Language Selection

மக்களைக் கேடயமாக்கிய அரசியல்: தமிழீழத்துக்காகப் போராடுகிறது? இன்று, புலிகளுக்கு எதிரான யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்படுகிறது. "புலிகள் தம்மைக் காப்பதற்காக அப்பாவி மக்களைத் தம்மோடு அடக்கி வைத்திருக்கிறார்கள்.இந்த அடக்கு முறை மிகவும் கேவலமான ஆயுதயச்சத்தின் மூலமானதாகும்.புலிகளிடஞ் சிக்கிய மக்களை, யுத்தத்தில் தம்மோடு சாகடிக்குஞ் செயலைப் புலிகள் திட்டமிட்டே செய்கிறார்கள்.

 

"இப்படியொரு செய்தி பரவலாக வெளியாகுகிறது.உலக ஊடகங்கள் முதல் மனிதவுரிமை அமைப்புகள்வரை இதையே மீளவும்,மீளவும் எழுதுகின்றன.


ஆனால், புலிகள் இதற்குமாறாகப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகளிடம் சிக்கிய மக்களின் குரல்கள் வெளிவருவதற்கு அவர்களை மேய்ப்பவர்களின் கரங்கள் நெரிக்கின்றனவா?

உண்மைகளைப் பேசுவதற்கு இலங்கை அரசும், புலிகளும் ஒரு தளத்தில் நின்று மதில் அமைக்கின்றார்கள். இந்த மதில்களுக்குப்பின்னால் அப்பாவி மக்களின் அழுகுரல்கள் நமக்கு எட்ட முடியாது. இலங்கை அரசு-புலிகள் காட்டும் மக்களின் முகங்கள் யாவும் பொய் முகங்கள்! மக்களின் உண்மையான அவலங்கள் இங்கே, கேடுகெட்ட அரசியலாக மாற்றப்படுகிறது.

இரு தரப்புஞ் செய்யும் கொடிய யுத்தம் அப்பாவி மக்களின் தலைகளில் குண்டுகளாகக் கொட்டப்படுகிறது.மக்கள் இருதரப்பினதும் செல்லடிக்குப் பலியாகிறார்கள். இவ்விருதரப்பினதும் யுத்த முனைப்பு, அப்பாவி மக்களின் உயிரைக் குடித்து ஏப்பமிடுகிறது. இதுவே,நமது மக்களின் இன்றைய பொது அவலம். குண்டுகள் துளைத்த உடலங்கள் புலிகளுக்குத் தம்மைக் காக்கும் துருப்புச் சீட்டாகிறது. எனினும்,புலிகளால் இதுவரை நமக்குச் சொல்லப்பட்ட ஜனநாயக-நட்பு நாடுகள் எதுவும் நமது மக்களுக்காகக் கரங்கொடுக்கவில்லை. இது, புலிகளைக் காக்க விரும்பாத அவர்களது அரசியலாக நமது மக்களுக்கு இப்போது விடிகிறது. எல்லாம் புலிப்பாணி அரசியல் செய்த பெருவினை!

துயருறும் மக்களைத் துணிந்து அடக்கி வைத்தபடி, புலிகள் தம்மைப் பற்றிய அரசியல் செய்கிறார்கள். மறுபுறும், இலங்கை அரசோ தனது அடாவடித்தனமான போரை நியாயப்படுத்த அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களை விடுவிக்க எடுக்கும் போராகத் தனது ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது.

இந்நிலையில் அந்த மக்களின் உண்மையான அவலம் வெறும் கோசத்துக்குள் முடங்கிப்போகிறது. மக்கள் தம்மை விடுவிக்க முடியாது சிங்கள அரசினதும், புலிகளினதும் குண்டுகளுக்குப் பலியாகிப் போகிறார்கள். அதையே, தமது தரப்புக்கு நியாயப்படுத்தப் புலிகள் தலைகளைக்கணக்கு வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகள், தம்மைக் காப்பதற்காக இப்போதெல்லாம் தமது ஆயுதத்தைவிடத் தமது கைக்குள் சிக்கிய இலட்சக்கணக்கான மக்களையே நம்பிக் கிடக்கிறார்கள்!அவர்களது கையறு நிலையான இன்றைய போர்ச் சூழலில் மக்களைக் கேடயமாக வைத்துப் போராடும் மிக கெடுதியானவொரு போர்ச்சூழலைப் புலிகள் வலிந்தே வரவழைத்துள்ளார்கள்.


இத்தகைய நடாத்தையை ஒரு விடுதலையமைப்பு எங்ஙனம் எதிர் நோக்கியிருக்கும்?

மக்கள் போராட்டம் என்பது என்ன?

உலக வரலாறுகளை உறுஞ்சிக்குடித்த புலிகளின் விற்பனர்களுக்கு இந்த மக்களின் அவலம் மக்கள் போராட்டமாக இருக்கலாம். ஆனால், நாம் சொல்கிறோம்: "இது மிக மோசமான மாபியாத்தனமாகும்!". மக்களின் அடிப்படை உரிமையானது, அவர்கள் தம்மைத்தாமே உயிர்காத்து வாழ்வதாகும். அவர்கள், தமது உயிரைக்காப்பதற்கு எதுவித நிபந்தனையுமின்றிச் செயற்படவிடாத புலிகள், மக்களை முல்லைத் தீவில் அம்போவென விட்டுவிட்டுக் காட்டுக்குள் ஓடியொளிந்துவிட்டார்கள்.

முல்லைத்தீவில் சிக்கிய மக்கள் வீதியின் கரைகளில் தமது அவலக்குரலோடு, முன்னேறும் இராணுவத்தின் முன் தமது இறுதிக்கட்ட வீழ்ச்சியைத் தரையில் வீழ்ந்துபடுத்து நமக்கு உணர்த்துகிறார்கள். மக்களைக் கேடயமாக வைத்திருந்ததன் உண்மைகளை அவர்களது இந்தச் செயல் மிக இலகுவாக வெளிப்படுத்துகிறது, இந்த உலகத்துக்கு! அல்ஜெசிறாத் தொலைக்காட்சி இதை ஒளிபரப்புகிறது-இலங்கையின் உத்தியோபூர்வ ருபவாகினியின் படப்பிடிப்பு அது.

இன்று, எவருமே மக்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

புலிகள்விடும் கண்ணீர் தமது இருப்புக்கானது. மக்களின் பிணங்களைக் கணக்குவைத்துக்காட்டி, உலகத்தின்முன் தம்மைக் காப்பதற்கெடுக்கும் மிகக் கேவலமான அரசியலைப் புலிகள் செய்யும்போது, இலங்கை அரசோ இத்தகைய நடாத்தையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு போரை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இங்கே, இந்த அவலத்தை நியாயமாக எவரும் உரையாடவில்லை!

புலிகளுக்காகக் குரல்கொடுப்பவர்கள்போடும் மனிதாபிமானக்கூச்சலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. அது, முடிந்தவரைப் புலிகளைக் காத்தலென்பதோடு சரியாகிவிடுகிறது. இலங்கை அரசினது கூச்சலிலும் இதுவே நியாயமாகிறது. சிங்கள அரசினது போரை உலகுக்கு நியாயமாகக்காட்டும்வரை மக்களை அது அரவணைக்கும். ஆனால், "இத்தகைய வன்முறை ஜந்திரங்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்கான நெறிமுறை எப்படியிருக்கும்?" என்ற கேள்வி நமக்குள் எழுவது தவிர்க்கமுடியாது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

புலிகளிடம் நியாயம் உண்டா அல்லது சிங்கள அரசிடம் நியாயம் உண்டா? என்பது நமக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். என்றபோதும், நாம் ஒன்றை நன்றாகக் கவனிக்கவேண்டும். இந்த இரு யுத்த ஜந்திரங்களும் மக்களின் நலனிலிருந்து அந்நியப்பட்ட காரணங்களுக்காக யுத்தஞ் செய்கின்றன. எனவே, இந்த யுத்தத்தின்மூலம் மக்களைக் கொல்வதற்கு இரு தரப்புக்குமே அவசியமான நியாயங்களாக அவரவர் தரப்புப்பரப்புரைகள் விரிகின்றன. மக்களை இரண்டு தரப்புமே கொல்வதற்குக் காரணமாகின்றன. எனவே, நாம் இவ் அராஜகத்தனமான யுத்த முனைப்பைக் குறிவைத்துத் தகர்ப்பதாகவிருந்தால்- அது, மக்களைப் புலிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அநுமதிக்கவேண்டும் என்ற கோசத்தை முதன்மைபடுத்தியாகவேண்டும்.

இதைப் புலிகள் செய்துவிடும்போது, புலிகளைத் தாங்கும் மக்கள் மட்டும் அவர்களோடிணைந்து "தமிழீழத்துக்காக"ப் போராடுவார்கள். அப்போது, மக்கள் போராட்டத்தின் மகிமையை அவர்கள் உலகுக்கு உணர்த்திவிடலாம். அதேபோல் புலிகளைத் துவேசிப்பவர்களின் வாயையும் மூடிவிடலாம். உயிரைக் காக்கவெண்ணும் மக்கள் தாமாகவே பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள். இந்தச் சின்னவொரு அனுமதியைப் புலிகள் செய்துவிடுவார்களேயானால் அவர்கள் உண்மையில் மக்களினது உயிரில் கரிசனையுடையவர்களாக இருப்பார்கள்.

இதை அவர்கள் செய்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

இதுவரை, பல நூறு மக்கள் இறப்பதாகச் சொல்லப்படுஞ் செய்திகள் சரியானதாகவே இருக்கும். ஏனெனில், முல்லைத் தீவில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திவிட்டுப் புலிகள் காட்டுக்குள் தப்பியபோது, போருக்குள் சிக்குப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. எனவே, சிங்கள அரசின் வன்கொடுமைக்குண்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இந்த மக்கள் நூற்றுக்கணக்காக உயிர் துறந்திருப்பது உண்மையே. இத்தகைய இழப்பைத் தவிர்த்திருக்க முடியாதா?

இக் கேள்விக்குப்பதில் கூறவேண்டியது புலிகள் மட்டுமே!

இலங்கை அரசு, தனது அகராதியில் இதைச் செய்யாது.ஏனெனில், அது ஒடுக்குமுறை அரசு. அதன் ஒடுக்குமுறையின் உச்சத்தில் இன்றைய அவலம் தொடரும்போது, மக்கள்மீது கரிசனையுடையவொரு விடுதலை அமைப்பு என்ன செய்திருக்கவேண்டும்?

தமது போராட்டத்துக்காக மக்களைப் பலி கொடுக்காதிருப்பதற்கு அவர்களை இவ் வலயங்களைவிட்டுப் பாதுகாப்புத்தேட அனுமதித்திருக்கவேண்டும். இதைச் செய்யாத புலிகள் சொல்லும் பிணங்களின் எண்ணிக்கையானது, தமக்காக, எவராவது இரங்க மாட்டார்களாவெனும் எதிர்பார்ப்பின் உச்சபச்ச மிக மலினமான அரசியலே.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.01.2009

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது