Language Selection

அன்று எந்த அரசியல் நோக்கில் சதிகார புளட் ஒரு பெண்ணை பாலியல் ரீதியான வக்கிரத்துடன், தனது சொந்த அசிங்கங்களுடன் அரங்கேற்றி நடத்திய கூத்தைத்தான், இன்று மீளவும் ஜென்னி அரங்கேற்றுகின்றார். சில பாத்திரங்களை மாற்றி, பல்லியின் பல்லவியுடன் அது அரங்கேறுகின்றது. இவர்கள் அரங்கேற்றும் கூத்தில் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அந்தப் பெண் இன்று ஒரு சாதாரண வாழ்வு வாழ்கின்ற ஒரு அப்பாவி அபலை. சமூகத்தின் பொது உளவியல் அரக்கத்தனத்துக்குள் வாழ்கின்ற ஒரு பெண்ணை, மறுபடியும் ஜென்னி தன் குறுகிய சுயநலனுக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்கியுள்ளார். இதற்கு ஏற்ப தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் தேசம்நெற் பல்லி, அதை நான் இப்ப சொல்லமாட்டேன் என்கின்றார். இப்படி பல்லியோ பொய் புரட்டுகள் மூலம் பல்லவி பாடி, ஒளித்திருந்து அரங்கேற்ற முனைவது வலதுசாரிய சதிதான். இதற்கு பலியாவது, மறுபடியும் அதே பெண்தான். வரலாற்றில் இரண்டாம் முறை, இவர்களால் அப்பெண் குதறப்படுகின்றாள்.

 

இங்கு சகுனி ஆட்டம் போடும் தேசம்நெற் பல்லி, தன்னை மூடிமறைக்க முடியும், ஆனால் தன் அரசியலை என்றும் மூடிமறைக்க முடியாது.

புளட் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் மேல், அதனுடன் உடன்படாது போனவர்கள் மேல் நடத்துகின்ற இழிவான கேவலமான வலதுசாரிய வக்கிரங்கள் தான், பல்லி தனதாக்கி நிற்கும் அரசியலாகும். பாதிக்கப்பட்டவர்கள் மேல் சதியை அடிப்படையாகக் கொண்ட புளட் அராஜகவாதிகளின் தொடர் நடவடிக்கைகளை மீள சரியென்று வாதாடுகின்ற தர்க்கங்கள், குதர்க்கங்கள் அள்ளிவீசப்படுகின்றது. அந்த அமைப்பு பற்றியும், அதன் அறம் பற்றியும் அரசியல் ரீதியான பார்வையின்றி, அதை பிரநிதிநிதித்துவம் செய்து கொண்டு இன்றும் எழுதுகின்றவர்களின் யோக்கியத்தையே இது இன்று எடுத்துக்காட்டுகின்றது.

இந்த புளட் அமைப்பை விட்டு காலத்துக்குகாலம் வெளியேறியவர்கள் (குறிப்பாக தீப்பொறி) அரசியல் ரீதியாக, மக்களுக்காக தொடாந்து நின்று போராட முடியாமல் போனமைக்கான விமர்சனம் மற்றொரு விவாதமாகும். இவர்கள் புளட்டில் இருந்த காலம் கூட விமர்சனத்துக்குரியது தான். ஆனால் இதைக் கடந்தது புளட்டின் வலதுசாரிய அரசியல் அராஜகம். ஜென்னி பல்லி முதற்கொண்டு புளட்டில் வலதுசாரிய அரசியலை பாதுகாக்க, அதற்கு எதிராக போராடியவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டி நீ யோக்கியவானா என்று கேட்கும் குதர்க்கங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றனர்.

குறிப்பாக தீப்பொறி புதியதோர் உலகம் கொடுத்த அரசியல் உள்ளடக்கமும், அது கொடுத்த அரசியல் எதிர்பார்ப்பையும் கடந்து, தீப்பொறி மற்றொரு புலியாக புளட்டாக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றது. தனிநபர்களை கொல்லும் முடிவு முதல் தமது உறுப்பினர் சிங்களப் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்று இனவாதம் பேசுகின்ற வரை, தீப்பொறியின் அரசியல் வங்குரோத்து பற்றி தனியாக ஆராய வேண்டியுள்ளது.

இவை புளட்டின் அராஜகத்துக்கும், அதன் ஈனத்தனமான செயல்களுக்கும் முற்றிலும் வெளியானது. புளட்டில் இருந்து தீப்பொறி உருவாக்கம் ஒரு அரசியல் ரீதியாக வெளிப்படையான போராட்டத்தின் பால் உருவானதல்ல. பலமுனை முரண்பாடு சார்ந்த, மூட்டை பிரித்தவுடன் உருண்டு ஓடியவர்களின் கூட்டணி தான் தீப்பொறி. இது புலியில் இருந்து புளட் உருவான போது எப்படி பலமுகம் கொண்டதோ, அப்படித்தான் தீப்பொறியும். ஒருபுறம் தனிநபர் பயங்கரவாத இனவாத அடிப்படையைக் கொண்ட ஜான் மறுபுறம் மார்க்சியத்தை முன்வைத்த அதேநேரம் ஸ்தாபன ரீதியான ஆளுமையற்ற கேசவன் என்று, இரு எதிர்முனையில் மீளவும் ஒரு புளட்டாக புலியாக தீப்பொறி மாறிச்செல்ல பலர் அதில் இருந்து விலகிக்கொண்டனர்.

இது மற்றொரு வரலாறாக எம்முன் இருக்கின்றது. இன்று ஜென்னி மறுபடியும் முன்தள்ளும் பித்தலாட்டங்களை, தீப்பொறியின் நடத்தைக்குள் வைத்து காட்டமுற்;படுவது அரசியல் ரீதியான திரிபு. புளட்டின் அராஜகம், அதன் சதி அரசியலால் அமைப்பைவிட்டு வெளியேறியவர்கள் மீதான புளட்டின் தொடர் செயற்பாடுகளை, இன்று மீளவும் நியாயப்படுத்த முற்படுவது தான் ஜென்னியின் வலதுசாரிய புனைவாகும்.

தங்களை நியாயப்படுத்த, தன்னைப் பாதுகாக்க மீண்டும் அதே பெண்ணை ஜென்னி வன்முறைக்குள்ளாக்குகின்றார். அந்தப் பெண் எந்த அரசியல் செயல்பாட்டிலும் இல்லாத, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட இன்றைய வாழ்வை கவனத்தில் கொள்ளாத வக்கிரம். அன்று இதை அரங்கேற்றியவர்கள், மறுபடியும் சில மாற்றத்துடன் அங்கேற்றுகின்ற கேவலத்தை ஜென்னி செய்கின்றார். ஆம் மறுபடியும் கடந்தகால தன் அரசியல் எதிரிகள் மீது, அதே அரசியல் காழ்ப்புடன் இதை மீளவும் பயன்படுத்தியுள்ளார். இன்றும் அவரின் அரசியல் வலதுசாரியம் தான். ஆம் இங்கு நிச்சயமாக, இது அரசியல் ரீதியானது. இந்த வகையில் தான் பல்லி என்ற பெயரில் உள்ள வலதுசாரிய லும்பன், இடதுசாரி அரசியலை தாக்க உண்மையான சில தகவலை சுற்றி பொய்களையும் புரட்டுகளையும் இட்டுக்கட்டி பொய்கள் மூலம் சகுனியாட்டம் சதி செய்கின்றார்.

இங்கு வலதுசாரிய வக்கிரங்களை பாதுகாக்க, அன்றைய வலதுசாரியத்துக்கு எதிரான இடதுசாரியத்தை சாட்டமுனைவது தான் இதன் அரசியல் சாரமாகும். இன்று இலங்கை அரசாங்கம் முதல் இந்தியா உலகம் வரை விரும்புவது, இடதுசாரியத்துக்கு எதிரான வலதுசாரியத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பார்வைதான். எல்லா விடையங்கள் மீதும் இதைக் கோருகின்றது வலதுசாரியம். இந்த வகையில் தான் தேசம்நெற், பல்லி, ஜென்னி என்று பலர் களத்தில் இறங்கி, தங்கள் வலதுசாரியத்துக்கு ஏற்ற வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதைத் தாண்டி மக்கள் அரசியல் சார்ந்த எந்த சமூக நோக்கமும் இந்தக் கும்பலிடம் கிடையாது.

இந்த வகையில் தான் ஜென்னியின் புனைவும், பல்லியின் பல்லவியும் ஓரே திசையில் பயணிப்பது, உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கல்ல. மாறாக அதைப் புதைப்பதுதான். புளட்டின் அராஜகத்தை மூடிமறைத்து, குற்றச்சாட்டை அதற்கு எதிராக போராடியவர்கள் மேல் சுமத்துகின்றனர். வேடிக்கையான வலதுசாரிய அரசியல் கூத்து.

அன்று எந்த அரசியல் நோக்கில் புளட் இந்த பாலியல் விவகாரத்தை உருவாக்கி நடத்தியதோ, அதே அரசியல் நோக்கில் தான் அதனை மீண்டும் கையில் எடுத்து ஜென்னி, சில திருத்தங்களுடன் புனைகின்றார். பல்லியோ தன்னிடம் ஆதாரம் உண்டு, ஆனால் இப்ப வைக்கமாட்டேன், சொல்ல மாட்டேன் என்று பல்லவி பாடி சகுனி ஆட்டத்தை அரங்கேற்றுகின்றனர். இப்படி இங்கு அதே பெண், மீண்டும் பலியிடப்படுகின்றாள். எதற்காக தங்கள் வலதுசாரிய அரசியலை நிலை நிறுத்தத்தான். வேறு எந்த சமூக நோக்கமும் இங்கு கிடையாது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

10.03.2011

 

1. புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது