Language Selection

16.1.1996 தொழிலாளர்பாதையின்  புரட்சி கம்ய+னிஸக் கட்சி  ( இவர்கள் தமது பெயரை அண்மையில் சோசலிச சமத்துவக் கட்சி ) என மாற்றி மேலும் சீரழிக்கின்றனர். பாசிசபார்பானிய இந்து மத வெறியை நியாயப்படுத்திய மணிரத்தி னத்துக்காக   குரல் கொடுத்துள்ளனர்.

மணிரத்தினத்தின் வீட்டின் மீது  குண்டுவீசிய சம்பவத்தைச் சுட்டிக் காட்டி  கலை ஞன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி  வரிக்குவரி முதலாளித்துவம் என ஓப்பாரி வைத்தபடி முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும்படி பாபர்மசூதி இடிக்கப் பட்டதை மறை முகதமாக நியாயப்படுத்தியுள்ளனர். அதை அவர்களின்  கூற்றில் பார்ப்போம்.

"பொம்பே திரைப்படம் முதலாளித்தவ நரசிம்ராவ் ஆட்சியின் நானாவித கும்பல் களதும் இந்து முஸ்லீம் அடிப்படைவாத பிற்போக்கு கும்பலும் பெரும் வெறுப்புக்கு இலக்காகி உள்ளது.... தமது மதத்தைச்சார்ந்த யுவதி அதனை விட்டு இந்து மத  இளைஞனைத் திருமணம் செய்வதைதச் சித்தரிக்கிறது இத்திரைப்படம்.    இவ்விடயம் மையக்கருவானதையிட்டு முஸ்லீத் தீவிரவாதிகளைக் கொதிப்படைந்து போயிருக்கும் அதேவேளை  சிவசேன தலைவர் பால்தாக்கருக்கு சமமான ஒரு பாத்திரத்தினை திரைப்படம் கொண்டுள்ளதாகக் கூறி  அவரும் சிவசேனனின் பிரபல தீவிரவாதிகளும்  மணிரத்தினத்தையிட்டு வெறுப்படைந்து போயிருந்தனர்.'

என இட்டுக்கட்டிய ஒரு பொய்யை புரட்சிகரகம்ய+னிசத்தின் பெயரால் பிரச்சனை யின் மையக்கருவைத் திசை திரும்பி  பார்பன இந்து வெறிக்கு ஆதரவாக மணிரத் தினம் வழியில் நியாயபப்டுத்தியுள்னர். இந்தப் போலி புரட்சிகரத்தை  புரிந்து கொள்ள சிவசேன முக்கிய புள்ளி பால்தாகட்கரே 31.4.95 “ரைம்ஸ்  ஒவ் இந்தியா” வுக்கு வழங்கிய பேட்டியைப் பார்ப்போம்:-

''மணிரத்தினத்தின் பம்பாய் மிகசிறந்த படம் . நான் படத்தைப்பார்த்தேன்.  சில மாற்றங்களை மட்டும் செய்யச் சொன் னேன், அவ்வளவுதான. பம்பாய் கலவரத்துக்காகாக நான் வருந்துவது போல் ஒரு காட்சி வருகிறது. அது உண்மை யல்ல. நான் எதற்காகவும் வருந்த வில்லை. கலவரத்தை சிலசேன ஆரம் பிக்கவில்லை நாங்கள் பதிலடிதான் கொடுத்தோம். ( மற்றப்படி ) இது மணி ரத்தினம் உருவாக்கியுள்ள அற்புதமான படம். படத்தை நான் வெகுவாக ரசித்தேன்.”

பால்தக்ரேயின் இக்கூற்று புரட்சிகர கம்யுனிஸ கட்சியின் போலிப் புரட்சியை யும் பொய்மையையும் அம்பலப்படுத்து கின்றது. இது மட்டுமல்ல அண்மையில் மணிரத்தினத்திற்கு தாக்கரே சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  மணிரத்தினம் இந்து வெறித்தனத்தை மறைக்க தக்ரே வருந்துவது போல் காட்ட அதை நிராகரித்து தக்கரே  அதை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் மணிரத்தினம் என்ற பாhப்பனன்  அதைப் ப+சிமெழுகி  சாதாரண மக்க ளுக்கு இந்து வெறிய+ட்டி

சாதாரண முஸ்லீம் மக்கள் மீது மதவெறிய+ட்டியதே பம்பாய்  என்ற திரைப்படம்செய்த புரட்சிகர காரியம். நரசிம்ராவ் அதன் கும்பலும் இத்திரைப் படத்தையிட்டு ஒருபோதும் ஒப்பாரி வைத்ததில்லை.   மாறாக இப்படத்தை பாராட்டி  இப்படத் தை திரையிட எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டன.

அவர்களின் பாசிச இந்து வெறித்தனத் தை அழகாக மூடிமறைத்து பம்பாய் சினிமா நியாயப்படுத்தியதுக்கு காங்கி ரஸ்கும்பல்  மணிரத்தினம் என்ற பார்ப்பனனுக்கு கடமைப்பாட்டைச் செலுத்தியது.

இந்து தீவிரவாதிகள் படம் திரையிடத் தடையாக இருந்தார்கள் என்பது அப்பட்டமான பொய். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. திரைபடம் ஓடிய போது அவர்கள்தான் முன்வரிசையில் இருந்து விசிலடித்தபடி  பெண்ணின் மார்பை மணிரத்தினம்  காமரா மூலம் திரையில் கொண்டு வந்தபோது ஆணாதிக்க வர்க்கத்துடன் இந்து மதவெறிபாசிசத்தை உள்வாங்கினர்.

இப்படத்தைத் தடை செய்யக்கோரி  அப்பாவி முஸ்லீம் மக்களும்  புரட்சிகரமக்கள் பிரிவு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதை சில முஸ்லீம் தீவிரவாத பிரிவுகளும் பயன்படுத்தின. அவர்கள் தமது எதிர்ப்பபைத் தனிநபர் பயங்கரவாத  வழிகளில் வெளிப்படுத் தினர்.  இது அரசியல் விமர்சனத்திற் குட்பட்டதேயொழிய  பார்ப்பனியபாசிச மதவெறியை  புரட்சியின் பெயரால் மகுடம் சூடுவதல்ல.

பம்பாயில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் திரித்த மணிரத்தினத்தின் பார்ப்பன சார்பைக் கண்டு  இயல்பாகச் சினந்தெழுவது யதார்த்தமானது. ஆனால் புரட்சியின் பெயரால் தொழிலாளர் பாதை  சம்பவத்தைத் திரித்து முஸ்லீம் பெண் இந்து ஆணுடன்  சென்றாள் என்ற மையக் கருத்துத்தான்  முஸ்லீம் மக்களின்  எதிர்ப்புக்கு கார ணம் என  காதில் ப+ வைக்கின்றனர்.        பம்பாய் கலவரத்துக்கு முன் பாபர்மசூதி உடைத்து நொருக்கப்பட, இந்து பார் பானிய சதியும்: பம்பாயில் இந்து - பார் பானியம் தொடங்கி வைத்த முஸ்லீம் எதிர்ப்பு கரவரத்தையும் மூடிமறைத்து, இந்து வெறி ஊட்டியதே பம்பாயின் கருவாகும். முஸ்லீம் பெண்ணுக்குப் பதில் இந்துப் பெண்ணாக இருந்திருப் பின்  தக்கரே கூட அனுமதித்திருக்க மாட்டார். ஆனால் வரிக்கு வரி  முதலாளித்துவம் பேசும்  தொழிலாளர் பாதை   பார்ப்பன பாசிச இந்து வெறி யை நியாயப்படுத்த  கலைஞன் என்ற முகமூடி தேவைப்படுகிறது. அதைப் புரட்சிகர கம்ய+னிஸக் கட்சி எப்படி கூறுகிறது என்று பார்ப்போம்.

''ஒரு கலைப்படைப்பின் கலைத்திறன்  அல்லது குறைநிறை என்னவாக இருப்பினும்  ஒரு கலைஞனைத் தாம் விரும்பிய விதத்தில் சுதந்திரமான முறையில் தமது படைப்பினை வெளிக் கொணரும் சக்தியும்  உரிமையையும் பற்றிய பிரச்சனை. அதைக் காட்டிலும் பெரிதும் முக்கியமானதாகும்.”  எனத் தமது அரசியல் வழியைத் தெளிவாக்கி யுள்ளனர். இதில் என்ன கலைஞனுக்கு மட்டும் விதிவிலக்கு?  முதலாளிக்கும் தானே. இது தெரியவில்லையா புரட்சிக் கம்ய+னிஸக் கட்டசியே!?

கலைஞன் வானத்திலிருந்து வந்தவனா?  இப்படி எல்லாப் பிரிவு மக்களுக்கும் இந்த வகையில் தமது துறையில் சுதந்திரம்  இருக்கவேண்டும் அல்லவா?  ஒரு முதலாளிக்கு தான்  முதலாளியாக இருக்கும் உரிமையுண்டு அல்லவா?  தொழிலாளர் பாதைக்குப் புரிகிறதா?  நீங்கள் எதை நியாயப்படுத்துகின்றீர்கள் என்பதை?

கலைஞனின் கருத்துச்சுதந்திரம் என்பது என்ன?  அதன் பொருள்முதல் பார்வை என்ன?   திறந்த மார்பைவெளிக்காட்டும் ஒரு பெண்ணின்  கலைத்திறன்  திறந்த மேனியில் வெளிக்காட்டும் கலைத்திறன்,  சிறந்த மசாலாதிரைப்படக் கலைத்திறன், முதலாளித்துவ , நிலப்பிரபுத்துவ  வாழ் வை நியாயப்படுத்தும் கலைத்திறன்,  கிட்லரின் பாசிசத்தை நியாயப்படுத்தும் கலைத்திறன் என அனைத்துக்கும்  கருத்து சுதந்திரம் கோரும்  புரட்சிகர கம்ய+னிஸக் கட்சியின்  புரட்சிகர ஏமாற்றை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் தொழிலாளர்கள் என்பது வெறும் வெற்று வார்த்தையே. உண்மையிலே இவர்களின் கனவுகள் முதலாளித்துவ கனவுகளே!

கலை முதல் எல்லா செயல்பாடுகளும் உழைக்கும் மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.  இல்லாமல் உழைக்காத பிரிவை நியாயப்படுத்தும் அனைத்து கலைக்கும்  சுதந்திரம் என்பது ஏகாதிபத்தியத்தின் போலி ஜனநாயகத் தை மறைமுகமாக தொழிலாளர் என்ற பெயரால் நியாயப்படுத்துவதேயாகும். தொழிலாளர் பாதையின்  அரசியல் எது என்பதை , அவர்களின் மேற்கோள்கள் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இதை நாம் சரியாக இனம் கண்டு கொள்வதன் மூலம் அவர்களின் போலி புரட்சிகர  தன்மைகளை இனம் கண்டு வேறறுக்க முன் வர வேண்டும்.


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது