Language Selection

எல்லையைத் தாண்டிச் செல்வது எல்லை தெரியாததாலும், நீரோட்டத்தினாலும் தான் என்ற தர்க்கத்தை முன்தள்ளியவர்கள், விரித்த வலையை இழுத்துச்செல்லுதல் இந்தியாவில் நடப்பதுதான் என்று மற்றொரு தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர்.

உண்மையில் இதன் பின்னுள்ள பல வர்க்க சமூகக் கூறுகளை, இந்தத் தவறான தர்க்கங்கள் மூலம் தவிர்த்துச் செல்ல விரும்புகின்றனர். இதுவே தவறான அரசியலாக மாறுகின்றது.

1. வலையை விரித்து வைத்து மீன்பிடிக்கும் மீனவனுக்கும், வலையை இழுத்துச் செல்லும் மீனவனுக்கும் உள்ள அடிப்படையான வர்க்க முரண்பாட்டை, முதலில் இனம் காணத் தவறுகின்றனர். இது இரண்டு வர்க்கங்கள் கையாளும், வேறுபட்ட மீன்பிடி முறைமையுமாகும்.

2. இலங்கை மீன்பிடியில் மீன்வலையை இழுத்துச் செல்லும் ரோலர் வகைகள் உள்ளிட்ட மீன்பிடி முறைமை தடை செய்யப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வலையை விரித்து வைக்கும் மீன்பிடி முறைமையையே கையாளுகின்றனர். ஆயிரக்கணக்கில் உட்புகும் இந்திய ரோலர்கள், விரித்த வலைகளை இழுத்து செல்லும் மீன்பிடி மூலம், இலங்கை மீனவர்களின் வலைகளை அழித்துச் செல்லுகின்றனர். திரும்பி வரும்போது வள்ளத்தில் பிடித்த மீனின் பாரத்துக்கு ஏற்ப வள்ளம் கடல்நீரில் தாழப்பதிகின்ற போது, விரித்து வைத்த வலைகளை வள்ளமும் வெட்டியபடியும் திரும்புகின்றது. இப்படி இலங்கை மீனவர்களின் மீன்பிடி முறைமைக்கு எதிரான மற்றொரு மீன்பிடி முறைமை. இதனால் கூட, ஓரே கடலில் இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க முடியாது. இதுவும் கூட அடிப்படையான முரண்பாடு. இது இரண்டு வர்க்கங்கள் கையாளும் மீன்பிடி முறைமைசார் முரண்பாடு கூட. இலங்கைக் கடலில் விரித்து வைத்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. விரித்துவைத்து இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நாங்களும், இலங்கை மீனவர்களும் எதிர்க்கவில்லை.

 

 

3. விரித்து வைத்து மீன்பிடிக்கும் முறைமை, கடலின் வௌ;வேறு ஆழத்தில் உள்ள மீன்களை தெரிவு செய்து வலைவிரிக்கும் முறைமையும் கூட. இது கடலின் இயற்கை வளத்தையும், உயிரினத் தொகுதியையும் கூட பாதுகாக்கின்ற, சுற்றுச்சூழல் சார்பானது. இதற்கு மாறானது, இழுத்துச் செல்லும் ரோலர் வகை மீன்பிடிமுறைமை. இது கடலில் உள்ள அனைத்தையும் விராண்டி அள்ளி அழிக்கின்ற, இயற்கைக்கு எதிரான மீன்பிடி முறைமை. இந்த வகையில் படுகொலைக்கு எதிரான போராட்டம், இயற்கையை அழிப்பதை ஆதரிக்கின்ற வரையறையை உள்ளடக்கியும் வெளிப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் சார்ந்துதான் இலங்கை மீனவர்களின் சரியான கோரிக்கை அமைகின்றது. இந்தவகை மீன்பிடியை நிறுத்தக் கோருகின்றனர். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது, இந்த வகையான மீன்பிடியை செய்யத்தான். இந்தியக் கரையில் விரித்து வைத்து மீன்பிடி செய்யும் மீனவர்கள் இதை எதிர்ப்பதால், இலங்கை மீனவர்களை சுரண்டி அழிக்க வருகின்றனர். இலங்கை மீனவர்களின் இந்தக் கோரிக்கையை, இந்திய மீனவர்கள் ஏற்றால் இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடிக்க முடியும். இதை இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் ஏற்றால், இலங்கை மார்க்சிய லெனினியவாதிகள் முரண்பட இதில் எதுவுமில்லை.

இந்தியக்கடலில் விரித்து வைத்த மீன்பிடியை, இழுத்துச் செல்லும் மீன்பிடி மூலம் அழிப்பதற்கு எதிரான இந்திய சிறு மீன்பிடி மீனவர்களின் நிலை, அங்கு மீன்பிடிக்க ரோலரை அனுமதிப்பதில்லை. இதனை மீறும் போது அங்கும் போராட்டம் தான். இது வலைவெட்டு நிகழ்வுகள் அல்ல. இரண்டு வர்க்கங்களின் போராட்டம். எல்லை தெரியாது, நீர் ஓட்டத்தில் செல்லுதல் பற்றியதாக இதைக் குறுக்கிக் காட்டவும் ஆராயவும் நாம் விரும்பவில்லை. அவை விதி விலக்கானவை. இது புரிந்து கொள்ளக் கூடியவை. மீனவர் சமூகம் அதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றது. நாங்களும் தான்.

ரோலர் வகை மீன்பிடி முறைமை, அடிப்படையில் தவறான உள்ளடக்கத்தைக் கொண்டது. இந்த ரோலரும், அதற்கான வலையம் பெருமூலதனத்தைக் கொண்டது. அதாவது வர்க்க ரீதியானது கூட. சுரண்டலையும், மூலதனத்தையும் திரட்டும் அடிப்படையிலானது. இந்த மீன்பிடியில் உள்ள நோக்கம், மூலதனத்தைக் குவிப்பதுதான்.

இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள், இந்த ரோலரையும், இழுத்துச்செல்லும் மீன்பிடி முறைமையையும் தடைசெய்யவும், அதில் கூலிக்கு மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்யும்படி கோரி போராடுது அவசியமானது. இதை புரிந்து கொள்ள திருப்பூர் சாயப்பட்டறை கழிவு சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிரான போராட்டம் ஆலையை முடக்கின்ற, மூடுகின்ற அதேநேரம், அந்த ஆலைத் தொழிலாளர்கள் வாழ்வை பாதுகாக்கின்ற வகையில் போராட்டத்தை ஓருங்கிணைக்கின்ற அதே உத்திதான் இங்கும் அவசியம்.

மீனவர் படுகொலைக்கு எதிரான சரியான போராட்டம், இலங்கை மீனவர்களின் கோரிக்கையை மறுப்பதாக அமைந்துவிடக் கூடாது. இலங்கை மீனவர்கள் கோருவது ரோலரையும் அது இழுத்துச்செல்லும் மீன்பிடி முறையையும் இலங்கையில் செய்ய வேண்டாம் என்றுதான். மற்றும்படி மீன்பிடிக்க வேண்டாம் என்று அவர்கள் சொல்லவில்லை. நாங்களும் சொல்லவில்லை.

இந்தியாவில் மடி வலை தடைசெய்திருக்கின்றது என்ற சொல்வதல்ல இங்கு விவகாரம். ரோலர் மூலம் இழுத்துச் செல்லும் மீன்வலை கொண்ட மீன்பிடி மூலம் தான், ஆயிரக்கணக்கில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் புகுகின்றனர். இது தான் இலங்கை மீனவர்களின் பிரச்சனை. இதைப் புரிய மறுப்பது ஏன்? இதை விதண்டாவாதம் செய்வது ஏன்?

இதனால் இந்திய மீனவர்கள் படுகொலை என்பது பிரச்சனையல்ல என்று அர்த்தமல்ல. இதுபோல் பன்நாட்டு மீன்பிடி, மற்றும் கடல் வளத்தை நாசமாக்கி கொள்ளையடிக்க (உதாரணமாக எண்ணை அகழ்வு) புகுகின்ற மூலதனங்கள் பிரச்சனை இல்லை என்று அர்த்தமல்ல. இதுவல்ல இங்கு விவாதம்.

இலங்கை மீனவர்கள் உடனடியாக எதிர்கொள்வது, இந்திய ரோலர்கள் இழுத்துச் செல்லும் மீன்பிடி மூலம் மீன்பிடிப்பது தான். இதை நாம் முன்னிறுத்துவதால், இலங்கையின் இறையாண்மையை முன்னிறுத்துவதாக கூறுவது அபத்தம். இலங்கை மீனவர்கள் உள்ளிட நாங்களும் கூறுவதும் கோருவதும் என்ன? ரோலரை பயன்படுத்தி மீன்பிடிப்பதையும், இழுத்துச்செல்லும் மீன்பிடியை நிறுத்தும்படியும். இதுவல்லாத மீன்பிடி மூலம் இலங்கையில் இந்திய மீனவர்களும் மீன்;பிடிக்க முடியும் என்பது தான். ஆம் சிங்கள மீனவர்களும் தான். ஈழ தமிழினவாதிகள் மறுக்கும் இந்த உரிமையும் உள்ளடங்கியது தான்.

இலங்கையில் தடைசெய்த மீன்பிடியை, இந்தியா தடைசெய்யாத முரண்பாட்டையும் உள்ளடக்கியது இது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மறுக்கும், இந்திய மூலதனத்தின் அடாவடித்தனத்தை சார்ந்தது கூட.

இப்படி இருக்க இங்கு ரோலர் வகை மீன்பிடியையும், இழுத்துச் செல்லும் மீன் வலையையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதை எதிர்க்காத மார்க்சிய லெனினியம், இந்திய இறையாண்மை சார்ந்ததாக மாறிவிடுகின்றது. சரி இலங்கை உட்பட பல நாடுகளில் இந்த ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டு இருக்கின்றதே, ஏன்? இந்தியாவில் ஏன் இன்னும் தடை செய்யவில்லை. இதனால் இதன் மீன்பிடித்திறன் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாத நோக்குடன் உள்ளடங்கிய கூறாக மாறிவிடுகின்றது.

இதை மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து தங்கள் கையில் எடுப்பதன் மூலம்தான், மீனவர் சமூகத்தையும் மக்களையும் வழிநடத்த முடியும். இதுதான் இலங்கை மார்க்சிய லெனினிய வாதிகளின் கோரிக்கையாகும்.

 

பி.இரயாகரன்

20.02.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது