Language Selection

யுத்தம் தொடங்கிய பின் தமிழ்த் தேசிய இனத்தின் மீது காட்டு மிரான்டித் தனமான யுத்தத்தை இனவாதிகள் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரம் ,மொழி, நிலம் என அனைத்து துறைகளிலும் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

15 ஆயிரம் இராணுவத் துருப்புக்களை குவித்த இனவெறியர்கள் யாழ் - குடா நாட்டை கைப்பற்றும் நோக்கில் ஒரு முன்னேறிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். இந் நடவடிக்கை புலிகளுக்கு எதிரானது என பிரகடனம் செய்த படி , தமிழ் பேசும் மக்களின் மீது தொடர்ச்சியான , இடை வெளியேற்ற குண்டு வீச்சினால் ஒவ்வோர் அடி நிலமும் சல்ல டையாக்கப்பட்டது.

 

மக்களை பொது இடங்களில் கூடுமாறு அறிவித்த அரசானது அவ்விடங்களின் மீது ஈவிரக்கமற்ற , குறிதப்பாத குண்டுத்தாக்குதலை நடத்தியது. இவ்வாறு சிலநூறு மக்களைக் கொன்று குவித்துவிட்டு , அவர்களைப் புலிகளெனக் கூறியபடி தனது பாணியில் இராணுவத் தார்பார்ரை நடாத்தியது.

 

மக்கள் கொல்லப்பட்டதிற்கு எதிராக பல குரல்கள் எழுந்த போது மாட்சிமை தங்கிய ஜனநாயக வாதியாம் சந்திரிகா ஆதாரம் ஏதுமுண்டா? எனக் கேட்டு , யுத்தப் பிரகடனத்தை புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்று மீண்டும் பிரகடனம் செய்தார்.

 

தொடர்ச்சியாக மக்கள் மீதான தாக்குதல்கள் உலகெங்கினும் பரவி விடவே , சந்திரிகா அரசு அவற்றை புலிகளின் தலையில் குற்றம் சுமத்தும் வகையில் பொய் பிரசாரம் ஒன்றை மூட்டைக் கட்டி சர்வதேச தொலைக் காட்சிகள் மூலம் உலகின் முன் அவிழ்ந்து வைத்து நாடகமாடியது. புலிகள் தற்கொலை வாகனம் ஒன்று குண்டுடன் வெடித்ததில் 200 பேர் அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு பொய் பிரசாரத்தை அரசினர் முன்னெடுத்தனர். குண்டுகளும் , வெடி மருந்துகளுமே வாழ்க்கையாகி போய்விட்ட எம்மக்களின் வாழ்வில் , இவைகள் எந்;த ஒரு கணமும் வாழ்வுடன் இணைந்தபடியே இருந்தும் வந்தள்ளது. இவ்வாறிருக்கும் பொழுதில் ஒரு தற்செயல் விபத்துக்கள் ஏற்படுவது சாத்தியமானதே. ஆனாலும் இதைத் தவிர்ப்பதும் மிக அவசியமானதே.

 

சிறிலங்கா அரசானது தனது கொலை வெறியாட்டத்தை மூடிமறைக்கும் சூழ்ச்சியின் அடிப்படையில் இதைப் பிரசாரத்துக்கு எடுத்தச் சென்றனர். ஆனால் உண்மையிலேயே ஒரு விபத்து , அரச மற்றும் ஏகாதிபத்திய பிரச்சார சாதனங்கள் முழங்கியது போன்ற ஒரு பெரிய மக்கள் அழிவை ஏற்படுத்திய விபத்தாக அது இருக்கவ்pல்லை. 500 க்கு மேற்பட்ட மக்களைக் கொன்று கொலை வெறியாட்டம் போட்ட இனவெறி சந்திரிகா அரசு, இவற்றிலிருந்து மக்களை திசை திருப்பிவிட பொய் பிரசார வடிவங்களைச் சார்ந்து இருப்பதுடன் , மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடுக்க அரசபடை குவிப்புக்களைச் செய்தவண்ணம் உள்ளது. 1978 களுக்குப் பிந்திய மிகப் பெரிய தாக்குதல் தோல்வி பெற்ற பின் கூட, மீண்டும் ‘ மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற வகையில் புதிய தாக்குதலை தொடுக்க உள்ளது.

 

தமிழ் தேசியத்தின் இருப்பை அச்சுறுத்தும் வகையில் , எல்லாத்துறைகளிலும் பொருளாதாரத் தடையை செய்துள்ள இனவெறி அரசு, பாரிய இராணுவ முன்னெடுப்புக்களின் மூலம் தமிழ்த் தேசியத்தை மண்டியிட வைக்கும் முயற்சியில் போலி முற்போக்கு அரசின் இனவெறியர்கள் தொடர்ந்தும் தமது கைவரிசைகளைத் தொடர்கின்றனர். இவர்களை முற்போக்கு அரசு என சில ஆலவட்டப் பேர்வழிகள் தூக்கிச் சுமக்க , மீண்டும் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டும் , குதறப்பட்டும் வருகின்றனர்.

 

புலிகள் இந்நிலையில் கூட மக்களின் ஜனநாயகத்தையோ, அவர்களின் சுயாதீனமான சுதந்திரமான அரசுக்கு எதிரான குரல்களை எழுப்பி விடுவதற்குக் கூட தடையாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்டமானது சரியான திசை வழியில் வழிநடாத்தப்படாமல் , குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு யுத்த வடிவத்திற்கு மேல் முன்னேற முடியாமல் மீண்டும் மீண்டும் உறைந்து தேக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் ஒரு முன்னணியைக் கூட உருவாக்கிவிட முடியாத நிலை என்பது , தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமான, அப்போராட்டத்தை குட்டிச் சவராக்கும் நிலையேயாகும்.

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது