Language Selection

தொடரும் புலத்து புலித் தேசியம், தமிழ் தேசியமாக புலத்தில் இவ்வாறு தொடர்ந்து முன்னேறுகின்றது. அன்று புலிகள் தாமல்லாத மாற்று இயக்கங்களை கொன்று குவித்து அதை தமிழ் மக்களின் தேசியமாக்கியது போல், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தமக்குள் மோதுகின்றன. ஆக மோதலை நியாயப்படுத்தி இதை சுற்றிக் கட்டமைக்கின்ற சுத்துமாத்து அரசியல் புலத்து தமிழ்தேசியமாக மாறுகின்றது.

இப்படி புலித்து புலிக் கோஸ்டிகள் வெளிப்படையான வன்முறையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் புலத்து தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தையும், புலிச் சொத்தை தனதாக்கி அதன் மேல் தமது நாட்டாமையையும் கோருகின்றனர். வன்னியில் புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்த போது, அதைத்தான் ஜனநாயக வழிக்கு வருதல் என்றனர். இப்படி தம்மை மட்டும் காப்பற்றிக்கொள்ள மே 15 2009 இரவு போட்ட ஜனநாயக வேசம் தான், ஆயுதத்தை கீழே வைத்தலாகும். இப்படி ஆயுதத்தை சார்ந்து கட்டமைத்து அதிகாரத்தை இழந்து வக்கற்றுப் போன புலத்துப் புலிகள், புலிச் சொத்தைக் கைப்பற்றும் முரண்பாடுதான் இரு பெரும் கோஸ்டியாக மாறியது.

 

 

 

இப்படி புலிக் கோஸ்டிகளுக்கு இடையேயான மோதல், இரண்டு தேர்தலை தனித்தனியாக நடத்தியது. இதன் மூலம் தங்களைத் தாங்களே புலத்து தமிழ்மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டு, புலத்து தமிழ் மக்கள் மேல் நாட்டாமையை தக்க வைக்கவும், புலிச் சொத்தை தமதாக்கவும் முனைந்தனர்.

இப்படி தேர்தல் மூலம் நடத்திய கூத்தைத்தான், புலத்து புலிகள் ஜனநாயகம் என்றனர். வன்னிப் புலிகள் தம்மை காப்பாற்றிக்கொள்ள ஆயுதத்தை கீழே வைத்ததை ஜனநாயகம் என்றனர். புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், ஒரே தேர்தலில் நின்று தங்களை தங்கள் வழியில் நிறுவ முடியவில்லை. இப்படி புலி ஜனநாயகங்கள். புலி கோஸ்டிகள், தத்தமது கோஸ்டிக்கு அமைவாக இரண்டு தேர்தல்.

நாடு கடந்த தமிழீழக்காரரை கவிழ்க்க சதிக்கு ஏற்ப கள்ளவாக்கு போட்டு வெல்ல வைப்பது முதல் பல முனையில் பல எதிர்த்தரப்பு ஜனநாயக புலிக்கூத்துகளை செய்தனர். இந்த முரண்பாடுகளும், இழுபறிகளும் தான், அண்மையில் நாடுகடந்த தமிழீழ உறுப்புரிமை பெற்ற சிலரை வெளியேற்றுவதில் போய் முடிவுற்றது.

இறுதியுத்தத்தில் தம் உயிரைக் காப்பாற்ற ஆயுதத்தை துறந்து சரணடைந்த புலிகளின் ஜனநாயகம் போல், புலிகள் சமாதானம் பேசும் காலத்தில் அரசியல் செய்வது என்பது வெள்ளையும் சொள்ளையுமாக வெளிக்கிட்டு பொக்கற்றில் பேனை செருகி வைத்திருப்பது போல் தான், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தங்களை ஜனநாயகத்துக்கு திரும்பியதாக நடிக்க தனித்தனியாக இரு தேர்தலை நடத்தினர்.

இப்படி மோதல் இரு துருவங்களில், இரு கோஸ்டியாகிய வௌ;வேறு வழிகளில் தொடங்கியது. பாரிசில் பத்திரிகை விற்பதை தடுத்தல், எரித்தல் என்று தொடங்கி இன்று வெளிப்படையான வன்முறையில் புலி ஜனநாயகம் வெளிப்படுகின்றது. புலத்து தமிழ்மக்கள் மேலான அதிகாரத்தைக் புலியின் மறுதரப்பிடம் இருந்து கைப்பற்றவும், சொத்துகளை தமதாக்கவும் நடக்கும் தேர்தல் முதல் இன்றைய வன்முறை வரை எதை எடுத்துக் காட்டுகின்றது.

இது தொடரும் என்பதைத்தான். இதற்குள் இலகுவாக பேரினவாதம் புகுந்து விளையாடும் என்பது, இன்று வெளிப்படையான உண்மையாகியுள்ளது. சிறிலங்காப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே புலத்து தமிழ்மக்கள் மத்தியில் இயங்குவது மட்டுமின்றி, அவர்கள் புலத்து புலிகளின் உயர் மட்டங்களில் புகுந்தும் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.

இன்று புலியின் இரு கோஸ்டிகளும் பரஸ்பரம் ஒன்று மேல் இனனொன்று குற்றஞ்சாட்டவும், அவதூறு செய்யவும் மற்ற தரப்பை இலங்கை கைக்கூலிகளாக காட்டிக் கூறுகின்ற அரசியல் பின்னணியில், இலங்கைப் புலனாய்வுப் பிரிவு மிக வேகமாக புகுந்து விளையாடி வருகின்றது.

புலிப் பணத்துக்காக மோதும் இரு கோஸ்டியும், இலகுவில் பணத்துக்கு விலைபோகும் எல்லையில் தான் தம் அரசியலைக் கொண்டுள்ளனர். பணத்துக்காக அவர்களின் அரசியலும் மோதலும் என்பது, இங்கு மையமாக அரசியல் புள்ளி. சிறிலங்கா புலனாய்வு பிரிவு பணம் வைத்தால் போதும், இந்த இரு கோஸ்டியிலும் இருந்து நக்கும் நாய்களுக்கு பஞ்சம் கிடையாது.

இரு புலிக் கோஸ்டிகளுக்குமிடையில் கொள்கை ரீதியாக அரசியல் முரண்பாடு எதுவும் கிடையாது. புலிப் பணத்தை தமிழரின் பொது நிதியமாக மாற்றினால், இந்த இரு கோஸ்டியும் இல்லை என்பதும் அது சார்ந்த வன்முறைக்கு இடமில்லை என்பதுவும் உண்மை. இங்கு தமிழர், தமிழ்தேசியம் என்பதெல்லாம் போலியானது, புரட்டுத்தனமானது. அனைத்தும் பணத்துக்கானது.

குறைந்தபட்சம் உண்மையான புலித் தேசியத்தையும், தமிழர் நலனையும், இந்த புலிச் சொத்துக்கு வெளியில் தான் இனம் காணமுடியும். முதலில் தமிழ் மக்களிடம் இருந்து புலிகள் பெற்ற பணத்தை, தமிழர் பொதுநிதியமாக மாற்றுங்கள். இதன்பின் தான் குறைந்தபட்சம் புலித் தமிழ்தேசியம் ஒன்று இருந்தால், அதை இனம் காணமுடியும்;. இதுவல்லாத அனைத்தும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற பித்தலாட்டங்கள். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை… எல்லாம் தமிழ்மக்களை மொட்டை அடித்து ஏமாற்றும் அரசியல் மோசடிகள். இன்று வன்முறையும், வன்முறை பற்றிய கருத்துகளும், அதற்கு எதிரான கண்டனங்களும் கூட, இந்தப் பணத்தை மையப்படுத்திய ஒரே அச்சில் பயணிக்கின்றது.

இந்தக் கோஸ்டி அரசியலுக்கு எதிரான தமிழ்மக்களின் நலன்சார் அரசியல், இந்த கோஸ்டியை உருவாக்கிய புலிப் பணத்தை தமிழர் பொது நிதியமாக கோரும் மையக் கோசத்துடன் இதை முன்னிறுத்துவது அவசியமானது. இந்தப் பணம் தான், தேசியத்தை சிதைத்து மோதலுக்கான அரசியல் அடிப்படையை வழங்குகின்றது. இங்கு இதற்கூடாகத்தான் சிறிலங்கா புலானாய்வுப் பிரிவு புகுந்து கொள்ளும் அரசியல் அடிப்படை உருவாகின்றது.

தமிழ்தேசிய அரசியல் பணத்தை மையப்படுத்தி, பணத்துக்கு விலை போகும் வன்முறையாக இன்று மாறிவிட்;டது.

 

பி.இரயாகரன்

09.04.2011

 

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது