Language Selection

அரசியலில் திடீர் ஞானம். இது மீனவர் நலன் சார்ந்ததல்ல. மீனவர்களை ஏமாற்ற முனையும், சந்தர்ப்பவாத திருப்பம். எந்த சுயவிமர்சனமும் அல்லாத அரசியல் மோசடி.

இதை செய்வது வேறுயாருமல்ல, இதையே தொழிலாக செய்யும் இனியொரு புதியதிசையைச் சேர்ந்த நாவலன் தான். திடீரென ஒடுக்கப்பட்ட மீனவர் பக்கம் தான் நிற்பதாக, பச்சைக் கொடி காட்டுகின்றார். அறிவு மற்றவனை ஏமாற்றவும், ஏமாளியாக்கவும் தான் என்று நினைக்கின்ற அரசியல் போக்கிரித்தனம்.

 

1. மீனவர் படுகொலையைக் காட்டி, இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து வாழும் உரிமையை பறிக்க பச்சைக்கொடி காட்டியவர்கள், கடல்வளத்தை சூறையாடுவதை பொய் என்றவர்கள், இன்று தாம் அதை சொல்லாதவர்கள் போன்று பாவனை செய்து ஆய்வு செய்கின்றனர்.

2. நேற்றுவரை அத்துமீறிய மீன்பிடியை வழிதவறிச் சென்ற மீனவர்களாகக் காட்டி சித்தரித்தவர்கள், இன்று அதைச் சுற்றி வளைத்து பம்மி மறுக்கின்றனர்.

3. நேற்று வரை மீன்வளத்தை அழிக்காத தமிழக மீன்பிடியாக (மூலதனத்தின் பின்) காட்டியவர்கள், இன்று மீன்வளம் அழிவது பற்றி பேசுகின்றனர்.

 

4. நேற்றுவரை இலங்கை இந்திய மீனவர்களிடையே எந்த முரண்;பாடும் கிடையாது என்றவர்கள், இன்று ஏதோதோ சொல்லிப் புலம்புகின்றனர்.

5. நேற்றுவரை ஈழத் தமிழினவாத குறுகிய அரசியல் தடத்தில் நின்று கூச்சல் எழுப்பிவர்கள், இன்று பரந்த தடத்தில் நிற்பதாக பாவனை செய்கின்றனர்.

இப்படி எத்தனை எத்தனை. கேபியை மட்டும் எதிரியாகக் காட்டி, கேபி அல்லாத புலிகளுடன் கூத்தாடும் அரசியல் கூத்துக்கள்தான் எத்தனை.

நேற்றைய நிலைக்கு மாறாக இன்று முற்றாக தலைகீழாக முன்வைக்கும் தில்லுமுல்லு அரசியல். நேற்றைய நிலையை சுயவிமர்சனமாக செய்யவில்லை. இதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.

மீனவர் விடையத்தில் கூட, ஒரு சரியான அரசியல் நிலைக்காக மீண்டும் நாங்கள் மட்டும் போராட வேண்டியிருந்தது. இதுதான் அன்றைய நிலைமட்டுமல்ல, இன்றைய நிலையும் கூட. திடீரென மார்க்சியம் பேசுகின்ற கூட்டத்தால், திடீரென புரட்சி செய்வதாக பாசாங்கு செய்யும் கூட்டத்தால், என்றும் மக்களைச் சார்ந்து நின்று போராட முடியாது.

வாழ்வுக்காக மீன்பிடித்த இந்திய மீனவர் சமூகத்தை, மூலதனத்தை குவிப்பதற்காக மீன் பிடித்த கூட்டம் தான் அழித்தது. அதே கூட்டம் தான், இலங்கை மீனவர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. இதை காணவிடாதும், கண்டும்கொள்ளாத ஈழ இனவாதத்துக்குள் படுகொலையைக் காட்டி, மூலதனக் குவிப்புக்காக கூச்சல் எழுப்பினர். இதை மூடிமறைக்க, பன்நாட்டு மீன்பிடியை மட்டும் எதிரியாக காட்டினர். இப்படி இலங்கை அரசையும், பன்நாட்டு மீன்பிடியையும் எதிரியாக காட்டினர். இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதத்துக்கு இதன் மூலம் உதவினர். இந்த இந்திய நலனை, தமிழரின் நலனாகக் காட்டினர். இதுதான் ஈழ தமிழ் தேசிய அரசியலின் அரசியல் உள்ளடக்கமாகும்.

மீன்பிடி மூலம் மீன்வளத்தை அழித்து மூலதனத்தைக் குவித்த கூட்டம் தான், இந்த படுகொலையின் பின்னும் கொழுத்தது. அதை கொழுக்க வைக்கும் கூச்சல்தான், படுகொலைக்கு எதிரான அரசியல் சாரமாக வெளிப்பட்டது. யுத்தம் நடந்த காலம் முதல் தமிழக மீனவர் படுகொலையின் பின்னணியிலும் மூலதனத்தின் நலன்தான், ஈழத்தமிழரின் நலனாக காட்டி முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் படுகொலையைக் காட்டி இலங்கை மீனவர்களின் வாழ்வை அழித்த இந்த கூட்டத்தின் பின்னால், இந்திய மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முதல் மார்க்சியம் பேசும் ஈழ இனவாதிகள் வரை அணிதிரண்டு நின்றனர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வாழ்வுக்காக மீன்பிடித்த சமூகத்தை சார்ந்து நின்று குரல்கள் எழுப்பவில்லை. அதே மூலதன குவிப்பால் இலங்கை மீனவர் சந்தித்த பிரச்சனையை சார்ந்து நின்று, யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்படி தான், ஈழ இனவாதத்தை முன்னிறுத்தி இலங்கை தமிழ் மக்களின் நலன் பற்றி நீலிக் கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில் நாம் மட்டும் முற்றிலும் மாறாக குரல்கொடுத்து சரியான ஒரு நிலையை முன்தள்ளிய நிலையில் நாம் தூற்றப்பட்டோம்; "தமிழின துரோகிகளின் அறிக்கை" என்று வினவுவில் வந்த பின்னோட்டம் தொடங்கி மயூரனின் பேஸ்புக்கில் அருள்எழிலன் திட்டுகின்ற வரை, இனவாத அரசியல் தான் தொடர்ந்து ஆட்டம் போடுகின்றது.

இனியொரு நாவலனோ நேற்றைய நிலைக்கு மாறாக திடீரென அதிரடியான கட்டுரையுடன் மீள் அவதாரம் எடுக்கின்றார். கடந்தகாலத்தில் தொடர்ச்சியான எமது போராட்டத்தை மறுத்து, திடீர் மார்க்சியவாதியாக தன்னைக் காட்டி பிழைக்கும் அனுபவம் தான் மீண்டும் இங்கு கைகொடுக்கின்றது.

இதுதான் இன்றைய ஏகாதிபத்திய அரசியல். நேற்று வரை அரபுலக சர்வாதிகாரத்தை ஜனநாயகமாகக் காட்டி பாதுகாத்த ஏகாதிபத்தியங்கள், அரபு மக்களின் கிளர்ச்சியை அடுத்து அதை ஜனநாயகத்தின் தூணாக திடீரெனக் காட்டி கிளர்ச்சியையே விழுங்கியது போன்றது தான் இதுவும். இதைத்தான் நாவலன் சார்ந்த கூட்டம் தொடர்ந்து செய்கின்றது.

கடந்த காலத்தில் தொடர்ச்சியாக போராடியவர்களை புறந்தள்ள, திடீர் மார்க்சியம் பேசியபடி தான் அனைத்தையும் இவர்கள் அரங்கேற்றினர். இப்படி ஏமாற்றுகின்ற இந்த வித்தைதான், மீனவர் விடையத்திலும். நேற்று வரை வாழ்வுக்காக மீன்பிடித்த மீனவர்களுக்கு எதிராக குறுந்தேசிய இனவாதிகளுடன் நின்றவர்கள், இன்று தலைகீழாக தன்னைக் காட்டி மீனவர்களுடன் நிற்பதாக வேசம் போடுகின்றனர்.

இது கருணாநிதி தலைமையில் கனிமொழி நடத்திய, அதே அரசியல் கூத்துத்தான். இது சூழலுக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்கின்ற பச்சோந்திகளுக்கேயுரிய மூகமுடி வேசம். மக்களை ஏமாற்றுகின்ற மோசடி.

பி.இரயாகரன்

18.02.2011

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது