Language Selection

மனிதனின் இரக்க உணர்வையும் உதவும் மனித மனப்பாங்கையும் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் கூட்டம் மனித அவலத்தை தனது மூலதனமாக்குகின்றனர். கிழக்கு வெள்ளத்தைக் காட்டி தனிமனிதர்கள், வானொலிகள் முதல் அரச எடுபிடிகள் வரை கொய்யோ முறையோவென்று புலம்பிப் பணம் திரட்டுகின்றனர். வெளிப்படையான கணக்குவழக்கற்ற, அதே நேரத்தில் கடந்த காலத்தில் பணம் திரட்டிய கணக்கு எதையும் வெளிப்படையாக முன்வைக்காதவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களுடன் நிற்காதவர்கள், மக்களின் யுத்த துன்பங்களுக்கு காரணமானவர்களுடன் கூடி நின்றவர்கள், எப்படி பொதுநிதியை திரட்டி அதை மக்களுக்கு நேர்மையாக பயன்படுத்துவார்கள்?

ஒன்றில் நேர்மையற்றவர், மற்றதில் நேர்மையாக இருக்க முடியாது. யாரெல்லாம் மக்களுடன் இல்லையோ, அவர்கள் மக்களுக்கு குழிபறிப்பவர்கள்தான். மக்கள் விரோதமே இன்று ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில், மனித அவலங்கள் வருமானத்துக்குரியதாகின்றது.

 

 

 

கடந்த காலத்தில் யுத்தமும், சுனாமியும் பலரை பணம் பண்ண வைத்தது. மக்களுக்கு உதவுவதாக கூறியும், மக்களின் அவலத்தைக் காட்டியும் கொழுத்த பெருச்சாளிகள் தான், எம்மைச் சுற்றி இன்று அரசியல் நாட்டாமை செய்கின்றனர்.

அரசியல் முதல், உதவுவது வரை, எது உண்மையானது எது போலியானது என்பதை கண்டுபிடிக்க முடியாதவாறு, அனைத்தையும் மூடிமறைத்துக் கொண்டுதான் செயல்படுகின்றனர். இப்படி அனைத்தும் மக்களின் பெயரில், மக்களுக்கு எதிராகவே கையாளப்படுகின்றது.

யுத்தம் நடந்த காலம் முழுக்கவும், சுனாமி காலத்திலும் புலிகள் மூலம் பாரியளவிலான மக்கள் நிதி சூறையாடப்பட்டது. எம் மண்ணில் இருந்து புலம் வரை, பல ஆயிரங்கள் தொடங்கி கோடிக்கணக்கிலான பணத்தை தனிப்பட்ட சிலர் தமதாக்கினர். இதுபோல் யுத்தத்தின் பின் புலிச் சொத்துகள் எதையும், தமிழ் மக்களின் ஒரு பொதுநிதியமாக மாற்றவில்லை. யுத்தின் பின், நாம் முதன்முதலில் இந்த அரசியல் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அவை எல்லாம் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகின. இந்த சொத்தை தக்கவைக்கும் அவர்களின் உள் போராட்டம் தான், புலத்தில் புலித் தேசியமாக நீடிக்கின்றது.

இப்படியிருக்க கிழக்கின் வெள்ளம், இம்முறை புலியல்லாத அரச எடுபிடிகளை வாழ வைக்கின்றது. அரசியல் ரீதியாக மக்கள் விரோதிகளாக நீடிக்கும் இந்தக் கூட்டம், அரசின் ஆதரவுடன் வெள்ள நிவாரணம் கோருகின்றது.

மக்களுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக அரசியல்ரீதியாக செயல்படுவர்கள், என்றும் எப்போதும் எங்கும் நேர்மையாக இருக்கவும் செயல்படவும் முடியாது. அன்று புலிக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்றும் மக்களுக்கு நேர்மையாக செயல்பட முடியாது என்ற உண்மை எப்படியோ அப்படித்தான் இதுவும். கிழக்கு வெள்ள நிவாரணம், மக்கள் விரோத அரச அரசியல் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் வழி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அடுத்த அழிவுக்காக, இந்த அவலத்தை பயன்படுத்துகின்றனர்.

 

மனித அவலத்துக்கு உதவுவது எப்படி?

 

நீ முட்டாளாக இருக்காதே. உனது பணத்துக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாதவரை உதவாதே. உனது மனிதாபிமானம் உண்மையானது என்றால், கொடுக்கும் இடம் மட்டுமல்ல, சேரும் இடத்தையும் கண்காணி. இரண்டு இடத்திலும் மோசடிகள் நடக்கின்றது. இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிடும் உரிமையை உறுதி செய். இதுவல்லாத, இதற்கு உடன்படாத எதற்கும் நீ உதவாதே. அனைத்தையும் வெளிப்படையாக வைக்கக் கோரு.

மனித அவலத்துக்கு நீங்கள் உதவுவதும், அந்த மக்களுக்கு அது கிடைப்பதை நீ உறுதி செய்யாத வரை, உனது உதவி அந்த மக்களுக்கே எதிரானது. வெளிப்படையான, ஆனால் அனைவரும் கண்காணிக்கக் கூடிய வழிமுறைகளை முன்வைக்காத எதற்கும் நிதி உதவி வழங்குவது என்பது முட்டாள்தனமாகும்;.

பொதுவாகவும் வெளிப்படையாகவும் இன்றைய நவீன தொழில் நுட்பம் மூலம், உடனுக்குடன் கண்காணிக்க கூடிய வெளிப்படையான கணக்கு வழக்குகளை வைக்கக் கூடிய வழிமுறைகள் உண்டு. பணம் கொடுப்பவர் அதைக் கண்காணிக்கவும்;, பெறுபவர் யார் என்பதையும், எப்படி யார் மூலம் எதைச் செய்வது என்பதை கண்காணிக்கவும் ஆலோசனை செய்யவும் கூடிய பொது வழிமுறைகளை உருவாக்க முடியும். இதுவற்ற நிதிசேகரிப்பு மோசடியின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

இன்று சில பொது நடைமுறையைக் கொண்ட சில உதாரணங்கள் உண்டு.

 

1. பழைய மாணவர் சங்கங்கள். இவை பணம் தந்தோர் செலவு செய்த விபரங்களை அச்சடித்து பகிரங்கமாக கொடுக்கின்றனர். இவை இணையம் மூலம் அனைவரும் கண்காணிக்கும் வண்ணம் இன்னும் முன்னேறவில்லை.

2. நூலகம் என்ற ஆவணப்பகுதி. இது தன் கணக்கு வழக்குகளை மிகப் பகிரங்கமாக வெளிப்படையாக இணையத்தில் வைத்திருக்கின்றது. பார்க்க : இதுவரையான நிதிப் பங்களிப்புக்கள்

3. சிறுவர்களுக்கான உதவி அமைப்பு. இது பணம் தந்தவர்கள் அதை கண்காணிக்கும் வண்ணம் கணக்கை வெளிப்படையாக வைத்திருக்கின்றது. பர்ர்க்க : நிதி (http://ta.uthawi.net/nithi )

 

இப்படி சில முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால் அதில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் இன்னும் வெளிப்படையாகவும், அதை பயன்படுத்தும் பொதுத்தளம், அது செலவுசெய்யும் முறை பற்றியும், கருத்துகளையும் முடிவுகளையும் மாற்றம் செய்யக் கூடிய வண்ணம் உருவாக்குவது அவசியம். இதன் மூலம் பணம் கொடுப்பவனின் நோக்கம், மோசடி செய்யவிடாத கூட்டுக்கண்காணிப்பை சமூகம் மூலம் செய்ய முடியும்.

இந்தப் பொதுவான பகிரங்கமான வழிமுறைகளை உருவாக்காத இரகசியமான நிதி சேகரிப்பு மோசடிக்காரர்களினதும், தொழில் ரீதியான (பணம் சேர்க்கும் பலர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், இப்படிப் பல வகை) அவர்களின் வியாபாரத்துக்கு உட்பட்ட ஒன்று.

 

மறுதளத்தில் வெளிப்படையாக உதவும் வகையில், நீங்கள் செயல்படலாமே என்ற கோரிக்கை தொடர்பாக.

நீங்கள் ஏன் செய்யக் கூடாது, நாங்கள் ஏன் செய்ய முடியாது ?

புலத்தில் நாங்கள் தனிநபராக சிலர் தோழராக இருந்தவரை, இது போன்ற ஒன்றைச் செய்வதை விரும்பவில்லை. தனிப்பட்ட நாங்கள் மட்டும் சேர்ந்து, கடந்தகாலத்தில் சில உதவிகளை செய்தோம். இதை நாம் எமக்குள் என்ற எல்லைக்குள் சேர்ந்து கூட்டாக செய்து வந்துள்ளோம்.

அண்மையில் நாங்கள் அமைப்பான பின், நூலகத்துக்கான ஒரு நிதியுதவியைச் செய்தோம். அங்கு அதை பார்வையிடலாம். விரைவில் எம்மூடாகவும் பார்வையிடலாம். இதற்கு வெளியில் இதைச் செய்வது பற்றி முதன்முறையாக, கிழக்கு வெள்ளம் ஏற்படுத்திய மனித அவலம் எம்மைச் சிந்திக்க வைத்திருக்கின்றது. எதிர்காலத்தில் இதை எப்படி செய்வது என்று, எம்மை இது சிந்திக்க வைக்கின்றது. எமது அமைப்புத் தோழர்கள் மத்தியில் இது விவாதத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.

பொதுவான ஒன்றை, ஒரு முன்மாதிரியான மிக வெளிப்படையான ஒரு பொதுநடைமுறையுடன் அனைவரும் அதைக் கண்காணிக்கும் வண்ணம் எப்படிச் செய்வது என்ற விவாதம் ஒன்றை, தனிப்பட்ட தோழர்களுக்கு இடையில் தொடக்கியுள்ளோம். அமைப்புரீதியான விவாதத்துக்கும் முடிவுக்கும், உங்கள் கருத்துகளும் அவசியமானது. பண வரவும் செலவும் என அனைத்தும் பொதுத்தளத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதில் இருந்துதான், மக்களின் சொந்தக் கண்காணிப்புடன் தான் உண்மையாக உதவமுடியும் என்றும் கருதுகின்றோம்.

 

பி.இரயாகரன்

15.01.2011


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது