Language Selection

புலியிடம் இருந்து ஜனநாயகம் கேட்ட புலியெதிர்ப்பு மாமாக்கள் பேரினவாதத்தின் பின் வழிகாட்டினர். ஆயுதத்தை வழிபட்ட புலி மாமாக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொண்டு, தங்கள் சொத்தைப் பாதுகாக்க வழிகாட்டினர்.

ஆயுதம் ஏந்தாவிட்டால் அது ஜனநாயகம் என்று பொழிப்புரை எழுதிவைத்துக் கொண்டு, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தான் புலத்துப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தியும், நாடு கடந்த தமிழீழத்தை முன்னிறுத்தியும், புலத்து மக்களை கொண்டு தமக்கு தாமே வாக்கு போட வைத்ததை ஜனநாயகம் என்று கூறி தேர்தல் நாடகத்தை நடத்தினர். இப்படி புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், அடுத்தடுத்து ஜனநாயகத்தின் பெயரில் ஆளுக்கொரு போலித் தேர்தலை நடத்தி முடித்தனர்.

இவர்கள் வேறு யாருமல்ல, தமிழ்மக்களை கொன்றழித்த கொலைகாரர்கள். மக்களை பணயம் வைத்து யுத்தமுனையில் பலிகொடுத்தவர்கள். பலிப் பிணத்தைக் காட்டி அரசியல் நடத்தியவர்கள். இப்படி பலிகொடுத்தவன் பலியெடுத்தவனை குற்றம் சாட்டி நடத்திய அரசியல் நாடகத்தில், இவர்களும் பலியெடுத்தவனுக்கு நிகரான கொலைகாரர்கள் தான்.

ஆட்டைப் பலியெடுக்கும் வேள்வியில் பலனை எதிர்பார்த்த பலிகொடுப்பவன் நிலையில் தான் புலிகள் செயல்பட்டனர். பலியெடுத்த பூசாரியை மட்டும் இதைச் செய்ததாக குற்றஞ் சாட்டுவது மட்டும் எப்படி? பலனை எதிர்பார்த்து, பலன் கிடைப்பதாக சொல்லி மேலும் மேலும் மக்களை பலிகொடுத்துக் கொன்ற கூட்டம் தான், புலத்தில் தேர்தலில் நின்று வென்ற வேட்பாளர்கள். தமிழ் மக்களின் அதிக பிணக்காட்சி தான், இலங்கையில் அன்னிய தலையீட்டை நடத்த அவசியமானது என்பதுதான் புலத்து புலி மாமாக்களின் கொள்கையாக இருந்தது.

இப்படி அன்று வன்னித் தலைமையுடன் கூடி நின்று மக்களை பலிகொடுத்த கொலைகாரக் கூட்டம் தான், தனக்குத் தானே ஒரு ஜனநாயக மூகமுடியைப் போட்டது. இன்று தங்கள் ஜனநாயக மூகமுடிக்குள், குத்து வெட்டுகளை நடத்துகின்றனர்.

மக்களைப் பலிகொடுத்த கொலைகாரர்களுக்கு வாக்குப் போடுவதன் மூலம், புலத்துப் புலியில் ஜனநாயகம் செழித்துவிடுவதாக காட்டிக்கொண்டு, இரு கோஸ்டியும் தமக்குள் மோதின. தாமே தமக்கு ஏற்ற எடுபிடிகளை முன்னிறுத்தி, தாமே கள்ளவோட்டைப் போட்டு, தேர்தல் என்ற ஒன்றை உலகத்தை ஏமாற்ற நடத்தினர். இதன் மூலம் இதை வழிநடத்தியவர்கள், பெருமளவில் புலிப் பணத்தை தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டவர்கள் தான்.

மக்களைப் பலி கொடுத்த கொலைகாரர்கள், தமிழ் மக்களின் பணத்தை தனதாக்கிய நிகழ்வை மூடிமறைக்கத்தான், ஜனநாயகம் வேசம் உதவியது. இப்படி புலத்து புலிகள் புலத்து தமிழ் மக்களை ஏமாற்றி, அவர்களின் தெரிவின் பெயரால் புலிச் சொத்தின் உரிமையாளராக்கினர். அவர்கள் தமிழ்மக்களை வழிகாட்டுவதாக கூறி, மேற்கு மற்றும் இந்திய அரசுத் தலைவர்களின் எடுபிடிகளாக மாறி அங்குமிங்குமாக நின்று குலைக்கின்றனர்.

இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களை, இலங்கை அரசு மட்டும் இன்று மூடிமறைக்கவில்லை. இந்த இரு புலிக் கோஸ்டிகளும் கூட்டாகத்தான் மூடிமறைக்கின்றனர். நடந்தது என்ன என்பதை மூடிமறைப்பதில் தொடங்கி, கிடைத்த போர்க்குற்றத் தரவுகளையும் ஆவணங்களையும் கூட தமிழ் மக்களுக்கு மூடிமறைத்தபடி, அதை அன்னிய சக்திகளிடம் கொடுப்பதன் மூலம் மறுபடியும் இலங்கை அரசுக்குத்தான் உதவுகின்றனர்.

இவர்களின் ஜனநாயகம் இதுதான். இதைத் தாண்டியதல்ல. சொந்த மக்கள் அறியாமையிலும், பிரமையிலும் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், அவர்களை மந்தைகள் போல் நடத்துவது தான் புலிகளின் ஜனநாயகமாகி விடுகின்றது.

சொந்த தலைவருக்கு நடந்ததை குழிதோண்டிப் புதைத்த இந்த புலத்து புலி மாமாக்கள், இலங்கை அரசுக்கும் மேற்கின் ஊடாக உதவுவதையே ஜனநாயகம் என்கின்றனர்.

இப்படி இதற்குள் நின்று காவடி எடுத்தாடும் கூட்டம், இரு கோஸ்டியாக மாறி மோதுகின்றது. குழிபறிப்புகள், சதிகள் முதல் ஆளையாள் சேறு வீசி மிரட்டுகின்ற அனைத்தையும், புலிப் பாரம்பரியத்துடன் செய்வது தான் இன்று சந்திக்கு வருகின்றது. நாடுகடந்த தமிழீழ உறுப்பினராக திட்டமிட்டு புகுந்து கொண்ட புலியின் மறுகோஸ்டி, ஜனநாயகம் பற்றியும் மக்கள் தான் தம்மை தேர்ந்தெடுத்ததாக புலம்புகின்றது. திட்டமிட்டு மறுதரப்பை அழிக்கவும், கவிழ்க்கவும் கோஸ்டி கட்டி தம்மைத்தாம் வெல்ல வைத்து நாடு கடந்த தமிழீழ கோஸ்டிக்குள் சென்றவர்கள், இதையொத்த மறுதரப்புடன் மோதினர். இதன் ஒரு அங்கமாக நாடு கடந்த தமிழீழம் அல்லாத வட்டுக்கோட்டை கோஸ்டியின் உறுப்புரிமையை நாடு கடந்த தமிழீழ கோஸ்டி பறித்துள்ளனர். இப்படி உறுப்புரிமை இழந்து போனவர்கள் உள்ளிட எவரும், என்றும் மக்களின் ஜனநாயகத்துக்காக வாழ்ந்தவர்களுமில்லை, குரல் கொடுத்தவர்களுமில்லை.

வன்னியில் மக்களைப் பலியிடுவதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று கூறி, புலித்தலைமையைப் பாதுகாக்க முற்பட்டவர்கள். இந்த எல்லைக்குள் புலம்பெயர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள். புலத்து மக்களை திரட்ட, வன்னி மக்களை ஆயிரம் ஆயிரமாக பலியிட்ட கொலைகாரர்கள். வன்னி மக்களின் அதிக பிணத்தைக் கோரி பலியெடுப்பை முன்னிறுத்தியவர்கள், அதை ஊக்குவித்து ஐரோப்பிய வீதிகளில் பிண அரசியல் நடத்திய பொறுக்கிகள். இன்றுவரை அதற்காக மனம் வருந்தாத கொலைகாரர்கள்.

இன்று ஜனநாயகம், மக்கள் தம்மை தெரிவு செய்தனர், யாப்பு… என்று விதம் விதமாக கதை சொல்லி வலம் வருகின்றனர். கடந்தகால நிகழ்வுக்கு பொறுப்புச் சொல்லாத, அவைகளை சரியென்று கருதுகின்ற இந்த கூட்டத்தால் என்றும் மக்களுக்கு விடிவும் வராது. இதுதான் இதன் பின்னுள்ள உண்மை.

பி.இரயாகரன்

05.04.2011

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது