Language Selection

பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதாக கூறிய சர்ந்தர்ப்பவாதம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரம் பற்றிய ஒரு புரட்டைப் புகுத்த முனைந்ததைப் பார்த்தோம். முந்தைய மற்றும் பிந்தையதுக்குமான வரலாற்று ஒப்பீட்டைக் கொண்டு, நிலவும் சமூக அமைப்பின் "பொதுப்புத்தி" மூலம் இதனைத் திணிக்கின்றனர். இப்படி ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரத்தை பற்றிய பொது மாயையை "பொதுப்புத்தி" சார்ந்து உருவாக்க முனைகின்றனர். வெள்ளை ஆட்சியாளர்கள் (அன்னியர்), கறுப்பு ஆட்சியாளர்கள் (சுதேசிகள்) என்ற வேறுபட்ட அடையாளம் சார்ந்த "பொதுப்புத்தி" சார்ந்த அடிப்படை வேறுபாட்டைக் காட்டித்தான், சுதந்திரத்தை பற்றிய புரட்டை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் அன்று இந்த உள்ளடக்கத்தில் தான் காலனித்துவவாதிகள் ஆட்சியைக் கொடுக்க, காலனித்துவ எடுபிடிகள் ஆட்சியைப் பெற்றுக் கொண்டனர். இதைத்தான் சுதந்திரம் என்றனர். இப்படி நம்பும் சமூக கண்ணோட்டம் கொண்ட அமைப்புதான், இன்றைய ஆட்சியமைப்பு. இதுபோல் தான் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் திணிக்க பாராளுமன்ற வடிவம் சார்ந்த ஒத்த தன்மையைக்காட்டி நிற்கின்றனர். இப்படி இந்தச் சமூக அமைப்புக்கே உரிய அதன் பொதுப்புத்தியில்தான் 'மே18' தனது அரசியல் புரட்டை அரசியலாக்க முனைகின்றது. இது போல்தான் "மே18" என்ற பெயரும் கூட. பொதுப்புத்தி சார்ந்த அறியாமையை வைத்து, மோசடி அரசியல் செய்வதாகும்.

 

 

 

இந்த வகையில் சமூகப் போக்குகளை அவர்கள் எப்படி திரிக்கின்றனர் என்பதை பார்ப்போம். "நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்து இருந்தன. … புதிதாக உருவாகி வந்த பாட்டாளி வர்க்கமானது தமது உழைப்புச் சக்தியை விற்பதனால் மாத்திரமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்தது. இங்கு உழைப்பும் ஊதியமும் ஒருவித சமத்துவ நிலையில் இருந்ததாக கருதப்பட்டது. இதனால் இவர்களது உழைப்புச் சக்தியை பெறுவதற்கு வன்முறை தேவைப்படவில்லை…."

 

இங்கு "நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்து இருந்தன" என்பதன் மூலம், முதலாளித்துவத்தில் அப்படியல்ல என்ற புரட்டை கொண்ட வர முனைகின்றனர். முதலாளித்துவ பொருளாதாரமும் அரசியலும் பிரிந்திருப்பதாக காட்ட முனைகின்றனர். சாராம்சத்தில் இது முதலாளித்துவத்தில் அரசும் அரசியலும் வேறு என்று, சொல்ல முனைகின்றனர். இப்படி அரசு மற்றும் அரசியல் கூட, முதலாளித்துவ பொருளாதாரத்தில் இருந்து வேறானது என்ற மார்க்சிய அழிப்பு அரசியலை பொதுப்புத்தி மூலம் திணிக்க முனைகின்றனர்.

 

இப்படி முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் இடையில், அரசை நடுநிலையானதாக காட்ட முனைகின்றனர். இந்த வகையில்தான் அரசு பற்றி "அதாவது சுரண்டும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அதே சமயத்தில் சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்." என கூற முடிகின்றது. இப்படி இங்கு அரசு பற்றிய புரட்டை முன்தள்ளுகின்றனர். அரசு ஏதோ ஒரு வகையில் "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்." என்று கூறுவதன் மூலம், அரசை வர்க்கமற்ற தன்மை கொண்டதாக காட்ட முனைகின்றனர். "பிரதிநிதித்துவம்" மற்றும் "திருப்தி செய்தாக வேண்டும்." என்ற சொற்கள் ஊடாக, அரசை வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கமற்ற ஒன்றாக கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றனர்.

 

உண்மையில் இங்கும் இந்த சமூகத்தில் "பொதுப்புத்தி" கண்ணோட்டம் தான் மே 18 காரருக்கு உதவுகின்றது. வர்க்க முரண்பாடுகளை கொண்ட மொத்த சமூக அமைப்பில், சுரண்டலுக்கு ஏற்ப சுரண்டும் வர்க்க அரசு ஆற்றும் பாத்திரத்தை, "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்ற எல்லைக்குள் நிறுத்தி திரிக்கின்றனர். அதாவது தொடர்ந்து சுரண்டவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதையே அரசு செய்கின்றது. அரசின் பாத்திரம் இதுதான். இது சலுகை கொடுத்து அல்லது வன்முறையை ஏவி அல்லது இவ் இரண்டையும் கையாண்டு சுரண்டுவதை உறுதிசெய்கின்றது. இதற்கு வெளியில் அரசு கிடையாது. அரசு என்பது சுரண்டும் வர்க்கம் உருவாக்கிய ஒரு கருவி. இது வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டது. இப்படிப்பட்ட அரசை வர்க்க அமைப்பிற்கு அப்பாற்பட்டதாக காட்ட முனைகின்றனர்.

 

உழைக்கும் வர்க்கம் தாம் வாழ்வதற்குரிய அடிப்படையான வாழ்வாதாரங்களை, காலாகாலமாகப் போராடித்தான் பெறுகின்றனர். "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்பதற்காக, சுரண்டும் வர்க்கமும் அரசும் தானாக எதையும் கொடுப்பதில்லை. வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் தான், அவர்கள் பெறுகின்ற அனைத்துக்குமான அடிப்படையாகும். அரசு இங்கு இதில் நடுநிலை பாத்திரத்தை வகிப்பதில்லை. அரசு இதை பெற்றுக்கொடுப்பதில்லை. அரசு சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை நடத்தும் ஒரு இயந்திரம். சுரண்டும் வர்க்கத்தை ஒன்றிணைத்து, அதை முழுமையாக பாதுகாக்கும் அரசு இயந்திரத்தைக் கொண்டது. தனிப்பட்ட உதிரியான முதலாளிகள் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உறுப்பு. இது சுரண்டப்படும் மக்களை ஒடுக்கும் அரச இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு, தன்னை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இது "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்பது, பொதுப்புத்திமட்டத்திலான பூர்சுவா கண்ணோட்டம் சார்ந்தது. அரசை சுரண்டும் வர்க்கங்கள் இப்படிக் காட்டுவதன் மூலம் தான், அது தன்னை சுரண்டப்படும் வர்க்கத்தில் இருந்து பாதுகாக்கின்றது. சுரண்டும் வர்க்கம் அரசு பற்றியும், அதன் வர்க்கமற்ற நடுநிலை பற்றிய பிரமையை விதைத்து தான், வன்முறையற்ற முறையில் சுரண்ட முடிகின்றது. அரசு பற்றிய மாயை கலையும் போது, அரசின் வேஷம் கூட கலைந்து விடுகின்றது. அரசு பற்றிய "பொதுப்புத்தி" தான், "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்ற ஆளும் வர்க்க சித்தாந்தமாகும்.

 

இந்த அரசியலுக்காகத்தான், அரசாங்கத்துக்கும் அரச இயந்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை திரிக்கின்றது. "புரட்சியாளர்களின் இலக்காக அமைய வேண்டியது அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல." அரசாங்கமல்ல எதிரி என்பது, சாராம்சத்தில் அரசை ஆளும் வர்க்கத்தில் இருந்து விலத்தி வைப்பதாகும். அரசு இயந்திரம் சுரண்டும் வர்க்கத்தின் கருவியாக இருக்கும் அதே தளத்தில், அரசாங்கம் கூட நிரந்தரமானது. இங்கு ஆட்கள் 5 வருடத்துக்கு ஒருதடவை மாறுகின்றனர் என்பதால், அரசாங்கம் மாறிவிடுவதில்லை. அரச இயந்திரத்தின் ஒரு பகுதிதான் அரசாங்கம். அதன் பிரதிநிதிகள் மாறுகின்றனர். அரச இயந்திரத்தின் பிரதிநிதிகளுக்கு கூட, குறித்த ஆயுள் காலம் உண்டு. அவர்கள் அங்கு ஆற்றும் பாத்திரமும், காலமும் தான் வேறுபடுகின்றது.

 

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் 5 வருடத்துக்கு ஒருக்கால் தேர்வு மூலம் மாற்றுவது, அரசின் அதிகாரம் கொண்ட உறுப்பாக இருப்பதால்தான். இதுவின்றி அரச இயந்திரம் இயங்க முடியாது. ஒன்று இன்றி ஒன்று இயங்க முடியாது. சாராம்சத்தில் இருக்க முடியாது. எதிரி "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று கூறுகின்ற அரசியல், அரசு பற்றிய வர்க்கமற்ற அரசு என்ற திரிபை புகுத்துவது தான். நடைமுறையில் நாம் பார்த்தால் இலங்கையில் மகிந்தா அரசல்ல, இலங்கை அரச இயந்திரமே என்று கூறுவதில் போய் முடியும். போராட்டத்தை திசைதிருப்புவதில் தான் இது முடிகின்றது. குறிப்பாக அரசுக்கு எதிரான முதன்மையான போராட்டம் தான், அரசு இயந்திரத்தை தகர்க்கின்றது. மறுதலையாக அல்ல. மேல் கட்டுமானத்திலான போராட்டம் தான் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கின்றது. இங்கு மேல் கட்டுமானத்திலான முதன்மையான போராட்டத்தை மறுத்து, அடிக்கட்டுமானத்தை காட்டுவது வரட்டுவாதம் மூலம் வர்க்கப்போராட்டத்தை சிதைத்தலாகும். இங்கு அரசை வர்க்கத்தில் இருந்து, பிரித்துவிட செய்யும் முயற்சியாகும்.

தொடரும்

 

பி.இரயாகரன்

08.01.2011

 

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1

2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2

3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3

4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4

5. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5

6. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 6

7.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 7


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது