Language Selection

நான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.

89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராணுவத்தினரும் சுமார் 5 இளைஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.

நான் அவர்களைக் கடந்து போகும்போது இந்திய இராணுவத்தினர் எனது தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு என்னிடம் திருப்பித் தந்தனர். சில நிமிடங்களின் பின் 2 இளைஞர்கள் என்னிடம் வந்து மறுபடி தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு திருப்பித் தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். பின்னர் தங்களைத் தொடர்ந்து வரும்படி என்னைப் பணித்தனர்.

 

அவர்கள் உத்தரவிட்டபடி நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்களுடன் இருந்த இந்திய இராணுவத்தினர் நான் அவர்களுடன் வருவது பற்றி எதுவும் கதைக்கவில்லை.

 

இருட்டும் நேரம் நாங்கள் ------------த்திலுள்ள ஈ. என். டி. எல். எவ் முகாமை வந்தடைந்தோம்.

 

இம் முகாமுக்குள் வந்ததும் ஒரு பாயில் இருக்குமாறு நான் பணிக்கப் பட்டேன். எனக்கு பிளேன்ரீ குடிக்கத் தந்தார்கள். இதன் பின்னர் அங்கு வைத்து நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.

 

மறுநாள் காலை சுமார் 10 மணியளவில் ஈ. என். டி. எல். எவ் வைச் சேர்ந்த 4 பேர் வந்து வயர், பெல்ற் போன்றவற்றால் என்னைத் தாக்க ஆரம்பித்தார்கள். இது பிற்பகல் சுமார் 2 மணிவரை நீடித்தது.

 

ஏதாவது இயக்கத்தில் நான் இருக்கிறேனா என்று கேட்டார்கள். நான் ஒரு மாணவன், எந்த ஓர் இயக்கத்துடனும் எனக்குச் சம்பந்தமில்லை என்று பதிலளித்தேன். அவர்கள் எனது பதிலை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் நான் எல். ரி. ரி. ஈ யைச் சேர்ந்தவன் என்று கூறினார்கள்.

 

தொடர்ந்தும் நான் இரும்புப் பைப்பால் தாக்கப்பட்டேன்.

 

மூச்சுத் திணறும்படி தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். இந்த நேரத்தில் பயங்கரமான காயங்கள் என் உடம்பில் இருந்தன. என் கைகள் பின் பக்கமாகக் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்தன.

 

எனது சேட்டையும், காற்சட்டையையும் அகற்றினார்கள். பின்னர் துணிக் குவியலை எனது வாய்க்குள் ஓட்டித் திணித்தார்கள். முகம் முழுவதும் மிளகாய்த் தூளை பூசினார்கள்.

 

பிறகு முகம் குப்புற தரையில் கிடக்குமாறு சொன்னார்கள். அப்படியே செய்தேன்.

 

அதன் பின் தண்ணீர் நிரப்பப்பட்ட பன்ராப் போத்தலை எனது மலவாசலுக்குள் செருக முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை. மறுபடியும் மிகுந்த பலத்துடன் மலவாசலுக்குள் ஓட்டி  வயிற்றுப் பக்கத்திற்குள் ஊடுருவிப் போகக் கூடியதாகச் செலுத்தி விட்டார்கள். நான் பயங்கரமான வேதனையை அனுபவித்தேன்.

 

இதன் பின்னர் சுமார் 6 வான் ரயர்களை எனது பின் பகுதியில் அடுக்கினார்கள். அடுக்கிய ரயர்களின் மேல் சீமெந்துப் பைகளை ஏற்றி வைத்தார்கள்.

 

நான் வலியால் துடித்துக் கொண்டிருந்த போது சுமார் 8 யார் தள்ளி 22 வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் என்னைப் போலவே முகம் குப்புறப் படுக்க வைக்கப்பட்டு அவன் மேல் கொன்கிரீட் கல்லுகள் அடுக்கப் பட்டிருப்பதைக் கண்டேன்.

 

அரை மணித்தியாலமாக நான் இதே நிலைமையிலேயே இருந்தேன்.

பின்னர் சீமெந்துப் பைகளையும் ரயர்களையும் அகற்றினார்கள்.

 

சில நிமிடங்களின் பின் நான் எழுந்திருக்கும்படி கேட்கப்பட்டேன். சாப்பிட 1 கிலோ வாழைப்பழமும், 1 கிளாஸ் பாலும் தந்தார்கள். நான் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தபோது பலவந்தமாக ஊட்டினார்கள்.

 

பின்னர் மலசலகூடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டு முகம் மேலே பார்த்திருக்கத் தக்கதாக படுக்க வைக்கப்பட்டேன். அவர்களில் ஒருவன் எனது வயிற்றில் ஏறித் தொங்கித் தொங்கிக் குதித்தான். சுமார் 15 நிமிடங்கள் இப்படி வயிற்றில் ஏறி நின்று குதித்தான்.

 

பின்னர் என்னை குளியலறைக்குக் கூட்டிச் சென்று என்மீது தண்ணீர் பாய்ச்சினார்கள். இவ்வளவும் செய்து முடிந்த பின் நான் முன்பு போட்டிருந்த காற்சட்டையையும், வேறு ஒரு சேட்டையும் தந்து அணிந்து கொள்ளச் சொன்னார்கள். நான் அணிந்து கொண்டேன். சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் நான் உட்கார வைக்கப்பட்டேன்.

 

அதேநாள் சுமார் 6 மணிக்கு இந்திய இராணுவத்தினர் சிலர் வந்து எனது வயிற்றில் இருந்த போத்தலை எடுக்க முயற்சி செய்தனர். அவர்களால் முடியாமல் போகவே, என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி ஈ. என். டி. எல். எவ்வைச் சேர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரில் ஒருவன் கூறினான்.

 

அவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரும் போது, எனக்குச் செய்த சித்திரவதைகளை யாருக்காவது சொன்னால் என்னைக் கொல்வதுடன், எனது முழுக் குடும்பத்தையும் அழிப்போம் என மிரட்டினார்கள்.

 

கை ஏஸ் வான் ஒன்றில் ஏற்றப்பட்டு நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டேன்.

 

ஆஸ்பத்திரியில் யாரிடமும் அவர்கள் என்னை ஒப்படைக்கவில்லை. பதிலாக என்னை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி முகப்பு வாசலுக்குத் தள்ளிவிட்டு மறைந்துவிட்டார்கள்.

 

என்னைக் கண்ட ஒருவர் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

நான் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன். அறுவைச் சிகிச்சையின் பின் எனது வயிற்றில் இருந்த போத்தல் எடுக்கப்பட்டது.

 

சிகிச்சைக்காக நான் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன்.

 

ஆஸ்பத்திரியில் என்னுடன் எனது தந்தை தங்கியிருந்தார். ஒரு நாள் நடுச்சாமம் அளவில் 15 இந்திய இராணுவத்தினர் வந்து எனது தந்தையைக் கூட்டிச் சென்றார்கள்.

 

அவர் 4 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நடந்த சித்திரவதைகளைப் பற்றி யாருக்காவது சொன்னாரா? என்று கேட்கப்பட்டார்.

 

19 வயது இளைஞன் ஒருவனுக்கு ஈ.என்.டி.எல்.எவ் பாசிசக் கும்பல் செய்த மிருகத்தனமான சித்திரவதைகள் பற்றி அவ் இளைஞனால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்திலிருந்து சேகரித்தவைகளைத் தொகுத்திருக்கிறோம். அந்த இளைஞன், அவனின் குடும்பத்தினர் பாதுகாப்புக் கருதி இளைஞனின் பெயர், கொண்டு செல்லப்பட்ட இடம், சிகிச்சையளிக்கப்பட்ட இடங்கள் போன்ற விபரங்களைத் தவிர்துள்ளோம்.

 

இப்படியான சித்திரவதைகள் இக் கும்பலினால் மட்டுமல்ல இங்குள்ள அனைத்துப் பாசிச இயக்கங்களினாலும் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தப் பாசிசவாதிகளின் மிருகத்தனங்களுக்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்தக் கொரூர நிலையைப் புரிந்து கொண்டு இவற்றுக் கெதிராகச் செயற்பட வேண்டுமென மனிதாபிமானிகள் அனைவரையும் கேட்கிறோம்.

 

இலங்கையிலிருந்து.....

- நமது நிருபர்கள் -

 

நன்றி:- தூண்டில் 23 (1989).

 

thoondil.jpg
(பக்கங்கள் 2-3-4 தொடச்சி 10)


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ