Language Selection

"ஆதரவு" அறிக்கையின் அரசியல் சாரம், புலியெதிர்ப்புத்தான். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இது வேறு ஒரு மக்கள் அரசியலை முன்வைத்துப் பேசவில்லை. இதன் எதிர்மறையான அரசியல் உள்ளடக்கம், அரசு சார்புதான். மாநாட்டுகாரர்கள் இதில் இருந்தும் கூட, விலகி நிற்கின்றனர். மாநாட்டுகாரர்கள் "எதிர்ப்பு ஆதரவு" உள்ளடக்கத்துக்கு வெளியில், கலைகலைக்காக என நிற்கின்றனர். இப்படி மொத்தத்தில் இதற்கு வெளியில் தான் மக்களின் நலன்கள் உள்ளது.

"எதிர்ப்பு" போல் "ஆதரவு"க்கும் கையெழுத்தைக் கோரியவர்களின் அரசியல் நோக்கத்துடன், அறிக்கையின் உள்ளடக்கம் பின்னிப்பிணைந்தது. இங்கு எந்த நடுநிலைதன்மையும் கிடையாது. ஆம் அறிக்கையின் உள்ளடக்கம், அவர்களின் அரசியலுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. புலியின் எதிர்ப்பை மறுக்கின்ற உள்ளடக்கத்தில் பின்னணியில், "ஆதரவு" அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது சாராம்சத்தில் புலியெதிர்ப்பு அரச ஆதரவை, மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனால் தான் அரசு ஆதரவாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.   

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு "எதிர்ப்பு" அறிக்கையை வழிமொழிந்தவர்கள் புலிகளும், இடதுசாரி தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளும் தான். இதற்கு எதிரான ஆதரவு அறிக்கையின் பின்னணியில் செயல்பட்டவர்கள் இலங்கை அரச எடுபிடிகளும், இடதுசாரிய அனார்க்கிசத்தை முன்தள்ளும் அதேநேரம் கலைகலைக்காக நிற்கும் சந்தர்ப்பவாதிகளும் தான்.

"எதிர்ப்பு" அரசியலுக்கு எதிரான "ஆதரவு" அரசியல் மிக நுட்பமானது. அரசு சார்பு பிரிவினர் கையெழுத்திடும் வண்ணம், மிக நுட்பமாக சதித்தனத்துடன் தயாரிக்கப்பட்ட புலியெதிர்ப்பு அரச "ஆதரவு" அறிக்கையாகும்.

புலிகள் இருந்தவரை மண்ணில் அரசும் புலியும் மக்களின் வாழ்வை அடக்கியொடுக்கினர்.  இன்று புலிகள் இல்லாத நிலையில், அரசு மட்டும் அதைச் செய்கின்றது. ஒரு எழுத்தாளரின் கடமை, மக்களைச் சார்ந்து நின்று அதை வெளிப்படுத்துவது தான்.

இந்த மாநாட்டுக்காரர் அன்றும் சரி இன்றும் சரி, மக்களைச் சார்ந்து நின்றவர்கள் அல்ல. கலைகலைக்காக என்ற எல்லைக்குள் தமக்குள் சொறிந்து கொள்பவர்கள். இந்த வகையில், மக்களுடன் நிற்காத எந்த மாநாட்டையும், நாம் ஆதரிக்க முடியாது. மக்களுடன் நிற்காத எதையும், அதேபோல் மக்களை சார்ந்து நின்று எதிர்க்காத எதையும் நாம் ஆதரிக்க முடியாது.

இந்த வகையில் மக்களுடன் சேர்ந்து நின்று தம்மை வெளிப்படுத்தாத எதையும், நாம் எதிர்த்தாக வேண்டும். மறுபக்கத்தில் ஆதாரமற்ற வகையில் இலங்கை அரசு நடத்துவதாக முத்திரை குத்திய புலியின் எதிர்ப்பு அரசியலை, நாம் எதிர்த்தாக வேண்டும். இதுவும் மக்களைச் சார்ந்து நின்று கோரவில்லை.

இப்படி

1. மக்களைச் சார்ந்து நிற்காத எதிர்ப்பு

2. மக்களைச் சார்ந்து நிற்காத ஆதரவு
 
3. மக்களைச் சார்ந்து நிற்காத இலக்கியம் (கலைகலைக்காக)  

இம் மூன்று போக்கையும் நாம் எதிர்க்கின்றோம்;
 
மக்கள் விரோத புலி எதிர்ப்பு அவதூறு அரசியலை முன்னிறுத்திய, மக்கள் விரோத "ஆதரவு" அரசியலையும் நாம் எதிர்த்தாக வேண்டும்;. இதற்குள் அரச ஆதரவாளர்கள் உள்ளடங்கிய பாசிசக் கூத்தும் இங்கு தான் அரங்கேறுகின்றது. கூடிக் கூத்தாடி கும்மியடிக்கின்ற அரசியல் பித்தலாட்டம் "எதிர்ப்பு" "ஆதரவு" "கலைகலைக்காக" என்ற வௌ;வேறு மூன்று மக்கள்விரோத  அரசியல் தளத்தில் அரங்கேறுகின்றது.

கலைகலைக்காக என்ற இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட இடதுசாரிய சந்தர்ப்பவாதிகள், கோட்பாடும் நடைமுறையுமற்ற அனாகிஸ்டுகள், அரச ஆதரவாளர்கள் கொண்ட கூட்டத்தின் சந்தர்ப்பவாத "ஆதரவு", அடிப்படையில் மக்களைச் சார்ந்து நின்று முன்வைக்கவில்லை. மாறாக புலியெதிர்ப்பு அரசியல் தளத்தில் இருந்து, அவை முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

இங்கு "ஆதரவு எதிர்ப்பு" இரு தளத்தில், இந்த மக்கள் விரோத அரசியற் பின்புலத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளமுடியாத எல்லையில் தான் பலர் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்ப்பு ஆதரவு என்ற அரசியலற்ற எதிர்நிலை எல்லைக்குள் இதை அணுகியவர்கள், இதனால் சமூகத்துக்கு என்ன நன்மை என்ற கேள்வியில் இருந்து இதை அணுகவில்லை. பலர் இதை சுயவிமர்சனம் செய்யவும், இந்த சதி அரசியலை புரிந்து கொள்ளவும் இந்த "எதிர்ப்பு ஆதரவு" அரசியல் பலருக்கு வழிகாட்டியுள்ளது.

நாங்கள் தெளிவாக இதன் மேல் கூறுவது என்ன?

1. புலி அரசியல், அரசு ஆதரவாக முத்திரை குத்தி, முடக்குவதை நாம் மறுத்தோம்.

2. புலியெதிப்பு அரசியல் மூலம் மக்கள்விரோத கூறுகளை முன்னிறுத்தி இதை ஆதரிப்பதை நாம் மறுக்கின்றோம்.

3. இலங்கையில் நிலவும் பாசிச சூழலில், பொதுவான நிகழ்ச்சிகள் நடப்பது அவசியமானது. அதை முடக்குவது பாசிசத்துக்கு துணை போவதாகும். 

4. மக்கள் சார்ந்த சக்திகள் தங்கள் அரசியலுக்காக இது போன்ற பொது நிகழ்வுகளில் செயல்படவும், கிளர்ச்சி செய்யவும் வேண்டும். வேறு விதத்தில் அல்ல. 

இந்த வகையில் மக்களைச் சார்ந்து நிற்பவர்கள் புலியை சார்ந்து நின்று மாநாட்டை எதிர்க்க கூடாது. மாறாக இதைத் தனியாகவோ, புலியெதிர்ப்புகாரருடன் சேர்ந்து இதை ஆதரிப்பதல்ல. கலைகலைக்காக என்ற இதன் அரசியலை எதிர்க்கின்றோம் என்பது, சாராம்சத்தில் இதற்குள் நாம் எமது அரசியலுக்காக கிளர்ச்சி செய்வதாகும். இலங்கையில் பாசிசத்தை எதிர்கொள்ள, இதை நாம் எம் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பி.இரயாகரன்
04.01.2011  
                    


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது