Language Selection

மக்கள் தமக்காக தாம் போராடாத வரை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மறுபடியும் புதிய அடக்குமுறையாளர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் எழுச்சியும் கிளர்ச்சியும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதே ஒழிய அந்த மக்களை விடுவிக்கவில்லை. மீண்டும் அதே அரசு இயந்திரம் தான், அதற்கு தலைமைதாங்கிய சில பொம்மைகள் தான் மாறியது.

இதுபோல் லிபியாவில் அமையவில்லை. மாறாக வன்முறை, சிவில் யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஊடாக, ஒரு இரத்தக் களரியை அது எதிர்கொண்டுள்ளது. பல ஆயிரம் லிபியா மக்களின் உயிரை பலிகொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாக மாறியுள்ளது.

லிபியாவில் கடாபி குடும்பம் நடத்தும் சர்வாதிகாரம், நாட்டை கொள்ளையிட்டும், மக்களை ஒடுக்கியும் தான் ஆண்டது. கொள்ளையிட்ட பணத்தை மேற்கத்தைய நாடுகளில் முதலிட்டும், லிபியா எண்ணை வயல்களை மேற்கத்தைய பன்னாட்டு எண்ணைக் கம்பனிகளிடம் தாரை வார்த்தபடி தான், தொடர்ந்து தானும் லிபியா கொள்ளையிட்டது. மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் மேற்கு சேவை செய்த அதேநேரம், தன்னை தக்கவைக்க அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தன்னை கட்டிக் கொள்ள முனைந்தது.

இரத்தம் சிந்தாப் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த கடாபி, தன்னை அரபுலகின் மீட்சியாளனாக காட்டிக்கொள்ள முனைந்தார். எண்ணை வயல்களை தேசியமயமாக்கி, ஏகாதிபத்திய மூலதன நலனின் கையை வைத்தார். இப்படி மேற்கு மூலதனத்துடன் தொடங்கிய முரண்பாடு, அரபுலகின் பேட்டை ரவுடியான இஸ்ரேலுடனான முரண்பாடு, லிபியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் கூர்மையாகியது. கடாபி தன்னை அரபுலகின் மீட்பாளராக காட்ட, மேற்குடன் முட்டி மோதிய சில நடவடிக்கைகளை காட்டி ஏகாதிபத்தியம் தன் சதி வலையை இறுக்கியது. இதன் மூலம் பொருளாதார தடை முதல், அமெரிக்கா கடாபியைக் கொல்ல விமானம் மூலம் குண்டு வீசியது வரை, பல தொடர் நிகழ்வுகள் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த காலத்தில் ஏகாதிபத்தியம் அரங்கேற்றியது.

இதன் பின்னணியில் கடாபிக்கும் ஏகாதிபத்தியக்கும் இடையில் நடந்த பேரங்களைத் தொடர்ந்து, கடாபி ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற நல்ல பிள்ளையானார். கடாபியால் விமானமொன்றுக்கு குண்டு வைத்ததாக கூறிய நிகழ்வுக்கு பல நூறு கோடி டொலரை லிபியா வழங்கியும், தன் எண்ணை வயல்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்ததன் மூலம், ஏகாதிபதிய கொள்ளைக்கு ஏற்ற நல்ல லிபியாவாக மாறியது.

இதைத் தொடர்ந்து அரபுலகுக்கு ஏற்ற இஸ்லாமிய மக்களுக்கு ஏற்ற லிபியா என்ற கடந்தகால விம்ப அரசியல் மூலம், தொடர்ந்து தன்னை தக்கவைக்க கடாபியால் முடியவில்லை. அடக்குமுறை மூலம் மட்டும்தான் ஆளுகின்ற நிலை உருவானது. மேற்கு மூலதனம் லிபிய எண்ணையை நேரடியாக சுரண்டியதால், முன்பு இந்த மக்களுக்கு கிடைத்த எலும்புகளையும் கூட மக்கள் இழந்தனர். கடாபி குடும்பம் தன் பங்குக்கு கொள்ளையிட்ட சொத்தை மேற்கில் குவிக்கத் தொடங்கியதால், மேற்கு கொள்ளையிட்டது போக எஞ்சிய எலும்புகளையும் மக்கள் இழந்தனர். இதனால் அதிருப்த்தியும், எதிர்ப்பும் அதிகரித்தது. இதனால் அடக்குமுறையும் ஓடுக்குமுறையும், மக்களை தனக்குள் முடக்கி தன்னெழுச்சியான கிளர்ச்சிக்குள் வைத்திருந்தது.

இதில் இருந்து மீள அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தொடர்ந்து காட்டிக்கொண்டு தன் ஆட்சியை தக்கவைக்கும் புதிய உத்தி, மேற்குடனான முரண்பாடுகளை உருவாக்கி வந்தது. மேற்கு மூலதனம் சுரண்டுவதில் ஒரு பகுதியை, இந்த சர்வாதிகாரர்களால் அபகரிக்கப்படுவதை மேற்கு மூலதனம் விரும்பவில்லை. அனைத்தையும் தான் அனுபவிக்க விரும்பியது. மக்களுடனான கடாபியின் முரண்பாடு, கூர்மையாகி வந்தது. இதனால் கடாபியின் தலைமையில் தொடர்ந்து மேற்கு மூலதனம் அமைதியாக லிபியாவில் சுரண்டமுடியாது என்று கண்ட நிலையில்தான், கடாபியை மாற்றிவிட ஏகாதிபத்தியம் இன்று தலையிடுகின்றது.

 

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் முன்முயற்சியும் அதன் பாத்திரமும்

பிரஞ்சு அரசும், ஜனாதிபதியும் உள்நாட்டில் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடியில் இருந்து மீளவும், மக்களை திசை திருப்பவும் இந்த ஆக்கிரமிப்புக்கு குரல் கொடுத்து அதற்கு தலைமை தாங்குகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய பிரஞ்சு ஜனாதிபதி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாக மாட்டார் என்ற கணிப்பீடுகளில் இருந்து மீளவும், இந்த ஆக்கிரமிப்பு தமக்கு உதவும் என்று கருதுகின்றனர். இந்த அரசு, ஊழலில் சிக்கியுள்ளதுடன், துனிசியா மக்களின் கிளர்ச்சியை ஒடுக்க இந்த அரசுடன் இருந்த வெளிவிவகார அமைச்சர் முற்பட்டது அம்பலமாகியது. துனிசியா சர்வாதிகாரர்களின் செலவில் உல்லாசமாக இருந்தது உட்பட, இந்த சர்வாதிகாரியை இறுதிவரை பாதுகாக்க முனைந்தது அம்பலமானது. இதையடுத்து ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், எதிர்ப்புகள் அதிகரிக்க புதிய மந்திரி சபையை மாற்றினர்.

இப்படி அரசியல் பித்தலாட்டம் மூலம் தெரிவான இன்றைய புதிய வெளிவிவகார அமைச்சர் அலன்யூப்பே. இவர் மக்கள் பணத்தை கையாடியதற்காக குற்றவாளியாக கண்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். இப்படி குற்றவாளிகள் தான், லிபியா மீதான ஆக்கிரமிப்பு குற்றத்தை தங்கள் சொந்த உள்நாட்டு அரசியல் வங்குரோத்தை ஈடுகட்ட தொடங்கியுள்ளனர்.

மக்களை பாதுகாக்க என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவுடன் சேர்ந்து நடத்துகின்ற ஒரு ஆக்கிரமிப்பாகும்; இது. இலங்கையில் 50000 மக்கள் கொல்லப்பட்ட போது, இந்தியாவின் நலனுடன் சேர்ந்து நின்ற இந்தக் கொலைகார ஏகாதிபத்திய உலகம்தான், லிபியாவில் மக்களைச் சொல்லி ஆட்டம் போடத்தொடங்கியுள்ளது. இது போல் ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம், சதாமுக்கு பிந்தைய தங்கள் ஆக்கிரமிப்பு ஆட்சியில் பல இலட்சம் மக்களை கொன்று குவித்ததுடன், அதை இன்று வரை தொடருகின்றது.

இங்கு மக்களைப் பாதுகாத்தல் என்பது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு விரிக்கும் கம்பளம் தான். உலகளவில் மக்களைக் கொன்று குவித்த, குவிக்கின்ற ஆட்சியாளர்களின் பாதுகாவலராக திகழும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான், தாங்கள் ஆக்கிரமித்த மண்ணில் பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தவர்கள். இப்படி கடந்த காலம் முதல் இன்று வரையான காலனிய மற்றும் ஏகாதிபத்திய வரலாறு எங்கும், பல இலட்சம் மக்களை கொன்று குவித்தவர்கள், குவித்து வருபவர்கள் மக்கள் வே~ம் போடுகின்றனர்.

லிபிய மக்களைப் பாதுகாக்க என்று கூறி, பல ஆயிரம் லிபிய மக்களைக் கொன்று தான், ஏகாதிபத்திய விருப்பங்கள் லிபியாவின் "சுதந்திரமாக" பிரகடனம் செய்யப்படும். இதுதான் ஏகாதிபத்திய வரலாறு. ஏகாதிபத்திய தேர்வுகள் லிபிய மக்களின் தேர்வல்ல, ஏகாதிபத்தியங்கள் பாதுகாக்கும் மூலதனத்தின் சொந்தத் தெரிவாகும். இது லிபிய மக்களின் அடிமைத்தனங்கள் மேலான "சுதந்திரம்". இதைத் தாண்டியதல்ல மூலதனத்தின் உலக ஒழுங்குக்கு உட்பட்ட "ஜனநாயகம்".

 

பி.இரயாகரன்

20.03.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது