Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இருண்டு போகுமா?

  • PDF

விடைக்காய் காத்திருக்கிறோம்
எங்கள் எண்ணங்களும்
வாஞ்சைகளும் மொத்தமாய்
வாடி வதங்கிப்போய் கருகக் காத்துக் கொண்டு இருக்கின்றன

உணவுக்கும் தண்ணீருக்குமே நாங்கள்
வரிசையில் காத்துக்காத்து நின்றதனால்
கால்களிரண்டும் வட்டி சேர்த்துத் தருமாறு வலிகளுடன் கேட்கின்றன
வாடிய பூக்களைப்போன்று வலுவிழந்து போய் இருந்த அந் நாட்கள் 
இங்கே நெருஞ்சி முட்புதர்களாக
நெஞ்சைக்கிழித்து தம் வாஞ்சையை தீர்த்துக் கொள்கின்றன
நம் வாழ்க்கை கட்டுண்டு இருண்டு போகுமா
அன்றில் கடுகதியாய் மீள் சென்று புலர்ந்து போக முடியுமா
விடைதேடிக் காத்திருக்கும் எம்மவர்க்கு
பதில் வருமா
இல்லையெனில் வினாக் குறிதானா!
 
 
கண்மணி
வன்னி அகதி முகாமில் இருந்து
10.01.2010

http://www.psminaiyam.com/?p=847


Last Updated on Thursday, 25 February 2010 10:45