Language Selection

இலவசமாக கோமணத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்குவதுதான் இலவசத்தின் மகிமை. ஈழத் தமிழனுக்கு இதைத் தருவோம், அதைப் பெற்று தருவோம் என்பது, ஈழத்தமிழனாக அவர்கள் தொடர்ந்து வாழும் உரிமையை இல்லாமலாக்குவது தான்.

1983 முதல் இவர்கள் செய்தது இதையே தான். இவர்கள் முதலில் செய்தது, ஈழ மக்களின் விடிவை குழிதோண்டிப் புதைத்ததுதான். எம்.ஜிஆர் கொடுத்த கோடிக்கணக்கான பணம் முதல் சீமானின் இன்றைய சினிமா வேசம் வரை, தமிழ்மக்களின் குரல்வளையைதான் அறுத்தது. அந்த மக்களின் சொந்த விடுதலை குழிதோண்டிப் புதைத்த அரசியல்தான், அன்று முதல் இன்று வரை இவர்கள் இட்ட நஞ்சு வித்தாகும்.

இன்று ஆளும் கட்சியான திமுக முதல் தமிழினவாதிகள் வரை, இலங்கைத் தமிழரை சொல்லி வாக்கு கேட்டும் பகிஸ்கரித்தும் பிழைக்கின்றனர். ஒருபுறம் இலங்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் தருவதாக கூறுவதும் மறுபக்கம் தமிழினத்தின் எதிரிகளை புறக்கணியுங்கள் என்றும் கூறி வாக்குப:பலம் மீது நம்பிக்கை வைத்து நகர்வது வரை, பற்பல வேசங்களின் பின் பலர். சோனியா முதல் சீமான் வரை ஈழத் தமிழன் பெயரில் குரைக்கின்றனர்.

1980, 1983 களில் தொடங்கி ஈழத் தமிழன், தமிழனின் உரிமை என்று கூறிக்கொண்டு, ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்திக்கொண்டு சொத்துகளைக் குவித்தனர். இதற்காக அதிகாரத்தை பெற்றுக் கொள்வது தான், கடந்த 30 வருடமாக நடந்து வருகின்றது. ஈழத் தமிழனோ இன்று அனைத்தையும் இழந்து விட்டான். ஈழத் தமிழனுக்கு விடுதலையும் தீர்வும் பெற்றுத்தருவதாக கூறியவர்கள் தங்கள் பின்னால் சொத்தை அதன் மூலம் சேர்த்துக் குவித்து வைத்திருகின்றனர். பெரிய கட்சி வைத்திருக்கின்றவர்களில் இருந்து ஈழ தமிழினவாதம் பேசும் தமிழ் தேசியவாதிகள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது. தமிழக மக்களை தமிழன் பெயரால் மொட்டை அடித்த கூட்டம் தான், இன்று இலங்கைத் தமிழன் பெயராலும் அதை தொடர்ந்து செய்கின்றது. அனைத்து வாக்குறுதியும் இலவசங்கள் தான். ஈழத்தமிழனுக்கு 30 வருடமாக இலவசமாக அள்ளிவீசி, அவர்களின் போராட்டத்தையே ஆரம்பம் முதல் குழி தோண்டிப் புதைத்தனர்.

சொந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக கோமணம் தருவதாக கூறிக்கொண்டு இருப்பதை புடுங்கும் இந்தத் திருடர் கூட்டம் தான், இலங்கை மக்களுக்கு இலவசமாக தீர்வு பெற்றுத் தருவதாக கூறுகின்றது. என்ன மோசடி.!

ஜனநாயகம், தேர்தல், மக்கள் வாக்குப் போடும் உரிமை, மக்களின் தேர்வு என்று கூறிக்கொண்டு, உலக மகா திருடர்கள் தான் தேர்தலில் நிற்கின்றனர். தங்களை மகா உத்தமர்களாகவும், நாட்டை மீட்க வந்த மீட்சியாளர்களாகவும் காட்டிக் கொள்ளவும், எத்தனை வேசங்களைப் போடுகின்றனர்.

சிங்கள பேரினவாதம் கொன்று குவித்த ஈழத்தமிழினத்தின் பெயரிலும் தொடர்ந்து பிழைத்துக்கொள்ள முனைகின்றனர். இந்தியாவின் துணையுடன் சிங்கள பேரினவாதம் தமிழனைக் கொன்று குவித்தது, புலியின் இறுதிக்காலத்தில் மட்டும் நடக்கவில்லை. 1980 கள் முதல் மாறிமாறி கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளின் துணையுடன் தான் தொடர்ந்து இது அரங்கேறி வந்தது.

ஈழ தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க, உதவியின் பெயரால் ஈழப் போராளிகளை கூலிப்படையாக வளர்த்த காலம் முதல் ஈழ மக்களுக்கு புதைகுழி வெட்டப்பட்டு வந்தது. தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்று தருவதாக மகுடி ஊதி கூறும் சோனியாவின் இன்றைய கூத்து வரை, அனைத்தும் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழகத்து ஈழ தமிழினவாதிகள் இதன் பின் நடத்துகின்ற அரசியல், இதை விட்டால் அவர்களுக்கு வேறு அரசியல் தெரிவு இல்லை என்ற அளவுக்கு, ஈழத் தமிழ் மக்களை சொல்லி பிழைக்கின்ற பக்கா மோசடிக்காரர்கள் அவர்கள்.

இந்திய மக்களின் விடுதலைக்காக அந்த மக்களை அணி திரட்டிப் போராடாத, தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அறிவித்து கிளர்ச்சி செய்யாத எந்த அரசியலும், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமாகும். இதில் ஈழ மக்களை சொல்லிப் பிழைப்பது, கேடுகெட்ட பொறுக்கித்தனமாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தான், தமக்காக தமது உரிமைக்காக போராடும் உரிமை பெற்றவர்கள். இதை ஏற்றுக் கொள்ளாத அனைத்தும், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானது. இதை முன்வைத்து போராடாத எந்த அரசியலும், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது. தேர்தலில் நிற்கும் திருடர்கள் முதல் இந்த திருட்டில் பங்கு கொள்ளாத ஈழத் தமிழினவாதம் பேசும் அனைவரும் ஒரே அச்சில்தான் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயணிக்கின்றனர்.

 

பி.இரயாகரன்

06.04.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது