Language Selection

"வட போர்முனைக் கட்டளைத் தளபதி, புலனாய்வுத் தலைவர் தளபதிþபொட்டு அம்மான்-கருணா அம்மான்...  தேசியத் தலைவர்", பன்னாடை, தேசத்தின் குரல்-நாட்டுப் பற்றாளர், பணியாரம்...

என்றவர்களெல்லாம் இப்போது தமது சகாக்களின் மரணத்தையே பேசமுடியாது மரணப்பயத்தில் கிடக்கிறார்கள்.புரட்சியைக்காட்டிக் கொடுத்த துரோகக் கும்பலுக்காக வக்கலாத்து வேண்டுவதற்கு மக்கள் நலனெனப் பெயரில்லை!

 

இன்றுþஇவ் நிமிடம்வரைத் தன் சொந்த இனத்தையே ஒட்ட மொட்டையடித்த மாபியாக்குழுவொன்று செத்துத் தொலையும்போதுகூடத் தமிழ்பேசும் மக்களைக் கொலைக்களத்தில் வைத்துப்படுகொலை செய்யும்போதுþஅவ் மாபியாக் குழுவிடம் என்ன மக்கள் நலன் உண்டு?

 

பின்பு, எதற்குப் புலிகளது அழிவோடு தமிழர்களது உரிமையும்þஅழிந்துவிடுவதெனப் புலம்புவது?

 

புலிகள்,  எங்கே தமிழர்களுக்கு உரிமைகளை விட்டுவைத்தார்கள்?

 

அனைத்து வகையான தமிழ்பேசும் மக்கள்தம் குடிசார்வுரிமைகளையும் தமது இயக்க இருப்புக்காவும் அதன் நலனுக்காவுமட்டுமல்லப் பிரபாகரன் என்ற மோசமான மனிதருக்காகவும் கையிலெடுத்துச் சிதைத்த இந்தப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் எங்ஙனம் உரிமைகளை இழப்பார்கள்?

 

இன்றுþசிங்களப்பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை அடிமையாக்கும் அரசியலுக்குள் பலமான ஒடுக்குமுறையைச் செய்வதற்குத் துணைபோனவர்களே இப் புலிகள் அமைப்பு என்பதை நாம் தர்க்கரீதியாக முன்வைக்க முடியும்.இதை மறுத்துவிட்டுப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்களது இருப்பே ஆடிவிடுவதாகக் கதைவிடுவது சுத்த மோசமான அறிவுமோசடி.இன்றைக்கு நமது மக்களது தியாகத்தைத் தமது இயக்கவாத அரசியலுக்காகச் கொச்சைப்படுத்தும் அரசியலைப் புலிகளது அரசியலைத் தேசியத்துக்குள் உள்வாங்க முனைபவர்கள் செய்து முடிக்கமுனைவது மீளவும் மக்களை மேய்க்கும் அரசியலுக்குத் தமது தலைமையை முன் தள்ளவே! இங்கே, புலிகள் குறித்த வரலாற்றுப்பாத்திரம் பாசிஸ்டுக்களின் பாத்திரமாகும்.

 

உலகத்தில் பாசிசவாதிகளின் அழிவு எங்ஙனம் நமக்கு வரலாறாகவுள்ளதோ அங்ஙனமே புலிப்பாசிஸ்டுக்களின் அழிவும் வரலாறாகிறது.சாதரண அப்பாவி மக்களையும், தமிழ்க் கல்வியாளர்களையும் துரோகிகளெனச் சொல்லிþ ஆயிரக்கணக்கில் கொன்ற பாசிஸ்டுக்கள் இன்று தமது அழிவைக்கூடச் சொல்லமுடியாது காலடித்தடமே தெரியாதபடி செத்துப் போகிறார்கள். இது, வரலாற்றுவிதிக்குட்பட்டது!


நாம்þபுலிகளது அழிவில் எவ்வித வெற்றிடத்தையும் உணரவில்லை!

 

புலிகள் இலங்கையின் புதியஜனநாயகப் புரட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.அந்நியச் சக்திகளது கூலிப்படையாகச் செயற்பட்டுத் தமது சொந்த இனத்தையே ஒட்ட வெட்டிச் சாய்த்தவர்கள்.நம்மிடமிருந்து பலநூறு அதிசிறந்த கல்வியாளர்களைக் கொலைசெய்து, நம் சமுதாயத்தை மூடர்களாக்கியவர்கள்.அதிசிறந்த மேதைகள் எல்லோரும் புலிகளது அரசியல் வரலாற்றில் துரோகிகள்.மக்களது சுயமான எழிச்சிகளைக் காயடித்து, அவர்களை வெறும் மந்தைக்கூட்டமாக்கியே தமது இருப்பைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணித்தார்கள்.இதன் வாயிலாக அந்நியச் சக்திகளுக்கு நமது தேசிய விடுதலைப் போரைக்காட்டிக்கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தார்கள்.இதை விளக்கப் புதியபாதைச் சுந்தரத்தின் கொலையைப் புரிவதில் எவருக்காவது சங்கடம் உண்டா?

 

தோழமை அமைப்புகளை அந்நியச் சக்திகளுக்காக வேட்டையாடி அவர்களைச் சிங்கள அரசினது பக்கஞ் சாயவைத்துத் துரோகிகளாக்கி, நமது மக்களது விடுதலையைவேட்டையாடிய இந்தப் புலிகளே முதற்தரமான இனத் துரோகிகள்.இவாகளது போராட்டச் செல் நெறியைத் தகவமைத்தவர்களே இவர்தம் எஜமானர்களான இந்திய ரோவும், உலகச் சதிகாரச் சி.ஐ.ஏ.யும்தானெனச் சொல்வதற்கும் நம்மிடம் சரியான வரலாற்று உண்மைகள் உண்டு.புலிகள் நமது மக்களது சுயநிர்ணயவுரிமையைச் சிதைப்பதற்கேற்ற சூழலைச் சக தோழமை அமைப்புகளைக் கொன்றழித்தபோதே தீப்பொறி அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

 

பின்னாளில்þஅதே தீப்பொறி அமைப்பையும் தமது அடிவருடிகளைவைத்துக் கைப்பற்றிச் சிதைத்தார்கள் புலிகள்.

 

இதுவும், பின்னாளில் அம்பலமானவுண்மை!


இப்போதும், இதே புலிகள் புலம்பெயர் மாற்றுக்குழுக்களுக்குள் புகுந்து அவர்களையும் பிளந்து சிதைத்ததுமட்டுமல்ல தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காக ஒரு உன்னதமான புரட்சிகரக்கட்சியினது உருவாக்கத்துக்கெதிராகச் செயற்பட்டுள்ளார்கள்.இதன் வாயிலாகப் புலம் பெயர் மாற்றுக் குழுக்கள் யாவும் துரோகிகள் எனப் புதுப் பெயர் தரிக்கவேண்டிய அரசியலுக்குள் வந்து சேர்கிறார்கள்.

 

இந்தத் தருணத்தில்þபுலிகளது அரசியலுக்கு முண்டுகொடுப்பதில் எவர் முனைப்பாக இருக்கிறார்களோ அவர்களே புலிகளது பாத்திரத்தைத் தமதாக்கி வைத்திருக்கிறார்கள்.மாற்றுக் குழுக்களுக்குள் வந்துசேர்ந்த அந்நியச்சதியினது அரசியல், பற்பல வேடத்தோடு இப்போது மக்களது நலன் குறித்துப் பேசுகிறது.இதுþபுலிவகைப்பட்ட அரசியலது தொடர்ச்சி.இதை இனங்கண்டு அம்பலப்படுத்தாமல் தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு ஒளிமிக்கதாக இருக்க வாய்பில்லை!

 

புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பலதரப்பட்ட அரசியற்போக்குகள் உண்டு.இவைகள்,  ஐரோப்பியச் சிந்தனை மரபுக்குட்பட்டதே!


"தமிழ்த் தேசியத்தின் வெற்றியானது தலித்துக்களின் தோல்வி"யெனக் கடந்த இருபதாண்டுகளுக்குமுன் ப்ரன்லைன்ட் இதழில் பிரையன் என்ற சமூவியலாளர் எழுதினார்.அந்தவுண்மையை இனங்கண்ட அந்நியச் சக்திகள் அத்தகைய சாதகமானவொரு சந்தர்பத்தை மேலும் உந்தித் தள்ளினார்கள்.இதுþதமிழ்பேசும் மக்களுக்குள் உள்ள மிக முக்கியமான பிரச்சனை.எனினும்þதலித்திய விடுதலையை மறுப்பதற்கெடுக்கும் உரிமை எந்தக்கொம்பருக்கும் இல்லையென்பதைப் புலிகளது அழிவில் உரக்கச் சொல்லியாகவேண்டும்.தமிழ்த் தேசியத்தின் தோல்வியானது புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்டது.எனவேþதலித்திய மக்கள் புலிகளுக்கு நன்றி சொல்லக்கடப்பாடுடையவர்களே!

 

இன்று, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டார்கள்!


என்றபோதும்þபுலித் தலைமையில் எஞ்சியிருக்கும் பிரபாகரன் ஒரு வெற்றுவேட்டு என்பேன்.இது, செல்லாக்காசு.இதை முன்வைப்பதால் தேசியம் களவாடப்பட்டைதைப் புரிக என்பதன் உட்கூற்றே உங்கள் முன் இருக்கிறது!

 

புலிகளைச் சொல்லிப் பிழைப்பவர்கள்þபுலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் அடிமையாகிவிடுவதாகப் புனைவுகளைச் சொல்லலாம். எனினும், புலிகளது போராட்டப் பாதையில் கடந்த இருபதாண்டாகக் கூனிக்குறுகிய தமிழ்பேசும் மக்களுக்குத் தெரியும், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்குப் புலிகள் அழிந்தே ஆகவேண்டுமென்பது.இங்கேþபுலிகளது அழிவின் பின்னே புரட்சிகரச் சக்திகள் டக்ளஸ்சையே அன்றிக் கருணாவையோ பின்தொடரமுடியாது.எனினும், இன்றைய புலம்பெயர்வுத் தமிழ்க் குழுமத்துள் பற்பல சக்திகள் தமது விடுதலைக்கு எதிரான அரசுகளோடு மிகச் சாதுரியமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்கள்þதமது பதிவி-பொருள் நோக்குகளைக் கடந்து அரசியலை முன்னெடுப்பதென்பது முடியாத காரியம்.


இது, புலிவழி அரசியலாகவுள்ள வியாபாரத்தனமானது.

 

எனவே, இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர் மாற்றுக் குழுக்களையோ அன்றி அந்நிய தேசங்களையோ நம்பாதுþ தமது சுய ஆளுமைக்குட்பட்ட அரசியல் முன்னெடுப்பைச் செய்வதற்குத் தென்னிலங்கையிலுள்ள முற்போக்குச் சக்திகளோடு கரங்கோர்த்துப் பாசிச இலங்கை-இந்தியþஉலகக்கூட்டை வென்றாகவேண்டும்.புலிகளது அழிவு மக்களது சுயவெழிச்சியை நிச்சியம் தூண்டும்.

 

இதுþமகத்தானவொரு மாற்றத்தை இலங்கையில் உண்டுபண்ணிவிட முடியாது.

 

எனினும்þகுறைந்தபட்சமாவது இனங்களுக்கிடையிலான குரோதங்களைக் குறைக்கும்.இதன் வாயிலாக இலங்கையின் பொது எதிரி அவர்களது கண்களுக்கு மிக இலகுவாகப் புலப்படும்.அங்கே, இலங்கையினது பாராளுமன்றத்துக்குள் பிரச்சனைகள் இல்லையென்பதும், அஃது, வெளியிலேதாம் உள்ளதென்பதும் புரியும்போது ஓட்டுக்கட்சித் தலைவர்களைக் கடந்து இலங்கைமக்கள் போராடத் தயாராவார்கள்.

 

புலம் பெயர் மாற்றுக் குழுக்கள்-கருத்தாளர்கள் அதுவரைத் தத்தமது விசுவாச அரசியலைக் குறித்தும்þவரும்படியைக் குறித்தும்"மக்கள் நலன்þமக்கள் நலன்"எனக் கத்தித் தத்தமது வர்க்கத் தளத்தின் அரசியலைத்தாம் முன்னெடுப்பார்கள்.அதற்காக ஒருவரையொருவர் புலிப்பாணியில் துரோகி என்பார்கள்.நல்ல காலம் இவர்களிடம் ஆயுதம் இல்லை!

 

தூ... துப்புக்கெட்ட பிழைப்பு.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
06.04.09


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது