செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விந்து வெளிப்படும் இடம் குறித்து அல்லது விந்து உருவாகும் இடம் குறித்து யாருக்கும் தற்காலத்தில் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குரானில் இது சரியாக குரிப்பிடப்படாததில் பெரிய பிழை ஒன்றுமில்லை.

 

தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் அதை சரியானது தான் இன்றைய அறிவியல் தவறாக முடிவு செய்திருக்கிறது என்பவர்களை ஒதுக்கித்தள்ளலாம், ஏனென்றால் அவர்களுக்கு மதமும் தெரியாது அறிவியலும் தெரியாது. ஆனால் தவறான அதை சரியானது என்றும் இன்றைய அறிவியலும் அப்படித்தான் விளக்குகிறது என்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மிடம் திணிக்க விரும்புவது அவர்களின் சலவை செய்யப்பட்ட கருவை.

குரான் 86:7 “முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது” இது தான் அந்த மாபெரும் அறிவியல் உண்மையை தாங்கியுள்ள வசனம். முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட அந்த இடம் எது? அது ஒரு உறுப்பா அல்லது உறுப்புகளின் கூட்டான ஒரு பகுதியா? என்பது பற்றியோ; தெளிவாக விளங்கிக்கொள்ள ஏதுவான பொருளோ அந்த வசனத்தின் சொற்களிடையே ஒன்றுமில்லை. இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், விரைகளின் பயன் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள இயலா காலத்தில் வாழ்ந்த ஒருவரின், இங்கிருந்து இருக்கக்கூடும் எனும் ஊகத்திலான கூற்று அது. முகம்மதின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிவந்த கிரேக்க கண்டுபிடிப்பு(!) அது. அதைத்தவிர வேறெந்த முக்கியத்துவமும் அந்த வசனங்களுக்கு இல்லை. என்றாலும், இப்போது அது பாமரர்களை மயக்குவதற்காக அறிவியலை அணைத்துக்கொண்டிருக்கிறது.

இதை எப்படி அறிவியலோடு பொருத்துகிறார்கள்? விரைப்பையில் விந்து உற்பத்தியானாலும் அது நேரடியாக அங்கிருந்து வெளிப்பட்டு விடாமல் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் வெளித்தள்ளப்படுகிறது. இதை இப்போதைய அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதை ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு  படிப்பறிவில்லாத ஒருவரால் சொல்லியிருக்க முடியுமா? எனவே தான் குரானை இறைவன் தான் இறக்கினான் என கூறுகிறோம் என்கிறார்கள். விந்து விரைப்பையில் உற்பத்தியானாலும் செமினல்வெசிக்கிள்ஸ் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும், ப்ராஸ்டேட் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும் சேர்த்துக்கொண்டு தான் வெளியேறுகிறது. ஆனால் அந்த இரண்டு சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தான் கவனிக்கவேண்டியது.

இந்த வசனத்திற்கு வேறொரு விளக்கமும் கொடுக்கிறார்கள். விந்து வெளிப்படும் விரைப்பு நிலைக்கான தூண்டுதல் முதுகந்தண்டிலிருக்கும் தண்டுவடத்திலிருந்து தான் கிடைக்கிறது எனவே இந்த வசனத்தின் பொருள் அதற்கும் பொருந்துவதால் இதை இறைவனின் வசனம் தான் என அறிவிக்கிறார்கள். ஆனால் விரைப்பு என்பது அனிச்சைச்செயலல்ல என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது மூளைதான். கூடவே மனத்தூண்டுதலும் இதற்கு முக்கியமானது. கொஞ்சம் பழைய மொழிபெயர்ப்புகளில் தான் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் எனும் சொற்களை பயன்படுத்தியிருந்தனர். ஆனால் அது பொருத்தமான சொற்களாக இல்லை என்பதால் புதிய மொழிபெயர்ப்புகளில் முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்று மாற்றிவிட்டார்கள். இப்படி காலத்திற்கு பொருத்தமாக அறிவியல் வளர்ச்சிகளுக்கு பொருத்தமான சொற்களை பயன்படுத்தி பொருள் சொல்லி அதையே அறிவியல் முன்னறிவிப்பாக மேடைகளில் காட்டும் போக்கை அறியாமை என்று அறுதியிட்டுவிட முடியாது.

இந்த வசனத்திற்கான தொடர்விளக்கங்கள் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. என்னதான் வேறு சில சுரப்பிகளையும் சேர்த்துக்கொன்டாலும் விந்து வெளிப்படுவது விரையிலிருந்து தானே. அதை முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் என்றும் கூட  கூறமுடியாதே என்பதால், வெளிப்படும் விந்து திரவத்தில் விரைகளின் பங்கு ஐந்து விழுக்காடிற்கும் குறைவு தான் மீதி 95விழுக்காடிற்கு மேல் பங்களிப்பது செமினல்வெசிக்கிள்ஸ், ப்ராஸ்டேட் சுரப்பிகள் சுரக்கும் திரவம் தான் என்பதால் அந்த வசனம் குறிப்பிடுவது சரியானது தான் என நிறுவ முயல்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்த வசனம் மனிதனின் பிறப்பைப் பற்றியே பேசுகிறது என்பதால் மனிதனை உருவாக்கும் விந்து தான் மையப்படுத்தப்படுகிறது. வெளிப்படும் விந்துத்திரவத்தில் ஐந்து விழுக்காடிற்கும் குறைவான பங்களிப்பை செய்தாலும் விரைதான் முக்கியமான பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. விரை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் இல்லையென்றால் கரு உருவாவது சாத்தியமில்லை. இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக இலக்கில் கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் அந்த சுரப்பிகள் செய்கின்றனவேயன்றி, அந்த சுரப்பிகளால் கருவை உருவாக்க இயலாது. செமினல்வெசிக்கிள்ஸில் இருந்து சுரக்கும் திரவம் உயிரணுக்களின் நீண்ட பயணத்திற்கு தேவையான உந்துவிசையை தருகிறது. ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம் பாதையில் இருக்கும் அமிலத்தன்மையிலிருந்து உயிரணுக்களை பாதுகாப்பதற்கு தேவையான காரத்தன்மையை தருகிறது. என்றாலும், தப்பிப்பிழைக்கும் உயிரணுக்களில் ஏதாவது ஒன்றுதான் பெலோபியன் குழாயில் காத்திருக்கும் சினை முட்டையை துளைக்கிறது. சுலபமாக சொல்லவேண்டுமென்றால், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையின் போது விரை உற்பத்திசெய்யும் உயிரணுக்களை கொண்டுவரும் குழாய் தான் துண்டிக்கப்படுகிறது. மற்ற இரண்டு சுரப்பிகளின் திரவம் வழக்கம்போல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் இந்த அறிவியலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு உகந்ததை மட்டும் அறிவியலாக்குவது தான் மதவாதிகளின் மரபு.

விந்து குறித்த இன்னொரு விந்தையான தகவலும் குரானில் இருக்கிறது. வசனம் 76:2 கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்…… இந்த வசனத்தில் இருக்கும் கலப்பான இந்திரியத்துளி என்பதற்கு ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருளைக் கொள்வதற்கு இந்த வசனத்தில் இடமில்லை. கலப்பான இந்திரியத்துளி என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்து குறிப்பிடுகிறது குரான். அவ்வாறன்றி ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் வேறுவேறு தன்மையிலானவை. உயிரணு, சினை முட்டை என்று அறிவியல் வளர்ந்த பிறகு மதவாதிகள் குறிப்பிட்டாலும், அந்த வசனம் விந்துத் திரவத்தைத் தான் குறிப்பிடுகிறது. அதாவது ஆண்களுக்கு நீர்த்த நிலையில் வெளிப்படும் விந்துவைப் போலவே பெண்களுக்கும் நீர்த்த நிலையில் ஒரு திரவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உயிரணுவை தாங்கி வரும் விந்துவைப் போல் பெண்களுக்கு வெளிப்படும் திரவம் சினை முட்டையை தாங்கி வருவதில்லை. அத்திரவத்தின் பயன் உயவு மட்டும் தான். ஆனால் இந்த அறிவியல் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த முகம்மது அதுவும் ஆண்களிடமிருந்து வெளிப்படுவதைப் போல்தான் என்று எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத் துளி என்று தன குரானைப்படைக்க, இன்று அதை மதவாதிகள் உயிரனுக்கலாகவும் சினை முட்டையாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.

எவ்வளவு தான் முயற்சித்து அறிவியலையும் வேத வசங்களையும் இணைத்து கட்டுப்போடும் வேலையைச் செய்தாலும் அவை ஒட்டுவதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிரெதிரானவை. அறிவியல் எப்போதும் மாறும் தன்மையுடையது. தொடர்ந்த ஆய்வுகளால் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது. ஆனால் வேதமோ எப்போதும் மாறாத, மாறவே கூடாத ஒன்று. இரண்டும் எப்படி ஓட்டும்?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது