Language Selection

னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?
நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?
 
இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?


 
உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.
 
உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த "மேல்நிலையை"(Übermensch) உருவகப்படுத்துகிறது. உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.
 
நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தடியைக்கொடுத்தாள் கிட்லருக்கு-ஒருத்தி!
 
ஏனென்றாள்,எதற்கென்றாள் தனக்குள்!
 
அவளது விருப்பத்துக்குரிய மேல்நிலை மனிதன் வந்துவிட்டான்-பிறந்துவிட்டான்.அவனது பின்னால் அவனைத் தகவமைத்த ஈ.ஜீ.பார்ப்பன்(I G Farben) இரசயானத்தை உலகுக்கு வழங்கியபோது,அதன் தெரிவில் உலகாளும் மேல்நிலை அவசியத்தைப் பிரதி பண்ண நீட்சேக்கு நன்றிக்கடனாகத் தடியைத் தன் கனவானுக்குக் கொடுத்தாள் அவன் தங்கை(Therese Elisabeth Alexandra Nietzsche).
 
 
 
எல்லோரும் வாருங்கள் வாசல் வரையும் வந்து தரிசிப்போம்
எங்கள் மேலவனை-வெல்வதற்காகவே நாம் சூரியக் குழந்தைகளாகப் படைக்கப்பட்டோம்.
 



 
கடவுளது கட்டளைக்காரர்களுக்கு(Der Rat der Götter;Die Aufsichtsratsmitglieder der I. G. Farben nannten sich im internen kreis "Der Rat der Götter"ஈ.ஜீ.பார்ப்பன் என்ற இரசாயனத் தொழிலகத்தின் மேற்பார்வையாளர்கள்-கட்டுப்பாட்டாளர்கள் தம்மைத் தாமே உள்ளக ரீதிய அழைத்துக்கொண்ட வார்த்தை"கடவுளின் கட்டளையாளர்கள்"என்பது..),கடவுள் செத்துவிட்டான் என்றவன் சாக,அவனது தெரிவின் மேல்நிலை மனிதன் கனவினது வடிவத்தில் ஆரியக் குழந்தைகளாவும் அகலக் கால்வைக்கும் ஆண்டவக் குழந்தைகளாகின.
 
இதன் தெரிவில் செத்தவன்போக,சிறந்தவன் கிட்லர் என்றே இன்றும் ஜெர்மனியர்களில் பலர் அக மகிழக் கூட்டம் வான் நோக்கிக் கை அசைக்க, "மேல்நிலை" அவர்களுக்குள் தெளிவாகவே புரிகிறது.நீ,எங்கு-எது செய்தாலும் நீ வெல்வோனாக இருவென ஆண்சார் புடை நெஞ்சு அகவ,அத்தனைக்கும் ஆரியமே ஆளுந்தகமையுள்ள அதி மானுடத்தின் திசையில் மேல் நிலையுள் மெலிதானவர்களைப் புதைத்தே ஆகவேண்டும்.
 
நீ,நஞ்சை உற்பத்தி செய்திடினும்-அது
கீழ்நிலையானுக்குப் பிணியகற்றும் ஓளடதம்
கொன்றழித்தலென்பது விருப்ப-வடிவத்தின் வினை என்ப
உனக்கே எனது அண்ணனின் திசையைத் தெரிவாக்கிறேன்!
 
கைத்தடிதாம் இது?
இல்லை,உலகை ஆள்வதற்கான செங்கோல்
செஞ்சேனை கட்டிக்காத்த இருஷ்சிய மண்ணில்
சோகமாய் கிட்டலர் காலில் தொங்கிய மானுடம் கீழ்நிலை
 
கொடிய வதைகள் எல்லாம்
விருப்ப மானுடத் தெரிவில் உலகைக் கடைந்தேற்றும்
கோபுரமுள்ள கோவில்கள் என்று கொடியை ஏற்று-அது
ஆரிய சாம்பிராஜ்யத்தை அழகு என்று சொல்லும் அதிமானுடன் வணங்க!
 
 
தத்துவத்துக்கும்,நடைமுறைக்குமான புள்ளியில் அறுபது மில்லியன் மக்களுக்குச் சமாதிகட்டக்கூடிய வலுவுக்கு உரம் போட்டது இந்த "மேல்நிலை"மனித நிலை-விருப்பு.இந்த உரத்தோடு வளர்தெடுத்துச் செல்வத்தின் இருப்பைக் கொள்ளையிட முனைந்தவர்கள் மேல்நிலையை விரும்பியவர்கள்.அப்போது,விருப்பமென்பது ஒரு நிலை.அது,ஒரு குழுவுக்குரிய விருப்பாகவே என்றும் இருப்பதால் அந்தக் குழுவிலிருந்து அந்நியப்படும் பெரும்பகுதி மக்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்.
 
அதீத புனைவுக்கு எது அவசியமான தெரிவாக இருக்கிறது?
 
அச்சமுடையவர்கள்,அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்!
 
அந்த அதிகாரம் நம்மிடம் புலிவடிவிலும்,பிரபாகரன் வடிவிலும் நிலைத்திருந்தது.அதன் முடிவு,கிட்லரது முடிவோடு நெருங்கும்போது எஞ்சியது ஏமாற்றம் மட்டுமல்ல.அது,நோக்கிய விருப்பின் தெரிவில் கற்பனைக்குள் "அழ்மன விருப்பு" அதி மானுட நடாத்தையும் தான்.இந்த விருப்பு இன்றுவரையும் ஜேர்மனியர்களை எங்கும்-எதிலும் முதன்மை பெறவேண்டுமென்ற துடிப்புக்கும்,மற்றவர்களை ஏற்காது-பரிகாசிக்கும் பண்புக்கும் விரட்டிக்கொண்டி இருக்கு.
 
 
கட்டுக்குள் இருக்கும் அதிகாரம்,கண்டுகொள்ளவதற்கு நீட்சே சொன்ன வடிவ-விருப்பு"மேல்நிலை"மனித நடாத்தை புரியத்தக்கபோது புரியாத புதிராக நம்மை ஆட்டும்.மதத்தினதும்,பெண்ணினதும் இயல்புகளைச் சதா வருத்தத்துக்குரிய பகுதிகளாகக் கண்ட நீட்சேக்கு சரதுஷ்டரா துணைக்கு வருகிறான்.சொல்லாத பக்கங்களென்ற ஒன்றிக்கு அவன் கொடுத்த "ஊபமென்ஸ்"தன்முனைப்பின்பாற்பட்டதென்று சொல்வதிலும் சிக்கலொன்று உண்டாக்குவதற்கு அவனுக்குக் கைகொடுத்தது"அதிகாரத்தின் ஆண்மை"இது திரும்பத்திரும்ப வரும்.அழியும் அழிந்து மீளத் தன்னைத் தகவமைக்கும்.இந்த நிகழ்வூட்டத்தோடு திசை நோக்குகிறது இன்றைய புதிய நாசிகளது திசைவழி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
15.11.2009

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது