Language Selection

புலியைப் போல் தான் புளட்டும். புளட் உள்ளியக்கப் படுகொலையில் புகழ்பெற்றது. அதை அன்று முன்னின்று செய்த கூட்டம், இன்றும் அதை நியாயப்படுத்த களமிறங்குகின்றனர். 25 வருடங்களுக்கு முன் இதை எதிர்த்துப் போராடி வெளியேறியவர்களை மீண்டும் குற்றவாளியாக்கியபடி, 25 வருடங்களின் பின் அதே வக்கிரத்துடன் தம்மை மூடிமறைத்தும் நியாயப்படுத்தியும் வக்கிரமாகவே வாந்தியெடுக்கின்றனர்.

அன்றைய சதிகாரர்கள், கொலைகாரர்கள் பிரதிநிதியான ஜென்னி தேசம்நெற்றில், தாளம் போடுகின்றார். அன்றைய தங்கள் சதிகள் தான் உண்மையானவை நியாயமானவை என்று, மீளவும் கூறுகின்ற வரலாற்றுப் புரட்டை மூடிமறைத்தபடி முன்வைக்கின்றனர்.

தனிநபர்கள் தங்களை நியாயப்படுத்தியும், சிலரைப் பாதுகாத்தும் சொல்லுகின்ற கதைகளுக்கு அப்பால், புளட் என்னவாக இருந்தது? இது ஒரு மக்கள் இயக்கமா? இடதுசாரிய இயக்கமா? இல்லை. வலதுசாரிய பாசிச இயக்கம்;. புலிக்கு நிகரானது.  இதைத்தான் தனிநபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இங்குதான் எதிரும் புதிருமான போராட்டங்கள் நடந்தன. இது தான் வரலாறு.

புளட் ஒன்றும் மக்கள் சார்பான விடுதலையியக்கமல்ல. புலியைப்போல் தான் அதுவும் ஒரு மக்கள் விரோத இயக்கமாகும்;. வலதுசாரிய பாசிச இயக்கமாகும். அதனிடம் ஜனநாயகத்தின் கூறுகள் எதுவும் இருக்கவில்லை. மக்களை ஏய்க்க புலியைப் போல் மார்க்சியம் இடதுசாரியத்தை அதுவும் பேசியது. புலியில் இருந்து பிரிந்ததால் மார்க்சியம் இடதுசாரியம் அமைப்பின் உள், ஒரு அரசியல் சக்தியாக நீடித்தது. கூட்டணியில் இருந்து வந்த வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கொண்ட கலவையாக உருவான அமைப்பு, இனவிடுதலை ஊடாக வளர்ந்த வலதுசாரியத்தின் ஆதிக்கம் அதற்குள் கோலோச்சியது.

மக்களுக்கு எதிரான வலதுசாரியப் போக்கு அதன் பொது நடைமுறையாக, உள் இயக்க முரண்பாடுகள் கூர்மையாகின. அமைப்பில் ஜனநாயகம் இன்மையால் முரண்பாடுகளுக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்பட்டது. தனது உறுப்பினர்களை சித்திரவதை செய்தும், படுகொலைகளை செய்தும் தான், அது ஒரு அமைப்பாக நீடித்தது. அப்படிப்பட்ட அமைப்பில் இதை நியாயப்படுத்தியும், இதை முன்னின்றும் செய்த தனிநபர்களின் பாத்திரம் சார்ந்த நடத்தைகளை மூடிமறைத்து நியாயப்படுத்துகின்ற கூத்துத்தான் ஜென்னி இன்று தேசம்நெற்றில் அரங்கேற்றும் நாடகமாகும்;. அரசியலில் வலதுசாரிய எதிர்ப்புரட்சிக் கும்பல் மட்டும்தான், இதற்கு கும்மியடிக்கின்றது. 

தாங்கள் சதி செய்தும், கொலை செய்தும் நடத்திய வக்கிரங்களை நியாயப்படுத்துகின்ற, தங்களுடன் கூடிநின்ற கூட்டத்தை பாதுகாக்கின்ற அசிங்கத்தை, ஜென்னி 25 வருடம் கழித்து மறுபடியும் செய்கின்றார். கொலைவெறியுடன் அலைந்த அன்றைய புளட்டை அப்பாவிகளாகவும், தீப்பொறியை கண்டு புளட் (தாங்கள்) நடுங்கி ஒளித்து வாழ்ந்த அப்பாவி அபலைகளாகவும் கூறுகின்ற புரட்டை கூட்டுச்சதி அனுசரணையுடன் இங்கு முன்வைக்கின்றார். தாங்கள் தீப்பொறியைக் கண்டு அஞ்சி வாழ்ந்ததாக இட்டுக்கட்டி கூறுகின்ற இன்றைய போக்கிலித்தனம், அன்று எப்படிப்பட்ட சதிகார கொலைகார கும்பலாக இவர்கள் ஆட்டம் போட்டு இருப்பார்கள் என்பதை நாம் சொல்லிச் தெரியவேண்டியதில்லை. 

செல்வன் - அகிலன் கொலையைச் செய்தவர்கள் அதை இறந்தவர்கள் மேல் புரட்டி போட்டவர்கள், ரீட்டா விவகாரத்தை அன்றைய சதிப்பாணியில் மீளவும் புனைந்து அவிழ்த்துவிடுகின்றார். இங்கு உயிருடன் இல்லாத செல்வியை துணைக்கு அழைத்து வைத்துக் கொண்டு,  கொலைகாரர்களும் பாலியல் வன்முறைக் குற்றத்தை ஏவியவர்களும் மீண்டும் பவனி வருகின்றனர். இங்கு செல்வியை தங்கள் பங்காளியாக்க முனைகின்ற சதியுடன், நரித்தனத்துடன் அரங்கேற்ற முனையும் சதிக் கூத்தை நாம் இங்கு காண்கின்றோம். இவருடன் தலைமையில் இருந்த குமரன், ஜீவன், நேசன் ஜென்னியின் இந்த கொலைகாரத்தன அவதூறுகளை இன்று மறுக்க, அன்று இவருடன் மகளிர் அமைப்பில் இருந்த செல்வி, நந்தா (சாந்தி), வனிதா (தர்மா) உங்களுக்கு எதிராக, எம்முடன் நின்று போராடினர் என்ற உண்மையை நாம் மறக்கவில்லை. அக்காலத்தில் உங்கள் கொலைகாரத்தனத்துக்கு எதிராக, சதித்தனத்துக்கு எதிராக, நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்று போராடியவர்கள். நாங்கள் தான் மாணவர்களையும் மக்களையும் திரட்டி புலிக்கு எதிராகவும் போராடியவர்கள்.

உங்கள் புரட்டுக்கு எடுததுக்காட்டு  "கண்டிப்பாக எங்களுடன் தளத்தில் ஒன்றாக நின்று மிக கஸ்டப்பட்டு வேலைசெய்த நேசனைப் போன்றோர் செய்திருக்கமாட்டார்கள் என உடனேயே சிந்தித்தோம். அதே நேரம் தீப்பொறி என அரசியல் ஒன்றை செய்ய முற்பட்டவர்களும் இந்தக் கேவலமான வேலையை செய்யச் சாத்தியமில்லை என்றே எண்ணினோம். ஆனால் கண்டிப்பாக இந்த வட்டத்தினருக்குள் திரியும் சில கறுத்த ஆடுகள் செய்ய சாத்தியம் இருந்தது. அந்நேரம் தங்கள் சொந்த பலவீனங்கள், தேவைகளுக்காக கழகத்தை விட்டு ஓடிய கையோடு சிலர் தீப்பொறிக்குள் பதுங்கிக் கொண்டதும் தெரிகின்றது. சிலபேருக்கு குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே வாழ்க்கைதானே. சிலபேர் கழகத்தில் இருப்பதாக சொல்லிக்கொண்டு கழகத்திலிருந்து விலகியவர்களுக்கு செய்திகொடுத்து விடயங்களை பூதாகரமாக்கி குளிர் காய்கின்றவர்களும் இருந்தனர். இப்படி சிலபேரின் அனுசரணையுடன் இந்த கேவலமான கீழ்த்தரமான நிகழ்வு திட்டமிடப்பட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று அழுத்திச் சொல்பவர்களின் பின்னால் சில விடயங்களைத் தேடினால் சில உண்மைகளை கண்டறியலாம்" என்கின்றார் ஜென்னி.

ரீட்டாவிடம் இருந்து ஜென்னி பெற்ற இந்த தகவல் தான், இந்த விவகாரத்தின் பின்னான முழுமையான  உள்ளடக்கம். இதில் "நேசனைப் போன்றோர் செய்திருக்கமாட்டார்கள்" என்று இன்று கூறும் ஜென்னி, இதைச் செய்தது நேசனும் விபுலும் தான் என்று அன்று சொன்னது ஏன்? அன்று இதற்காக நேசன், விபுலை நீங்கள் தேடியலைந்தது எதற்காக? விபுலையும், சுரேனையும், இடியமினையும் கைது செய்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது ஏன்? மக்கள் உங்களுக்கு எதிராக போராடியது ஏன்?  அன்றைய ஜென்னியின் கூற்றிலும், இன்றைய கூற்றிலும் எது உண்மை என்ற தர்க்கம் கடந்து, ஜென்னியால் மூடிமறைத்த மற்றொரு உண்மை உண்டு என்பது தான் இங்கு உள்ள உண்மையாகும்.

தொடரும்

பி.இரயாகரன்
08.03.2011 


 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது