செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்படவிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு செய்தி வெளியானதிலிருந்து, ஒபாமாவின் தகுதி குறித்தும், நோபல் பரிசின் தகுதி குறித்தும் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

ஒபாமாவுக்கு அமைதி நாயகன் என்று விருது வழங்குவது சரி என்றாலும் தவறு என்றாலும் ஒரு செய்தி எல்லோரிடமும் நிருவப்படுகிறது, அது நோபல் போன்ற பரிசுகள் தகுதி பார்த்தே வழங்கப்படுகின்றன என்பது. மேற்குலகம் வழங்கும் பரிசுகளோ, சலுகைகளோ, பாராட்டுதல்களோ, பழிதூற்றுதல்களோ எதுவாகினும் அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்படுபவை என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. டைனமெட்டை கண்டுபிடித்த அறிவியலாளரான ஆல்பிரட் நோபலின் மன உளைச்சலிலிருந்து பிறந்த நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக அங்கீகரிக்கப்படுவதே கபடத்தனமானது என்பதை எந்தெந்த சூழல்களில் யாருக்கெல்லாம் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைக்கொண்டே கண்டுகொள்ளலாம்.

 ”இந்தப்பரிசு என்னுடைய செயல்களுக்கானதல்ல, அமெரிக்கத்தலைமையின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்” என்று தனக்கு விருது தந்த நோக்கத்தை ஒபாமா மிகத்தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். பதவியேற்று ஒரு ஆண்டுகூட நிறையாத ஒரு அதிபர் இதைவிடத் திறமையாக இந்த காமடியை மறைத்திருக்க முடியாது. ஆனால் விருதுக்கான தேர்வுக்கமிட்டியின் தலைவர் டி ஜான் ஜாக்லாண்ட் கூறுகிறார் “மொத்தம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 205 பேர்களில் 204 பேரையும் பின்னுக்குத்தள்ளி தேர்வுக்குழுவின் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி ஒபாமாவுக்கு மட்டுமே இருந்தது” பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மற்றவர்களில் ஒரு சிலரைக்கூட அவர் அடையாளம் காட்டவில்லை. இது ஒருபுறமிருக்க, நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைக்க கடைசித்தேதி பிப்ரவரி 1 அதாவது ஒபாமா பதவியேற்று 12 நாட்கள் கழித்து. அதிபருக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன் யாருக்குமே தெரியாத ஒபாமா, பதவியேற்ற 12 நாட்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

கடந்த ஒன்பது மாதங்களில் ஒபாமா செய்ததென்ன? நிறைய பேசியிருக்கிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை கட்டியமைப்போம் என்றார், ஈராக், ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப அழைக்கப்படும் என்றார், குவாண்டனோமோ சிறைச்சாலை மூடப்படும் என்றார், எகிப்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பொருளற்ற சொல் இனி பயன்படுத்தப்படமாட்டாது இஸ்லாத்திற்கு அமெரிக்கா எதிரியல்ல என்றார். ஆனால் நடப்பதென்ன? அமெரிக்காவைத்தவிர வேறு யாரும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது எனும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தான் இன்னும் மிரட்டிக்கொண்டிருக்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான(!) போர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, சிறைக்கொடுமைகள் இன்னும் கொடூரமாகிக்கொண்டிருக்கின்றன. பின் எதற்குத்தான் ஒபாமாவுக்குப் பரிசு?

ஒபாமா ஏன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒபாமா ஏன் அமைதி நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஒரே பதிலை கொண்ட இருவேறு கேள்விகள். அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு கருப்பர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றதும், இனி அமெரிக்காவின் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் இருக்கும் என்று இங்கு ஆரூடம் கூறியவர்கள் அனேகம். ஆனால் ஆப்கான் போர் பாகிஸ்தானின் மீதும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு விரிவடைந்ததையும், ஈராக்கை தொடர்ந்து ஈரான் மீதும் போர் மேகங்களை சூழவைத்திருப்பதையும் கண்டு அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். யார் அதிபரானாலும் அமெரிக்காவின் போக்கில் ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் கொள்கைகளை தீர்மானிப்பது அதிபர்களல்ல, பெரு நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தான். கண்களின் பார்வையை கண்ணாடி மாற்றுமா என்ன? அப்படி வந்த ஒரு கண்ணாடிதான் ஒபாமா. வெளிநாடுகளுக்கு சென்றவிடமெல்லாம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்த, தன் கோரப்பற்களை மறைக்கவியலாத அதிபராக வலம்வந்த புஷ் சொந்த நாட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இதனால் இற்று விழுந்த அமெரிக்க பிம்பத்தை தூக்கி நிருத்த தேவைப்பட்ட ஒரு பதிலியாகத்தான் முதலாளிகளுக்கு ஒபாமா தேவைப்பட்டார். அந்த பதிலியின் பிம்பத்தைக் காப்பதற்க்குத்தான் நோபல் பரிசும். 12 நாட்களிலேயே நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் பொருள் ஒபாமா சொல்வதுதான் அமெரிக்கத் தலைமையின் மீதான நம்பிக்கை அதாவது கருப்பர் எனும் திரையால் அமெரிக்க நிஜத்தை மறைக்கத் தேவைப்படும் அதிகாரத்திற்கான நம்பிக்கை.

பசியால் சுருண்டு கிடக்கும் ஒருவனுக்கு உண்ணவைத்து கைதூக்கி விடுவதற்குப் பதிலாக என்ன கொடுப்பது ரொட்டியா? சோறா? என்று விவாதம் செய்வதைப்போல, ஒபாமாவுக்கு ஏன் பரிசு கொடுத்தார்கள் எனும் காரணத்தை உணர்ந்து எதிர்வினையாற்றாமல் தகுதி குறித்து விவாதம் செய்வது மக்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும்.

http://senkodi.wordpress.com/2009/10/13/நோபல்-ஒபாமா-தகுதி-வெட்கக/

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது