Language Selection

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

இந்தப் புலிப் போராட்டம் இனியும் தொடரக்கூடாது என்பதும், இதனுடன் முடியவேண்டும் என்பதையுமே பலர் விரும்புகின்றனர். ஏனெனில் இத்துடன் ஒரு தவறான போராட்டத்தினால் ஏற்படும் அழிவு முற்றுப் பெறவேண்டும். தொடர்ந்தால் அழிவைத் தவிர, வேறு எதையும் புலிகளால் எம் மக்களுக்கு தரமுடியாது. நாளை அவர்கள் இருப்பதால், இன்னும் சில பத்தாயிரம் மக்களின் மரணத்தின் பின் மீண்டும் அழிவதா அல்லது இன்றே அழிவதா  என்பதே இதில் உள்ள அடிப்படையான கேள்வி. அவர்கள் தொடர்ந்து இருப்பதாயின், தம் தவறுகளை ஏற்றுக்கொண்டு, தம்மைத்தாம் திருத்திக்கொள்ள முனைய வேண்டும். இதை அவர்கள் செய்யாத வரை, இந்தப் புலிப் போராட்டம் முடிவுக்கு வருவது அவசியமானது.

 

ஆனால் இது தன்னிடமுள்ள ஆயுதத்தைக் கையளித்தல்ல. ஒரு சரணடைவாகவல்ல. அப்படிச் செய்தால், அதுவே துரோகம். உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், ஒரு தவறான போராட்டத்தில் ஏன், எது துரோகம் என்று?

 

நடைபெற்ற புலிப் போராட்டம், பல பத்தாயிரம் மக்களை பலிவாங்கியுள்ளது. இதையே போராட்டம் என்று நம்பி சில பத்தாயிரம் இளைஞர்கள் தியாகம் செய்துள்ளனர். தவறாக வழிநடத்திய போராட்டம் ஏற்படுத்திய அழிவுகள், இழப்புக்கள் ஊடாக, இதைத்தான் போராட்டம் என்று நம்பும் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்துகின்றது.

 

இந்த நிலையில் ஆயுதத்தைக் கையளித்தல், சரணடைவு, திணிக்கப்படும் தீர்வை ஏற்றல், இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மந்தைகளாக எம் சமூகம் உள்ளது. ஆயுதத்தைக் கையளித்தல், சரணைடைவு, திணிக்கப்படும் தீர்வை ஏற்றலை, ஒரு போராட்டமாக ஏற்றுக்கொண்டு, போராட்டத்தில் அதன் நீட்சியாக விளங்கும் துரோகம் நியாயப்படுத்தப்படும். துரோக மரபை உணர்வாக கொள்ளும் அபாயத்தை, இது ஏற்படுத்தும்;. நாம் கோரிய ஜனநாயகம், இன்று இலங்கை அரசுடன் கூடிய துரோகமாகியுள்ளது. இது போல் தேசியமும் துரோகமாக நியாயப்படுத்துவதை மன்னிக்கமுடியாது.

 

இதற்கு பதில், மக்களை விடுவித்துவிட்டு போராடி மடியுங்கள். இதன் அர்த்தம், உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்ய முனையுங்கள். முற்றுகையை உடையுங்கள். இதன் அர்த்தம் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு, உங்களுடைய முந்தைய பிரதேசத்துக்குள் மீளச் செல்லுங்கள். அங்கு சுற்றிவளைப்பும், முன்கூட்டியே தெரிந்த இலக்குகளும் இருக்காது. நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி நிற்காது, இராணுவத்தை அலைக்கழித்து சிதறடியுங்கள். புலிகள் முற்றுகையை உடைத்து வெளியேறினால், இது பற்றிய கருத்தை நாம் தொடரலாம். இங்கு சுயவிமர்சனத்துடன் கூடிய, கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தல் முன் நிபந்தனையானது.

 

இதைத் தவிர போராடுவதற்கு வேறு மார்க்கம் கிடையாது. சுற்றிவளைப்பில் சிக்கி மரணிப்பதை விட, கூட்டாக தற்கொலை செய்வதை விட, துரோகமிழைத்து சரணடைவதை விட, இது தான், இதில் இருந்து உடனடியாக மீளவுள்ள ஒரே வழி.      

    

மக்களை விடுவித்தல் என்பதும், அதையொட்டிய எமது முந்;தைய கோசத்தின் சாரத்தையும் இன்று ஏற்பதும், காலந்கடந்த ஒன்று. இன்று இது சரணடைவு நிபந்தனைக்கு உட்பட்டது. அன்று இதை வைத்திருந்தால், கவுரமாக இதிலிருந்து வெளிவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கும். இன்று வெளியாகியுள்ள அறிக்கைகளின் படி,

 

1.'இலங்கையில் போர் நடைபெறும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை ஆய்வு செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்."

 

2.'தமிழ் மக்கள் வெளியேறுவதை அனைத்துலக அமைப்புக்கள் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் இதில் அடங்கும்" 'அப்பாவி மக்களை வெளியேற்றும்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் புனிதத் தன்மையை சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்."

 

என்ற அறிக்கையின் சாரமே, நாம் முன்பு கோசமாக முன்னிறுத்தியது. நாம் வைத்தது  

 

1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

2.புலிகளே! மக்களை விடுவி!

3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!

 

என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது, காலம் பிந்திய ஒருநிலை. இதனால், யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.

 

தவறான காலத்தில், சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பது, தவறான கோசத்தினதும், அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.

 

இதனால் அடுத்த தவறான சரணடைவு அல்லது மொத்தமாகவே தற்கொலை தாக்குதலில்; அழிதல் அல்லது இந்த முற்றுகைக்குள் மரணித்தல் என்பதற்கு பதில், இந்த முற்றுகையை உடைத்து இராணுவத்தின் பின்னால் சுதந்திரமாக முதலில் வெளிவாருங்கள். எதிர்கால தலைமுறைக்கு உங்கள் தவறுகளை, நீங்களாகவே இனம் காட்டுங்கள். உங்களின் தவறை உணர்த்தி, உங்கள் மதிப்பை உயர்த்துங்கள். அதில் இருந்து மீண்டும், மக்களுக்காக போராட முனையுங்கள்.

 

பி.இரயாகரன்
25.02.2009
 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ