Language Selection

"முடமாகக்

கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்

எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி(உண்மை)பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது."


பாசிச மகிந்தா குடும்பத்து வன்னி யுத்தத்துக்குப் பின்பான புலிகளது "தேசவிடுதலைப்போர்" அரசியலில், பிணங்களை எண்ணும் போராட்டமாகத் "தமிழீழத்துக்கான"போராட்டம் வந்து நிற்கிறது.இலங்கையை ஆளும் மகிந்தா குடும்பம் பாசிசம் என்றால் என்னவென வினாவும் ஆரம்ப "அரசியற்கல்வி கற்கும்" மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக உலகில் தன்னை முன்னிறுத்துக்கிறது.மகிந்தாவின் தம்பி "அன்னை"இந்திராகாந்தியின் மகன் சஞ்சாய் காந்தியை நினைவுப்படுத்துகிறார்.சுடரொழிப் பத்திரிகை ஆசிரியர் குறித்த கோத்தபாயவின் கருத்தும் ;அவரது உடல் மொழியும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.இவரது மனோபாவத்துக்கான உத்துதல் என்னவாக இருக்கும்?அந்நிய தேசங்களது ஊக்கமின்றிப் பேச முடிந்திருக்குமா?

இந்த இனவழிப்பு யுத்தத்தில் மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்"உயிர் வாழ்வதாக"உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான"வீரமாகவும்"தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது இன்றைய இலங்கையினது தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள்.இது, தகவமைத்து வைத்திருக்கும் இந்த "மாதிரி" மனிதர்கள் கிட்லரின் சேனைகள் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-அரச பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால், தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைய வன்னி யுத்தத்தில்,புலியிருப்புப் போருக்காக மக்களைப் பலிகொடுப்பதில் ஆர்வமாயுள்ள புலிகளிடம் இஃதெந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது-சாதரணமானவொருவர்-இனவாதிகள் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் "மாதிரி மனிதர்களும்"தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்.ஊர்வலங்களில் தொடரும் புலிகளுக்கான மந்திரம் வன்னியில் கொலைகள் விழுவதைத் திறந்த மனத்துடன் வரவேற்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்-ஈழம் பிணங்கள் நிறையும் சவக்காலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து வடக்குக் கிழக்கு மக்கள் வாளாது கிடக்கிறார்கள்.வன்னி அவர்களுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருப்பதாகப் படுகிறதோ இல்லையோ,மகிந்தாவின் காலடியைப் பற்றிக்கிடக்கத் தமிழ்த் தலைவர்கள் வழி செய்துள்ளார்கள்.

வன்னி யுத்தத்தைக் கண்டு,வடக்குக் கிழக்கு நிலை இப்படியிருக்கப் புலம்பெயர் மண்ணில் ஊர்வலங்களுக்கு நடுவில் தலைகாட்டும் தமிழ்த் தேசியமனதுக்குப் புலிகளது கோரிக்கைகளை உடைத்துப் பார்க்கக் காலவகாசம் இல்லை!இந்தச் சூழலில்,அதீதக் குறுந்தேசியக் கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.குறிப்பாகப் புலிகளது ஜீ-ரீ.வீயும்,தீபமும் இதையே செய்து முடிக்கிறது.மக்களிடம், இன்றைய போரினது கொடிய மரணவாழ்வுக்கு-தோல்விக்குப் புலிகளது அன்றைய கடந்தகாலத்துத் தவறே காரணமென்பதை எவருஞ் சொல்வதற்கோ-உரையாடவோ தயாரில்லை.இது,மேலும் தமிழ்பேசும் மக்களை அரசியற் குருடர்களாக்கிவிட்டுள்ளது.இதனால்,தமிழீழம் எனும் பொலிக் கோசத்தை அவர்கள் விடுவதற்குத் தயாரில்லாது புலிகளது குரலாக ஒலிக்கின்றார்கள்.இக் கோசத்தால் இலட்சம் மக்கள் அழிந்தும் இவர்களுக்குப் புத்தி வரவில்லை.இனவாதச் சிங்கள அரசிடமிருந்து தமிழீழத்தைப் பிரித்துவிடலாமெனச் சிந்திப்பதில் மீளவும் புலிகளது இருப்பு அவர்களுக்கு அவசியமாகிறது.ஆனால்,உண்மையானது மக்களது மரணத்தில் சுத்தமாக முகத்தில் ஓங்கி அடிக்கிறது!

 

 

புலிகளது இருப்புக்கான இக் கோசமானது சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே, அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.எனவே, தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களை-இயக்க அரசியலிலிருந்து பிரித்தெடுத்து நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்...
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டத்தில்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்."


வன்னியுத்த அழிவுக்குப் பின்பும்-புலிகளது தோல்விக்குப்பின்பும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனூடாக,நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் தேசிய அடையாளத்தை(சுயநிர்ணயவுரிமை) மீட்பதும் நம் ஜீவாதாரவுரிமையாகும்.

இலங்கையின் இரு யுத்த ஜந்திரங்களுக்குமிடையில் சிக்குப்பட்ட இலங்கை வாழ் சிங்கள-தமிழ் மக்கள் சமுதாயத்துள் மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.சிங்களப் பௌத்த பேரினவாதமோ முழுமொத்த சிங்களவர்களையும் சிங்களத் தேசத்தை மீட்கும் தேசபக்தர்களாகவும்,மகிந்தாவைப் புதிய துட்டக் கைமுனுவாகவும் சித்தரிக்கிறது!இதனால்,இரண்டு யுத்தப் பிரபுக்களதும் இருப்புக்குச் சரியான மனிதவலுக் கிடைக்கின்றது.இப்போது, இந்த மனிதவலுப் பல தளங்களில் இரு யுத்தக் கிரிமினல்களுக்கும்(மகிந்தா மற்றும் பிரபா) சாதகமான வேலையைத் திட்டமிட்டு நகர்த்தக்கூடியகவும்- ஆதரவாகவும் விரிந்திருக்கிறது.

மகிந்தாவின் தம்பி கோத்தபாயவின் கருத்தின்படி,நிலவுகின்ற அரச அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அரச அமைப்பைச்சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனால்,அனைத்தையும் கடந்து தேசமே முதலாவதும்-பிரதானமாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இத் தேசத்துக்காக அனைத்தையும் இழக்கத் தயாராகும்படி சிங்களச் சமுதாயத்திடம் மறைமுகமாகக் கோருவதில் கோத்தபாய மிகுந்த அமெரிக்கப் பாணி-புஷ்பாணி அரசியலைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.

வன்னியில் மக்கள்மீது வலிந்த தாக்குதல்களுக்காக "உந்துதல் கருத்தியல்" தளத்திலிருந்து "அனுதாப"உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத இடமுண்டு.நாளாந்தஞ் சாகும் மனிதர்களது உடல்களைக் காட்டியே புலிகள் தமது அரசியல்-போராட்டவாழ்வுக்கும்,தவறான தெரிவுக்கும் அனுதாபத்தைத் தேடுவதில் குறியாக இருக்கிறார்கள்.இதற்காக நாளும் பொழுதும் தமது கருத்தியல் பரப்புரைகளைக் கட்டவிழ்த்துவிட்டு,மக்களை அழிப்பதில் இலங்கைப் பாசிச அரசுக்கு உடந்தையாக இருக்கிறர்கள்.

தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"(ஆண்டபரம்பரைக் கனவு)அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது, மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மறுபாதி அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது, துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.

தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால், அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் வெகுஜனப் போராட்டங்களைச் செய்யமுடியாதபடி அதிகாரவர்க்கம் செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்.அந்த வகையில் மகிந்தாவின்-டக்ளஸ்சின்-கருணாவின் பாத்திரம் இதுள் மையங்கொள்கிறது.

இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பிரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.இத்தகைய புரிதலின்றி அடுத்த நகர்வு சாத்தியமற்றது.
நேற்றைய தவறே
இன்றைய இழப்புகளுக்கக் காரணமானது.
இன்றைய தவறுகள்
மேலும் நாளைய
அரசியல் வாழ்வைச் சிதைப்பதில்
எவருக்குப் பிரியமுண்டு?



ப.வி.ஸ்ரீரங்கன்
18.03.2009


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது