Language Selection

யப்பான் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியும், இறுதியில் அணுவுலையில் வெடிப்புகளும் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுக்கும் மொத்தமாக இயற்கை மீது யாரும் குற்றஞ்சாட்டி விட முடியாது. அந்த உரிமை உனக்குக் கிடையாது. ஏனென்றால் நீ இயற்கையுடன் இ;ணங்கி, அதன் போக்கில் வாழ மறுப்பவன். செயற்கை அழிவுகள், இயற்கை அழிவை மீஞ்சியது. இயற்கை இயற்கையாகத்தான் இயங்குகின்றது. இதற்கு இணங்கி அதன் போக்கில்தான் மனிதன் வாழ முடியும். இதை மறுத்துத்தான், உன் உணர்வை ஆட்டிப்படைக்கும் மூலதனம் இயங்குகின்றது. இதற்கு ஏற்பவே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இயற்கையின் போக்கை மீறிய இயற்கை அழிப்பை, மனிதன் இயற்கை மேல் செய்கின்றான். ஒவ்வொரு இயற்கை அழிவிலும், மனிதன் ஒரு சமூக உயிரி என்ற அடிப்படையை, மூலதனம் மறுத்துத்தான் மனிதர்களின் வாழ்வை நரகமாக்குகின்றனர்.

அறிவு, விஞ்ஞானம் தொழில் நுட்பம் சார்ந்த இயற்கை மீதான எந்த மனிதமுயற்சியிலும் அதன் பின்விளைவை அல்லது அதன் இயல்பில் இருந்து அதைக் கட்டுப்படுத்த முடியாத பயன்பாடு என்பது, மூலதனத்தின் இலாப வெறிதான். இது அறிவல்ல, நாசகார அழிவுசார் அறிவு. மனிதனின் வாழ்வை இலகுபடுத்துகின்ற இயற்கை மீதான எந்த அறிவும், இயற்கைக்கு உட்பட்டதாக கட்டுப்பட்டதாக இருக்கவேண்டும்;. மனிதனின் வாழ்வை நாசமாக்காத, அவன் வாழ்வை மேம்படுத்தும் வண்ணமாக இருக்கவேண்டும். இல்லாதவரை அவை மூலதனத்தின் இலாப வெறிக்கு உட்பட்ட, மனிதகுலத்துக்கு எதிரான ஒன்றாகவே இருக்கின்றது.

யப்பானிய அணுவுலை வெடிப்பையும் இதன் கதிர்வீச்சையும் கட்டுப்படுத்த முடியாத அறிவும், தொழில்நுட்பமும் ஒரு அறிவா!? அது மனிதகுலத்துக்கும், இயற்கையில் சார்ந்து வாழும் உயிர்களுக்கும், இயற்கைக்கும் எதிராகவே உள்ளது. உண்மையில் அதன் விளைவை இயற்கையில் விடுவது என்பது பாரிய குற்றமாகும். ஆம் மூலதனத்தின் இலாபவெறியுடன், விளைவுகளை தெரிந்தே நடத்துகின்ற குற்றமாகும்.

இப்படி விஞ்ஞானமும், அறிவும் இயற்கை சார்ந்ததாக இல்லாதவரை, அவை மனித குலத்துக்கு எதிராகவே எப்போதும் பயணிக்கின்றது. இதில் இருந்து மக்கள் சுயாதீனமாக மீளுமாறு தான், மூலதனத்தின் கொள்கைகள் வழிநடத்துகின்றன. இப்படித்தான் இயற்கை அழிவை மேலும் மூலதனம் கோருகின்றது. மனிதன் ஒரு சமூக உயிரி என்பதை மறுக்கும் மூலதனம் தான், மக்கள் மீளவும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள தடையாகவும் இருக்கின்றது. இயற்கை அழிவின் பின் கூட அந்த மக்களை தொடர்ந்து சுரண்டுவதைத்தான், மூலதனம் தொடர்ந்தும் செய்கின்றது. சுயாதீனத்தை இழந்த அந்த மக்களின் பரிதாப நிலையை தனதாக்கி, மேலும் அடாவடித்தனமாக சுரண்டுகின்றது. ஒவ்வொரு இயற்கை அழிவும், மூலதனத்தின் முன் மனிதனின் சுயாதீனத்தை அழித்துவிடுகின்றது. இதை மீட்டுக் கொடுப்பதல்ல, மூலதனத்தின் கொள்கை. இப்படி இயற்கை அழிவு மூலதனத்துக்கு பொன் முட்டைகளாகின்றது. மனிதன் மூலதனத்தின் இலாப வெறிக்கு ஏற்ற மந்தையாகி அடிமையாகின்றான். இப்படி இயற்கையை சுரண்டி மனிதனை சுரண்டும் பொருளாதாரம் தான், இயற்கை அழிவை செயற்கையில் வலுவுள்ளதாக்குகின்றது.

யப்பான் நிலநடுக்கமும் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்படுத்திய அழிவும், அதன் மேல் அணுவுலை ஏற்படுத்தி வரும் அழிவும், மனிதகுலத்தின் மேலான இயற்கையின் சீற்றமல்ல. மாறாக இது மூலதனத்தின் கொட்டம் தான். மனிதகுலத்தை இது படுகுழியில் தள்ளுகின்றது. ஹெத்தியில் நடந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய இயற்கை அழிவு, அதைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு மீட்சியின்றிக் கிடைக்கும் தொடர் நரக வாழ்க்கை, மூலதனத்தின் வெறியுடன் கூடிய கொட்டமாகும்.

நாட்டையும், மக்களையும் கொள்ளை அடித்தவன், செல்வத்தை குவித்து வைத்துக் கொண்டு, மேலும் குவித்துக்கொண்டு இருப்பவன், எப்படித்தான் இயற்கையின் அழிவுக்கான மீட்சியை அனுமதிப்பான்? இயற்கையின் அழிவை சந்திக்கும் மக்களை, மறுபடியும் அழிக்கின்ற வேலையைத்தான் இந்த உலகை ஆளும் மூலதனச் சித்தாந்தம் செய்கின்றது. இயற்கை அழிப்பதை, செயற்கையிலும் தன் பங்கு செய்கின்றது. மனிதனின் சுயாதீனத்தை மட்டுமல்ல, இயற்கையின் போக்கையும் கூட அது அழிக்கின்றது. இதுதான் உலகை வழிநடத்தும் உலகளாவிய கொள்கையும் கோட்பாடுகளுமாகும்.

இலங்கையில் யுத்தம், சுனாமி அதைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுத்திய பாரிய அழிவு, அதைச் சந்தித்த மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடையாது. கிடைக்கின்ற சோற்றுப் பருக்கைளை தட்டிப்பறித்து தின்கின்ற கும்பல்கள் தான் நாட்டை ஆளுகின்றது. இப்படி அழிவுகளைச் சந்தித்த மக்கள் எப்படி பிச்சையெடுத்தும், தங்கள் மானத்தை இழந்து எப்படி வாழ்கின்றனர் என்பதையும், ஆளும் கூட்டம் எப்படி அதை வழிகாட்டுகின்றனர் என்பதையும் மூடி மறைக்க, அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர். இப்படி இயற்கை அழிவைத் தொடர்ந்து ஏற்படும் செயற்கை அழிவோ படுபயங்கரமானது. இது இலங்கை முதல் யப்பான் வரை, ஒரே பாதையில் தான் பயணிக்கின்றது.

யப்பானின் நில அதிர்வும், சுனாமியும் ஏற்படுத்திய அழிவை மிஞ்கியது, அணுவுலை ஏற்படுத்தியுள்ள அழிவு. அணு மின் பயன்பாடும், அணு ஆயுதமும் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை, யப்பானின் அணுவுலை வெடிப்பு மிகத் தெளிவாக பறைசாற்றியுள்ளது.

சக்தியின் பயன்பாடு என்பது இயற்கையை அனுசரிக்காத வரை, மனிதகுலத்துக்கு எதிராகத்தான் பயணிக்கின்றது. மூலதனத்தின் குவிப்பை மையமாக கொண்ட சக்திப்பயன்பாடு என்ற கொள்கை தான், அணுவுலையாக தீர்வு காண்கின்றது. இதன் விளைவை இயற்கையில் விடுவது என்பது தான், இந்த உலகின் அறிவுசார் மூலதனக் கொள்கையாகி விடுகின்றது.

வரைமுறையற்ற நுகர்வு தான், நுகர முடியாத மக்கள் கூட்டத்தை உருவாக்கின்றது. வரைமுறையற்ற நுகர்வு, தான் அல்லாத மக்களை மேலும் மேலும் அதிகமாக சுரண்டுவதைக் கோருகின்றது. இப்படித்தான் சக்தியின் பயன்படும். மின்சாரம் முதற்கொண்டு மின்சாரம் கொண்டு பயன்படுத்தும் பொருட்கள் வரை, ஓடும் வாகனம் முதல் அனைத்தையும் நுகரும் உயர் மனப்பாங்கு வரை, உருவாக்கியதுதான் இந்த அணுவுலைகள்.

ஒரு ஆடம்பரமான நுகர்வுக்குரிய உலகில், இயற்கை சார்ந்த எந்த சமூக உயிரியல் அறமும் கிடையாது. மனிதம் சார்ந்த, சமூக உணர்வு கிடையாது. ஆக இயற்கையின் அழிவில், இருந்து மனிதனை மீட்பதற்கு பதில், புதைகுழிகளைத்தான் மூலதனம் இயற்கையின் மேல் வெட்டுகின்றது. மனிதனின் குறுகிய அற்பமான தனிமனித உணர்வுகளைத் தூண்டி, அதற்குள் மனிதனை புதைக்கின்றது மூலதனம்;.

அணுவுலை வெடிப்பு இன்றைய உலகில் சக்திப் (மின்சாரம், பெற்றோல்…) பயன்பாடு சரியாகத்தான் மனிதனால் பயன்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இயற்கையை அனுசரிக்காத, அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மூலதனக் கொள்கை இயற்கையை அழித்து கொள்ளையடிக்க மட்டும் தான் வழிகாட்டுகின்றது. இயற்கையை பாதுகாத்து மனிதனை வாழவைக்கவல்ல. இதைத்தான் இன்று யப்பானின் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் மனித அறிவை மட்டுமல்ல உலகளாவிய மூலதனத்தின் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நீ இயற்கையை சார்ந்த, சமூக உயிரியாக மனிதனாக வாழப் போகின்றாயா இல்லையா என்பதைதான் உன் முகத்தில் அறைந்து கேட்டுள்ளது.

பி.இரயாகரன்

18.03.2011

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது