Language Selection

பிள்ளையான், சித்தார்த்தன், கருணா, டக்கிளஸ் முதல் அரசு வரை, ஒரே குரலில் குற்றவாளிகள் எங்களோடு இருக்கவில்லை என்கின்றனர். அவர்களின் அடையாளத்துடன் குற்றவாளிகளாக குற்றவாளிகள் பிடிபட்டவுடன், அவர்கள் தங்களுடன் இருக்கவில்லை என்கின்றனர். இந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பிரபாகரன் சரணடைந்த பின் முல்லைத்தீவில் வைத்து சிறப்பாக குறிப்பாக வதைத்த போது, அவர்கள் அரசுடன் தான் இருந்தனர். இப்படி பல சந்தர்ப்பத்தில் அரசுடன் சேர்ந்து, இவர்கள் செய்யாத குற்றங்களே கிடையாது. மனிதர்களைக் கடத்தி, அதை தொழிலாக செய்தவர்கள் முதல் பெண்ணை கடத்தில் பாலியல் வல்லுறவு செய்து நுகர்வது வரை, இதுவே புலியொழிப்பின் ஒரு அங்கமாகக் கூட மாறியிருந்தது.

 

 

இதுவே புலி ஒழிப்பின் பின்னரும் தொடருகின்றது. இப்படி வடக்கு கிழக்கில் அரசு ஆதரவுடன் நடக்கும் குற்றங்கள்; எவையும், சட்டம் நீதிக்கு உள்ளாவதில்லை. இப்படி எம்மண்ணில் காணாமல் போன, கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, கப்பம்; வசூலிக்கப்பட்ட, பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான சம்பவங்களில், ஒன்று கூட நீதி விசாரணைக்கு உள்ளாகவில்லை. இந்தக் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற வேலையைத்தான், இந்த அரசு செய்கின்றது. ஆம் இந்த அரசு இந்த குற்றக்கும்பலின் தயவில் நாட்டை ஆளுகின்றது.

அரசு ஆதரவு பெற்ற குற்றவாளிகள் கையும்மெய்யுமாக பிடிபடும் போது, அவர்கள் அதன் பூர்வீகத்தை வெளிச்சொல்லாத வண்ணம் பொலிசைச் கொண்டு அவர்களை போட்டுத் தள்ளுகின்றனர். மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா என்று எங்கும், இப்படி பிடிபட்ட குற்றவாளிகள் சிலர் போடப்பட்டனர். இவர்களோ வேறு யாருமல்ல, அரசின் பின் இருந்த தமிழ் கூலிக் குழு உறுப்பினர்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளட் முதல் ஈ.பி.டி.பி வரை, இது போன்ற குற்றங்கள் செய்வதன் மூலம் அரசியல் நடத்தியவர்கள். இந்தக் குற்றங்கள் தான், புலிக்கு எதிரான அன்றைய இவர்களின் அரசியலாகும். புலிஒழிப்பு அரசியல் மூலம், அரச எடுபிடிகளாக நக்கிய இவர்கள், செய்யாத குற்றங்கள் என எதுவும் கிடையாது.

இப்படிப்பட்ட இவர்கள் இன்று கையும்மெய்யுமாக பிடிபடும் போது, அவர் இன்று எமது அமைப்பில் இல்லை அல்லது எமது உறுப்;பினர் அல்ல என்கின்றனர். இந்தக் கூலிக் குழு அமைப்பின் தலைவர்கள், அறிக்கைகள் கூட விடுகின்றனர். பிடிபட்ட சிலரை பொலிசே போட்டுத் தள்ளி, இந்த அறிக்கைவிடும் சிரமத்தைக் கூட அவர்களுக்கு இல்லாதாக்கி விடுகின்றனர்.

கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், லஞ்சம், மிரட்டல் முதல் பாலியல் வல்லுறவு வரை தொடரும் குற்றமும், அதன் அரசியல் சூழலும் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றது. இதன் பின்னணி வெளிவராத வண்ணம், அரசு முதல் இந்த கூலிக் குழுக்கள் வரை கூட்டாக செயலாற்றுகின்றன.

அண்மையில் மன்னாரில் வைத்து மக்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்து பெண் உள்ளிட்ட 5 பேரை இந்த அரசு சட்டவிரோதமாக கடத்தியது. அவர்களை கொழும்பு வரை கொண்டு சென்றது. சர்வதேச நெருக்கடியை தணிக்க, இவர்களை மன்னாரில் வைத்து அரசு விடுவித்த செய்தியும் கூட வெளிவருகின்றது. இந்தக் கடத்தலின் நோக்கம் என்ன என்பது வெளிவராத போதும், வடக்குகிழக்கில் சட்டமும் ஒழுங்கும் இப்படித்தான் இன்று அமுலாகின்றது. அரசுதான் இதைச் செய்கின்றது. இப்படி சட்டவிரோத செயற்பாட்டில் அரசுதான் முதன்மையான குற்றவாளியாக தொடர்ந்தும் செயல்படுகின்றது.

அரசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இந்த நிகழ்வின் பின்னான விடுவிப்பு, இதுபோன்ற சம்வங்களின் பின் அரசு இருப்பது இன்று வெளிப்படையாகியுள்ளது. அரசின் தயவில் இருந்த அனைத்து கூலிக்குழுக்களும், இதைத்தான் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலாக செய்து வந்தனர். ஏன் இன்றும் அதையே செய்கின்றனர்.

இன்று நடக்கின்ற தொடர் நிகழ்வுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலில் வெளிப்படையாக யார் குற்றவாளிகள் என்பதையே இது இனம் காட்டுகின்றது. இதை மூடிமறைக்க அரசால் முடிவதில்லை. இந்தவகையில் இதைத் தனிப்பட்ட குற்றமாக காட்டுவது முதல் கிளிநொச்சி மாணவனை பொய் சொன்னதாக கூறி சிறுவர் நன்னடத்தைப் பள்ளிக்கு அனுப்புவது வரை, இப்படி அனைத்தையும் இந்த அரசுதான் திட்டமிட்டு செய்கின்றது.

குற்றத்தை நடக்கவில்லை என்பதும், பிடிபட்டவர் தமது உறுப்பினர் அல்ல என்பதும், அவை தனிப்பட்ட குற்றம் என்பதும், பிடிபட்டவரை போட்டுத் தள்ளுவதும், நீதிபதிகளை இடம்மாற்றுவதும், பொலிஸ் அதிகாரிகளை இடம்மாற்றுவதும், என்று அரசின் துணையுடன் அனைத்துவிதமான சட்டவிரோத நடத்தைகள் மூலம்தான், இவைகள் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

பிள்ளையான், டக்கிளஸ் முதல் மகிந்தா வரை இந்தக் குற்றங்களுக்கு துணையாகவும் தூணாகவும் நிற்;கவே, கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், லஞ்சம், மிரட்டல் முதல் பாலியல் வல்லுறவுகள் தொடர்ந்து வடக்கு கிழக்கில் அரங்கேறுகின்றது.

புலி முதல் அரசு வரை ஏறி மிதித்த தமிழ் சமூகத்தின் இருப்பும் இயல்பும், தொடர்ந்து அச்சமும் பீதியும் கொண்ட அடிமை வாழ்வாகின்றது. இதில் இருந்து மீள முடியாதவாறு, அந்த மக்கள் மேல் அரசு தொடர்ந்து திணிக்கும் நிகழ்வுகள் தான், இன்று வடக்குகிழக்கில் அரங்கேறுகின்றது. இந்தக் குற்றங்கள் பல இன்று செய்திக்கு கூட வருவதில்லை. ஜனநாயகத்தை வெளிப்படுத்துவது என்பது கூட, தனக்குத்தானே சவக்குழியைத் தோண்டுவதாகும். இதுதான் வடக்கின் வசந்தமும், கிழக்கில் விடியலும் என்றால், முழு இலங்கையிலும் இதுதான் இன்று பாசிசமாக மாறி கோலோச்சுகின்றது.

 

பி.இரயாகரன்

09.01.2011

 

 

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது