்பூர்வமான எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம்.

பி.இரயாகரன்

25.10.2012

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ