Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம்.

 

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த இந்த இயக்கங்கள், இறுதியில் அதே மக்களின் வாழ்வாதாங்களான வாழ்விடங்களை,பயிற்செய்கை நிலங்களை மற்றும் விவசாயத்தைச் சிதைத்தும், சந்தைப்படுத்தப்படும் கூட்டுறுவச் சங்கங்களை செயலற்றுத்தாக்கியபடி கொள்ளையடித்தும், மக்கள் விரோத அமைப்புகளாகச் சீரழிந்தன “விடுதலை” அமைப்புகள்.இன்று, நமது மக்கள் பலநூறு ஏக்கரில் விவசாயஞ் செய்துவந்த வலயத்திலுள்ளதும் அந்த விவசாயத்துக்கு நீராதாரத்தை வழங்கியதுமான கல்மடுக் குளம் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்துபவர்களென்றுத் தம்மைத்தாமே ஏகபிரதி நிதிகளாக்கியப் புலிப் பாசிச இயக்கத்தால் பாரிய குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டு(குளத்தின் அணைக்கட்டுக்கள்),மக்களின் கிராமங்கள்,விவசாய நிலங்கள் குடிமனைகள் யாவும் நீரில் மூழ்கி நாசமாகும் அளவுக்குப் போரியல் வியூகம் அமைந்துள்ளது பாசிசப் புலிகள்!

இது,நியாயமா?

நாசிகள் இத்தகைய செயலைச் செய்வார்கள்!

ஒரு விடுதலை அமைப்பு?

சிங்கள வன்கொடுமை அரசே

இதுவரை செய்ய முனையாத செயலைப்

புலிகள் செய்து தத்மைத்தாமே

பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்!

 

கடந்த 24.01.2009 அன்று கிடைக்கப்பெற்ற செய்தியை மையப்படுத்தித் தமிழ் நாளிதழ்கள் “கல்மடுக்குளம் புலிகளால்

உடைக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகப் பாதுகாப்பு அமைச்சுக் கூறுகிறது”எனும்படி செய்தி எழுதுகின்றன.இதில் இவர்களின் கருத்தென்ன?மௌனிக்கிறார்கள்!-;இதுதாம் தமிழ்த்தரப்புப் பத்திரிகைத் தர்மம்! தூ…

 

தமிழ்பேசும் மக்களினத்தின் அரசியல் இவ்வளவுதூரம் தமக்குத்தாமே நெருப்பைத் தலையில் கொட்டுவதாக இருக்குமென எவரும் நினைக்கவில்லை!எனினும்,அதுவே நடந்துவரும் இவ்வளவு நாள் அரசியலிலிருந்தும் நாமெதை உலகத்தின்முன் விட்டுவைத்துள்ளோம்? “நாம் பயங்கரவாதிகள்,தனியரசைக் கொண்டியக்கும் தகமை அற்றவர்கள்,மாற்றினத்தோடு சகஜமாக வாழ இலாயக்கற்றவர்கள்,போர் நெறிமுறையைக் கைகொள்ளும் திறன் அற்றவர்கள்.”என்பதைத்தாம்!இலங்கைச் சிங்கள அரசு இத்தகைய கயமைத்தனமான செயலைத் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ததாற்றாமே நாம் போராட வெளிக்கிட்டோம்?இதற்கு மனசுத்தியோடு பதிலளிக்கமுடியுமா?

 

கல்மடுக் குளத்தால் 1200 இராணுவத்தைக் கொன்றதையெண்ணி ஆனந்தக்கூத்தாடும் புலம்பெயர்ந்த காட்டுமிராண்டித் தமிழர்கள்,தமது சொந்த மக்களின் வாழ்வாதாரம் இதனால் மீளமுடியாதாளவுக்குப் பாதிப்படைந்ததை எண்ணுகிறார்களா?

 

உலகத்தில் நடந்த கொடுமையான போர்களில் பல, இத்தகைய நடாத்தைகளைச் செய்வித்த அரசுகளை மக்கள் விரோதிகளாகவும்,நாசிசப் பயங்கரவாதிகளாகவுமே உலகுக்கு அறிமுகப்படுத்தியது.சமீபத்தில் நாசிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு தமது வீரத்தைக்காட்டி மக்கள் விரோதிகளாகவும்,பாசிசிஸ்டுக்களாகவும் அம்பலப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

 

மக்களின் அதீத தேவையான நீராதாரத்தோடு விளையாடுபவர்கள் உலகத்தில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

 

நதிகளையும்,குடிநீர் ஆதாரத்தையும் நஞ்சாக்குவதற்கு முனைந்தவர்கள் உலகத்தில் நாசிகள் என்பது உலகறிந்தது.அவர்கள், அத்தகைய இழி நடாத்தைகளை மட்டுஞ் செய்வில்லை!மனித குல வரலாற்றில் மிகக்கெடுத்தியான அனைத்தையுஞ் செய்தவர்கள் நாசிகள்.இவர்களின் பாத்திரத்தை இப்போது அமெரிக்க அழிவு அரசியலும் அதன் இராணுவமும் செய்து வரும்போது, இதைவிஞ்சும் அளவுக்குத் தமிழ்த்தேசியச் சிறுமைமனங்களும் செய்து வரும் இத்தகைய குளக்கட்டுகள் தகர்ப்பு யுத்தம்-வியூகம் நாசியத்துக்கு ஒப்பானது!

 

நாம் அன்றே சொன்னதுபோன்று:”இலங்கை அரசின் ஆதிகத்தைத் தமிழ் நிலப்பிரதேசங்களிலிருந்து உடைக்காது,அதன் அரச வன்முறை ஜந்திரத்தை உடைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சில நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலோ அன்றிச் சில ஆயிரம் சிங்கள இராணுவத்தைக் கொல்வதாலோ தமிழீழம் விடுதலையடையாது”.என்பதை மீளவுஞ் சொல்லுகிறோம்.

 

இதனால் பாதிப்படைந்து பரதேசிகளாக மாறியவர்கள் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல.இலங்கையின் முழு மக்கள் சமுதாயமுமே.இதனாற்றாம் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசால் உலகத்துள் பிரச்சாரஞ் செய்யப்படுகிறது.இப்பிரச்சாரம் சரியானதென நான் ஏற்கிறேன்.

 

1:புலிகள் மக்கள் விரோதிகள்.

 

2:சொந்த மக்களின் அழிவில் அரசியல் செய்யும் இயக்க வாதிகள்.

 

3:தமது தலைவர்களின் சுகபோகத்துக்காக மக்களை அழிவுக்கிடுவதில் முதன்மையானவர்கள்

 

4:சொந்தச் சுகபோகத்துக்காக மக்களின் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் அடாத யுத்தத்தில் தமது இருப்பைக் காக்க முனைபவர்கள்.

 

5:மனித சமூகத்தின்மீது எந்தக் கொடுமையையும் கட்டவிழ்த்துவிட்டுத் தமது நலனைக் காக்க விரும்புபவர்கள்.

 

இதுவனைத்தும் பாசிசத்தின் குணாம்சமாகும்.புலிகள் தொடர்ந்து இதையே செய்பவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.மாவிலாறு நீர்த்தேக்கம் முதல் இன்றைய கல்மடுக்குள அணைக்கட்டுவரைப் புலிகள் செய்யும் மனிதவிரோத அரசியல் தமது சொந்த மக்களின் அழிவையே துரிதப்படுத்துவது.எனவே,புலிகள் அமைப்பு வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படவேண்டியவர்களே!

 

இத்தகைய நடாத்தையை எவர் மகிழ்ந்து கொண்டாடுகிறாரோ அவர்களும் மக்கள் விரோதிகளே!

 

நாம் மீளவுஞ் சொல்கிறோம்:

 

“புலிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு யுத்த வியூகங்களைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.மக்களின் வாழ்வோடு விளையாடும் பொய்மைத் தமிழீழக் கோசத்தைத் தொலைத்துவிட்டு, இருக்கின்ற போராளிகளையாவது காக்க முன்வரவேண்டும்.இதை விட்டுவிட்டு மக்களைக் கேடயமாக்கி வைத்தபடி ஒரு போரைச் செய்து தமிழீழம் காணமுடியுமெனில் உலகத்தில் உங்களைவிட மனிதவிரோதிகள்-முட்டாள்கள் எவருமில்லை.”

 

சிங்கள வன்கொடுமை அரசே இன்று குறிப்பிட்டளவு மக்கள் நலனுடைய அரசாகத் தன்னைக்காட்டும்போது, புலிகள் தம்மைப் பயங்கரவாதிகள்தாமெனப் பறைசாற்றும் மக்கள் விரோத நடவடிக்கை செய்வது எதனால்?

இக் கேள்விக்கு,”அவர்கள் பாசிஸ்டுக்கள்,எனவே அதைச் செய்கிறார்கள்.”என்ற பதிலைத் தவிர வேறென்னத்தை நம்மால் சொல்ல முடியும்?

 

கடந்தகாலத்தில் தமிழ்ச் சமுதாயத்துள் வாழ்ந்த முஸ்லீம் இனத்தை கிட்லரின் அதே அரசியல் நடாத்தைகள்மூலமாகப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டியோடவைத்துத் தம்மைப் பாசிஸ்டுக்களாக உலகுக்குக்காட்டினார்களே,அதே செயல்கள் மீளவும் புலிகளால் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டு, இலங்கை அரசையும்,அதன் சிங்களச் சியோனிசக் கருத்தமைவுகளையும் இத்தகைய நடாத்தைகள்மூலம் நியாயப்படுத்திவிட முடிகிறது.

 

புலிகளால் மக்கள் பட்டது போதும்.

 

போய்த் தொலையுங்கோடா தம்பிமாரே!

போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.

 

மக்களுக்கு, “கல்மடுக் குளக் கட்டை மீளக்கட்டி குடியிருப்பதற்கும்,விவசாயஞ் செய்வதற்கும் இலங்கை அரசைவிட்டால் வேறுயாரும் இல்லை”என்பதை மீளச் சொன்னதற்கு-செய்ததற்கு நன்றி!

 

ப.வி.ஸ்ரீரங்கன்

25.01.2009

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது