Language Selection

இதை பற்றி யார் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுகின்றனர். இதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்தவர்கள் யார்? இப்படி தமிழ் சமூகத்தை இருட்டில் வைத்து செய்யும்   அரசியல், பொய்மையும் சூழ்ச்சியும் நிறைந்தது. ஆம் இடதுசாரியம் கூட இதை பேசவில்லை. சந்தர்ப்பவாத அரசியல் மூலம் அரசியல் செய்வதே, புரட்சிகர அரசியல் என்று கருதுகின்ற  எடுகோள்கள் உப்புசப்பு இல்லாத விளக்கங்கள் புளுத்துக் கிடக்கின்றது. எது உண்மையோ அந்த உண்மையைச் சொல்வதன் மூலம் தான், புரட்சிகர அரசியலை உருவாக்க முடியும்.  இதற்கு மாறாக மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலமே ஈழத்து அரசியல் நகர்த்தப்படுகின்றது. மண்ணில், புலத்தில், தமிழகத்தில் எங்கும் இதுதான் அரசியல். தங்கள் குறுகிய அரசியல் மூலம், (இலங்கை) பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்துகின்றனர்.

புலிகளைத் தோற்கடித்ததற்கான காரணத்தை முன்வைக்காத அரசியல் புலி அரசியல் அல்லது அதற்கு ஆதரவான அரசியல். புலிகள் பற்றிய பிரமைகளை தகர்க்காத, அதை  மூடிமறைத்த அரசியல் சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக் கொண்டது. புலி அரசியல் தான் புலியை  தோற்கடித்தது என்பதை சொன்னவர்கள் யார்?, சொல்பவர்கள் யார்? தமிழ் மக்கள் தான் புலியை தோற்கடித்தனர் என்று சொன்னவர்கள் யார்? சொல்பவர்கள் யார்?   

இதைப்பற்றிப் பேசாத அரசியல், சாராம்சத்தில் மூடிமறைத்த புலி அரசியல். இதுவே இடதுசாரியத்தின் பெயரில், இடதுசாரிய பம்மாத்து. இலங்கை அரசும், இந்தியா, சீனா, ஏகாதிபத்தியமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்துதான் புலிகளின் போராட்டத்தை தோற்கடித்தனர் என்று கூறுகின்ற அரசியல் மட்டும் எங்கும் புளுத்துக்கிடக்கின்றது. இதற்குள் தான் புலி அரசியல் வாழ்கின்றது. மானத்தை இழந்த இடதுசாரிகள் இதற்கு கம்பளம் விரித்து, இதற்கு அரோகரா போட்டு கொண்டு உருளுகின்றனர். 

 மொத்தத்தில் வலது முதல் இடது வரை, இதில் இருந்து எதிர்ப்பு அரசியல் முன்தள்ளுகின்றனர். இதன் பின்னணியில் ஏகாதிபத்திய எதிர்ப்புவரை கட்டமைக்கின்ற, பல முரண் கொண்ட குறுந்தேசிய அரசியல் வரை விதவிதமாக முன்தள்ளுகின்றனர். இப்படி நாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை, வலதுகள் முதல் இடதுகள் வரை மூடிமறைக்கின்றனர். இப்படி பொது அரசியல் களம் இருக்க, மக்களைத் தொடர்ந்தும் மந்தைகளாக நிறுத்தி அரசியல் நடத்துகின்றனர்.

இலங்கை அரசு, இந்தியா, சீனா, ஏகாதிபத்தியம், தமிழ்தேசிய போராட்டம் ஆயதப்போராட்டமாக தொடங்க முன்பே உலக மக்களின் பொது எதிரியாக இருந்து வந்துள்ளது. இது ஏதோ நேற்று இன்று திடீரென முளைத்ததல்ல. இப்படியிருக்க புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின், இவைகளை முன்னர் என்றுமே இல்லாத புதிதான ஒன்றாகக் காட்டி கட்டமைக்கின்ற மூடிமறைத்து நடத்தும் சுத்துமாத்து அரசியல் தான், உண்மையில் இந்தப் போராட்டத்தை தோற்கடித்தது.           

 இந்த வகையில் தோற்கடித்த அரசியலை குறிப்பாக வரையறுப்பது அவசியம்; 

1.சர்வதேச அரசியலை நிராகரித்து, குறுந்தேசியம் மூலம் முன் தள்ளிய அரசியல்

2.தமிழ்மக்களை தோற்கடித்து உருவான குறுந் தமிழ்தேசிய அரசியல்

3.புலிகளின் குறுகிய பாசிச மயமான மாபியா புலித்தேசிய அரசியல்

இதுதான் எமது போராட்டத்தைத் தோற்கடித்தது. இது தான் முதலில் மக்களைச் தோற்கடித்தது. எதிரி எம்மை முதலில் தோற்கடிக்கவில்லை. எமது மக்களை நிராகரித்து எம்மை நாம் தோற்கடித்த பின்னணியில் தான் எதிரி வென்றான்.

 எதிரி பயன்படுத்திய ஆயுதங்கள், போர்க்குற்றச் செயல்கள், எதிரியின் ராஜதந்திரங்கள், எமது போராட்டத்தை தோற்கடிக்கவில்லை. நாங்கள் எங்கள் மக்களை தோற்கடித்த பின்னணியில் தான், இவை எல்லாம் அவனுக்கு இலகுவாய் உதவின.

யுத்தத்தின் வெற்றியையும் தோல்விiயும் தீர்மானிக்கின்ற தீர்மானகரமான சக்தி, மக்கள் சக்திதான். மக்களின் மேலான சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளை களையப் போராடாத  போராட்டம், மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளை முன்நின்று செய்கின்ற, அதை பாதுகாக்கின்ற, அதைத் தக்க வைக்கின்ற ஒரு போராட்டமாக மாறி சீரழிகின்றது. இதைத்தான் தமிழ்தேசிய போராட்டத்தின் பெயரில் செய்ததன் மூலம், மக்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் விளைவு மக்கள் குறுந்தேசிய போராட்டத்தில் இருந்து விலக்கியும்,  ஒதுக்கியும், மந்தைகளாக்கப்பட்ட போது, போராட்டத்தையே மக்கள் தோற்கடித்தனர்.          

 இப்படி உண்மைகள் பலவாக இருக்க, இதை விமர்சிக்காத, இதை சுயவிமர்சனம் செய்யாத வலது முதல் இடது வரையான பம்மாத்து அரசியல் தான் இன்று வரை தொடருகின்றது.

இலங்கை அரசு, இந்தியா, சீனா, ஏகாதிபத்தியம் என்று, தம் குறுகிய எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கும் தமிழ் தேசியம், நாம் எப்படி எம்மால் தோற்றோம் என்பதையே மூடிமறைத்து விடுகின்றது. மக்களுக்கு தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றிவிடுகின்றது. இதன் மூலம் பிழைக்க முனைவது தான், இன்று தமிழ் தேசியமாக உள்ளது. வலதுகள் முதல் இடதுசாரியம் வரை, இன்று செய்யும் பம்மாத்து அரசியலும் இதுதான். மக்களுக்கு முன் உண்மைகள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய தமிழ்தேசிய ஈழ அரசியல் உள்ளடக்கம். பொய்மையும் சூழ்ச்சியும் கொண்ட, மூடிமறைத்த பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியல் தான் எங்கும் புளுத்துக்கிடக்கின்றது.     

பி.இரயாகரன்
21.01.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது