செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீண்டும் கச்சத்தீவு செய்திகளில் முக்கியத்துவம் பெறத்தொடங்கிவிட்டது. 1974ல் தொடங்கி இன்றுவரை ஓட்டுக்கட்சிகளுக்கு ஒரு உபரி வசதி போல் தேவைப்பட்டால் கைக்கொள்ளும் பிரச்சனை போல் இருந்துவருகிறது.

 

தற்போது இலங்கையில் இனவெறிப்போர் முடிந்து விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும்; தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதும் சுட்டுவீழ்த்துவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால், கச்சத்தீவை மீட்பதன் அவசியம் குறித்த சொல்லாடல்கள் உலவத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதினிலும், தினம் தினம் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி வாழ்வு குலைகின்ற போதினிலும் இந்திய அரசு இது குறித்து எச்சரிக்கவோ குறைந்த பட்சம் பேசவோ கூட தயாரில்லை. தமிழக அரசோ கடிதம் எழுதுகிறது, அனைவரும் என்னை ஆதரித்தால் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்கிறது. இதுவரை கொண்டுவந்த தீர்மானங்களோ நீள் துயிலினிடையே சிரித்துக்கொள்கின்றன. மீனவர்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள், சாலைமறியல் செய்துவிட்டார்கள், உண்ணாவிரதம் இருந்தும் பார்த்துவிட்டார்கள் சிங்கள தோட்டாக்களின் வீரியத்தை குறைக்கமுடியவில்லை.

 

உலகெங்கும் மீனவர்கள் எல்லை தாண்டுவது நிகழத்தான் செய்கிறது. ஆனால் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக்கொல்வது இலங்கை மட்டும் தான். காரணம் அந்தப்பகுதிக்கு மீனவர்கள் வரவே கூடாது என கருதுகிறது, இந்தியாவும் தான், அதனால் தான் கொல்லப்படுவது சொந்த நாட்டு மக்களென்றாலும் கண்டும் காணாமல் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் ராணுவ கண்காணிப்பு கோபுரம் நிறுவப்போவதாக செய்தி வந்த போதும் இந்தியா இலங்கையிடம் விளக்கம் கேட்கவில்லை. இலங்கையும் செய்தியை மறுத்திருக்கிறது. இவ்விடத்தில் கோத்தபாய வின் கூற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம், இனவெறிப்போரின் இறுதிப்பகுதியில் அவர் கூறியிருந்தார், “நாங்கள் இந்தியாவுக்கு தெரியாமல் எதையும் செய்யவில்லை.” இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீன்பிடி படகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாளிதழ்களில் செய்தி வருவதும் சில போதுகளில் மீனவர்கள் போராடுவதும் பின் அடுத்துஒரு நிகழ்வு நடக்கும் வரை மறந்திருப்பது என்பது தான் வழமையாக இருக்கிறது. பலன்….?

 

முத‌லில், எல்லை தாண்டுதல் எனும் பிரச்சனையே இல்லை, ஏனென்றால் 74, 76 ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறது. விதியாக சேர்த்தபின்பு எல்லை தாண்ட வேண்டாம் என அறிவுரை சொல்கின்றன அரசுகள். ஏன் எல்லை தாண்ட வேண்டும்? ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்களால் இயலாது. கரையோரப்பகுதிகளிலோ மீன்வளம் குறந்துவருகிறது. இயற்கைச் சீற்றங்கள், கடல் உள்வாங்குதல், புயல், இனப்பெருக்க காலம், உள்ளூர் பிரச்சனைகள் என அநேக தடைகள் உள்ள நிலையில் மீன்களை தேடிச்செல்வது தவிர்க்க இயலாதது. இதிலும் ரெட்டை மடி ஒற்றை மடி என்று வலைப்பிரச்சனைகள் வேறு. இத்தனையையும் மீறி மீன்பிடித்துவந்தால் விலை, ஒரு பெரிய கேள்விக்குறி? மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசுகள் ஆழ்கடல் மீன்பிடி நிறுவனங்களை எதுவும் செய்வதில்லை,

 

செய்ய‌முடிவதுமில்லை. சிங்கள ராணுவம் சுடுவதும், ஆழ்கடல் மீன்பிடி இயந்திரங்கள் கடலை அரித்து மீன்வளத்தை சுரண்டுவதும் மீனவர்களின் வாழ்வை குடிக்கும் இரட்டைக்குழல்கள். ஆக இங்கு பிரச்சனைகள் கச்சத்தீவை மட்டும் சார்ந்ததல்ல.

 

அன்றிலிருந்து இன்றுவரை கச்சத்தீவுக்காக குரல் (மட்டும்) கொடுத்துவரும் ஓட்டுக்கட்சிகள் அதை தாண்டி ஏதாவது செய்துவிட முடியுமா? அவ்வாறு ஏதாவது செய்வதற்கு மாநில அமைப்புகளில் சாத்தியம் உண்டா? நடுவண் அரசு எல்லை தாண்டவேண்டாம் என்று கூறும் போது கச்சத்தீவுக்கு செல்வது ஒப்பந்தத்தின் படி எல்லை தாண்டுவதாகாது என மறுத்துக்கூறக்கூட இயலாமல் எல்லை தாண்டாதீர் என மீண்டும் வாந்தியெடுக்கும் மாநில அரசு தீர்மானம் கொண்டுவருவதினால் மட்டும் பயன் விளைந்துவிடுமா? இந்தியா பாக்கிஸ்தான் போர், அணுகுண்டு சோதனை நடத்தியது போன்றவற்றால் தனிமைப்படும் சூழலிலிருந்த இந்தியா அதை சமாளிப்பதற்கு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து அதன் ஆதரவைப்பெற்றது. ராமநாதபுர சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் இந்தியாவிற்கு கிடைத்த கச்சத்தீவை தமிழகத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு கொடுத்தது சட்டவிரோதம். ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தும் அதை மீறி நடந்துகொண்டிருக்கும் இலங்கையை கண்டிக்காதது ஒப்பந்தவிரோதம். சொந்த மக்களை தாக்கி கொன்று கொண்டிருக்கும்போதும் மவுனமாக இருப்பது துரோகம். இவைகளையெல்லாம் இந்திய அரசியலமைப்பு வரம்புக்குள் நின்றே ஒரு மாநில அரசு கேள்வி கேட்க முடியும், எதிர்க்க முடியும், நிர்ப்பந்திக்க முடியும். ஆனால் செய்ய‌முடிந்த இவைகளை செய்யாமல் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்னை ஆதரியுங்கள் என்பது எதற்கு? மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் கோபம் போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது. அப்படியே போராடினாலும் அது ஒன்றிணைந்த அளவில் சமரசமற்றதாக போய்விடக்கூடாது என்பது தான் ஓட்டுக்கட்சிகளின் கவலை. அதற்காகத்தான் அறிக்கைகளும் கடிதமெழுதுவதும் தீர்மானம் கொண்டுவருகிறேன் என்பதும். திமுக மட்டும் என்றில்லை எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதில் மற்றமொன்றும் இருக்கப்போவதில்லை. என்றால் துப்பாக்கி தோட்டாக்களின் நடுவே எல்லைக்குட்பட்டு கிடைத்ததை பிடித்துக்கொண்டு முடிந்தால் வாழ்வதுதான் மீனவர்களின் முடிவா? கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டுமல்ல ஆழ்கடல் மீன்பிடிப்பை பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்கள் செய்வதை தடுத்து பாரம்பரிய மீனவர்களுக்கே அந்த உரிமை வழங்கப்படவேண்டும் நவீன மீன்பிடி இயந்திரங்களையும் அதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளையும் அரசு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமரசமற்ற போராட்டங்களை ஓட்டுக்கட்சிகளை ஒதுக்கிவிட்டு வீரியத்தோடு செய்வதுதான் மீனவர்களை பாதுகாக்கும்.

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது