Language Selection

தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் நவீன மருத்துவம், கடவுளின் அவதாரத்தை இந்த உலகில் மீளவும் படைக்க முனைகின்றது. என்ன அற்புதங்கள்? ஏழை மக்களுக்கு உதவாத நவீன மருத்துவம் முதல், உழைத்து உருவாக்கும் எந்தப் பொருளையும் உருவாக்கும் மனிதத்தகுதி கூட இல்லாத (படைப்பாற்றலற்ற) ஆன்மீகம் பேசும் பொறுக்கி லும்பன்கள் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றனர்.

கடவுளின் அவதாரம் என்று கூறிய மோசடி தான் மூலதனம்;. இது 40000 கோடியாகியுள்ளது. இந்த மோசடி அற்புதங்களானது. இப்படி அற்புதங்கள் பெயரால் ஏமாற்றி வழங்கிய எவையும், இன்றைய மனித உழைப்பு சார்ந்த உற்பத்திக்கு வெளியில் எதையும் கொடுக்கவும், புதிதாக எதையும் படைக்கவும் முடியவில்லை. ஏழைக்கு என்று கூறி வழங்கும் எந்தச் சேவையையும், ஏய்த்துப் பிழைத்த மோசடிப் பணத்தில் இருந்து தான் உருவாகின்றது. கடவுளின் அற்புதங்களில் இருந்தல்ல. கடவுளின் படைப்பாற்றலில் இருந்ததல்ல. எதையும் கடவுளின் அவதாரமான சாயிபாபாவால் உருவாக்க முடியவில்லை. மனித உழைப்பு உருவாக்கிய பணமும், மீளவும் மனித உழைப்பும் தான் அனைத்தையும் படைக்கின்றது. இதுவல்லாதவை எதையும் படைக்க முடிவதில்லை.

 

 

ஆக கடவுளின் பொறுக்கியாக உருவான அவதாரம், இந்தப் பொருள் உலகைக் கடந்தும், மனித உழைப்பைக் கடந்தும், எதையும் மனித குலத்துக்காக படைக்கவில்லை, படைக்க முடியவில்லை. புத்திசாலியாக ஏமாற்றிப் பிழைக்கும் பணக்கார முட்டாள்களின் கூட்டு வியாபாரம் தான், சாய்பாபாவின் பெயரில் ஆன்மீகமானது.

சாயிபாபாவின் மாயாஜால வித்தைகளும், பணக்காரனின் அறம் கெட்ட வக்கிரமான வாழ்க்கையும் ஓரினச்சேர்க்கையாக ஒன்றினைந்து நடத்திய வாழ்க்;கை ஆன்மீக உலகமாக, அது 40 ஆயிரம் கோடி ரூபா சொத்தைப் படைத்தது. இந்த ஆன்மீகம் பணம் சேர்க்கும் பணக்காரத் தன்மையை அடிப்படையாக கொண்டது. இதைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விளம்பரங்களுக்கும் விம்பங்களுக்கும் அமைவாக, ஏழை மக்களுக்கு தானதருமங்கள். ஏழைமக்களுக்கு உதவுதாக காட்டுவது, நவீன பணக்காரத்தனத்தின் பொறுக்கித்தனத்தை மூடிமறைக்கின்ற இன்றைய நவீன வக்கிரமாகும்.

ஏழைகளை உருவாக்கிய பொருள் (பண) சார்ந்த உலக ஓழுங்கில், கடவுளிள் பெயரில் பொறுக்கிகள் அவதாரமாகின்றனர். ஆன்மீகத்தின் பெயரில் இந்த பொறுக்கிகளுடன் சேர்ந்து பணக்காரர்கள் தங்களைத் தாங்கள் நியாயப்படுத்திகொள்வது தான், இதன் பின்னுள்ள ஆன்மீகக் கழிசடைத்தனமாகும்.

உழைக்கும் மக்களைச் சுரண்டியும், கொள்ளையடித்தும் சேர்த்த பொருளை (பணத்தைக்) கொண்டு கட்டமைக்கப்பட்ட நவீன வக்கிரத்தையும் அதன் வாழ்க்கை முறையையும் நியாயப்படுத்தத்தான், ஏழைமக்களுக்கு உதவும் நவீன வக்கிரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது.

இதன் பின்னணியில் தான் 40000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடவுளின் பெயரால் சொத்து சேர்த்துள்ளான் பொறுக்கியான சாயிபாபா. இப்படி மூலதனத்தில் இருந்து உருவான நாய் ஒன்று, தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, நவீன மருத்துவமனையில் உயிர் பிழைக்க முனைகின்றது. எந்த அற்புதமும் இங்கு உதவவில்லை. பணமும், அதற்கு சேவை செய்யும் நவீன மருத்துவமும் உயிரைக் காப்பாற்ற போராடுகின்றது. அற்புதங்களின் பெயரில், மாயஜால வித்தைகள் (மெஜிக்) உதவவில்லை. அது அறிவுள்ள படித்த முட்டாள்களை ஏமாற்றத்தான் உதவியது.

இதன் மூலம் ஊர் உலகத்தை ஏமாற்றி வாழ்ந்த இந்தப் பொறுக்கி, தன் பாலியல் தேவைக்கு பலாத்காரமாக ஓர்pனப் பாலியல் வக்கிரங்களை தன் பக்தர்கள் மீது திணித்தவன். இந்த உலகமகா பொறுக்கி கையில் சிறுவர்கள் முதல் பெர்pயவர்கள் வரை பலர் பலியானார்கள். இப்படி தன் ஓரினச்சேர்க்கையை வக்கிரமாகத் திணித்து, அதை அவர்களுக்கு கடவுளுடனான பாலியல் உறவாக காட்டியவன். இப்படிப்;பட்ட குற்றவாளி தன்னைச் சுற்றிய ஒரு மனித விரோத மர்ம உலகத்தை மூடிமறைக்க கொலைகளைச் செய்தது வரை, எத்தனை எத்தனை அற்புதங்கள். இதைக் காப்பாற்ற குண்டர் கூட்டம் புடை சூழ, அதற்கேற்ப இந்திய அரசை தனது பொறுக்கித்தனத்துக்கு ஏற்ப நக்கவைத்தவன். இந்திய இந்துத்துவ சாதிய அரசியல் தலைவர்களுடன் கூடி மனித விரோதத்தையே மூலதனமாக்கியவன். இந்த மாபெரும் பொறுக்கியின் உயிர் தான், இன்று நவீன மருத்துவமனையில் ஊசலாடுகின்றது. உயிரைக் காப்பாற்ற முட்டாள் பணக்கார பக்தர்கள், அவரையே வழிபடுகின்ற விளம்பர ஆன்மீக கூத்துகள் ஒருபுறம் அரங்கேறுகின்றது.

மறுபக்கத்தில் கடவுளின் அவதாரத்தின் உயிரைக் காப்பாற்ற, நவீன மருத்துமனையில் கடவுளைக் காண்கின்றனர். எதிரும் புதிருமான பணக்கார அறிவும், வக்கிரமும் அரங்கேறுகின்றது. 40000 கோடி ரூபாவுக்கு மேல் உழைக்கும் மக்களின் உழைப்பை திருடி தின்று கொழுத்து கடவுள் அவதாரமாக மாறிய மூலதனத்தின், உயிர் மேலான பணக்காரக் கவலைகள். அது சார்ந்த ஆன்மீக உலகை கட்டமைத்த பொறுக்கிகளின் கவலைகள், சாதிய பார்ப்பனிய இந்துத்துவ கவலையாக மாறுகின்றது. பணக்காரனின் வக்கிரத்துக்கு ஏற்ற ஆன்மீகத்தை சந்தைப்படுத்தியவனின் ஆன்மீகம், கவலை கொண்டு புலம்ப வைக்கின்றது.

இந்த பொருள் (பண) உலகில் பிழைத்துக் கொள்ளும் புத்திசாலிகளின் முட்டாள் தனத்தில் தான், சாயிபாபா என்ற பொறுக்கி நவீனமாக வாழ்ந்தான். கோடிகோடியாக சம்பாதித்தான். மேலும் மேலும் உழைக்கும் மக்களை சுரண்டியும் கொள்ளையடித்தும் பணக்காரனாகிக் கொண்டவனின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்குள் தான், சாயிபாபா போன்ற நவீன ஆன்மீகப் பொறுக்கிகளும் கூடி வாழ்கின்றனர்.

மோசடிகளையும், ஏமாற்றுகளையும், பித்தலாட்டங்களையும் முதலிட்டு குவித்த சொத்து 40000 கோடி. இந்த கடவுளின் அவதாரம் உன்னைப்போல் உழைத்து ஒரு நேர உணவுக்கு மாரடிக்கவில்லை. உன்னைச் சுரண்டியும், உன்னைச் சுரண்டிய கூட்டத்திடமும் இருந்து பெற்றுச் சேர்த்த சொத்தின் ஒரு பகுதிதான், இந்த கடவுளின் அவதாரத்திடம். ஊழல், லஞ்சம் முதல் ஊர் உலகத்தை கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துகளின் ஒரு பகுதி இது. இதற்கு வரி கிடையாது. இதை நுகர்ரும் ஆன்மீக நாய்களிடம், எந்த மனித அறமும் எதுவும் கிடையாது. இந்த உலகில் மற்றவனின் உழைப்பை நுகர்கின்ற வக்கிரம்தான், இதன் பின்னுள்ள மொத்த ஆன்மீகம்.

 

பி.இரயாகரன்

09.04.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது