Language Selection

தாங்கள் யார் என்பதை மூடிமறைக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் அரசியலை மூடிமறைக்க முடியாது. தாங்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் நிஜவாழ்வு சார்ந்த அரசியல் முகம் அம்பலமாகிவிடும் என்று கருதுகின்றவர்கள் கூட, புனைபெயரில் தான் ஒளித்துக் கொள்கின்றனர். எதிர்ப்புரட்சி அரசியலின் ஒருபக்கம், இப்படி தன்னை ஓளித்து வைத்துக்கொண்டுதான், மக்களை மற்றொரு வடிவில் ஏய்க்க முடிகின்றது.

ஒரு கருத்தை முன்வைக்கும் நோக்கம் மக்கள் நலன் சாராத வரை, அதைச் சார்ந்து வெளிப்படையாக கருத்தை முன்வைக்;காத வரை, அவை அனைத்தும் மக்களைத் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழவைக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும்.

இந்தவகையில் உலகம் தளுவிய அளவில், மக்கள் விரோதிகள் தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவிடாது தடுக்க, அங்குமிங்குமாக அலையவைக்கும் வண்ணம் கருத்துக்களை உற்பத்திசெய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இந்த வகையில் அரபுலக சர்வாதிகாரிகள், இலங்கை அரசு எல்லாம் வெளிப்படையாகவே கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனர். இந்த வகையில் கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் இன்றைய உலகில் உள்ளது. கட்டுரைகள், ஆய்வுகள், அவதூறுகள் முதல் மக்கள் விரோதிகளின் நல்ல பக்கங்கள் என்று எடுத்துக்காட்ட முனையும் பிரச்சாரங்களைக் கூட, கூலிக்கு மாரடிக்கும் ஒரு உலகத்தில் நாங்கள் வாழ்கின்றோம். இப்படி தொழில் ரீதியான பிரச்சாரங்கள் கூட, இன்று நல்ல வியாபாரமாகிவிட்டது. இங்கு பிரச்சாரம் தான் விளம்பரமாகின்றது. மக்கள் இதன்பால் மந்தையாக்கப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழவைக்கப்படுகின்றனர்.

 

 

இந்த வகையில் இலங்கை அரசாங்கம் புலத்தில் இன்று தனக்காக பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களையும், கூலியாட்களையும் கொண்டு இயங்குகின்றது. இதில் எந்தச் சந்தேகமும் இன்று யாருக்கும் கிடையாது. ஆனால் யார், எந்த வடிவில்;, எங்கே என்பதுதான் வெளிப்படையற்றதாக உள்ளது. இதற்குள் தன்னியல்;பாக, கூலியின்றி அந்தக் கருத்தின்பால் சென்று விட்டவர்களும் உள்ளனர். உண்மையில் மக்கள் சார்புக் கருத்துக்குள், தன் மக்கள் விரோத கருத்தை புகுத்திக்கொண்டும், தன்னை மூடிமறைத்துக் கொண்டும், ஜனநாயகத்தின் துரும்மை தூக்கி நிறுத்திக்கொண்டும், வலதும் இடதுமற்ற பொது வெளியில் தாம் நடுநிலையில் நேர்மையாகயிருப்பதாகக் காட்டிக்கொண்டு தான், அனைத்து எதிர்ப்புரட்சிக் கூறுகளும் பதுங்கிப் பாய்கின்றது

இப்படிக் கட்டுரைகள், ஆய்வுகள் முதல் பின்னோட்டம் போடுவது வரையான பலமுனை பிரச்சாரத்தில் (இலங்கை அரசு) ஈடுபடுகின்றது. மக்கள் விரோத வலதுசாரியத்தை முன்தள்ளும் போது, இடதுசாரியம் கலந்த தந்திர உபாயத்தையும், "நடுநிலை உண்மை" என்று வலதும் இடதுமற்றதாக காட்டியும், விலாங்குத்தனத்துடன் அங்குமிங்குமாக விலகியும், விதவிதமாக தன்னை வெளிப்படுத்துகின்றது. ஆனால் அவர்கள் யார், எங்கே எப்படி தம்மை வெளிப்படுகின்றனர் என்பது தெரியாத வண்ணம் இருப்பதால்தான், இந்தப் பிரச்சாரத்தின் வெற்றியே இங்கு வியாபாரமாகவே விரிவடைந்துள்ளது. நிறுவனங்கள் முதல் கூலிக்கு பலர் இதைச் செய்கின்றனர். இப்படி பலதரப்பு கருத்துக்கள் உற்பத்தியாகின்றது.

இந்த வகையில் இதை இனம் காண முடியாத வண்ணம்தான், எம்மைச் சுற்றிய கருத்துக்கள், பிரச்சாரங்கள், பின்னோட்டங்கள் என அனைத்தும், ஒரு குழம்பிய குட்டையில் இருந்து வெளிப்படுகின்றது.

இதை எந்த வகையில், எப்படி நாம் இனம் காண்பது என்பதைப் புரிந்து கொண்டால் தான், இதை குறைந்தபட்சம் நாம் வேறுபடுத்தி அம்பலப்படுத்தி அதை அணுகமுடியும்.

1. வெளிப்படையாக தங்கள் அரசியல் நோக்கத்தை முன்வைக்காத, அதற்காக பிரச்சாரம் கிளர்ச்சியைச் செய்யாத நோக்கம் என்பது, எப்போதும் சந்தேகத்துக்குரியது. இவர்கள் யார்?, எந்த நோக்கில் இருந்து இதை முன்வைக்கின்றனர் என்ற கேள்வி அடிப்படையானது. இதை கேட்காத, அந்த அடிப்படையில் அணுகாத கருத்துகள், மக்கள் சார்ந்து நின்று அணுகாத போக்கின் மற்றொரு பக்கமாகும்.

2.மக்கள் சார்பான கோட்பாடுகள், விடையங்கள், நிகழ்வுகள் எதிர்த்தரப்பால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அதுபற்றி கருத்தற்ற கூட்டம் சந்தேகத்துக்குரியது. கருத்து சொல்பவர்கள் கருத்துச் சொல்லாத மௌனம், எதிர்ப்புரட்சி கூட்டத்தின் எடுபிடித்தனத்தின் மற்றொரு அரசியல் வெளிப்பாடாகும். அதேபோல் அவர்களுடன் சேர்ந்து நின்று தாக்குதலை நடத்தும் கூட்டமும், இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

3..வலதுசாரியத்தை அரசியலாகக் கொண்டும், "நடுநிலை" பேசிக் கொண்டும் வெளிப்படும் கருத்துக்கள் மக்களுக்கு எதிரானது மட்டுமன்றி, சந்தேகத்துக்குரியவர்கள் இங்கு தான் தம்மை மூடிமறைத்துக் கொள்கின்றனர்.

4. இடதுசாரியத்தின் பெயரில் வலதுசாரியத்தை கொண்டு வரும் அங்காடித்தனங்களுக்குள்ளும், இது தன்னை வெளிப்படுத்துகின்றது. இந்த இடதுசாரிய வலதுசாரியம் சமூகத்தின் முரண்பாட்டை, பிரதான முரண்பாடல்லாத மற்றொரு முரண்பாடாக காட்டுவதாகும்.

உதாரணமாக வறுமையை எடுத்தால், வறுமைக்கு காரணம்

1. அதிக சனத்தொகை 2. உணவு விரையமாவது 3. உற்பத்தி நவீனமாகவில்லை 4. விநியோக முறைமை சரியில்லை 5. ஊழல் 6. திட்டமிடப்படாத குடும்ப, சமூக முறைமை 7. உணவைப் பதுக்கல் 8. திட்டமிடாத உற்பத்தி முறைமை 9. கல்வியின்மை … என்று பல முனையில் காட்டுகின்றனர். இதில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்தைக் காட்டியும், சிலர் சுரண்டலையும் வர்க்க அமைப்பையும் கலக்கியும் காட்டுவர். இதன் மூலம் பிரச்சனையை திசைதிருப்பும், வலதுசாரிய இடது சிந்தனை முறை. இதை பன்முகத்தன்மை கொண்ட இடதுசாரியமாகவும், ஏன் ஜனநாயகமாவும் கூட காட்டிக்கொள்கின்றனர். கட்டுரைகள், ஆய்வுகள் என்று, பலமுனையில் இந்த இடதுசாரிய வே~மிட்டு வலதுசாரியம் களமிறங்குகின்றது. இதுதான் நடைமுறையில் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகளாக களத்தில் இறங்குவது. உண்மையில் வறுமைக்கு காரணம் மனிதனை மனிதன் சுரண்டுவதால் ஏற்படும் வர்க்க சமூக அமைப்புத்தான். இதைச் சுற்றித்தான் மற்றைய அனைத்து காரணிகள் அமைகின்றன. இதை திசைதிருப்பியபடியும், மனிதனை மனிதன் சுரண்டுவது ஜனநாயகம் என்றளவுக்கு, இந்த இடது வலது கோட்பாடு சூட்சுமமாக இயங்குகின்றது.

இப்படித்தான் புளட்டின் கொலைகாரத்தனத்தை, சதிகாரத்தனத்தை எதிர்த்து போராடியவர்கள் மேல், குற்றம் சாட்டுகின்ற, திசைதிருப்புகின்ற வலதுசாரி அரசியலை தேர்ந்தெடுத்து முன்தள்ளுகின்றனர்.

 

தொடரும்

பி.இரயாகரன்

12.03.2011

 

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

2.புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 2


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது