Language Selection

முன்னணி -01
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.

 

கிரிக்கெட் மக்களை அடிமை கொள்ளும் ஒரு போதைப் பொருள். ஆளும் வர்க்கத்துக்கு அடக்கியாளும் கருவி. மூலதனத்துக்கோ செல்வத்தை குவிக்கும் வியாபாரம். இதை சுற்றித்தான் தேசபக்திக் கூச்சல்கள். விளையாட்டு ரசனை பற்றி தர்க்கங்களும் வாதங்களும். தனிமனித சுதந்திரம் பற்றிய பிரமைகள், புலம்பல்கள் உருவாக்கப் படுகின்றன.

இலங்கை இந்தியாவை வென்றிருந்தால் இதை சிங்கள பெருமிதமாகக் காட்டி கொண்டாடும் வாய்ப்பை இலங்கை ஆளும் கூட்டம் இழந்து போனது. இந்த சிங்கள இனவாதத்துக்கு எதிரான தமிழ் உணர்வு, வடக்கில் இந்தியா வென்றதை கொண்டாடியது. சிங்கள இராணுவத்துடன் முறுகிக் கொண்டு கூச்சல் எழுப்பியது. மலையத்தில் தமிழ் சிங்கள மோதல். இலங்கை தோற்க வேண்டும் என்று கருதுமளவுக்கு, அடக்கு முறையின் கருவியாக உணருகின்ற எல்லையில் கிரிக்கெட் ஒரு தேசத்தின் இனம் சார்ந்த போதைப் பொருளாக உள்ளது. இங்கு அது விளையாட்டல்ல.

 

தன் நாடு தோற்க வேண்டும், மற்றைய நாடு வெல்ல வேண்டும் என்ற உணர்வு கூட இந்த அபினைக் கடந்ததல்ல. ஓர் எதிர்ப்பு என்ற அடையாளத்துக்கு அப்பால், வெல்லும் நாட்டில் அடக்குமுறைக்குப் பின்னால் அணிதிரள்கின்றனர். அங்கும் இங்;கும் ஒரே அரசியல் சமூக பொருளாதார அடிமைத் தனத்தைத்தான் இது உற்பத்தி செய்கின்றது. வாக்கு போடுவது போல், கிரிக்கெட் தேசிய எதிர்ப்பு உணர்வு. கிரிக்கெட் விளையாட்டை கடந்துவிட்ட நிலையில், அதை புறக்கணித்தும் அம்பலப்படுத்தியும் கிளர்ச்சி செய்ய வேண்டும்.

இன்று தென்னாசிய சமூகங்களில் காலனித்துவ போதைப்பொருளாகி விட்ட கிரிக்கெட் மூலம், அந்தந்த நாடுகளின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் இது செல்வாக்கு வகிக்கின்றது. இதன் மூலம் கிரிக்கெட் போதையில் போலியான தேச பக்தியை முன்நிறுத்தி, கிரிக்கெட்டை வழிப்பாட்டு பொருளாக்குகின்றது.

இதற்கமைய ஆளும் கட்சிகள், ஆளும் வர்க்கங்கள் இந்த தேசபக்தியை முன்நிறுத்திக் கொண்டாடுகின்றது. மூலதனமோ இந்த தேசபக்தியை முன்நிறுத்தி, கோடிகோடியாக சம்பாதிக்கின்றது. கிரிக்கெட் சூதாட்டம் முதல் சட்டப+ர்வ விளம்பரம் மூலம் புரளுகின்ற கோடிக்கணக்கான பணம், வியாபாரம் அனைத்தும் போதைக்குள்ளான கிரிக்கெட் ரசிகர்களின் மடியில் இருந்துதான் கறக்கப்படுகின்றது. உன் போதையில், உன்னிடம் இருந்துதான் உனக்குத் தெரியாமல் அவை கறக்கப்பட்டும் விடுகின்றது.

கன்றுக் குட்டியைக் காட்டி தாய் மாட்டிடம் பால் கறப்பது போல்தான், நீயும் கறக்கப்படுகின்றாய். தாய்க்குரிய தாய்மை உணர்வை தான், உனக்குத் தெரியாது அரசியல்வாதிகள் தமதாக்குகின்றனர். அவர்கள் உன்னை இந்த போதைக்குள் கட்டிவைத்துத்துதான் கறக்க உதவுகின்றனர்.

கிரிக்கெட் என்ற போதை மூலம் உருவாக்கும் உன் தேசபக்தி உண்மையானதா? உன் தேச உணர்வும், தேச பக்தியும் மக்களின் வாழ்வையும் தேச நலனையும் முன்நிலைப்படுத்துகின்றதா? ஒரு நாட்டின் முழுமக்களும் உனது உணர்வுடன் ஒன்றி நிற்கின்றனரா? இந்த தேசபக்தியை ரசிக்கின்ற அனைவரும் ஒரே விதமாக இதை உணரத்தான் முடியுமா?

இல்லை. இல்லை என்கின்ற போது, இந்தத் தேசபக்தி போலியானது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், ஒடுக்கும் தேசம், அது சார்ந்த உன் தேசியம் போலியானது. தேச வளங்களை அந்நியரிடம் தாரை வார்க்கின்ற, தனியாரிடம் விற்கின்ற தேசத்தைச் சார்ந்த உன் தேசியமும் போலியானது. மக்களைச் சுரண்டி ஏழ்மையில் வதைக்கும் உன் தேசம், ஒரு நேர கஞ்சிக்கு பதில் மரணத்தையும் நோய்க்கு மருந்தின்றி மரணத்தையும் கொடுக்கின்ற தேசியம் உண்மையானதல்ல.

உன்னைச் சுற்றிய மனித வாழ்வில், மனிதர்கள் சந்திக்கின்ற அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் யார் பொறுப்பு. ஆம் உன் தேசமும், தேசிய உணர்வும் தானே பொறுப்பு. இதை மறுப்பவன் ஒன்றில் இதன் ஆதரவாளன் அல்லது கிரிக்கெட் என்ற போதையில் இருக்க வேண்டும்.

கிரிக்கெட் என்ற போதை உனக்கு தொடர்ந்து தருபவன், தேசம் தேசியத்தின் பெயரில் மக்களை அடிமைப் படுத்துகின்றவன் தான். தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் முதல் சாதித் தலைவன், மதத் தலைவன், மக்களை மொட்டையடிக்கும் ஜனநாயக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் என்று இதன் பின் கோடிகோடியாக பெற்றுப் பிழைத்துக் கொள்ளும் கூட்டம்தான் உனக்கு கிரிக்கெட் என்ற அபினைத் தருகின்றது. கிரிக்கெட் என்ற போதையின் பின் விளம்பரமாகும் பெப்சிக்கும், கொக்கோ கோலாவுக்கும், மக்டொனஸ்சுக்கும் தேசியமும் தேசிய உணர்வுமுள்ளதா சொல்லுங்கள். உனது உணர்வு விளையாட்டு என்றால், அவனுக்கு என்ன வேலை இங்கு? இங்கு அவன்தான், தன் விளம்பரங்கள் மூலம், கிரிக்கெட்டை முன்நிறுத்தி உன்னை போதையாக்கி உன் உணர்வை தீர்மானிக்கிறான். அவன் உன் கிரிக்கெட் போதையில் தன் பொருளை உனக்கு தெரியாது உன்னிடமே விற்று, தன் விளம்பர பணத்தையும் அதை விட பல மடங்கு பணத்தையும் பெற்றுவிடுவான். இதுதான் அவனின் தேச பக்தி.

அன்று தென்னாசிய நாடுகளை ஆண்ட பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகள் கொண்டு வந்த சரக்கை, இப்போ தேசபக்தியின் பெயரில் நீ அடிக்கின்றாய். அன்று அவன் தென்னாசியக் கறுப்பு அடிமைகள் சுற்றியிருக்க, பொழுது போக்காக விளையாடிய விளையாட்டுத்தான் இன்று உனக்குத் தேசிய உணர்வைத் தருகின்றது என்றால், உனது தேசபக்தி அடிமை உணர்விலானது. இந்த நாடு, இந்த மக்கள் என்ற உணர்வு சார்ந்தல்ல. மக்கள் சார்ந்த தேசிய உணர்வு ஏற்படக் கூடாது என்பற்காக தரும் அபின்தான் கிரிக்கெட். இது உன் கண்டுபிடிப்பல்ல. அன்று பிரிட்டிஷ்

அடிமைகள் எஜமான் விளையாடிய விளையாட்டை தாமும் விளையாடி, அதைச் சுதந்திரத்தின் பெயரில் அடிமைகளான உனக்கு மீளத் தந்துள்ளான். உன்னை இந்த கிரிக்கெட் போதையில் வைத்திருக்க, தொலைக்காட்சிகள் முதல் பெப்சி கோக்கோகோலா வரை கோடிகோடியாக உன்னிடம் இருந்து உறிஞ்சியபடி, போதையில் உன்னை அடிமையாக வைத்;திருக்கிறான். நீ போதையேறி குரங்காட்டம் தலைகால் தெரியாது அங்குமிங்கும் குதிக்கின்றாய்.

மத வெறியேறி, இன வெறியேறி, சாதி வெறியேறி, சுரண்டல் வெறியேறி, விளையாட்டு ரசிகன் போர்வையில் கன்னாபின்னாவென்று உளறுகின்றாய். ஒரு மனிதனாக சக மனிதனை மதிக்காது ஒடுக்கியபடி, கிரிக்கெட் என்ற அபினை உண்டபடி தேசிய வெறியுடன் கூச்சல் போடுகின்றாய். இதைத்தாண்டி இது விளையாட்டாகவில்லை.

இரயாகரன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது