Language Selection

பிரஞ்சு தேர்தல் ஜனாதிபதியின் விருப்பை மீறியவகையில் முடிந்துள்ளது. ஜனாதிபதிக்கு சார்பான பாரளுமன்றத் தில் இருந்து அறுதிப் பெரும்பான்மை இன்னமும் ஒருவருட ஆளும் தகுதியை கொண்டு இருந்த நிலையில்  காலம் செல்லச் செல்ல வெற்றி நிச்சயம்  அற்ற  தன்மை என்பது தேர்தலை வேகப்படுத்தியது.

இத்தேர்தல் முடிவுகள்  யார்க்கும் பெரும்பான்மையின்றி ஒரு கூட்டணி ஆட்சி உருவாகியுள்ளது. தம்மை இடது சாரிகள் எனக் கூறிக் கொள்ளும் சோசலிசக் கட்சியும்  பச்சைக்கட்சியும்  கமினிச கட்சியும் ஆட்சியில் அமர்ந்து சுரண்டலை பாதுகாக்கவும் தொடரவும் சபதம் எடுத்துள்ளனர்.

மக்கள் இந்த வாக்களிப்பில் யார் எம்மை குறையச் சுரண்டுவார்கள் என்ற கனவு கள் மட்டுமே முன்னையவர்களைவிட இவர்களைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். இவர்கள் சுரண்டுவதிலும் கொள்ளையடிப்பதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பலமுறை நிறுவியவர்கள். இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கம்யுனிசப் போலிகள் தமது வர்க்கப் போராட்டவரலாற்றை தொலைத்து நீண்ட பல வருடங்களாக முதலாளித்துவத்திற்கு சேவை செய்து வருகின்றனர். இங்கு இந்தத் தேர்தலை ஜனநாயகம் எனப்பீற்றும் இந்த சுரண்டும் கனவான்கள் எப்படி ஆட்சியை அமைக்கின்றனர் எனப் பார்ப்பபோம்.

பிரான்சில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் வாக்களிக்க பதிந்தோரில், சோசலிசக் கட்சி பெற்ற வாக்குவீதம் 16.5 வீதம் மட்டுமே. இன்று ஆட்சி அமைத்துள்ள  கூட்டணி

அரசு  பெற்ற மொத்த வாக்கு வீதம் அண்ணளவாக25 வீதத்தைவிடக் குறைவாகும்.

இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசு வெறும்  25 வீத மக்களின்  விருப்பத் தின் பெயரிலும்  பொய்யான பல வாக் குறுதிகளின் பெயரிலும்   ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது. இந்த 25 வீதத்தின் வெற்றியைத்தான் உன்னத மக்கள்  ஜனநாயகம் எனக் கூறும்  வெட்கக் கேடான பொய்யை  கூறுவதன் மூலம் உண்மையாக்கி விட முனைகின்றனர்.

இருக்கும் 20 வீதம் அரசு சார்புதுறை யை தனியார் மயமாக்க கோரும் உலக ஒழுங்குகள்  இவ் அரசு  தனியார்மய மாக்க மாட்டோம் என்ற பொய்பிரகட னங்களை வழங்கியுள்ளது.

உதாரணமாக மினசாரத்துறையை தனி யார்மயமாக்க கோரும் இன்றைய நிலை யில் அதன் லாப கட்டமைப்பைப் பார்ப்போம்.

ஒரு மின்சார யுனிற்றில் உற்பத்தி செலவு இன்று 0.10 பிரஞ் சென்றிம் ஆகும். ஆனால் பாவனையாளர்களுக்கு ஒரு யுனிற் விற்பது 76 சென்றிக்கும் ஆகும். இதைவிட இதற்கு 21.5 வீத பாவனை வரியும் சேவைக்கட்டணமும் உண்டு. மக்கள் சேவைக்கட்டணம் பாவனை வரியை விடுத்து உற்பத்தியை விட இன்று அரசு பெறும் லாபத்தை ஒரு யுனிற்றுக்கு பார்ப்பின் 760 மடங்காகும்.இது மொத்தமாக பார்ப்பின் கிட்டத்தட்ட 1000 மடங்காகும்.

இன்று ஒரு யுனிற்றுக்கு 760 மடங்கு லாபம் தரும் ஒரு அரசுதுறையை தனி யார் மயமாக்க கோரும் உலக வங்கியின்  கோரிக்கையை ஒரு சிலருக்கு  தாரைவார்த்துக் கொடுக்கும் ஒர் அங்கமே ஒழிய மக்களின் நலன்களின் பெயரில் அல்ல.

இன்று பிரான்ஸ் என்பது இனித்தேவையில்லை ஐரோப்பாவே எமக்கு வேண்டும் என்று தேர்தல் கூட்டத்தில் எழுப்பிய குரல்கள் அடிப்படையில் உலகமயமதாதலின் ஐரோப்பிய பங்கைத் தக்க வைக்க பிரஞ்சு பொரு ளாராரத்தைக் கைவிடத் தயாராக வுள்ளனர். இன்று ஐரோப்பாவில் எழுந்து வரும்  தனித்தனிப் போராட்டமும்

ஐரோப்பிய மயமாக்கலின் அடிப்படை யை கேள்விக்குள்ளாக்கின்றது.

ஐரோப்பியலில் மலிவு கூலி, மலி வுற்பத்தி எங்கு உள்ளதோ எங்கு தொழிலாளர்கள் வசதியாக சுரண்ட முடிகிறதோ  அங்கு உற்பத்தியை நகர்த்து மற்றதை மூடு என்ற கோசமும் எங்கு எதிர்ப்பு உள்ளதோ அதைவிடுத்து மற்றதை மூடு என்ற கோசமும் ஐரோப் பிய மயமாதலின் பெரும் பண்பாக வுள்ளது. இதற்கு எதிரான தேசியப் போராட்டம் எழுவது மட்டும் இன்றி

ஐரோப்பிய பொது வேலைநேரம் பொது கூலி எனப்பலவற்றை கோரும் வகையில்  கூட்டுப் போராட்டங்கள்  நாள்தோறும் ஐரோப்பாவில் தொடர்கிறது. இந்;த

ஐரோப்பிய மயமாதலினை எதிர்ப்பதில் போலி கம்யுனிஸ்ட்கட்சியும்  நாசிக்கட்சியும் தீவிரமாகவுள்ளது.

நாசிக்கட்சியின் வளர்ச்சி மட்டுமே இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி எனக்கூறும் அளவுக்கு வீறு கொண்டு எழுகின்றனர்.

வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்க அதிகரிக்க  அவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதை புள்ளி விபரங்கள் காட்டு கின்றன. இந்த வாக்களிப்பில் நாசிக் கட்சி பெற்ற  சராசரியைவிட  அதிகம் வாக்களித்தோர் யார் எனப் பார்போம்.

ஆண்கள் 18 வீதமும்  25 - 34 வயதுக்கு இடைப்பட்டோர் 19 வீதமும்  முதலாளியின் முன்னணித்தலைவர்கள் 23 வீதமும்  தொழிலாளர் 24 வீதமும,; வேலையற்றோர் 22 வீதமும் தனியார் வேலைப்பிரிவு 19 வீதமும்  சராசரி பட்டம் பெற்றோர் 20 வீதமும்  என வாக்களிப்பு நாசிகளை நோக்கி  சார்பா வுள்ளது. நாசிக்கட்சி பெற்ற 15 வீதத்தை விட  இது அதிகமானது மட்டு மின்றி  சமூக நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க  மேல் கீழ் என இரு பிரிவு  நாசிகளுக்கு வாக்களிப்பதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

கம்யுனிசக்கட்சியிக் துரோகம்  என்பது தொழிலாளர்களின் 14 வீதத்தையும் வேலையற்றோரின் 13 வீதத்தையும்  அரசதுறையில் 13 வீதத்தையுமே பெற முடிந்தது. நாசிக்கட்சியுடன் ஒப்பிடும் போது  இவர்களின் துரோகம் அடிப்ப டை வர்க்கம்  இவர்களிடமிருந்து  வில கிச்செல்வதையே காட்டுகிறது.

1974 இல் இந்த நாசிக்கட்சி பெற்ற வாக்குகள் 0.73 வீதமாகும். ஆனால் இன்று 15 வீதத்தைத் தனதாக்கியதுடன்  பாராளுமன்றத்திற்கு முதல்முதலாக ஒரு பிரதிநிதியை அனுப்பியுள்ளது. அத்துடன் சட்டவிரோத பொலிஸ்படை அமைத்து  பொலிஸ் உடையில் கூட சோதனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இன்று பொலிஸ் மற்றும்  போக்குவரத்துத் துறையில்  இக்கட் சிக்கு 28 வீத ஆதரவுள்ளது மட்டுமின்றி  பொலிஸ் பகிரங்கமாகவே நாசிசார்பாக  செயல்படுவதுடன்,  வெளிநாட்டவரைப் துன்புறுத்திப் பழிவாங்குகிறது. இந்த நாசிக்கட்சித்தலைவர் லுபேன்

தேர்தலுக்கு முன்  சோசலிசக் கட்சிப் பெண் வேட்பாளரைத் தாக்கியதன் மூலம் தனது பாசிசத்தை இனம் காட்டினார்.

இன்று மாறிச் செல்லும் நிறவாத பாசிச நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டின்  அதற்கு எதிராக பாட்டாளி வர்க்க  தலைமையில் போராடும்  ஒரேயொரு பாதை மட்டும் எஞ்சியுள் ளது.

இன்று பிரான்சில் சிறுசிறு குழுக்களாக பல குழுக்கள் உருவாகியுள்ளதுடன்  சில மா. லெ. மா சிந்தனை வழி  செயல்பட முனைகின்றன. இத்தேர்தல் தீவிர இடதுசாரிப்பிரிவு 6 இலட்சத்திற் கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு ரொக்ஸிய திரிபுவாதிகள்  உள்ளடக்கிய இந்த மொத்த வாக்களர்களில் தான் எதிர்கால சரியான முன்னணி கட்சி தோன்றும் சாத்தியப்பாடுள்ளது. உலசில் உள்ள எல்லா நாடுகளும் அதில் வாழும் தேசிய முதலாளிகள் உள்ளிட்ட  மக்கள் பிரிவும்  உலகமயமாதலை எதிர்த்து  பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக  போராட தத்தம் வர்க்க நிலையில் முயலுகின்றன.  அதை சரி யாகப் புரிந்து அணிதிரட்டுவதன் மூலம்  உலக மயமாதலுக்கு எதிரான போராட்டத்தை  தேசியப் போராட்டங்களை வர்க்கப்போராட்டமாக  முன்னெடுத்து வெல்ல முடியும். இதைத் தவறவிடின்  இத்தேசியம் பாசிசத் தேசி யமாக மாறும் இது உலகில் எல்லா  மக்களினதும் எல்லா நாடுகளினதும்  பிரச்சனையாகும். உலகமயமாதலை எதிர்த்து தேசியமும் உலகமயமாதலை எதிர்த்து வர்க்கப் போராட்டமும் உன்று இணையும் போது அது உலகப் புரட்சிக்கு ஒவ்வொரு நபரும் தயாராவை சுட்டிக்காட்டும்.


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது