Language Selection

"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம்.

 

 

 

 

 

 

 "ஏதிலிக்குழந்தைகள்"(!) அழகான தமிழ்.இப்படிக் கூறுவதால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த நிறைவும் வந்நு விடாது.முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவை.எதற்கெடுத்தாலும் மறுப்புச் சொல்லாதீர்கள்.ஈழப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள தமிழ்பேசும் மக்களுக்கு சுமார் இருபதாண்டுகள் சென்றது.மக்கள் இழந்த அனைத்தும் மண்ணுக்காகவென்ற கருத்தியல் தளத்தை இனியும் நாம் மௌனமாக 'ம்'போடமுடியாது.மழலைகள் எப்படி அநாதைகளானார்கள்?அவர்களது வாழ்வை எந்தப்பூதம் தின்று ஏப்பமிட்டதது? எதன்பொருட்டு அவர்தம் பெற்றோர்கள் அழிந்தார்கள்? ஊனமானது அவர்தம் வாழ்வு மட்டுமல்ல ஒரு சந்ததியே போராடிச் செத்த பின் நீங்கள் கதைசொல்கிறீர்கள்.

யுத்தத்தால் முடமாக்கப்பட்ட சிறார்களை முல்லத்தீவுக்குள்ளும் வன்னிமண்ணுக்குள்ளும்தாம் உங்களுகுத் தெரிகிறது.நமக்கோ தமிழ்பேசும் மக்கள் வாழும் முழு இலங்கைக்குள்ளும் தெரியும்.தொடார்புகள் உண்டு.இவர்களது வாழ்வை எந்த அமைப்பு சீராக்குகிறது?வெட்கங்கெட்ட இயக்கங்கள் தத்தம் தேவைக்காகச் சிறார்களைப் போருக்கு அனுப்பிக் கொன்றும்-ஊனமாக்கியும்-அநாதவராக்கிவிட்டும்,இப்போது காப்பகங்கள் நடாத்துகின்றனவாம்.பேருக்குச் சில விளம்பர நாடகங்களைச் செய்பவர்களுக்காக- இப்படி ஓட்டுமொத்தச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாயும்போது-எந்த விளம்பரமுமின்றிக் காரியமாற்றும் மனிதர்கள் இந்தக் கண்றாவித்தனங்களை இனியும் மூடிமறைக்கத் தயாரில்லை.புலிகள்தாம் தமிழர்கள்,தமிழர்கள்தாம் புலிகள் என்பதெல்லாம் முன்னோருகாலத்தில் சாத்தியமாகலாம்.இப்போது ஜனநாயக அரசியலுக்கு வருகிறார்களா வாருங்கள்-பன்முக அரசியலோடு-பன்முகத் தலைமைத்துவங்களோடு கலந்து நமது விடிவைத் தேடி விவாதிப்போம்-செயற்படுவோம்.அதை விட்டுவிட்டு விசமத் தனம்-திரிபுவாதம் என்பதை அவிட்டுவிட வேண்டாம்.இவற்றைக் கடந்த கால் நூற்றாண்டாய் கேட்டுக்கேட்டு நமது வாழ்வே நாசமாகிவிட்டது..." -அன்று(01.04.2005), அன்பர் ஈழநாதனோடான விவாதத்தில் ஸ்ரீரங்கன்.
 
 
ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.இன்று புதிதாகப் புதுவையாருக்கு ஞானம் பிறந்து அவர் தான்போற்றிய நெருப்புக் கடவுள்-சூரியதேவனைச் சர்வதிகாரியாக்கித் தன்னை "மக்கள் கவிஞனாக்க" இடைத்தங்கல் முகாமிலிருந்து முணுமுணுக்கிறார்.இதையும் "அநாமதேயன்"என்று காலச்சுவட்டில் இனவாதக் குண்டு தயாரிக்கும் இன்னொரு முகமூடி(நம்மால் அறியப்பட்ட அவலம்)சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப்போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"அநாமதேயன்"எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!
 
 
இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள்.தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம்.சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.புலிகளது தோற்றத்திலேயே அது அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம் இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டுகிறது இப்போது.இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இத்தகைய சதிகாரர்களைக் குறித்து அன்று,2005 மட்டில் இங்ஙனம் எனது அகதிப்பதிவில் எழுதினேன்:
 
 
"அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்பிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்."
 
 
 
இன்று,நாம் சந்திக்கும் இந்த வலைப்பதிவு "வாசகர்களையும்"அவர்களின் பார்வையையும் பற்றிப் பெரிதும் கவலைகொள்வதற்கில்லை.ஆனால்,புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்
"ஈழமென்றும்,தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும் சரணடைந்தும்- வார்தைகளினால் தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றைப் பிரபாகரனது சர்வதிகாரத்துக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.
 
 
"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!
 
 
இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இடைத்தங்கல் முகாமிலிருந்து இரை மீட்கிறாய்"
 -இன்று.
 
 
புதுவை இரத்தினதுரை அன்று,தனது வார்த்தைகளால் எத்தனையோ அப்பாவிகளது கொலைகளை நியாப்படுத்திய அவரது மக்கள் விரோதம்,இன்று பிரபாகரனைப் பெரும் சர்வதிகாரியாக்கும் அரசியலோடு மக்களிடம் வருகிறது.இதையேதாம் "அநாமதேயன்"கூடச் செய்கிறார்.அன்று புலிகளைத் "தேசியச் சக்தி-தேசிய இராணுவம்"எனக் கருத்துக்கூறியவர்,இன்றோ அனைத்துக்கும் பிரபாகரனது தவறே காரணமென்று புலிகளுக்குப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளை மறைத்து மீளவும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்கிறார்.ஒரு தலைமுறையையே கையாலாகாத கூட்டமாக்கி அவர்களைக் கொன்றுதள்ளிய புலிப்பரப்புரையாளர்களெல்லோரும் இனிமேல் இதே தமிழ்ச்சமுதாயத்துள்தாம் வாழப்போகின்றார்கள்.தம்மால் அநாதைகளாக்கப்பட்டு ஒட்டக் காயடிக்கப்பட்டவொரு இனத்தின் அழிவைச் செய்த இதே நபர்கள் எந்த முகத்தோடு மேலும் உயிர்வாழ்வார்கள்?"உண்மை மனிதர்களக்கு நிச்சியம் உறுத்தும்.அவர்கள் தமது தவறுகளுக்காக வருந்துவதுமட்டுமல்ல தமக்குத் தாமே தண்டனையைக் கோருபவர்களாகவும் இருப்பார்கள்." கூட்டாகக் கோழியடிச்சு உண்டு,தலைமுறையையே நாசங் செய்துவிட்டு,அதைத் தமது தலைவனுக்கு மட்டும் பொறுப்பாக்கும் எவனும்-எவளும் மனிதவிரோதிகளே.தமது தவறைத் தார்மீக அடிப்படையிற்கூட ஏற்கமுடியாத மனித விரோதிகள்.இவர்கள் பிரபாகரன் குறித்துக் கருத்துச் சொல்லவே அருகதையற்ற ஜென்மங்கள்!இதோ உனக்கும் உனது இராணுவ வாதத் தலைமைக்கும் அன்றே இங்ஙனம் உரைத்தோம்:
 
"எச்சங்களில்
"எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"
 
 
புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில் மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!புதுவை உரைப்பதுபோல இது பிரபாகரனென்ற தனிநபரது விருப்பு-வெறுப்புக்குட்பட்டதல்ல.
 
பிரபாகரனென்ற பொம்மையைக் கடந்து சிந்தித்தால்,வர்க்க அடிப்படையாகப் புரிவதில் இவர்கள்,இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்புக்குப் பின்னால் நின்று, தமிழ் மேட்டுக்குடிகளின் நலனுக்குகாகத் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயப்படுத்தி இராணுவப்படையாக்கிக் கொன்றுள்ளார்கள்.
 
இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி"ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று புலம்பெயர்ந்த தமிழருக்குள் புதிய கதை பேசுகிறார்கள்.பங்குச் சண்டையில் ஒவ்வொருவரும் புதிய வேடம் பூண்டு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாக் கருத்துக்கட்டுகிறார்கள்.
 
இந்தப் புலிப்பினாமிகளின் வால்களது வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானப+ர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!இன்று, கேவலம் இந்தக் கேடுகெட்ட நாய்கள் போடும்"நாடுகடந்த அரசாங்கம்"என்ற கூச்சல் மக்களைச் சொல்லித் திரட்டப்பட்ட நிதியைத் தக்கவைக்கவும் தம்மை இலங்கை அரசியலில் ஏதோவொரு முறையில் தவிர்க்க முடியாத சக்திகளாய் உருவாக்கவதற்கு முனையும் கபடத்தனத்தின்மீது கட்டப்பட்டதாகும்.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.
 
இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் "ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்"என்றும் வரையறுத்துச் சொன்னோம்.இதுவே இன்று நிஜமாக நம்முன் நடந்தேறினாலும் இதை மறைத்து மாய்மாலஞ் செய்யப் புலிப்பினாமிகளே புதிய கதை பேசிப் பார்க்கிறார்கள்.அவர்கள் இதுவரை தம்மால் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்குள் அனைத்துத் தவறுகளையும் புதைத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாக்குவதில் மிகத் துடிப்போடு இயங்குகிறார்கள்.கடந்த காலத்தில் தாம் இயங்கிய அரசியலானது தமிழ் மக்களுக்கு விரோதமானதென்று தெரிந்தும் தவறிழைத்த இந்தக்கூட்டம் பெருவாரியான தமிழ்மக்களைக் கொல்வதற்கு உடந்தையானது.இவர்களை வரலாற்றில் தண்டிக்கவேண்டிய பொறுப்புத் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில்வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்டு!
 
"இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?"
 
 
ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.
 
இவர்களது அரசியல் சதியைத் தமது இலாபங்களுக்காகச் செய்து, தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் தமிழ் மேட்டுக்குடிகளும் இன்றும் பிரபாகரனைச் சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல "அநாமதேயன்கள்"அவசியமாகி நமக்குள் புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?
 
புலிகளை அன்று ஏதோவொரு அம்சத்துக்காக ஏற்றுக் காவடி தூக்கியவர்களின் இன்றைய புலம்பல் மேலும் எம்மை முட்டாளாக்கும்.இவர்கள் சொன்னதெல்லாம் புலிரூபத்தில் முடிந்திருக்கிறது.இவர்களைக்கடந்து நாம் மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டுவது அவசியம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
14.07.09


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது