Language Selection

ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! ,
 
தமிழீழத்துக்காகப் போராடுவதென்று தம்பட்டம் அடித்த புலிப்படை நாசகாரிகள்,புலம் பெயர் தேசங்களில் சேர்த்து வைத்த பல பில்லியன்கள் டொலருடன் தமது தலைவருக்கே பாடை கட்டிவிட்டு,இப்போது புலம் பெயர் தேசங்களில் கட்டவுட்"மாவீரர்தின"விழாக்களைச் செய்ய முனையும் தறுவாயில், களத்துப் புலி உதிரிகள் இவர்களது போலி முகங்களைத் திரை கிழிக்கின்றனர்.

 

 

இஃது,புலிப் போராட்டத்தின் போலி முகத்தை நன்றாகவே நம்முன் அம்பலப்படுத்தி வருகிறது-பணத்துக்காகக் கொலை செய்து வந்த ஒரு மாபியாக் குழுவின் கடந்தகால வரலாற்றை இத்தகைய செயல்களின்வழி இனங்காணக் கோருகின்றோம் அன்பார்ந்த மக்களே!!
 
புலிகள் அமைப்பென்பது ஒரு மாபியாக் கூட்டம் என்பதும்,அது ஒரு போதும் தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடவில்லையென்றும் நாம் பல ஆண்டுகளாகப் பேசியும்-உரையாடியும் வந்தோம்.எனினும்,நம்மைத் துரோகிகளெனவும்,எட்டப்பரெனவும் கூறிய புலிப் பினாமிகள், இன்று தமக்குள்ளே சொத்துக்காக அடிபடும்போது, இதுள், யாரு எட்டப்பர்களென நாம் கேட்காமலே நீங்கள் இனங்காண முடியும்.இன்று,மக்களை ஏமாற்றும் அனைத்துத் தமிழ் இயக்கங்களும்,அவர்களது ஆயுதக் குழுக்களும் தமது வருவாய்க்காக மக்களை ஏமாற்றுவதை இனம் காணக் கோருகின்றோம்!புலியாயினும்,புளட்டாயினும்,டக்ளஸ் ஆகினும் அனைவருமே மாபியாக்களே!மக்களுக்காகக் குரல் கொடுக்க இன்று எவருமேயில்லை!உண்மைகளை இனம் காணுவதைத் தவிர எமக்கு எதுவுமே இப்போது சாத்தியமில்லை.
 
எந்தப்பொழுதிலும்,மக்களது நலத்துக்கக் குறுக்கே நின்ற சதிகாரப் புலிகள் கோடிக் கணக்கான மக்கள் சொத்தைத் தமதாக்க"மாவீரர் விழா"என்றும்,நாடுகடந்த தமிழீழம் என்றும் பசப்புகள் செய்து, அப்பாவிப் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை ஏமாற்றும்போது,இத்தகைய மக்கள் விரோதிகளை எவர் தண்டிப்பார்களென நாம் கவலையுறுகிறோம்.
 
 
காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,நேர்மையான புலி விசுவாசிகள் கொதித்து எழுகின்றனர்.நாமோ இத்தகைய புலிகளது நடவடிக்கைகளைச் சர்வதேச நீதியின்பால் தண்டிக்கக் கோருகின்றோம்.
 

பணத்துக்காகப் பலியெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கு நியாயம் கேட்கிறோம்.
 
எமது மக்களை ஒட்ட மொட்டையடித்த இந்தத் தேசத் துரோகிகளை மக்களது சார்பாகக் கண்டித்து, ஆர்ப்பாட்டஞ் செய்து தண்டிக்கக் கோருகிறோம்.
 
பல கோடி டொலர்களது நிதிப் பலத்தோடு, புலம் பெயர் தேசங்களில் நடாத்தப்படும் "மாவீரர்" களியாட்ட நிகழ்வுகளை நிராகரிக்கக் கோருகிறோம்.
 
 
இத்தகைய களியாட்ட நிகழ்வோடு மீளவும், பணம் சேர்க்க முனையும் புலிப்பினாமி வியாபாரிகளை இனம் காணுங்கள் மக்களே!
 
 
இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங் காணுங்கள்.
 
இவர்கள் பேசும் நாடுகடந்த தமிழீழம்-நாடுகடந்த பாராளுமன்றம்,இவர்கள் சொல்லும் தமிழ் ஊடகமெனும் ஜீ.ரீ.வி-ஐ.பீ.சி.வானொலி என்பவையெல்லாம் மக்களது சொத்தைத் தமதாக்கும் முயற்சியில் தமிழின் பெயரால் காயடிக்கும் கயமைக்கு ஏதுவானவை.
 
அன்பார்ந்த தமிழ்பேசும் இலங்கை மக்களே,
 
நீங்கள் புலம் பெயர் தேசங்களில் மாடாய் உழைத்து,உங்கள் உறவுகளின் விடுதலைக்காக இட்ட நிதியை, ஒரு சில புலிப்பினாமிக் குடும்பங்கள் தமது சொத்தாக வைத்து அநுபவிப்பதற்காக விட்டுவிடுவீர்களா?அன்றி, மீளவும் போலித் தமிழீழக் கதையாடல்கள் ஊடாக உங்களை ஏமாற்ற இடங்கொடுப்பீர்களா?
 
இவற்றுக்கு இடம்கொடாதீர்கள் மக்களே!
தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு நீங்கள் எடுப்பார் கைப் பிள்ளைகளா?
தீர்மானியுங்கள் இன்றே!
 
நீங்கள்,மிகவும் மதித்த புலித் தலைவன் பிரபாகரனை, மெல்லச் சிங்கள அரசிடம் சரணடைய வைத்துக் கொன்ற இந்த நாசாகாரப் புலிப் பினாமிகள்,உங்கள் தலைவனுக்கு வீர வணக்கஞ் செய்ய வரும் 27 நவம்பரைப் பயன்படுத்துவதை அநுமதிக்காதீர்கள்.
 
இவர்களை ஐரோப்பிய மண்ணில் அம்பலப்படுத்துங்கள்.
 
இளைஞர்களே,உங்களது நம்பிக்கையை துஷ்பிரேயோகஞ் செய்த புலிக் கயவர்களைப் பூண்டோடு அம்பலப்படுத்த உங்களது அனைத்துச் சக்திகளையும் பயன் படுத்துங்கள்.
 
புலம் பெயர் மண்ணிலுள்ள அனைத்துப் புலிப் பினாமிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
 
இவர்களை நம்பி மேலும் சில்லறைகளையும்,உங்கள் உழைப்பையும் வீணாக்காதீர்கள்.
 
இவர்கள், தமிழ்சமூகத்தின் கடைந்தெடுத்த விரோதிகளென்பதை,புலிகளது இன்னொரு பிரிவான

இராம் போன்றவர்களேஅம்பலப்படுத்துகிறார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் இனம் காணவேண்டிய நேரம் நெருங்குகிறது.
 
புலிகளின் எந்தப் பிரிவும் நாணயமானவர்களில்லை!இதை நாம் உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில்,இதுவரை இவர்கள் எம்மையும் உங்களையும் பிரித்துச் சில்லறைகள் சேர்ப்பதற்காக மக்களைப் பலி கொடுத்ததை நாம் உயிரைக் கொடுத்துத் தினமும் தட்டிக் கேட்டவர்கள்!
 
எனவே,புலிப்பினாமிகளை இனம் காணுங்கள்.இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றிக் கொன்று குவித்த மாபியாக்களே என்பதை அறிவு பூர்வமாக உள்வாங்குங்கள்.இதில் தமிழீழத்தின் பெயரால் மயக்கம் வேண்டாம் அன்பு நெஞ்சங்களே!
 
பணத்துக்காவும்,பதவிக்காகவும் கடந்த முப்பதாண்டுகளாக மக்களை ஒட்ட மொட்டையடித்தும், அவர்களைக் கொன்று குவித்த துரோக அமைப்புக்கு இனிமேலும் ஆதரவை நல்காதீர்கள்!
 
தமிழ்பேசும் மக்களது பெயரில் விடுதலையெனும் பொய்யை மேன்மேலும் கூறும் அனைவரையும் நிராகிரியுங்கள்.
 
இன்றைய சூழலில் சுய தேடலூடாக இவர்களை இனங்கண்டு துரத்தியடியுங்கள்.
 
இலங்கையில் வாடும் அனைத்துத் தமிழ் மக்களது உய்வுக்காகப் புலிகளிடமிருக்கும் அனைத்துச் சொத்துகளையும் பறி முதல் செய்யும் போரைத் துவங்குங்கள்.அதை, வரும் மாவீரர் தினத்திலிருந்து ஆரம்பியுங்கள்!
 
புலிப் போராளிகளது பெயரில் மீளவும், கொள்ளையில் இறங்கும் ஐ.பீ.சீ.-ஜீ.ரீ.வி போன்ற ஊடகங்களையும்,இவர்களால் தூக்கி நிறுத்தப்படும் புலிப்பினாமிகளையும் இனங் காணுங்கள்.இதன் பின்னர் இவர்களை துரத்தி அடிப்பதற்கும்,அவர்கள் கொண்ட சொத்தைப் பறி முதல் செய்வதற்கும் புலம் பெயர் தேசத்தின் சட்டத்துக்குட்பட காரியமாற்றுங்கள்.இதுவே காலவோட்டத்தில் சரியான பாதைகளை உங்களுக்காட்டும்.
 
புலம் பெயர் தேசங்களில்,மாவீரர்கள் பெயரில் அடுத்த வியாபாரத்தைத் தொடரும் அயோக்கியர்களை இனம் காணுங்கள்.
 
புலிப் பினாமிகளது நேரடியான பொய்யை நம்பி ஏமாறாதீர்கள்!
 
புலிப் பினாமிகளது ஊடகங்கள் உரைக்கும் பொய்யை நம்பாதீர்கள்.
உங்களது சொந்தச் சிந்தனையின் வழி உண்மையைக் கண்டடையுங்கள்!
இதுவே,இன்றைய அவசியமான தேவை!
 
இதைச் செய்யத் தயங்கும் ஒவ்வொரு பொழுதும், புலிப்பினாமிகள் உங்களை மொட்டையடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள்-கவனம் அன்பார்ந்த மக்களே!
 
புலிப் பினாமிகள் புலம் பெயர் தேசங்களில் செய்யும் "மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்,
புலிப்பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்,அவர்களிடமுள்ள எமது சொத்தைப் பறித்தெடுத்து வன்னியில் அவதியுறும் மக்களது விடிவுக்குப் பயன்படுத்துவோம்!
 
இதுவே,களத்தரில் பலியான ஆயிரமாயிரம் போராளிகளுக்குச் செய்யும் பெரும் வீர வணக்கமாகும்!!!
 
 
களமாடிச் செத்த அப்பாவிகளுக்கு நாம் தலை சாய்ப்போம்,
போலிப் புலிப் பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்-விடியலுக்காக இதைச் செய்வோம்!
 
வாருங்கள் கைகோர்த்து புலி மாபியாக்களையும்,அவர்களது துரோகத்தையும் வேரறுப்போம்!
 
நம்பிக்கையோடு இதைச் செய்வோம்,நாம் புலிகளால் தோர்க்கடிக்கப்பட்டவர்கள்-தோற்றவர்களில்லை!எனவே,என்றும்,இதுவல்ல எமது தலைவிதி!முயன்றால் முடியாதது எது இளைஞர்களே?
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
22.11.2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது